Jump to content

நட்சத்திரம் நகர்கிறது Review: அன்பு, அரசியல், புதுவித திரை அனுபவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
858265.jpg  
 

'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி கவுரவம் எப்படி அறுத்து பலியிடத் துடிக்கிறது என்பதுதான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா - காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்லும் படம்தான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். தமிழ் சினிமாவின் அழுத்தமான பெண் கதாபாத்திர வார்ப்பு. திமிரான உடல்மொழி, யாருக்கும் அஞ்சாத நெறி, தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நாயகி. இனியனாக காளிதாஸ் ஜெயராமன் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிமாக நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் கூட ஆழமாக எழுதியிருக்கலாம். பிற்போக்குத்தனங்களாலான பாத்திரத்தில் கலையரசனின் நடிப்பு ஈர்க்கிறது. அவமானப்படுவது, குடித்துவிட்டு சண்டையிடுவது என கவனிக்க வைக்கிறார். நாடகக் குழுவில் உள்ள கதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

இதுவரை பார்த்த காதல் படங்களிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி புதியதோர் உலகிற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த உலகில் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. மாறாக அங்கே காதல் பாலின பேதங்கள், சாதி, மதங்கள், நிற வேறுபாடுகள் கடந்து மின்னுகிறது. குறிப்பாக அங்கே தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலும், திருநங்கையின் காதலும் தயக்கமில்லாமல் பேசப்படுகிறது. அங்கே ஆணுக்கு கட்டுப்பட்ட பெண்களையும், அழுது வடியும் பெண்களையும், மீட்பர் மனநிலை கொண்ட ஆண்களையும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் இந்த புதியதோர் முன்னெடுப்பை பாராட்டியாக வேண்டும்.

படத்தில் ரசிக்க நிறையவே இருக்கிறது. ஒட்டுமொத்த விஷுவலாக படம் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. காதலும், அதற்கான விஷுவல்ஸும், கூடவே வரும் இளையராஜாவின் பாடலும் என பல காட்சிகள் கவிதையாக விரிவது கண்களுக்கு விருந்து. ரஞ்சித்தின் ஆகப் பெரிய பலமே அவரது பிரசாரமில்லாத திரைக்கதை. ஆனால், இந்தப் படத்தின் முதல் பாதியில் 'காதல்ன்னா என்ன' என தொடங்கும் உரையாடல், வகுப்பறையில் அமர்ந்திருந்த உணர்வை கொடுத்தது. தொடர்ந்து வரும் சில காட்சிகள் பிரசார நெடியை கொடுத்தது நெருடல்.

'வர்க்கம் ஒழிஞ்சா சாதி ஒழியும்ங்குறதெல்லாம் சும்மா', 'நான் அப்டிங்குறது நான் மட்டுமல்ல அது என்னோட சமூக அடையாளமும் சேர்த்துதான்', 'நாடகக் காதல்', '200 ரூபா டீசர்ட்டும் போட்டு கரெக்ட் பண்ற அளவுக்கா பொண்ணுங்க இருக்காங்க', 'ஆண்ட பரம்பரை', ‘இளவரசன், சங்கர், ஆணவக் கொலைகள்’ என சமரசமேயில்லாமல் திரை முழுவதும் அரசியல் நிரம்பி கிடக்கின்றது. மறுபுறம் எதிர் கருத்துடையவர்களை முற்றிலும் ஒதுக்கவிட வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களும் சேர்ந்ததுதான் சமூகம் என்ற கண்ணோட்டம் கவனிக்க வைக்கிறது. இதன் மூலம் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்த முயற்சித்து, இங்கே நோக்கம் புறக்கணிப்பதல்ல..மாறாக உணர வைப்பது என்ற அரசியல் புரிதல் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

நாட்டார் தெய்வ வழிபாடு, புத்தர் பெயின்டிங், 'நோ மீன்ஸ் நோ', மாட்டுக்கறி, 'காட்டுப்பூனை, நாட்டுப்பூனை' வலிமையான பெண் கதாபாத்திரங்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை ரஞ்சித் டச். படம் முழுக்க இளையராஜாவை ஒரு கதாபாத்திரமாகவே கொண்டு சென்றதும், அவருடைய பாடல்கள் காட்சிகளின் வழி இழையோடுவதும் ரசிக்க வைத்தது.

