Jump to content

புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ

By T Yuwaraj

31 Aug, 2022 | 06:38 AM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அதுகுறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை.

மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். 

இந்த இணையனுசரணை நாடுகள் என்பதை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே இருக்கின்றன.

இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் நியாயமான நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 கேள்வி - அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை முன்வைப்பதற்கு ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் உள்ளதா?

பதில் - இந்த இணையனுசரணை நாடுகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்கள் சார்ந்திருக்கும் நாடுகளாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிறந்த நிலையிலிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

 காணாமல்போனோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு விவகாரம் ஆகியவற்றின் நாம் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை எட்டியிருப்பதுடன் இப்பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டுமென்ற நியாயமான நோக்கத்துடன் செயலாற்றிவருகின்றோம்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அதற்குரிய தீர்வு தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதுமாத்திரமன்றி புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை மிகவும் வெளிப்படையாகவே முன்னெடுத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

 

https://www.virakesari.lk/article/134717

 

Link to comment
Share on other sites

காணிகளை அபகரிக்க  தொல்பொருள் ஆராட்சி என தொடங்கி இருக்கும் குழு பற்றி அமைச்சர் வாயே திறக்கவில்லை. அரசாங்க அனுசரணை இல்லாமல் இவர்கள் இயங்க மாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணாக்கியன் 2 தடவை கனடா வந்திட்டார்....தமிழ் முசுலிம்களையும் 2தடவை பார்த்திட்டார்...இனி வேலை சுகம்தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

சாணாக்கியன் 2 தடவை கனடா வந்திட்டார்....தமிழ் முசுலிம்களையும் 2தடவை பார்த்திட்டார்...இனி வேலை சுகம்தானே...

2ம் தடவை குரானையும் பெற்றுகொண்டுள்ளார் இனி வேலை  சுமுகமாக முடியுமோ

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

2ம் தடவை குரானையும் பெற்றுகொண்டுள்ளார் இனி வேலை  சுமுகமாக முடியுமோ

குரானுக்கான தேவை அதிகரிக்கும்போது மீண்டும் வருவார். மழைக்கால் இருளானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதை வெகு விரைவில் புரிந்து கொள்வார் சாணக்கியன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

2ம் தடவை குரானையும் பெற்றுகொண்டுள்ளார் இனி வேலை  சுமுகமாக முடியுமோ

நிச்சயம் அடுத்த தெருத் திருவிழாவில் பிரதி பலிக்கும்.....இந்த முசுலிம் பூத் பற்றிய படங்கள்  இருக்கு...அந்த கருவின்விபடி... தமிழ் தம்முடையது..தமிழை வளர்த்ததே தாம்தான் என்பதுடன்...ஆங்கில மொழிபெயர்ப்பில் அசுரப்பு,கக்கீமின் பாராளூமன்ற உரைகளும்...இது ஒரு நீண்ட நோக்குப் போல் தெரிகிறது..

Edited by alvayan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.