Jump to content

ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாகவும் அறிவக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மதிப்பீட்டை சபையில் சமர்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் சில முக்கிய தரவுகள் வருமாறு-

” புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தை நாம் சபையில் சமர்ப்பித்துள்ளோம்.

இன்று நாம் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடியின் ஆழம் தொடர்பாக நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எனினும், இதுதொடர்பாக இன்னும் சிலருக்கு தெளிவில்லாமல் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு பின்னோக்கி நகர்வதாக பலரும் இன்று கூறுகிறார்கள்.

தூரநோக்கில்லாத பொருளாதாரக் கொள்கையினால் தான் நாடு இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
மக்கள் அனைத்தையும் அரசாங்த்திடமிருந்தே எதிர்ப்பார்க்கிறார்கள்.

அரசாங்கமானது கொள்கைகளை வகுக்க வேண்டுமே ஒழிய வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என ஜே.வி.பியின் உறுப்பினரான சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார். இது உண்மையில் வரவேற்றக்கத்தக்கதாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான எமது பேச்சுக்கள் வெற்றியடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்துள்ளோம். எரிபொருள்- எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க முடிகின்றது.

ஆனால், இவற்றையிட்டு நாம் திருப்தியடைய முடியாது.

எமக்கான நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று அவசியமாகும். 2023 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டமானது பூகோல பொருளாதாரத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதனை இலக்காகக் கொண்டே இந்த இடைக்கால வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் அரச சேவைக்காக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

தனியார் துறைகளையும் இதனை பின்பற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவை அரச வங்கிகளில் பெறும் கடன்களைப் பெற்றே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை உள்ளிட்ட 50 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி மற்றும் பணம் அச்சிடுதல் குறித்து புதிய சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்.

அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மின்சார வசதியில்லாத பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் சமுர்த்தி பயனாளர்கள், முதியோர் கொடுப்பனவைப் பெறுபவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபாவை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மலையகத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு புகையிரதத்தின் ஊடாக மரக்கறிகளை கொண்டு செல்வதற்கான செயற்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை குருநாகலில் நிறுவுவதற்கு முன்மொழியப்படுகிறது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அவற்றின் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்ட ஒழுங்குமுறைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் மாதம் முதல் நாட்டின் சுற்றுலாத்துறையை பலப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2023 ஆண்டு இறுதியில் ஒரு வருடத்திற்கு நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சமாக உயர்த்துவதே இதன் இலக்காகும்.

கொரோனா தொற்றினால் தொழிலை இழந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான பயிற்சியை வழங்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்தின் போது உரத்தின் விலை குறைவடையும். இதன் ஊடாக அரசியை சாதாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

அத்தோடு, நாட்டில் சுமார் 61,000 குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளன. அவற்றுக்கு சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணங்கள் வழங்கப்படும்.

எதிர்க்காலத்தில் எரிபொருளை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட உரப்பிரச்சினை மற்றும் கிருமிநாசினி பிரச்சினைக்கு மத்தியில் எக்டயார் 2 அல்லது அதிலும் குறைவாக நெல் பயிர்செய்கை செய்ய அரச வங்கிகளில் விவசாயிகளால் கடன் பெறப்பட்டுள்ளது.

2022 ஆண்டு, மே 30 ஆம் திகதிவரை 28, 259 விவசாயிகள் இவ்வாறு கடன் பெற்றுள்ளனர்.

விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கிணங்க, விவசாயிகளால் அரச வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள 680 மில்லியன் ரூபாய் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தள்ளுபடி செய்யப்படும்.

தள்ளுபடி செய்யப்பட்ட இந்த தொகையானது, திரைச்சேறியின் ஊடாக இரண்டு வருட தவனைகளுக்கு குறித்த வங்கிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், இந்த தொகைக்கான வட்டியை குறித்த வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்காக 350 மில்லியன் ரூபாயை நாம் ஒதுக்கியுள்ளோம்.