தவிர, படத்தின் நீளம் பார்வையாளர்களை ஒருகட்டத்திற்கு பிறகு நாற்காலியிலிருந்து நெளியவைக்கிறது. நிறைய இடங்களில் பிரசார நெடி, நிறைய கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் அதற்கான ஆழமான எழுத்தின்மை, வலுவற்ற காரணங்களால் நிகழும் ப்ரேக்-அப்புகள், உடனே நல்லவராக மாறும் கேரக்டர் என ஆங்காங்கே சில ஸ்பீட் ப்ரேக்கர்களும் உண்டு. தன்பால் ஈர்ப்பாளர்கள் காதலை இன்னும் கூட பேசியிருக்கலாம். ஆவணப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டி, ஆவணப் படத்திற்கான உணர்வை கொடுக்கிறது.

கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வண்ணங்களைக் கூட்டுகிறது. நாடகம், பாடல்கள், க்ளைமாக்ஸ் என அவரது கேமரா நட்சத்திரமாக பிரகாசிக்கிறது. தென்மாவின் இசை கதையோடு ஒட்டி பயணிப்பது பலம். 'ரங்கராட்டினம்', 'காதலர்' பாடல்கள் கவனம் பெறுகிறது. கலை இயக்கம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டோனையும் மாற்றுவதில் கலை இயக்குநர் ஜெயரகுவின் பங்கு முக்கியமானது.

மொத்தத்தில் சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நட்சத்திரம் நகர்ந்துகொண்டே மின்னுவதை உணர முடியும். புதுவித திரை அனுபவத்திற்காக படத்தை பார்க்கலாம்.

நட்சத்திரம் நகர்கிறது Review: அன்பு, அரசியல், புதுவித திரை அனுபவம்! | Natchathiram Nagargiradhu Movie Review - hindutamil.in

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பார்த்ததில் பிடித்த படம்..

 

நட்சத்திரம் நகர்கிறது: பா.இரஞ்சித்தின் அழகியல்

தங்க.ஜெயராமன்

spacer.png

தற்செயலாகத்தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தைப் பார்த்தேன். அது என்னைப் பிடித்துக்கொண்டது. மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றவே நான்கு நாட்களுக்குப் பின் மறுபடியும் பார்த்தேன். இன்னும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

சில இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளைப்  புரிந்துகொள்வதற்கு இந்தப் படத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். தமிழ்த் திரையில் இப்படி ஓர் எடுத்துக்காட்டு கிடைப்பது அபூர்வம்.

நாடகக் குழு ஒன்று நாடகம் தயாரிக்கிறது. அதுதான் திரைப்படத்தின் புறச் சட்டகம் (frame story). இந்தச் சட்டகத்திற்கு உள்ளே நாடகம் வளர்கிறது. இயல்பான காதல் உணர்வைச் சமுதாயம் சில நேரங்களில் நாடகக் காதலாகப் பார்ப்பதும் அதன் விளைவும்தான் அவர்கள் தயாரிக்கும் நாடகம்.

நாடகக் குழுவின் உறுப்பினர்களில் பலர் நிஜ வாழ்வில் காதலர்கள். சிலர் தாங்களே அறியாத காதலர்கள் அல்லது விலக முடியாமல் விலகி மீண்டும் சேர்ந்துகொள்ளும் நிலையில் உள்ள காதலர்கள். நாடகக் குழுவின் அர்ஜுன் தன் குழு உறுப்பினர் ரெனேவை நிஜ வாழ்வில் காதலிக்கிறார். அவர்கள் ஒத்திகை பார்க்கும் நாடகத்தில் வருவதுபோலவே அவர் காதலிலும் சாதி ஆணவம் குறுக்கிடுகிறது. திரைப்படத்திற்குள் இருக்கும் நாடகம் தன்னையே அச்சு அசலாக இரட்டித்துக்கொண்டு திரைப்படமாக விரிகிறது. இப்படிக் கதைக்குள் அதே கதையாக அடுக்கி வருகிறது திரைப்படம்.

