Jump to content

யாழ்.மாநகர சபைக்கு... ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதி, பயன்படுத்தப் படாமைக்குரிய காரணம்... இதுதான். - வரதராஜன் பார்த்தீபன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்கியமை வேடிக்கைக்குரியது- வரதராஜன் பார்த்தீபன்

யாழ்.மாநகர சபைக்கு... ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதி, பயன்படுத்தப் படாமைக்குரிய காரணம்... இதுதான். - வரதராஜன் பார்த்தீபன்.

வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றை தமிழ் பிரதேசங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் மத்திய அரசாங்கம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, இலங்கையில் முதலீடு செய்யுமாறுக் கோரியுள்ளமை வேடிக்கைக்குரியது என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்குமாறு கோரியுள்ளமை தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு தின்ம கழிவகற்ற ஜப்பான் நாட்டில் பாவிக்கப்பட்ட நவீன ரக கழிவகற்றல் வாகனத்தை வழங்க கடந்த 2019.03.19 ஆம் திகதி அப்போதைய யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டுடன் ஒப்பந்தம் கைச்சாட்டு இடப்பட்டது.

அந்த வாகனத்தை ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான செலவு , வரிகள் மற்றும் மாநகர சபைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான செல்வது என 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து வாகனத்தினை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பல்வேறு தரப்புகளுடனும் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2019.06.12 ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் மூலம் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரினோம்.

அவர்கள் எமக்கான அனுமதியை தரவில்லை. மீண்டும் 18 ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கு உரிய படிமுறைகள் அடிப்படையில் இறக்குமதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.

நீண்ட இழுபறியில் பின்னர் 2019.11.14ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அது மூன்று மாத கால பகுதிக்கே செல்லுபடியாகும். அதற்கு இறக்குவதற்கான மற்றைய அனுமதிகள் கிடைக்க தாமதமானதால், இறக்குமதி சான்றிதழ் 2020.02.17ஆம் திகதியுடன் காலாவதியானது.

அதன் காலாவதி திகதியை நீடித்து தருமாறு கோரிய போது அதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு சபை மறுத்தது.
பின்னர் திறைசேரிக்கு கடிதம் அனுப்பினோம். மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம்.

நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.

பிறகு அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்வதன் ஊடாக முயற்சிப்போம் என அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை தாக்கல் செய்தோம். ஆனால் பயன் கிடைக்கவில்லை.

இறுதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தன்னை சந்திக்கும் இராஜ தந்திரிகளிடம் வாகனத்தினை இறக்க முடியாத நிலைமை குறித்து எடுத்து கூறி இராஜதந்திர ரீதியாக முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதுவும் பயனற்று போனது.

இந்நிலையிலையே, ஜப்பான் அரசாங்கம் தமது திட்டமானது மூன்று கால பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது.

மூன்று வருடங்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்.மாநகர சபையும் தன் சக்திக்கு மேலாக பல முயற்சிகளை எடுத்தமையை நாம் அறிவோம்.

நாமும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடாத்தினோம். எந்த பயனும் இல்லை எனவே ஒப்பந்தத்தை முடிவுறுத்துகிறோம்.

மேலும், வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

இந்த விடயத்தில் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட்டையோ தற்போதைய முதல்வர் மணிவண்ணனையோ அல்லது மாநகர நிர்வாகத்தையோ குறை கூறவோ குற்றம் சாட்டவோ முடியாது முடியாது.

இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டது.

தமது தலையீடு இன்றி வெளிநாடுகளோ வெளிநாட்டில் வசிப்போரோ எவரும் மாகாணங்களுக்கு நேரடியாக உதவ விடக்கூடாது எனும் குறுகிய சிந்தனையில் செயற்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கி அவர்களை இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு அரசாங்கம் கோருகின்றதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது.

ஏனெனில் ஜப்பான் நாட்டினால் வழங்கப்பட்ட உதவிகள் தமிழர் தேசத்திற்கு கிடைக்க கூடாது என சிந்திப்பவர்கள் எவ்வாறு புலம் பெயர் தேசத்தவர்கள் தமிழர் தேசத்தில் முதலீடு செய்ய அனுமதிப்பார்கள்?

யாழ்.மாநகர முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பல்வேறு தரப்புக்களை சந்தித்த போது பலரும் தமிழர் தேசத்திற்கு உதவ, தேசத்தில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் அரசாங்கம் தமிழர் தேசத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வோ, உதவிகளை செய்யவோ குறுகிய அரசியல் சிந்தனையுடன் தடைகளை ஏற்படுத்துவார்களாக இருந்தால் , நாம் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் – என்றார்.

https://athavannews.com/2022/1296812

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரி தடிபோட்டுக் கொண்டு மத்தி நல்ல பிள்ளைக்கு நடிக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குப்பை லொறியைக்கூடி கொண்டுவர முடியாத நிலையில்தான் வடக்கு கிழக்கின் நிலை இருக்கிறது. 

அதற்குள் புலம்பெயர் தமிழரே இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்கின்ற பரப்புரை வேற... 😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் விக்கி ஐயா இருக்கும்போதும் செய்தார்கள்!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் விக்கி ஐயா இருக்கும்போதும் செய்தார்கள்!!

காலம் காலமாகவே இதுதான் எங்கள் நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

என்ன மாதிரி தடிபோட்டுக் கொண்டு மத்தி நல்ல பிள்ளைக்கு நடிக்குது!

ஆனால் சில அரசியல்வாதிகள் நோகாத மாதிரியே நடிக்கிறாங்களேயப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம்.

நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.

மாநகரசபை பணத்தை திறைசேரியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு. மாநகரசபையின் செயல்பாடுகளுக்கு  அரசாங்கம் தடை போடுகிறது எனவே ஜப்பான் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி  செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதை விளக்கி அவர்களின் பணத்தை இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையளித்திருக்கலாம். இறுதியில் பணத்தை  திறைசேரியில் சேர்த்தமைக்கு எவரிடமும் உரிய அத்தாட்சி இல்லையென்றால் மாநகரசபையில் அங்கத்தவர்களுக்கிடையில் புடுங்குபாடுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vanangaamudi said:

மாநகரசபை பணத்தை திறைசேரியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு. மாநகரசபையின் செயல்பாடுகளுக்கு  அரசாங்கம் தடை போடுகிறது எனவே ஜப்பான் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி  செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதை விளக்கி அவர்களின் பணத்தை இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையளித்திருக்கலாம். இறுதியில் பணத்தை  திறைசேரியில் சேர்த்தமைக்கு எவரிடமும் உரிய அத்தாட்சி இல்லையென்றால் மாநகரசபையில் அங்கத்தவர்களுக்கிடையில் புடுங்குபாடுதான்.

திறைசேரியிடம் பணம் வழங்கவில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.