Jump to content

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப் கேணல் மதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

பொறுப்பு: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி
நிலை: லெப்.கேணல்
இயக்கப் பெயர்: மதன் (அரசன்)
இயற்பெயர்: துரைசாமி சுந்தரலிங்கம்
பால்: ஆண்
ஊர்: கூழாங்குளம், வவுன்யா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 07.06.1972
வீரச்சாவு: 11.04.2000
நிகழ்வு: கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆலங்குளம்
மேலதிக விபரம்: ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

 

lt-col-mathan.jpg

 

வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று வவுனியா மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . வேவுப் போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய மதன் , தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டான் . மேலும் கனரக ஆயுதங்களில் ஆர்வமுடன் பயிற்சி , பல தாக்குதல்களில் களமாடிய மதன் 1-9 படையணியில் இணைக்கப்பட்டான் .

1-9 படையணியில் வேவுப் புலியாகவும் கனரக ஆயுதம் ( ஜி. பி. எம். ) சூட்டாளனாகவும் மதனுடைய களச் செயற்பாடுகள் வன்னிக் காடுகளில் விரிவடைந்தன .யாழ் குடா நாட்டில் பல இராணுவ முகாம்கள் மீதான வேவு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டான் . 1995 ம் ஆண்டு வன்னி மாவட்ட படையணியில் வேவு அணி லீடராக இணைக்கப்பட்ட மதன் தமிழீழத்தின் பல பகுதிகளிலும் வேவுச் செயற்பாடுகளில் திறமுடன் செயற்பட்டான் . 1996 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் வேவு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இளம் போராளிகளை வேவு நடவடிக்கைகளில் பயிற்றுவிப்பதில் மதன் வல்லவராயிருந்தார் . அச்சமறியா வேவுப் புலிகளான வீரமணி , கோபித் , தென்னரசன் , இராசசிங்கம் மதுரன் முதலான இளம் அணித் தலைவர்களை வேவு நடவடிக்கைகளில் திறமுடன் நடத்தினார். படையணியின் முதுநிலை அணித் தலைவன் ராகவன் மதனுடைய இணைபிரியாத தோழனாயிருந்து மதனிடம் வேவுப் பயிற்சி பெற்றார். பல தாக்குதல்களில் மதன் ராகவனுடன் இணைந்து கனரக ஆயுத சூட்டாளனாக களமாடினார்.

1996 ம் ஆண்டு ஆனையிறவு பெரும் தளத்தில் மதன் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது எதிரியின் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமுற்ற, ஒரு காலை இழந்தார். சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் , உடல் நலன் தேறி செயற்கைக் காலுடன் மீண்டும் களமுனைக்கு திரும்பினார்.

1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் மதன் கள நிர்வாகப் பொறுப்பாளராக ஓய்வின்றி செயற்பட்டார். வெடிபொருள் வழங்கல், உணவு வழங்கல், வாகனம் முதலான அனைத்தையும் மதன் தனியொரு பொறுப்பாளராக இருந்து நிர்வகித்தார். ஜெயசிக்குறு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்ட பின்பு, படையணியின் கண்ணன் நிர்வாகத் தளத்தில் மதன் நிர்வாகப் பொறுப்பாளராக கடமையேற்று நடத்தினார். இக் காலத்தில் சேந்தன், தமிழரசன் வீரன், எழிலன், இரவி, தமிழன், குமுதன் முதலான இளம் அணித் தலைவர்களை நிர்வாகச் செயற்பாடுகளில் பயிற்றுவித்து திறமுடன் வழிநடத்தினார்.

1998 ல் ஓயாத அலைகள் -2 சமரில் மதன் வெடிபொருள் வழங்கல் பொறுப்பாளராக திறனுடன் செயற்பட்டார். கிளிநொச்சி மீட்புக்கு பிறகு தொடர்ந்து நிர்வாகப் பொறுப்பாளராக கடமையாற்றிய மதன், 1999 ல் ராகவன் அவர்கள் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற போது , கனரக அணிகள் பொறுப்பாளராக மீண்டும் களமுனைக்கு திரும்பினார். கனரக ஆயுத அணிகளை சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபடுத்திய மதன் , போராளிகளின் செயற்திறன்களை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்டார் . சுட்டதீவு பின்தளத்தில் தனது கட்டளை மையத்தை அமைத்திருந்த மதன், சுட்டதீவு பரந்தன் ஊரியான் முன்னரஙகில் எதிரி மேற்கொண்ட பாரிய முன்னேற்றங்களை தடுத்து நிறுத்திய கடும் சண்டைகளில் மோட்டார் அணிகள் ஒருங்கிணைப்பாளராக திறமுடன் களமாடினார்.