இனியனின் முத்தம்

ரெனேயின் காதலனாக ஒத்திகை பார்க்கும் இனியன் ஒருகட்டத்தில் அவரை நிஜமாகவே முத்தமிடுகிறார். ஆத்திரத்தில் ரெனெ மேடையிலிருந்து இறங்கி தனியே அமர்ந்து பொருமுகிறார். ‘அவர்களுக்கு இடையில் இன்னும் முற்றிலும் முறிந்துவிடாத காதல் இருக்கிறதே!’ என்று சிலர் சமாதானமாகவும், ‘என்ன இருந்தாலும் இனியன் செய்தது தவறு!’ என்று சிலர் அதை ஏற்காமலும் பேசிக்கொள்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது? ஒரு உள் சட்டகம் உடைந்து வெளிச் சட்டகத்துக்குள் சிதறிவிடுகிறது. நாடகமும் நிஜமும் தங்கள் எல்லைகள் குலைந்து கலந்துவிடுகின்றன. இதுவும் ரசிக்கத்தக்க உத்திதான்.

இனியனால் ரெனேயின் ஆத்திரத்தை விளங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்கு முன் ரெனேயை அவர் ஆயிரம் முறை முத்தமிட்டிருக்கிறாரே! இப்போது மட்டும் அவருக்கு என்ன வந்தது? திருமணத்துக்கு முந்தைய பாலுறவு என்பது மிகச் சாதாரணம், காதல் நிலைக்காவிட்டால் அதோடு மாய்ந்துபோகாமல் இன்னொரு காதலரை ஏற்கலாம், தன் சொத்துபோல காதலி மீது காதலன் உரிமை கொண்டாடக் கூடாது… இப்படியான நிலைப்பாடுகள் ரெனேவுக்கும் இனியனுக்கும் பொதுவானவை என்பதை அவர்கள் உரையாடல் நமக்கு முன்பே சொல்லிவிடுகிறது. பிறகு, தன்னை இழந்த நிலையில் இனியன் கொடுத்துவிட்ட முத்தத்திற்கு மட்டும் ரெனே ஏன் அவ்வளவு கோபிக்கிறார்? ‘என் உடம்பு என் உரிமை’ எனும் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படாதபோது அவருக்கு இந்த ஆத்திரம் வருகிறது. மற்றதெல்லாம் சமுதாயம் தன்பொருட்டு கற்பித்துவைத்துக்கொண்டிருக்கும் விதிகள்.

இப்படி ஒழுக்கநெறிகளைத் தனிமனித சுதந்திரத்திற்கு உள்ள மரியாதை என்ற புள்ளிக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறார் பா.இரஞ்சித். (என் நடையில் நான் ரஞ்சித் என்றுதான் சொல்வது வழக்கம். இருந்தாலும், ரெனெ ஒரு இடத்தில் சொல்வதுபோல் ஒருவர் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது அவர் உரிமைதானே!).

இந்த முத்த நிகழ்வைக் கதையில் நான் முதன்மைப்படுத்த காரணம் உண்டு. திரைப்படம் கஸ்டாவ் கிலிம்ப்டின் முத்த ஓவியம் ஒன்றைக் காட்டித்தான் ஆரம்பிக்கிறது. இனியன்-ரெனே காதலும் முத்தம் ஒன்றால்தான் சட்டென்று மலர்கிறது. இந்தக் கட்டத்தில் முத்தத்தால் வந்த கோபம் ஒரு பெண்ணுக்குத் தன் உடம்பின் மீதுள்ள சுதந்திரத்தின் அழுத்தமான குறியீடாகிவிடுகிறது.

சமுதாயம் விதித்த தளைகளோடு காதல் என்ற இயல்பான உணர்வு நிகழ்த்தும் சுதந்திரப் போராட்டம் திரைப்படத்தின் பேசுபொருள்.  இந்தப் பொருளின் அரசியல் அம்சத்துக்கு இணையாக அதன் திரையம்சமும் முக்கியம். வழக்கமான திரைப்படத்தின் வடிவத்திலிருந்து இந்தப் படம் தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டுள்ளது. அந்தப் புதிய சுதந்திரத்தில் தனக்குத் தனியான ஓர் அழகியலையும் கண்டுகொண்டது. இதைக் கொஞ்சம் விளக்கலாம் என்று எண்ணுகிறேன்.

