Jump to content

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை - ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை - ஜனாதிபதி  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கு காட்ட நல்ல புள்ள வேஷம். இவரு குழந்தைகள் தாய்மார் முதியவர்கள் என்று பாராமல் அப்பாவி மக்களை  குண்டுபோட்டு துடிக்க துடிக்க கொலை செய்வாரு ஆனால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேத்த கையொப்பம் போடமாட்டாரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயம் ..சிலவேளை சட்டம் அவருக்கும் பாயும்தானே..

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.