தேசிய பால் உற்பத்தியை நாம் இன்னமும் பலப்படுத்த வேண்டும். இதற்கான தேசிய வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படும்.

இதன் ஊடாக முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிங்கள- தமிழ்- முஸ்லிம்- பறங்கியர் என அனைவரையும் இதில் இணைக்க முடியும் என நாம் நம்புகிறோம்.
பொருளாதாரம் பலமில்லாத ஒரு சமூ

த்தில் இனியும் எம்மால் வாழ முடியாது. இன்னமும் கடன் சுமையுடன் வாழும் சமூகமாகவும் இருக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகள் பிடிக்காத காரணத்தினால்தான் சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையவில்லை என்று சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியாக நான், ஒரு தனி மனிதராக கொள்கைகளை வகுக்கவில்லை.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்துதான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
எனவே, விரும்பமில்லாத கொள்கைகள் இருப்பின் எம்முடன் இணைந்து அதனை மாற்றியமைக்குமாறு கட்சிகளிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தனிப்பட்ட அரசியல் கொள்கைகளை விடுத்து நாட்டுக்கான ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும். இதனை தவற விட்டால் நாம் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

உலகத்துடன் ஒன்றிணைந்து வேகமாக முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம்- என்றார்.

https://athavannews.com/2022/1296780

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்.

போர்ம் கொடுக்க ஒருவர், நிரப்பி கொடுத்ததை சரி பார்த்து, அதனை, வேறு மேசையில் இருக்கும் ஒருவர், மேலே இனிசல் போட்டு, அதனை இனொரு மேசையில் இருக்கும் ஒருவரிடம் பாரம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இடையே, சிங்களத்தில், 'ஜறாவ'என்று அழைக்கப்படும் லஞ்சம், மாமூலுக்கான சிக்னல் கொடுக்க ஒரு பீயோன்.

கொடுத்த போர்ம், கம்ப்யூட்டரில் போட ஒருவர். அதனை process செய்ய இன்னுமொருவர்.

படத்தினை ஸ்கேன் செய்ய ஒருவர். கொடுத்த, பாஸ் சான்றிதல்களை செக் பண்ண ஒருவர்.

பிளாஸ்டிக் காட்டில் பிரிண்ட் செய்ய ஒருவர்.

அதனை கொண்டு வந்து தர ஒருவர்.

ஆக, இலங்கை அரச திணைக்களங்களில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள். 😭

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பாராளுமன்றில் மட்டும் இது செல்லாது🤪

7 minutes ago, Nathamuni said:

ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்.

போர்ம் கொடுக்க ஒருவர், நிரப்பி கொடுத்ததை சரி பார்த்து, அதனை, வேறு மேசையில் இருக்கும் ஒருவர், மேலே இனிசல் போட்டு, அதனை இனொரு மேசையில் இருக்கும் ஒருவரிடம் பாரம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இடையே, சிங்களத்தில், 'ஜறாவ'என்று அழைக்கப்படும் லஞ்சம், மாமூலுக்கான சிக்னல் கொடுக்க ஒரு பீயோன்.

கொடுத்த போர்ம், கம்ப்யூட்டரில் போட ஒருவர். அதனை process செய்ய இன்னுமொருவர்.

படத்தினை ஸ்கேன் செய்ய ஒருவர். கொடுத்த, பாஸ் சான்றிதல்களை செக் பண்ண ஒருவர்.

பிளாஸ்டிக் காட்டில் பிரிண்ட் செய்ய ஒருவர்.

அதனை கொண்டு வந்து தர ஒருவர்.

ஆக, இலங்கை அரச திணைக்களங்களில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள். 😭

இவர்கள் ஏதோ வேலையாவது செய்கிறார்கள். ஒவ்வொரு உதவி அரச அதிபர் பிரிவிலும் ஐந்து டெவலெப்மெண்டு ஒவிசர் எண்டு கிரஜ்ஜுவேட் பாடிகள் சிலதை வைத்கிருக்கினம் பாருங்கோ….