வடிவம் எனும் ஆதாரம்

ஒத்திகையின்போது விஜயனிடம் குழுவின் மாஸ்டர், “உங்கள் காதல் உணர்வை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? அதற்கு ஒரு ஃபார்ம் (வடிவம்) கொடுங்கள்” என்று சொல்வார். நம்மைப் போலவே விஜயன் ஃபார்ம் என்றால் என்ன என்று கேட்பார். ‘உடல் அசைவுகள், செய்கை-இப்படி உங்கள் உணர்வுக்கு ஏதாவது ஒரு வடிவம்’ என்று பதில் வரும். உண்மையில் எல்லாக் கலைகளுக்குமே இந்த வடிவம்தான் (form) ஆதாரம். ஒரு கலையில்  வடிவத்தைத் தவிர அதில் உள்ள மற்றெதுவும் அவ்வளவு முக்கியம் அல்ல. முக்கியமாக நாமாக அதற்குள் காணும் தத்துவங்கள் அடுத்த பட்சம்தான் என்பது என் பார்வை. பேசுபொருள் கலைப் படைப்பின் வடிவத்துக்கு ஒரு சாக்கு என்றுதான் சொல்வேன்.

நாம் நாடக வடிவத்தைப் பற்றிப் பேசும்போது வடிவத்தை எலியட்டின் objective correlative என்றும் சொல்ல இயலும். பரதம் ஆனாலும், நாடகம் ஆனாலும், திரைப்படம் ஆனாலும் இது சரியாக அமைவதுதான் அதன் கற்பனைச் சிறப்புக்குச் சான்று.

பாத்திரங்களின் வசனத்தில் அரசியல் எவ்வளவு இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும், இரஞ்சித்தின் பிரதான அக்கறை படத்தின் வடிவத்திலும் பயணப்பட்டுள்ளது கவனம் அளிக்கப்பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன். படத்தின் கலை அம்சத்தை நாம் சரியாக மதிப்பிட வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். 

அழகியலின் முன்னகர்வு

துணிச்சலான இந்தப் படம் தமிழ்த் திரையின் அழகியலை வெகுவாக முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது. வேறெவரும் இந்த வழியில் முயற்சித்திருந்தால் இப்படியொரு சாதனை நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகம்.

கதைக்குத் துவக்கம் இல்லை, முடிவும் கிடையாது. கதாநாயகன் என்று யாரும் இல்லை. இனியனும் விஜயனும் கதையின் பிரதான பாத்திரங்கள்; அவர்கள் பாத்திரப் படைப்பு அந்த வகைதான். படத்தில் நாயகன், நாயகி என்ற பாத்திரங்களுக்கான கதைப் பரப்பே இல்லை. அந்தப் பரப்பை உருவாக்கும் ஆசையை இரஞ்சித் லாவகமாகத் தவிர்த்துள்ளார். தமிழ் என்ற ரெனேயும் கதாநாயகிக்கான வழக்கமான பாத்திரமல்ல. மற்ற பாத்திரங்களைவிட அவர் அழுத்தமாக வரையப்பட்ட அற்புதமான கதாபாத்திரம். பாதிக்குப் பாதி துஷாராவின் நடிப்புத்தான் அந்தப் பாத்திரத்தையே படைக்கிறது. ஏற்கனவே படைக்கப்பட்ட பாத்திரத்தோடு அவர் ஒன்றிவிட்டார் என்று சொல்வது அவருக்குச் செய்யும் நியாயம் ஆகாது. அந்தப் பாத்திரத்திற்கு ஓர் அபூர்வமான பண்பாட்டுக்கு உரிய நளினமும் நுட்பமும், வசீகரமான துணிவும் தீர்மானமும் உண்டு. அது வரித்துக்கொண்ட சுதந்திரம் அதை மேலும் அபூர்வமாக்குகிறது. பாத்திரம் இப்படி உருவாகி இருப்பதில் துஷாராவின் பங்கு அதிகம்.

