Jump to content

ரஷ்யாவின்... எண்ணெய் நிறுவனத் தலைவர், மருத்துவமனை ஜன்னலில் இருந்து... விழுந்து உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனத் தலைவர் மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

ரஷ்யாவின்... எண்ணெய் நிறுவனத் தலைவர், மருத்துவமனை ஜன்னலில் இருந்து... விழுந்து உயிரிழப்பு!

ரஷ்யாவின் லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் 67வயதான மகனோவ், கடுமையான நோயைத் தொடர்ந்து காலமானார்’ என்று மட்டுமே கூறியது.

மாஸ்கோவின் சென்ட்ரல் கிளினிக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மர்மமான சூழ்நிலையில் இறந்த பல உயர் வணிக நிர்வாகிகளில் மகனோவ் சமீபத்தியவர்.

அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டறிய சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். டாஸ் செய்தி நிறுவனம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி அவர் ஆறாவது மாடியின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்தார் என்று பின்னர் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை வெளிப்படுத்திய லுகோயில், இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1297043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2022 at 05:51, தமிழ் சிறி said:

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை வெளிப்படுத்திய லுகோயில், இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்ப  மேன்மைமிகு புதினின்  கைவரிசையாகத்தானிருக்குமா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:


அப்ப  மேன்மைமிகு புதினின்  கைவரிசையாகத்தானிருக்குமா?

மேன்மை மிகு, அதி உத்தமர் புட்டின்... பென்ஷன் எடுக்கப் போற, 
67 வயது நபரை...  கொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  
அவர்  நோய்க் கொடுமையில்.... ஆறாம் மாடியில் இருந்து, விழுந்து... 
தற்கொலை செய்து கொண்டார் என்றே... நான் 💯  வீதம் நம்புகின்றேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மேன்மை மிகு, அதி உத்தமர் புட்டின்... பென்ஷன் எடுக்கப் போற, 
67 வயது நபரை...  கொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  
அவர்  நோய்க் கொடுமையில்.... ஆறாம் மாடியில் இருந்து, விழுந்து... 
தற்கொலை செய்து கொண்டார் என்றே... நான் 💯  வீதம் நம்புகின்றேன். 😎

முன்னாள் உளவாளியான புதின் தேசத்துக்காக எந்த எல்லைவரை போக்கூடியவராமென்று (வெறுப்போடு)என்னோடு வேலைசெய்யும் ரஸ்யர்கள் சொல்லுகிறார்கள். அதனால்தான் எனக்கும் சதியாக இருக்குமோ ஐயமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nochchi said:

முன்னாள் உளவாளியான புதின் தேசத்துக்காக எந்த எல்லைவரை போக்கூடியவராமென்று (வெறுப்போடு)என்னோடு வேலைசெய்யும் ரஸ்யர்கள் சொல்லுகிறார்கள். அதனால்தான் எனக்கும் சதியாக இருக்குமோ ஐயமாக இருக்கிறது. 

எங்களுக்குள்.... ஓட்டுக் குழுக்கள் இருக்கிற மாதிரி,
ரஷ்யர்களுக்குள்ளும்.. இருக்கும்   ஓட்டுக் குழுக்கள் தான்...
மேன்மை தங்கிய அதி உத்தம..  புட்டின் மேல், 
இப்படியான வதந்திகளை... பரப்பிக் கொண்டு திரிகிறார்கள். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வெடிக்கும்

ஐன்னல் திறக்கும்

புட்டின் சிதறுவார்??🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

கார் வெடிக்கும்

ஐன்னல் திறக்கும்

புட்டின் சிதறுவார்??🤣

மேன்மை தங்கிய புட்டின் அவர்கள் தனது பாதுகாப்பில்… மிகுந்த அக்கறை செலுத்துபவர்.
அவரது பாதுகாப்பு வளையத்துக்குள்… காகம் பறக்கக் கூட, நாலு தரம் யோசிக்கும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

மேன்மை தங்கிய புட்டின் அவர்கள் தனது பாதுகாப்பில்… மிகுந்த அக்கறை செலுத்துபவர்.
அவரது பாதுகாப்பு வளையத்துக்குள்… காகம் பறக்கக் கூட, நாலு தரம் யோசிக்கும். 😎

 

அது தான் முன்னாள்  ஐனாதிபதியின்  செத்தவீட்டுக்கு போக பயமில்லையாக்கும்???

பயம்  இருக்கணும் ராசா

பயமே  வாழ்க்கையாக  இருக்கக்கூடாதெல்லே??😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

 

அது தான் முன்னாள்  ஐனாதிபதியின்  செத்தவீட்டுக்கு போக பயமில்லையாக்கும்???

பயம்  இருக்கணும் ராசா

பயமே  வாழ்க்கையாக  இருக்கக்கூடாதெல்லே??😂

Michail Gorbatschow: Wladimir Putin wird Trauerfeier fernbleiben - DER  SPIEGEL

முன்னாள்  ஐனாதிபதி  கோர்பச்சேவ் செத்த வீட்டுக்கு.... 
போகும் பொது கூட, தனிய போன துணிந்த மனிதன் என்றால்..
நம்ம... மேன்மை மிகு உத்தம  புட்டின் அவர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேன்மை தங்கிய புட்டின் அவர்கள் தனது பாதுகாப்பில்… மிகுந்த அக்கறை செலுத்துபவர்.
அவரது பாதுகாப்பு வளையத்துக்குள்… காகம் பறக்கக் கூட, நாலு தரம் யோசிக்கும். 😎

பத்தடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்கை இருந:துகொண்டு காகம் பறக்கவிடக்கூடாதெல்லலோ?

Link to comment
Share on other sites

ஐக்கிய ராட்சியத்தின் வாயால் ஐரோப்பாவுக்கு எண்ணை எரிவாயு இல்லாமல் போய் விட்டது.

யூரோப்பியின் யூனியன் மைண்ட் வாய்ஸ்: வச்சான் பாரு ஆப்பு எனக்கு 🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:


அப்ப  மேன்மைமிகு புதினின்  கைவரிசையாகத்தானிருக்குமா?

நிச்சயம்...அவர் ஐனதிபதி பதவியும் ...இ..தூதுவர் ஆகவுமிருக்கிறார்.  அவரை எதிரத்தால்.    எங்கிருத்தாலும். தப்பிக்க முடியாது...அவரை உத்தமர் மேன்மை உள்ள அதி உத்தமர்......இப்படி புகழ்ந்தால்.  சவூக்கியாமாக  வாழலாம்” 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

பத்தடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்கை இருந:துகொண்டு காகம் பறக்கவிடக்கூடாதெல்லலோ?

பைடனுக்கும் 10 அடுக்கு தான். அதைப்பற்றி கதைக்க மாட்டீர்கள்.

11 hours ago, விசுகு said:

 

அது தான் முன்னாள்  ஐனாதிபதியின்  செத்தவீட்டுக்கு போக பயமில்லையாக்கும்???

பயம்  இருக்கணும் ராசா

பயமே  வாழ்க்கையாக  இருக்கக்கூடாதெல்லே??😂

பைடனை ஒருக்கால் தனிய போக சொல்லுங்கோ பார்ப்பம். அநேகமாக மக்ரோனுக்கும் அதே 10 அடுக்கு தான்.
அது  சரி மக்ரோனின் அந்தரங்க வாழ்க்கை  கோப்பு அண்மையில் ட்ரம்பின் வீட்டில் எடுக்கப்பட்டதாமே. தெரியுமோ??

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.