அவை சும்மா சேர்ட்… டை..ட்வுசர்…சப்பாத்து போட்டு போய் ஓபிசில இருந்து வாட்சப் பாக்கிறதுதான் வேலை.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சிங்களத்தில், 'ஜறாவ'என்று

ஆர் யு சுவர்? ஜராவ வேறை எல்லோ? (💩)?

மாமூலை - பந்தங், கப்பங், கொமிஸ், உதவுவக், ஹெல்பெகெக், பொடி சப்பொர்ட்டெகெக், இப்படித்தானே சொல்லுறது?

நான் கேள்விபடமாமலும் இருக்கலாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பாராளுமன்றில் மட்டும் இது செல்லாது🤪

Medamulana Mahinda" and the Political Rise Of "Ruhunu Rajapaksas" - DBS  Jeyaraj Column | Daily Mirror

முதலில்.... அங்கு  இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ராஜபக்சவின் ... கடைக்குட்டி, பசில் ராஜபக்சவுக்கே.. 72 வயது.
அப்ப மூத்த மூன்று பேருக்கும்... எத்தினை வயது இருக்கும் என்று, 
நீங்களே... கணக்கு பார்த்துக் கொள்ளுங்க.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

கடைக்குட்டி, பசில் ராஜபக்சவுக்கே.. 72 வயது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. 72 வயசெண்டாலும் தம்பி தம்பிதானே🤣.

நீங்கள் சட்டம் கொண்டு வரும் நரியாரை விட்டுட்டியள். ஆளுக்கு ஒரு டிரவுசரும் இடுப்புல நிக்குதில்ல - அந்தளவுக்கு உடம்பு மெலிஞ்சு போச்சு.

பிறகு எங்கட கெளரவ திருமலை நாடாளுமன்ற உறுப்பினர்….

Edited by goshan_che
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. 72 வயசெண்டாலும் தம்பி தம்பிதானே🤣.

நீங்கள் சட்டம் கொண்டு வரும் நரியாரை விட்டுட்டியள். ஆளுக்கு ஒரு டிரவுசரும் இடுப்புல நிக்குதில்ல - அந்தளவுக்கு உடம்பு மெலிஞ்சு போச்சு.

பிறகு எங்கட கெளரவ திருமலை நாடாளுமன்ற உறுப்பினர்….

"கபுடாஸ்" கதை... மெல்ல, மெல்ல மறந்து கொண்டு போக...
நீங்கள், "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" மீண்டும் கிளறிப்  போட்டியள். 🤣

ஒரு நாளைக்கு... ரணிலின் கால் சட்டை, நழுவி விழும் போலதான்   இருக்கு.
எதுக்கும்... நல்ல, "ஜொக்கா" போட்டுக் கொண்டு திரியச் சொல்லுங்கோ.
ஸ்ரீலங்காவின்  இரண்டாவது  ஜனாதிபதியும், "ஜொக்கா" போடாமல் திரிந்தால், நல்லாய் இராது. 😂

நம்மடை...  திருமலை  கோமான்தான், 
இருக்கிற ஆட்களிலேயே வயது கூடினவர் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

"கபுடாஸ்" கதை... மெல்ல, மெல்ல மறந்து கொண்டு போக...
நீங்கள், "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" மீண்டும் கிளறிப்  போட்டியள். 🤣

ஒரு நாளைக்கு... ரணிலின் கால் சட்டை, நழுவி விழும் போலதான்   இருக்கு.
எதுக்கும்... நல்ல, "ஜொக்கா" போட்டுக் கொண்டு திரியச் சொல்லுங்கோ.
ஸ்ரீலங்காவின்  இரண்டாவது  ஜனாதிபதியும், "ஜொக்கா" போடாமல் திரிந்தால், நல்லாய் இராது. 😂

நம்மடை...  திருமலை  கோமான்தான், 
இருக்கிற ஆட்களிலேயே வயது கூடினவர் என நினைக்கின்றேன்.

