Jump to content

உலகின் மிகச் சிறந்த அறிவுரைகளில் ஒன்று பகவத் கீதை கற்பிக்கும் பாடங்கள்


Recommended Posts

நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். ஒருவர் எதிர்கொள்ளும் சவாலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல், அந்த நேரத்தில் அவரைச் சமாளிப்பதற்காகவே மேம்போக்காக அவருக்கு வழங்கப்படும் வெறும் 'வெத்து வேட்டாட்டான' அறிவுரைகள் பயனற்றவை மட்டுமல்ல பல சமயங்களில் ஆபத்தானவையும் கூட. 

அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலனின் தன்மையானது பல்வேறு புறக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுடன், அதற்கான பலன் உரிய நேரத்தில் கிடைத்தே தீரும்!' என்பதே மிகத் திருத்தமான உட்பொருளாகும். 

கீதை இதனை மட்டுமா வலியுறுத்துகிறது? மேற்கூறிய வாசகத்தை மட்டுமா நம்மில் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்? நிச்சயமாக இல்லை! பகவத் கீதை எனும் முழுமையான சுவைமிக்க, சத்தான மாம்பழத்தின் ஒரு சிறு துண்டின் சாற்றின் துளிகள் தான் மேற்கூறிய ஒரு வாசகம்! முழுமையான மாம்பழத்தின் சுவையும், சத்தும் அதைப் பிழிந்து சாறாக நாம் அருந்தும்போது நமக்குக் கிடைப்பதில்லை. 

அது யாரால், எவ்வளவு நேர்த்தியான செயன்முறை மூலம் பிழியப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது என்பது ஒரு விடயம்; கழிவான சக்கையை நீக்குவதால் இழக்கப்படும் சத்து, சுவை போன்றவை மறு விடயம்; மாம்பழத்தின் தோலை ஆர்வத்துடன் உரிப்பது முதல், அதை ஆசையாகக் கடித்து ருசித்து உண்டு, மீதமுள்ள அதன் விதையையும் ருசித்துவிட்டு அதனை மண்ணில் விதைப்பது வரை நாம் பெறும் திருப்தியான அனுபவத்தைத் தவறவிடுவது இன்னுமோர் முக்கியமான விடயம். 

அந்த வகையில், கீதை எனும் முழுமையான மாம்பழத்தை அதன் சுவையும், சத்தும் குன்றாமல் எவ்வாறு ரசித்து, ருசித்து இன்புற்றுப் பயனடைவது என்பதை இந்த YouTube தொடர் மூலம் நமக்குக் கற்பிக்கிறார் இந்த நல்லாசான். கீதையின் சமஸ்கிருத மூல சுலோகங்கள், அதன் பதங்கள் மற்றும் தமிழில் விரிவான விளக்கம் மட்டுமன்றி தற்காலத்தில் - நடைமுறையில் எவ்வாறு இந்த அறிவுரைகளை நாம் கைக்கொள்ளலாம் என்பது போன்ற விடயங்களையும் உள்ளடக்கியது சிறப்பு. சுவாமி சின்மயானந்தா அவர்களின் உரையை அடிப்படையாக வைத்தே இந்த ஆசான் நமக்கு இந்தப் பாடங்களைக் கற்பிக்கிறார். 

இத்தொடர் இன்னும் முடிவடையவில்லை; இன்னும் ஏராளமான சுலோகங்கள் வர இருக்கின்றன. எனினும் மாம்பழத்தின் சிறு பகுதியைச் சுவைத்து இன்புற்ற மகிழ்ச்சியில் இம்மாங்கனி பற்றி உங்களுக்கும் சொல்வதில் நான் ஆனந்தமடைகிறேன்! சுவைத்தலிலும், பகிர்தலே பேரின்பம் அல்லவா! 

***இன்னோர் விடயம்; 'கீதை உண்மையில் கிருஷ்ணரால் தான் உபதேசிக்கப்பட்டதா?', 'அவர் பரமாத்மாவா?', 'உண்மையில் இது நிகழ்ந்ததா?', 'போர் செய்து உயிர்களைக் கொல்வதை ஏன் கீதை நியாயப்படுத்துகிறது?' எனும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். ஆனால் நம்மை அர்ஜுனனாகவும், நம் வாழ்வைப் போர்க்களமாகவும் உருவகம் செய்த மனநிலையில் இதில் கூறப்படும் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்டுப் பின்பற்றினால் மேலுள்ள கேள்விகள் நமக்கு அவசியமில்லை. 

கீதையிலோ, அதற்கான விளக்கம் தரும் இந்த ஆசான் கூறும் கருத்துக்களிலோ ஆங்காங்கே மிகச்சில ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்கள் ஏதும் இருப்பின் மாம்பழத்தின் அழுகிய மிகச்சிறு பகுதியை நீக்கிவிட்டு உண்பது போல இதனையும் ருசித்துப் பயனடைவோம்! 