ஓயாத அலைகள்-3 சமரில் மதன் ஒட்டுசுட்டான் ,அம்பகாமம் களத்தில் வெடிபொருள் வழங்கல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இச் சமரில் ராகவன் அவர்களின் இழப்பால் ஆறாத துயரடைந்த மதன் சிறிதும் மனந்தளராமல் தனது தோழனின் இலட்சியப் பயணத்தில் ஓய்வின்றி களமாடினார். ஓமந்தை வரையிலான சமர்களில் மிகவும் திறமாக கள நிர்வாகத்தை நடத்திய மதன் , பரந்தன் மீட்புச் சமரில் சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களுடன் நின்று வெடிபொருள் வழங்கல் பொறுப்பாளராக தொடர்ந்து கடமையாற்றினார்.

2000 ம் ஆண்டில் பூநகரி பகுதியில் நிலையமைத்திருந்த மதன் எமது வேவு அணிகளை தனங்கிளப்பு ,அரியாலை பகுதிகளில் நடத்தினார். இலக்கியன் , பல்லவன், மதுரன் ,மோகன் முதலான அணித் தலைவர்களை தீவிரமான வேவுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தினார். குடாரப்பு இத்தாவில் தரையிறக்கச் சமருக்கான பயிற்சித் தளத்தில் படையணியின் கள நிர்வாகப் பொறுப்பாளராக மதன் கடமையாற்றினார்.

இத்தாவில் தரையிரக்கச் சமரில் மதன் தொடர்ந்து வெடிபொருள் வழங்கல் களநிர்வாகப் பொறுப்பாளராக தீவிரமாக செயற்பட்டார் . கட்டளைத் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு அருகில் நிலையமைத்த மதன், சிறப்புத் தளபதி இராசசிங்கம் துணைத் தளபதி நேசன் ஆகியோருடன் இணைந்து ஓய்வொழிச்சலின்றி செயற்பட்டார். மதுரன் , பாவலன் , மாறன், ஆரூரன் முதலான அணித்தலைவர்கள் மதனுடன் நின்று ஓய்வின்றி கடமையாற்றினர் . பெட்டிச் சண்டைகளில் வெடிபொருள் வழங்கலை திறமுடன் செயற்படுத்திய மதன், கனரக மோட்டார்களை ஒருங்கிணைத்தும் களமாடினார் . 2000 ம் ஆண்டு 4 ம் மாதம் 10 ம் நாள் எதிரி மேற்கொண்ட பாரிய முன்னேற்றங்களுக்கு எதிரான பெரும் சமரில் தீரத்துடன் செயற்பட்ட மதன் , தொடர்ந்து 11-04-2000 அன்று எதிரியின் செறிவான எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் எமது மோட்டார் நிலைக்கு எறிகணைகளை உழவூர்தியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது , எதிரியின் எறிகணைகள் உழவூர்தியின் மீது வீழ்ந்து வெடித்ததில் படுகாயமடைந்த மதன் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அன்றைய சமரில் போராளிகள பெற்ற வெற்றியில் மதனின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

லெப். கேணல். மதன் அவர்களின் உடன்பிறந்த தமையன் நளன் அவர்களும் எமது இயக்கத்தில் இணைந்து திறமுடன் களமாடிய போராளியாக விளங்கினார். இம்ரான் பாண்டியன் படையணியில் செயற்பட்டு வந்த நளன் , வேவு நடவடிக்கைகளிலும் நிர்வாகப் பொறுப்பாளராகவும் திறமுடன கடமையாற்றினார். இறுதிச் சமரில் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதிகளுள் ஒருவராக வீரத்துடன் களமாடிய நளன் 04-04-2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காக இரு மாவீரர்களை ஈந்த குடும்பமாக மதன் அவர்களின் குடும்பம் சிறப்பு பெற்றது.

லெப். கேணல். மதன் அவர்கள் எமது தேசியத் தலைவர் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட துடிப்புமிக்க போராளியாக விளங்கினார். நெடிதுயர்ந்த தோற்றத்தில் கனிவுடனும் எளிமையுடனும் திகழ்ந்த மதன், தனது பொறுப்புகளை நிறைவேற்றும் பொழுது கண்டிப்பும் நேர்த்தியும் சமரசத்திற்கு இடமற்ற உறுதியும் கொண்ட போராளியாக விளங்கினார். இவருடைய சிறப்பான செயற்பாடுகளுக்காக தலைவரிடமும் தளபதிகளிடமும் பாரட்டுகளைப் பெற்றார். படையணியின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட மதன் ஒரு காலை இழந்தும் சிறிதும் மனம் தளராமல் தொடர்ந்து களத்தில் செயற்பட்ட முன்னுதாரணமான தளபதியாக மதன் விளங்கினார். லெப். கேணல். மதன் அவர்களின் பொறுப்புணர்வும் வீரமும் ஈகமும் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்காது நிறைந்திருக்கும்.

இதே நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பெ . தமிழின்பன்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.