கதைக்குள் கதையாக வரும் நாடகத்துக்குக் கதையே கிடையாது. வெளிச் சட்டகமாக இருக்கும் திரைப்படத்திற்கும் கதை என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு ஒத்திகையின்போதும் தன் கதைக் கட்டங்களை நாடகம் தேடிக் கண்டுபிடிக்கிறது. தகப்பனே தன் மகளைக் கொல்வதாகக் காட்டலாமா அல்லது மகளின் காதல் மணத்துக்கு அவர் சம்மதிப்பதாகக் காட்டலாமா என்று நடிப்பவர்களே பேசி முடிவு செய்வார்கள். இந்த வகைக் கதைகள் தகப்பனே கொல்வதாக முடிவதுதானே வழக்கம் என்பார் குழுவின் மாஸ்டர். கதையை நாம் வேறு அச்சில் வார்த்துக்கொள்ளலாம் என்பார்கள் நடிகர்கள். எனில், கதையின் போக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதல்ல. நாடகத்தின் முடிவை திரைப்படம் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. இங்கே அரசியல் அல்ல;  கலை வடிவம்தான் முக்கியத்துவம் பெறுகிறது. 

நாடக பாணியில் செந்தமிழ் வசனங்கள் வரும் நாடகம் ஒன்றும் படத்தில் சில நொடிகள் நிகழும். திரைப்படத்தில் சரியான உச்சரிப்போடு ஆங்கிலத்திலும் உரையாடுவார்கள். புலம்பல் இலக்கிய மரபில் கதைப் பாடல் ஒன்றும் வரும். மேற்கத்திய மேடை நாடகம்போல் கோரஸ் வரும். தமிழில் ஒரு பிராட்வே ஆங்கில ஆபர உருவாக்கும் முயற்சியோ என்று உங்களையே கேட்டுக்கொள்வீர்கள். கதைக்குள் வரும் நாடகத்தில் பொம்மலாட்டம்போல் பாத்திரங்கள் வருவார்கள். சில நிகழ்வுகளைக் கார்ட்டூன்களாகக் காண்கிறோம். ஒன்றோடு ஒன்று இசையாதவையாகத் தோன்றும் இவை திரைப்படத்தின் அழகியலால் பாந்தமாக பின்னிக்கொள்கின்றன. திரைப்படத்தின் மெய்யான அழகியல் எல்லா முரண்களையும் கரைத்துத் தன்மயமாக்கிக்கொள்கிறது. 

தனக்கு முந்தைய கலைப் படைப்புகளைத் தனக்குள் கொண்டுவராத அல்லது நம் நினைவில் தூண்டாத ஒரு படைப்பு செறிவானதாக இருக்காது. அசலாக இருக்க வேண்டும் என்ற பத்தாம்பசலி பதைப்புத்தான் அங்கே மேலோங்கும். இந்தப் படம் அந்த வழக்கமான திரைப்படத் தன்மையிலிருந்து விடுதலை பெற்ற ஒன்றா இல்லையா என்று இப்போது சொல்லுங்கள்.

ஓர் ஒத்திகையின்போது குழுவின் மாஸ்டர், “இது என்ன, சினிமாத்தனமாக நடிக்கிறீர்கள்?” என்று கேட்பார். இந்தத் திரைப்படம் தன்னைத்தானே விமர்சித்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தது. தான் உருவாகும் விதத்தையே தன் கதையாக்கிக்கொள்ளும் வகை. சினிமாத்தனம் உள்ளவை எப்படி இருக்கும்? மரணப் படுக்கையில் இருக்கும் தன் பாட்டியைக் காண ஊருக்குச் செல்கிறார் விஜயன். அங்கும் வரும் காட்சிகள் எல்லாம் வழக்கமான திரைப்படக் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும். படத்திற்கு உள்ளேயே  காட்சிகளாக வரும் இவற்றின் சம்பிரதாய வடிவத்துக்கும் திரைப்படத்தின் நூதனமான வடிவத்துக்கும் எவ்வளவு வேறுபாடு! தான் எந்த பாணியிலிருந்து விடுதலை பெற்றதோ அதிலேயே  சில காட்சிகளை உருவாகவிட்டு கதையை நகர்த்துவது தன் பகடியைத் தொனி அளவிலேயே வைத்துக்கொள்ளும் அழகியல் நுட்பம்.

