Jump to content

சீன Vs தைவான்: தீவுக்குள் பறந்த ட்ரோன்களை சுட்டு விரட்டிய படையினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன Vs தைவான்: தீவுக்குள் பறந்த ட்ரோன்களை சுட்டு விரட்டிய படையினர்

  • பிரான்சஸ் மாவோ
  • பிபிசி நியூஸ்
31 ஆகஸ்ட் 2022, 11:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தைவான் தீவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி.

சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.

 

பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.

தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.

சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.

இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின

 

Map

தைவானின் சமீபத்திய குற்றச்சாட்டு தொடர்பாக சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் சமீபத்திய வாரங்களாக சீன ட்ரோன்களை பயன்படுத்து துன்புறுத்துவதாக தைவான் சுமத்திய குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.

"சீனாவின் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள் அவை. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

ஆனால், அவரது கருத்துக்கு தைவான் வெளியுறவு அமைச்சகம் கோபத்துடன் எதிர்வினையாற்றியது. "அழைக்கப்படாதவர்களை திருடர்கள் என்று அழைக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், தைவான் வீரர்கள் ட்ரோன்களை விரட்டும் முயற்சியாக அவற்றை நோக்கி கற்களை வீசும் காட்சிகள் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பப்பட்டன. இந்த வீடியோ சீன சமூக ஊடகங்களில் பயனர்களால் பரவலான கேலிக்கும் ஆளானது.

கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்த தைவான் தலைவர் சாய் யிங்-வென், தீவின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று கூறினார். கடந்த வாரம், அவரது அரசாங்கம் T$586.3 பில்லியன் ($19 பில்லியன்; £16பில்லியன்) மதிப்பிலான பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை வெளியிட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை எதிர்வினையாற்றிய தைவான், "எதிர்காலத்தில் சீன விமானங்களும் கப்பல்களும் எல்லைக்குள் நுழைந்தால் "எதிர் தாக்குதலுக்கு" தயார்," என்று கூறியது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெலோசியின் வருகைக்கு பதிலடியாக தைவானைச் சுற்றி சீனா தனது மிகப்பெரிய ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு வாரத்துக்குள்ளாகவே தைவான் மீது உரிமை கோரும் இடங்களை நோக்கி ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை சீனா அனுப்பியது.

 

Presentational grey line

சீனா மற்றும் தைவான்: சில அடிப்படைகள்

 சீனாவும் தைவானும் ஏன் மோசமான உறவுகளைக் கொண்டுள்ளன? சீனா சுயாதீன தீவை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக அதை பிரதான நிலத்துடன் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

 தைவான் எவ்வாறு ஆளப்படுகிறது? தீவில் அதன் சொந்த அரசியலமைப்பு உள்ளது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அங்கு ஆளுகை செய்கிறார்கள். தைவான் ஆயுதப்படைகளில் சுமார் 3,00,000 படையினர் உள்ளனர்.

• தைவானை யார் அங்கீகரிக்கிறார்கள்? சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரிக்கின்றன. பெரும்பாலானவை சீன அரசாங்கத்தை அங்கீகரிக்கின்றனர். தைவானுடன் அமெரிக்காவிற்கு அலுவல்பூர்வ உறவுகள் இல்லை. ஆனால் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை தீவுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு சட்டம் அமெரிக்காவில் உள்ளது.

 

Presentational grey line

தைவான் எங்கே இருக்கிறது?

 

தைவான் சீனா

தைவான் தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தூரத்தில் உள்ள ஒரு தீவு."முதல் தீவுச் சங்கிலி" என்று அழைக்கப்படும் பகுதியில் தைவான் உள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு நெருக்கமான நட்பு பிரதேசங்களின் பட்டியலில் தைவான் உள்ளது.தைவானை சீனா கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை முன்னிறுத்துவதற்கு சுதந்திரமான சூழலை சீனாவுக்கு தரலாம் என்று சில மேற்கத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் குவாம் ,ஹவாயீ வரை உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அச்சுறுத்தவும் இந்த தீவு பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.ஆனால் சீனா தனது நோக்கங்கள் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.தைவான் எப்போதுமே சீனாவிலிருந்து பிரிந்து கிடந்ததா?

 

சீனா தைவான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சியாங் காய் ஷெக், தைவானுக்கு சென்ற பிறகு கோமின்டாங் கட்சி தலைமையில் ஆளுகையை செலுத்தினார்.

