Jump to content

 நலத்திட்டம் இலவசமா ?   -  சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                        நலத்திட்டம் இலவசமா ?

              

                                                                                   -  சுப. சோமசுந்தரம் 

 

          'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ :
 

வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பாராத ஒரு இந்திய ஒன்றிய அரசு மதவெறியைத் தூண்டுவதும், மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் மாற்றங்களையே தொழிலாகக் கொண்டு திரிவதும் வாடிக்கையாக்கிப் போன ஒன்று. 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டா ஆண்டி !' என்ற கதையாக சமீபத்தில் திருவாய் மலர்ந்து சமூக நலத்திட்டங்களை 'இலவசங்கள்' என்று குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்க அறிவுரை சொன்னது அந்த ஒன்றிய அரசு. அதிலும் தனது முகமான பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் வாயிலாகவே. இது போதாதென்று இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கவலை வேறு; அதன் தொடர்ச்சியாக இலவசங்களை ஒழுங்குபடுத்த ஒரு வல்லுனர் குழு பற்றிய ஆலோசனையும் வழங்கியது. தமிழக நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் 'இந்தியா டுடே' தொலைக்காட்சி விவாதத்தில் பதிலடி கொடுத்தது இந்தியத் திருநாடு முழுவதும் பேசு பொருளானது வரலாற்று நிகழ்வு.
 

செல்வந்தரிடம் நியாயமான வரியாகப் பொருள் பெற்று வறியோர்க்குப் பகிர்ந்தளிப்பது சோஷலிச ஜனநாயகம். 'ஜனநாயகம்' என்பது சோஷலிசத்திற்கான பாதை என்ற காரல் மார்க்ஸின் கூற்றுப்படி பார்த்தால், 'சோஷலிச ஜனநாயகம்' என்ற ஒரு பொருள் பலமொழி அவசியம் இல்லைதான்.
 

1920 ல் நீதிக்கட்சி ஆட்சியில் அன்று மேயராக இருந்த திரு பி.டி. தியாகராஜன் அவர்களால் சென்னையில் சில நகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் 1925 ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. பிற்காலத்தில் காமராஜர், திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் இருவரின் ஆட்சிக் காலங்களில் தங்களின் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் பெரும் அளவில் போராடி இத்திட்டத்தினை அமல்படுத்தினர். காமராஜர் காலத்தில் பொதுவுடமைவாதிகளே எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கேள்வி. ஆனால் எம்.ஜி.ஆர் காலத்தில் பெரிய கட்சிகளில் பொதுவுடமைவாதிகள் மட்டுமே ஆதரித்தனர். ஆதரித்ததற்கு அவர்கள் சொன்ன காரணம் அன்று கல்லூரி மாணவனாய் இருந்த எனக்கு மிகவும் ஏற்புடையதாய்த் தோன்றியது; இன்றும் தோன்றுகிறது : "வளர்ச்சித் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய நீண்ட காலமாகும்; சென்றடையாமலும் போகலாம். ஆனால் நலத்திட்டங்கள் அவர்களை நேரிடையாகச் சென்றடைபவை". அதன்பின் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று இந்தியத் திருநாட்டிற்கே முன்னோடியாய்த் திகழ்வது வரலாறு. இதன் மூலமாக மாணவர் கல்வி இடைநிற்றல் பெருமளவில் குறைந்ததும், மாணவர்தம் ஊட்டச்சத்து முன்னேற்றமும் ஆய்வுகளில் நிறுவப்பட்டமை திட்டத்தின் பெருவெற்றி. இந்த நலத்திட்டத்தையும் இவர்கள் இலவசத்தில்தானே வரிசைப்படுத்துவார்கள் !
 