ஒத்திகை பார்க்கும் நாடகம் மேடையேறி நடந்துகொண்டிருக்கும்போது ‘சமூகக் காவலர்’ ஒருவர் தன் வன்முறையால் அதைக் குலைத்துவிடுகிறார். நாடகம் நடக்கவில்லை. எப்படியோ எல்லாரும் சேர்ந்து அவரை விரட்டுகிறார்கள். ரெனே அவரை நாற்காலியால் அடித்துக்கொண்டே “செத்துப் போ, செத்துப் போ” என்று கத்துகிறார். ரெனேயின் உயர்வான கலாச்சார நளினத்தையும், அவரது தீர்மானமான சிந்தையையும்கூட அந்த முரடரின் கொடுமை சற்று நேரம் குலைத்துவிடுகிறதே! அதுதான் நமக்கு வலிக்கிறது. அநியாயத்தின் எதிரில் சமுதாயத்தின் பண்பாட்டு அழகு குலைந்துபோகும்போது நமக்கு அனுபவமாகும் வலி அது. 

மனித குடும்பத்தின் எப்போதுமே தீராத துயரம். பின்பு நாடகக் குழுவினர் மெளனமாக அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த இறுதிக் காட்சியிலும் வானத்தின் குறுக்கே பாயும் நட்சத்திரம் ஒன்று.  ‘பிரபஞ்சம் ஒரு வசீகர ஜாலம், அழகோ அழகு!’ பிரபஞ்சத்தின் அழகை வியந்துகொண்டே திரைப்படம் முடிகிறது.  

அழகியல் தொடர்பாக திரைப்படத்தின் குறைகள் இரண்டையும் சொல்லிவிடுகிறேன். நம் ரசனையை நம்பி தன் படைப்பில் இவ்வளவு புதுமைகளைச் செய்திருக்கும் ரஞ்சித் ஏன் படத் தலைப்பின் அழகுக்கு ‘ந’  ‘ந’ அடுக்கு மொழியை  நம்புகிறார்? சமுதாயத்தின் மீது ரெனெவுக்கு இருக்கும் கோபத்துக்குக் காரணமாக சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களைக் கார்ட்டூன்களாக்கிக் காட்டுகிறார்கள். அந்தப் பாத்திரப் படைப்பில் ஒரு உளவியல் காரணமும் (motive) வைக்க வேண்டுமா? அது இல்லாமலேயே அவர் அழுத்தமான பாத்திரம்தானே? சமூகக் காரணம் தனிநபரின் உளவியல் காரணமாகப் பார்க்கப்படும் ஆபத்து அதில் இருக்கிறதல்லவா?  

விடுதலைக் குரலின் வெளிப்பாடு

படத்தின் ஆரம்பத்தில் மைக்கெல் பூப்லேயின் “புதிய விடியல்/ புதிய நாள்/ எனக்குப் புதிய வாழ்க்கை…/ இந்தப் பழைய உலகம் எனக்குப் புதிய பூமி…/  சுதந்திரம் என் உரிமை” என்ற ஆங்கிலப் பாடல் ஒலிக்கிறது. இந்த விடுதலைக் குரலை படம் பேசும் அரசியலில் மட்டுமல்லாமல் அதன் கலை வடிவத்திலும் காண முடிகிறது என்பதுதான் படத்தின் பெரும் சிறப்பு!

விரியும் வானத்தைக் காட்டி ‘இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் ஒரு துகள். அந்த நினைவு இருந்தால் நமக்குள் சண்டை, சச்சரவு வராது. அப்போது மனித வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாக இருக்கும்!’ இப்படி ஒரு அர்த்தம் தொனிக்கப் பேசுகிறார் ரெனே. மகத்தான பிரபஞ்சத்தில் மனிதனின் கேவல இருப்பைக் காண்பது வெறும் அரசியல் மட்டும்தானா? இந்தத் திரைப்படம் அரசியலிலும் அதற்கும் உயர்ந்த தளத்திலும் வடிவம் எடுத்துள்ளது. சபாஷ் பா.இரஞ்சித்!

 

https://www.arunchol.com/thanga-jayaraman-on-pa-ranjith-natchathiram-nagargirathu

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.