மற்றொன்று, மாம்பழத்தின் சுவையும், சத்தும் நமக்குக் கிடைப்பது மாம்பழத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை; நாம் எந்த மனநிலையில், எப்படி உண்கிறோம் என்பதிலும் பெருமளவு தங்கியுள்ளது. கீதை போன்ற மிகச் சிறந்த அறிவுரைகளைக் கேட்ட பயனும் அவ்வாறே! - நமது வாழ்க்கை அனுபவங்களால் நாம் பெற்ற பக்குவத்தின் அளவிலும் தங்கியுள்ளது. அத்துடன் மேலும் பக்குவமடைய நாம் காட்டும் முனைப்பிலும் தங்கியுள்ளது எனக் கூறி கீதை எனும் மாங்கனியின் விதையை என் பங்கிற்கு இங்கு விதைக்கிறேன்! 🙏 

நன்றி 🙏

👇YouTube இணைப்பு கீழே👇

https://youtu.be/VlvcYzm6mk0 

(இந்த இணைப்பு தொடரின் முதலாவது காணொளி மட்டுமே. அந்த YouTube channelஇல் playlist பகுதிக்குச் சென்று 'ஶ்ரீமத் பகவத் கீதை' எனும் தலைப்பில் இத்தொடரில் இதுவரை வெளியான 57 காணொளிகளையும் காணலாம்.)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், பொறுமையாக வாசிக்க வேண்டிய விடயங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தியுடன் வந்திருக்கிறீர்கள் மல்லிகை  வாசம் எங்கும் பரவட்டும்.........!  👍

கண்டது சந்தோசம்......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். -----

அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலனின் தன்மையானது பல்வேறு புறக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுடன், அதற்கான பலன் உரிய நேரத்தில் கிடைத்தே தீரும்!' என்பதே மிகத் திருத்தமான உட்பொருளாகும். 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. 
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

இந்த வரிகள்... சரியானதா? அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?

Link to comment
Share on other sites

1 hour ago, vasee said:

தொடர்ந்து எழுதுங்கள், பொறுமையாக வாசிக்க வேண்டிய விடயங்கள்.

பொறுமையாகக் கேட்டு, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை இக்காணொளிகளில் தந்துள்ளார் இந்த ஆசான். ஒவ்வொருவர் புரிதலும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை தானே. எனவே தான் இதனை இங்கு அறிமுகப்படுத்துவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்கிறேன். அவரவர் தேடலுக்கேற்பக் கேட்டுப் பயன் பெறலாம் என்பதே என் எண்ணம் அண்ணா.😊

கீதையை வெவ்வேறு ஆசான்களிடமிருந்து முழுமையாகக் கற்ற பின்னர் தான் எல்லோரும் இது பற்றிக் கலந்துரையாடுவதும் சிறந்தது என நினைக்கிறேன். அதுவும் இணையத்தில் எழுத்து மூலமான கருத்துப் பரிமாற்றங்களில் பல்வேறு புரிந்துணர்வுச் சிக்கல்கள், நேர விரயம் ஏற்படுவதால் வாய் மொழி மூல உரையாடல்களை நேருக்கு நேர் சந்தித்தோ அல்லது Zoom போன்றவற்றின் ஊடாகவோ செய்தலே ஆரோக்கியமானது என நினைக்கிறேன். அதற்கான காலம் கனியட்டும்! 😊

நன்றி அண்ணா. 😊

 

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நல்ல செய்தியுடன் வந்திருக்கிறீர்கள் மல்லிகை  வாசம் எங்கும் பரவட்டும்.........!  👍

கண்டது சந்தோசம்......!

நீங்கள் அறிந்திராத விடயங்கள் அல்ல இவை சுவி அண்ணா!😊 எனினும் இது பற்றிய தேடலில் உள்ள எவரும் கேட்டுப் பயன் பெறட்டும் என்ற எண்ணத்தில் இங்கு பகிர்ந்தேன்.

எனக்கும் உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி சுவி அண்ணா. 😊🙏

Link to comment
Share on other sites

56 minutes ago, தமிழ் சிறி said:

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. 
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

இந்த வரிகள்... சரியானதா? அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?

தமிழ் சிறி அண்ணா,

நானும் கீதையைக் கற்கும் மாணவன் தான். கீதை பற்றி விரிவாகக் கற்பது இதுவே எனக்கு முதல் முறை. 

நீங்கள் குறிப்பிட்ட வாசகங்கள் தொடர்பான விளக்கங்களை இந்த ஆசிரியர் இனி வரும் காணெளிகளில் தான் தருவார். நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 😊

இவை கூட மேம்போக்கான வசனங்கள் தான். தவறு எனக் கூறுவதை விட ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டிய பல விடயங்கள் இது போன்ற வாக்கியங்களுக்குப் பின்னால் இருக்கின்றன என்பதே பொருத்தமானது. 😊

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.