'இலவசங்கள்' என்று கூச்சலிடும் பலர் அரசுக் கல்வி நிலையங்களிலோ அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களிலோ குறைந்த கல்விக் கட்டணத்தில் படித்தபோது அவர்களுக்கு உறைத்ததில்லை அரசு அவர்களின் கல்விக்காகக் கொடுத்த மானியம் 'இலவசம்' என்று. அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதியை 'இலவசம்' என்று பார்த்தவர்கள், கொரோனா காலத்தில் தனியாரிடம் செல்லப் பயந்து அரசு மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்குத் தெரியவில்லை அரசிடம் அவர்கள் வேண்டி நிற்கும் உயிர்ப்பிச்சை ஒரு 'இலவசம்' என்று. தமிழக அரசின் நியாயவிலைக் கடையில் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கும் அன்பர் ஒருவர் தற்போது சர்ச்சையான 'இலவச' பேசுபொருளை கையில் எடுத்து ஒன்றிய அரசை நியாயப்படுத்தியது பெரும் வேடிக்கை. வரிசையில் நின்ற இன்னொருவர், "அப்படிங்களா சார் ? இந்த வரிசையில் கால் கடுக்க நின்று சர்க்கரை கிலோவுக்கு ரூபாய் 13.50 என்று வாங்குவதற்குப் பதிலாக பக்கத்துக் கடையில் ரூபாய் 45 க்கு நீங்கள் வாங்கலாமே ! இங்கே உங்களுக்குக் கிடைக்கும் ஐந்து கிலோவில் குறைந்தது 150 ரூபாய் இலவசம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?" என்று 'இலவச' எதிர்ப்பாளருக்கு இலவசமாய்க் கணக்குப் பார்த்துச் சொன்னது மனதிற்கு ஆறுதல். (இலவசம் என்று பொருமியவரின் இலவச லாபத்தை குறைக்கும் நோக்கிலோ என்னவோ அரசு சர்க்கரை விலையை ரூபாய் 25 என உயர்த்தி உள்ளதாகப் பெட்டிச் செய்தி கூறுகிறது. அவரைப் போன்றோர் அதிகப் பிரசிங்கித்தனத்தால் ஏழைகளின் வயிற்றில் அடித்து சர்க்கரைப் பையுடன் பாவமூட்டையையும் சேர்த்துச் சுமப்பதாக !)
 

மாணாக்கர்க்குப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, காலணி எனத் தருவதால் கிராமப்புற, நகர்ப்புற என்று அனைத்து ஏழை மாணவர்களும் பயன் பெறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. கல்வி சார்ந்த இத்தகைய உதவிகள் வளர்ந்த நாடுகளிலேயே அளிக்கப்படுகின்றன. ஐரோப்பியக் கூட்டமைப்பினுள் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இல்லாத இத்தாலி போன்ற நாடுகளிலேயே பல்கலைக்கழக உணவகங்களில் மாணாக்கர்க்குச் சலுகை விலையில் உணவு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் வல்லரசான அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடனை ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது செய்தியானது. அங்கு அது வாடிக்கையான நலத்திட்டமாகவும் இருக்கலாம். இவ்வளவிற்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஆட்சிக்கட்டிலில் இருப்பவை சிறிய, பெரிய அளவில் வலதுசாரி அரசுகளே என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறே முதியோர் நலத் திட்டங்களும் வளர்ந்த, வளரும் நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
 

"தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை அடிப்படைத் தேவைகள் அல்லவே ! பின் இவற்றை வழங்குவது இலவசம் அன்றி வேறென்ன ?" என்ற கேள்வி எழலாம். ஏழையொருவன் அடிப்படைத் தேவைகள் பெற மட்டுமே தகுதியானவன் என்பதே ஒரு பொருளாதார உயர்வர்க்கச் சிந்தனை; சமத்துவத்திற்கு எதிரான சிந்தனை. கேளிக்கை உரிமையோ தகவலறியும் உரிமையோ அவனுக்கு இல்லை என்னும் கருத்து எவ்வகையில் சரி ? அவன் வாழ்நாளில் எண்ணிப் பார்க்க முடியாத இவற்றை ஒரு ஜனநாயக அரசால் அவன் வரை கொண்டு போக முடிவதும் சிறப்புதானே ! அதுவும் தமிழக நிதி அமைச்சர் சொன்னது போல இவற்றைக் கொடுக்காத மாநில அரசுகளை விட கொடுக்கும் தமிழக அரசு எந்தத் துறையிலும் பின்தங்கி விடவில்லையே ! இப்பொருட்களைக் கொடுப்பதை விட இவற்றை வாங்கும் திறனை அவனுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்வது கொள்கை அளவில் சரிதான். நடைமுறையில் ? அந்த நீண்ட கால முயற்சியும் ஒருபுறம் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த இலக்கை அடையும்வரை அவனை இலவு காத்த கிளியாக வைத்தே அழகு பார்க்க வேண்டுமா ? இம்மாதிரியான நலத்திட்டங்கள் பொருளாதாரத்தில் ஓரளவு மேம்பட்டோரையும் சென்று சேர வாய்ப்புள்ளதே எனலாம். எந்தத் திட்டத்திலும் முழு நிறைவு (perfection) என்பது சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களில் கூட கமிஷன், அதன் காரணமாகத் திறமின்மை என்பவை ஏற்படவே செய்கின்றன. நிறைவை நோக்கிய நகர்வும் இருக்கத்தான் வேண்டும். பதருடன் நெல்மணியும் வீணாகிறது என்பதால் நெற்பயிரை வளர்க்காமல் விடுவோமா ?
 

அரிசி, கோதுமை போன்ற அடிப்படைத் தேவையான பொருட்களின் விலையை அரசு கட்டுக்குள் வைப்பது என்பது ஒருவகையில் விவசாயியின் வயிற்றில் அடித்து ஏனையோருக்காக முட்டுக் கொடுப்பதேயாம். இதன் பயனை அனுபவிப்போர், உழைப்புக்கான முழுப்பயனையும் தராத விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது தமக்கான இலவசமே என்பதை உணராமல் போவது எங்ஙனம் ? தனியாருக்குத் தாரை வார்த்ததற்கு முந்தைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கான அரசு மானியத்தால் பெரிதும் பயனடைந்தோர் பொருளாதார நடுத்தர வர்க்கத்தினரும் உயர் மட்டத்தினருமே என்பதை அவர்களே உணர்ந்ததில்லை. எனவே தமக்கான சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை மட்டுமே வளர்ச்சித் திட்டங்கள் என்று கணிப்பதை விடுத்து, ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களே என்பதை சமூகம் உணர்தல் வேண்டும்.
 

தமக்கு உகந்த ஒரு முதலாளித்துவ அரசு 'இலவசங்கள்' என்று நலத்திட்டங்களுக்கு எதிராகப் பேசினால் தாமும் அவ்வாறே பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர், மன்னர்கள் காலத்திலிருந்தே அளிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்களைப் பற்றியோ கோயில்களில் வழங்கப்பட்ட சட்டிச்சோறு உரிமையைப் பற்றியோ பேசுவதில்லை. பெரும் முதலாளிகளின் இலட்சம் கோடி வங்கிக்  கடன்களை எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி சுயலாபத்துக்காகத் தங்களின் மனம் கவர்ந்த அரசு தள்ளுபடி செய்வதைக் கண்டுகொள்வதில்லை. பரம்பரை பரம்பரையாகத் தனக்கு வேலை செய்ய ஒரு அடிமை வர்க்கம் வேண்டும்; அவ்வர்க்கத்தினர் மேலே எழுந்து வர உருவாக்கப்படும் நலத்திட்டம் எதுவும் தனக்கு எதிரானது என்னும் எண்ணம் கொண்டதே முதலாளித்துவம். அம்முதலாளித்துவத்திற்கு நமது கையறு நிலையில் வள்ளுவனின் வாசகமே பொருந்தி அமைவது :
  "
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்"
               (குறள் 166; அதிகாரம் : அழுக்காறாமை)

 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2022 at 16:00, சுப.சோமசுந்தரம் said:

                                        நலத்திட்டம் இலவசமா ?