17ஆம் நூற்றாண்டில் குயிங் வம்சத்தினர் தைவானை நிர்வகிக்கத் தொடங்கியபோது அந்தத் தீவு முதன்முதலில் முழு சீன கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர், 1895இல், குயிங் வம்சத்தினர், முதலாவதாக நடந்த சீன ஜப்பானிய போரில் தோல்வியடைந்த பிறகு தங்களுடைய தீவை ஜப்பானுக்கு விட்டுக் கொடுத்தனர்.இரண்டாம் உலக போரில் ஜப்பான் தோல்வியடைந்த பிறகு 1945இல் சீனா மீண்டும் தைவானைக் கைப்பற்றியது.ஆனால், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் சியாங் காய்-ஷேக் தலைமையிலான தேசியவாத அரசாங்க படைகளுக்கும் மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது.1949இல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று சீனாவில் ஆட்சியைக் கைப்பற்றினர்.சியாங் காய்-ஷேக் மற்றும் தேசியவாதக் கட்சியில் எஞ்சியிருந்த - கோமின்டாங் என அழைக்கப்படும் கட்சியினர், தைவானுக்கு தப்பிச் சென்றனர். அங்கு அவர்கள் ஆட்சியமைக்கத் தொடங்கி அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ஆட்சி செய்தனர்.தைவான் அடிப்படையில் ஒரு சீன மாகாணம் என்று அதன் வரலாற்றை சீனா சுட்டிக்காட்டுகிறது. ஆனால் தைவானியர்கள் 1911இல் புரட்சிக்குப் பின்னர் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நவீன சீன அரசு அல்லது 1949இல் மாவோவின் கீழ் நிறுவப்பட்ட சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக இல்லை என்று வாதிடுவதற்கு அதே வரலாற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.கோமிண்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது - அதன் வரலாற்றின் குறிப்பிடத்தக்க பகுதியாக அதன் ஆளுகை உள்ளது. தற்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக 13 நாடுகள் (வத்திக்கான் உள்பட) அங்கீகரிக்கின்றன.தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கும் எதையும் செய்யக் கூடாது என்று சீனா, மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜீய அழுத்தங்களைச் செலுத்துகிறது.

 

சீனா தைவான்

தைவானால்சுயமாக தற்காத்துக் கொள்ள முடியுமா?

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற ராணுவம் அல்லாத வழிகளில் "மறு ஒருங்கிணைப்பை" சீனா முயற்சிக்கலாம்.ஆனால், ராணுவ பலத்தில் ஒப்பிடும்போது சீனாவின் ஆயுதப்படைகளுக்கு நிகராகக் கூட தைவானின் படைகள் இல்லை.

அமெரிக்காவை நீங்கலாக உலகிலேயே வேறு எந்த நாட்டையும் விட சீனா பாதுகாப்புக்காக அதிகம் செலவழிக்கிறது. கடற்படை தளவாட பலம் முதல் ஏவுகணை தொழில்நுட்பம், விமானம் மற்றும் இணைய வழி தாக்குதல்கள் வரை என பெரிய அளவிலான திறன்களுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் ராணுவ பலத்தின் பெரும்பகுதி முக்கிய எல்லை பகுதிகளில் வீரர்களை நிலைநிறுத்த பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ படை கட்டமைப்பு கூட ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது. https://www.bbc.com/tamil/global-62737409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எந்த போரிலும் வெல்ல முடியாத சீனா தாய்லாந்து அடுத்த உக்கிரேன் ஆகா மாற்ற நட்சத்திர கூட்டம் முனையுது பொறுத்து இருந்து பார்க்கணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இதுவரை எந்த போரிலும் வெல்ல முடியாத சீனா தாய்லாந்து அடுத்த உக்கிரேன் ஆகா மாற்ற நட்சத்திர கூட்டம் முனையுது பொறுத்து இருந்து பார்க்கணும் .

தாய்வான் போரினால் ஏற்படும் அரசியல் பொருளாதார நலன், மற்றும் போரினால் ஏற்படும் அனுகூலம் பிரதிகூலம் எனபதினை சீனா கணித்துத்தான் போரில் குதிக்கும்.

சீனா அதனால் போரில் குதிக்காது என நம்புகிறேன் வேணுமென்றால் வெற்று வேட்டு நடவடிக்கைகள் சிலவற்றில் இறங்கலாம்.

ஊர் (உலகம்) இரண்டுபட்டால் கூத்தாடிக்கு (அமெரிக்காவுக்கு) கொண்டாட்டம் என்பது சீனாவுக்குத்த்தெரியும், இரஸ்சியா போல தானாகப்போய் மாட்டிக்கொள்ளாது என நம்புகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சன்டை வந்தால் யாழிலிலும் கொண்டாட்டம் இருக்கும்.😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.