🤣 அண்ண ஒரு கேள்வி,

எங்கட பழைய ஆக்கள் எல்லாருக்கும் இரும்பு மனிதன், அடலேறு, அடங்காத்தமிழன், கோப்பாய் கோமகன் இப்படி இராணி காமிக்ஸ் கதாபாத்திரங்கள் போல பட்டம் கொடுப்பது வழமை🤣

ஐயாவை மட்டும் ஏன் மொட்டையா விட்டவங்கள்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

🤣 அண்ண ஒரு கேள்வி,

எங்கட பழைய ஆக்கள் எல்லாருக்கும் இரும்பு மனிதன், அடலேறு, அடங்காத்தமிழன், கோப்பாய் கோமகன் இப்படி இராணி காமிக்ஸ் கதாபாத்திரங்கள் போல பட்டம் கொடுப்பது வழமை🤣

ஐயாவை மட்டும் ஏன் மொட்டையா விட்டவங்கள்?

அவர், ஒரு பட்டத்துக்கும் தகுதி இல்லாதவர் என்பது தான்... உண்மை. 😧

வேணுமென்றால்... கம்பன் கழகத்திடம் சொன்னால், 
ஐரோப்பிய தமிழன் என்று கொடுத்த மாதிரி ஏதாவது...  கொடுத்து விடுவார்கள். 😜
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அவர், ஒரு பட்டத்துக்கும் தகுதி இல்லாதவர் என்பது தான்... உண்மை. 😧

ஏன் இல்லாமல்.

phone ஓவ் பண்ணிய பெருமகன்.

தீபாவளிக்குள் தீர்வு தந்த திருமகன்.

சிங்ககொடிச் செம்மல்.

இப்படி ஏதாவது கொடுக்கலாமே😆.

3 minutes ago, தமிழ் சிறி said:

வேணுமென்றால்... கம்பன் கழகத்திடம் சொன்னால், 
ஐரோப்பிய தமிழன் என்று கொடுத்த மாதிரி ஏதாவது...  கொடுத்து விடுவார்கள். 😜

சும்மா இருங்கோ….

உப்பிடித்தான் நெடுக்ஸ் ஒரு வசனம் சொல்ல, நான் அதை வச்சு ஜோக்கடிக்க…..

….கடைசில 4 பக்கம் HMRC காரனை விட கரிசனையா எழுதி முடிச்சது🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஏன் இல்லாமல்.

phone ஓவ் பண்ணிய பெருமகன்.

தீபாவளிக்குள் தீர்வு தந்த திருமகன்.

சிங்ககொடிச் செம்மல்.

இப்படி ஏதாவது கொடுக்கலாமே😆.

அப்படியானவற்றை நிறைய குடுக்கலாம்,
அவர், விரும்பி வாங்க வேணுமே... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆர் யு சுவர்? ஜராவ வேறை எல்லோ? (💩)?

மாமூலை - பந்தங், கப்பங், கொமிஸ், உதவுவக், ஹெல்பெகெக், பொடி சப்பொர்ட்டெகெக், இப்படித்தானே சொல்லுறது?

நான் கேள்விபடமாமலும் இருக்கலாம்.

கேட்போர், 'கவுரவமாக' சொல்வது 'பொடி சப்போர்ட் எக்கக் தென்ன' (சின்ன, ஆதரவு ஒன்று தாங்கோ).

அலுவலகத்துக்கு வெளியே, காத்திருப்போர், வேலை முடித்து வெளியே வருபவர்களிடம் கேட்பது, ''ஜராவ துன்னத'? (லஞ்சம் கொடுத்தீர்களா)

கொடுத்தோர் 'கவுரவமாக' சொல்வது 'ஜராவ துன்னா'. (கொடுத்து துளைத்தேன்)

முகத்தை பார்த்து, வாங்குபவரா, இல்லையா என்று சொல்லும் அளவுக்கு, அனுபவம் உண்டு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கேட்போர், 'கவுரவமாக' சொல்வது 'பொடி சப்போர்ட் எக்கக் தென்ன' (சின்ன, ஆதரவு ஒன்று தாங்கோ).