              

                                                                                   -  சுப. சோமசுந்தரம் 

 

          'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ :
 

வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பாராத ஒரு இந்திய ஒன்றிய அரசு மதவெறியைத் தூண்டுவதும், மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் மாற்றங்களையே தொழிலாகக் கொண்டு திரிவதும் வாடிக்கையாக்கிப் போன ஒன்று. 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டா ஆண்டி !' என்ற கதையாக சமீபத்தில் திருவாய் மலர்ந்து சமூக நலத்திட்டங்களை 'இலவசங்கள்' என்று குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்க அறிவுரை சொன்னது அந்த ஒன்றிய அரசு. அதிலும் தனது முகமான பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் வாயிலாகவே. இது போதாதென்று இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கவலை வேறு; அதன் தொடர்ச்சியாக இலவசங்களை ஒழுங்குபடுத்த ஒரு வல்லுனர் குழு பற்றிய ஆலோசனையும் வழங்கியது. தமிழக நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் 'இந்தியா டுடே' தொலைக்காட்சி விவாதத்தில் பதிலடி கொடுத்தது இந்தியத் திருநாடு முழுவதும் பேசு பொருளானது வரலாற்று நிகழ்வு.
 

செல்வந்தரிடம் நியாயமான வரியாகப் பொருள் பெற்று வறியோர்க்குப் பகிர்ந்தளிப்பது சோஷலிச ஜனநாயகம். 'ஜனநாயகம்' என்பது சோஷலிசத்திற்கான பாதை என்ற காரல் மார்க்ஸின் கூற்றுப்படி பார்த்தால், 'சோஷலிச ஜனநாயகம்' என்ற ஒரு பொருள் பலமொழி அவசியம் இல்லைதான்.
 

1920 ல் நீதிக்கட்சி ஆட்சியில் அன்று மேயராக இருந்த திரு பி.டி. தியாகராஜன் அவர்களால் சென்னையில் சில நகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் 1925 ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. பிற்காலத்தில் காமராஜர், திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் இருவரின் ஆட்சிக் காலங்களில் தங்களின் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் பெரும் அளவில் போராடி இத்திட்டத்தினை அமல்படுத்தினர். காமராஜர் காலத்தில் பொதுவுடமைவாதிகளே எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கேள்வி. ஆனால் எம்.ஜி.ஆர் காலத்தில் பெரிய கட்சிகளில் பொதுவுடமைவாதிகள் மட்டுமே ஆதரித்தனர். ஆதரித்ததற்கு அவர்கள் சொன்ன காரணம் அன்று கல்லூரி மாணவனாய் இருந்த எனக்கு மிகவும் ஏற்புடையதாய்த் தோன்றியது; இன்றும் தோன்றுகிறது : "வளர்ச்சித் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய நீண்ட காலமாகும்; சென்றடையாமலும் போகலாம். ஆனால் நலத்திட்டங்கள் அவர்களை நேரிடையாகச் சென்றடைபவை". அதன்பின் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று இந்தியத் திருநாட்டிற்கே முன்னோடியாய்த் திகழ்வது வரலாறு. இதன் மூலமாக மாணவர் கல்வி இடைநிற்றல் பெருமளவில் குறைந்ததும், மாணவர்தம் ஊட்டச்சத்து முன்னேற்றமும் ஆய்வுகளில் நிறுவப்பட்டமை திட்டத்தின் பெருவெற்றி. இந்த நலத்திட்டத்தையும் இவர்கள் இலவசத்தில்தானே வரிசைப்படுத்துவார்கள் !
 