அலுவலகத்துக்கு வெளியே, காத்திருப்போர், வேலை முடித்து வெளியே வருபவர்களிடம் கேட்பது, ''ஜராவ துன்னத'? (லஞ்சம் கொடுத்தீர்களா)

கொடுத்தோர் 'கவுரவமாக' சொல்வது 'ஜராவ துன்னா'. (கொடுத்து துளைத்தேன்)

முகத்தை பார்த்து, வாங்குபவரா, இல்லையா என்று சொல்லும் அளவுக்கு, அனுபவம் உண்டு 😁

பொஹோமஸ் ஸ்தூதி🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் அரச சேவைக்காக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

மின்சார வாகனங்களைத்தான் ஜனாதிபதி இலத்திரனியல் வாகனமென்று சொல்கிறாரோ !!!

 

14 hours ago, தமிழ் சிறி said:

அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட இலங்கையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக 60 வயதைக் கடந்தவர்கள் எத்தனைபேர். இவர்களுக்கும் நிரந்தர ஓய்வு வழங்கப்பட்டு அவர்களையும் வீட்டுக்கு அனுப்பணுமா? இல்லையா? 

14 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள- தமிழ்- முஸ்லிம்- பறங்கியர் என அனைவரையும் இதில் இணைக்க முடியும் என நாம் நம்புகிறோம். ...... 

நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

மற்றைய சந்தர்ப்பங்களில் இனவாதத்தை கையில் எடுத்து சிங்களவர் அல்லாதவர்களின் உரிமைகள் ஒடுக்கப்படும் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படும். 

 

14 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதாரம் பலமில்லாத ஒரு சமூகத்தில் இனியும் எம்மால் வாழ முடியாது. இன்னமும் கடன் சுமையுடன் வாழும் சமூகமாகவும் இருக்க முடியாது.

இப்படியான ஒரு நிலைமை வரக் காரணமானவர்களை தண்டிக்கவும் நாட்டின் திறைசேரியை கொள்ளையடித்தவர்களை இனங்காட்டி களவாடப்பட்ட நிதியை மீட்டுக்கொண்டுவர என்ன திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஆட்சியாளர்களின் பிழைகள் தட்டிக் கேட்கப்படவேண்டும். இல்லாவிடின் அது மீண்டும் நிகழ சந்தர்ப்பம் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்.

போர்ம் கொடுக்க ஒருவர், நிரப்பி கொடுத்ததை சரி பார்த்து, அதனை, வேறு மேசையில் இருக்கும் ஒருவர், மேலே இனிசல் போட்டு, அதனை இனொரு மேசையில் இருக்கும் ஒருவரிடம் பாரம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இடையே, சிங்களத்தில், 'ஜறாவ'என்று அழைக்கப்படும் லஞ்சம், மாமூலுக்கான சிக்னல் கொடுக்க ஒரு பீயோன்.

கொடுத்த போர்ம், கம்ப்யூட்டரில் போட ஒருவர். அதனை process செய்ய இன்னுமொருவர்.

படத்தினை ஸ்கேன் செய்ய ஒருவர். கொடுத்த, பாஸ் சான்றிதல்களை செக் பண்ண ஒருவர்.

பிளாஸ்டிக் காட்டில் பிரிண்ட் செய்ய ஒருவர்.

அதனை கொண்டு வந்து தர ஒருவர்.

ஆக, இலங்கை அரச திணைக்களங்களில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள். 😭

ஆசிய நாடுகளுக்கு பொருந்தகூடிய வகையில்தான் பகிடி சீன் வைக்கினம் தோழர்..👍

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.