'இலவசங்கள்' என்று கூச்சலிடும் பலர் அரசுக் கல்வி நிலையங்களிலோ அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களிலோ குறைந்த கல்விக் கட்டணத்தில் படித்தபோது அவர்களுக்கு உறைத்ததில்லை அரசு அவர்களின் கல்விக்காகக் கொடுத்த மானியம் 'இலவசம்' என்று. அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதியை 'இலவசம்' என்று பார்த்தவர்கள், கொரோனா காலத்தில் தனியாரிடம் செல்லப் பயந்து அரசு மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்குத் தெரியவில்லை அரசிடம் அவர்கள் வேண்டி நிற்கும் உயிர்ப்பிச்சை ஒரு 'இலவசம்' என்று. தமிழக அரசின் நியாயவிலைக் கடையில் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கும் அன்பர் ஒருவர் தற்போது சர்ச்சையான 'இலவச' பேசுபொருளை கையில் எடுத்து ஒன்றிய அரசை நியாயப்படுத்தியது பெரும் வேடிக்கை. வரிசையில் நின்ற இன்னொருவர், "அப்படிங்களா சார் ? இந்த வரிசையில் கால் கடுக்க நின்று சர்க்கரை கிலோவுக்கு ரூபாய் 13.50 என்று வாங்குவதற்குப் பதிலாக பக்கத்துக் கடையில் ரூபாய் 45 க்கு நீங்கள் வாங்கலாமே ! இங்கே உங்களுக்குக் கிடைக்கும் ஐந்து கிலோவில் குறைந்தது 150 ரூபாய் இலவசம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?" என்று 'இலவச' எதிர்ப்பாளருக்கு இலவசமாய்க் கணக்குப் பார்த்துச் சொன்னது மனதிற்கு ஆறுதல். (இலவசம் என்று பொருமியவரின் இலவச லாபத்தை குறைக்கும் நோக்கிலோ என்னவோ அரசு சர்க்கரை விலையை ரூபாய் 25 என உயர்த்தி உள்ளதாகப் பெட்டிச் செய்தி கூறுகிறது. அவரைப் போன்றோர் அதிகப் பிரசிங்கித்தனத்தால் ஏழைகளின் வயிற்றில் அடித்து சர்க்கரைப் பையுடன் பாவமூட்டையையும் சேர்த்துச் சுமப்பதாக !)
 

மாணாக்கர்க்குப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, காலணி எனத் தருவதால் கிராமப்புற, நகர்ப்புற என்று அனைத்து ஏழை மாணவர்களும் பயன் பெறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. கல்வி சார்ந்த இத்தகைய உதவிகள் வளர்ந்த நாடுகளிலேயே அளிக்கப்படுகின்றன. ஐரோப்பியக் கூட்டமைப்பினுள் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இல்லாத இத்தாலி போன்ற நாடுகளிலேயே பல்கலைக்கழக உணவகங்களில் மாணாக்கர்க்குச் சலுகை விலையில் உணவு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் வல்லரசான அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடனை ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது செய்தியானது. அங்கு அது வாடிக்கையான நலத்திட்டமாகவும் இருக்கலாம். இவ்வளவிற்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஆட்சிக்கட்டிலில் இருப்பவை சிறிய, பெரிய அளவில் வலதுசாரி அரசுகளே என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறே முதியோர் நலத் திட்டங்களும் வளர்ந்த, வளரும் நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
 

"தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை அடிப்படைத் தேவைகள் அல்லவே ! பின் இவற்றை வழங்குவது இலவசம் அன்றி வேறென்ன ?" என்ற கேள்வி எழலாம். ஏழையொருவன் அடிப்படைத் தேவைகள் பெற மட்டுமே தகுதியானவன் என்பதே ஒரு பொருளாதார உயர்வர்க்கச் சிந்தனை; சமத்துவத்திற்கு எதிரான சிந்தனை. கேளிக்கை உரிமையோ தகவலறியும் உரிமையோ அவனுக்கு இல்லை என்னும் கருத்து எவ்வகையில் சரி ? அவன் வாழ்நாளில் எண்ணிப் பார்க்க முடியாத இவற்றை ஒரு ஜனநாயக அரசால் அவன் வரை கொண்டு போக முடிவதும் சிறப்புதானே ! அதுவும் தமிழக நிதி அமைச்சர் சொன்னது போல இவற்றைக் கொடுக்காத மாநில அரசுகளை விட கொடுக்கும் தமிழக அரசு எந்தத் துறையிலும் பின்தங்கி விடவில்லையே ! இப்பொருட்களைக் கொடுப்பதை விட இவற்றை வாங்கும் திறனை அவனுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்வது கொள்கை அளவில் சரிதான். நடைமுறையில் ? அந்த நீண்ட கால முயற்சியும் ஒருபுறம் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த இலக்கை அடையும்வரை அவனை இலவு காத்த கிளியாக வைத்தே அழகு பார்க்க வேண்டுமா ? இம்மாதிரியான நலத்திட்டங்கள் பொருளாதாரத்தில் ஓரளவு மேம்பட்டோரையும் சென்று சேர வாய்ப்புள்ளதே எனலாம். எந்தத் திட்டத்திலும் முழு நிறைவு (perfection) என்பது சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களில் கூட கமிஷன், அதன் காரணமாகத் திறமின்மை என்பவை ஏற்படவே செய்கின்றன. நிறைவை நோக்கிய நகர்வும் இருக்கத்தான் வேண்டும். பதருடன் நெல்மணியும் வீணாகிறது என்பதால் நெற்பயிரை வளர்க்காமல் விடுவோமா ?
 

அரிசி, கோதுமை போன்ற அடிப்படைத் தேவையான பொருட்களின் விலையை அரசு கட்டுக்குள் வைப்பது என்பது ஒருவகையில் விவசாயியின் வயிற்றில் அடித்து ஏனையோருக்காக முட்டுக் கொடுப்பதேயாம். இதன் பயனை அனுபவிப்போர், உழைப்புக்கான முழுப்பயனையும் தராத விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது தமக்கான இலவசமே என்பதை உணராமல் போவது எங்ஙனம் ? தனியாருக்குத் தாரை வார்த்ததற்கு முந்தைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கான அரசு மானியத்தால் பெரிதும் பயனடைந்தோர் பொருளாதார நடுத்தர வர்க்கத்தினரும் உயர் மட்டத்தினருமே என்பதை அவர்களே உணர்ந்ததில்லை. எனவே தமக்கான சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை மட்டுமே வளர்ச்சித் திட்டங்கள் என்று கணிப்பதை விடுத்து, ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களே என்பதை சமூகம் உணர்தல் வேண்டும்.
 

தமக்கு உகந்த ஒரு முதலாளித்துவ அரசு 'இலவசங்கள்' என்று நலத்திட்டங்களுக்கு எதிராகப் பேசினால் தாமும் அவ்வாறே பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர், மன்னர்கள் காலத்திலிருந்தே அளிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்களைப் பற்றியோ கோயில்களில் வழங்கப்பட்ட சட்டிச்சோறு உரிமையைப் பற்றியோ பேசுவதில்லை. பெரும் முதலாளிகளின் இலட்சம் கோடி வங்கிக்  கடன்களை எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி சுயலாபத்துக்காகத் தங்களின் மனம் கவர்ந்த அரசு தள்ளுபடி செய்வதைக் கண்டுகொள்வதில்லை. பரம்பரை பரம்பரையாகத் தனக்கு வேலை செய்ய ஒரு அடிமை வர்க்கம் வேண்டும்; அவ்வர்க்கத்தினர் மேலே எழுந்து வர உருவாக்கப்படும் நலத்திட்டம் எதுவும் தனக்கு எதிரானது என்னும் எண்ணம் கொண்டதே முதலாளித்துவம். அம்முதலாளித்துவத்திற்கு நமது கையறு நிலையில் வள்ளுவனின் வாசகமே பொருந்தி அமைவது :
  "
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்"
               (குறள் 166; அதிகாரம் : அழுக்காறாமை)

 

நல்லதொரு கட்டுரை.  சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு நன்றி. 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.