Jump to content

வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை

9 நிமிடங்களுக்கு முன்னர்
 

பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லடசம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர அவர்கள் இதற்கு வட்டி மற்றும் சட்ட நடவடிக்கை கட்டணங்களையும் செலுத்த வேண்டும்

2021 மே மாதம் Crypto.com, நிலுவையில் இருந்த நூறு ஆஸ்திரேலிய டாலர்களை தேவ மனோகரியின் கணக்கில் போட பணப் பரிவர்த்தனை செய்தபோது இந்த விவகாரம் தொடங்கியது.

ஆனால் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தேவ மனோகரிக்கு 100 டாலர்களுக்கு பதிலாக 104,74,143 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 70 லட்சம் அமெரிக்க டாலர்கள்) வந்தது. பரிவர்த்தனை செய்த நபரின் தவறு இது என்றும் தொகையை எங்கே போட வேண்டுமோ அதற்கு பதிலாக தேவமனோகரியின் கணக்கு எண்ணை அவர் உள்ளீடு செய்துவிட்டார் என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

 
 

பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு நொடியில் கோடீஸ்வரியானார்

தேவ மனோகரி ஒரு நொடியில் கோடீஸ்வரராகிவிட்டார். இந்தப் பணத்தை நிர்வகிக்க அவருக்கு நேரத்திற்கும் பஞ்சமில்லை. அடுத்த சில மாதங்களில் இவர் தனது கணக்கில் இருந்த பணத்தின் பெரும் பகுதியை தனது நண்பருடனான கூட்டுக்கணக்கிற்கு மாற்றிவிட்டார்.

அந்த நண்பர் தனது மகளின் கணக்கிற்கு சுமார் மூன்று லட்சம் டாலர்களை மாற்றினார். மெல்போர்னுக்கு வடக்கே ஒரு வீட்டையும் தேவமனோகரி வாங்கினார். மலேஷியாவில் வசிக்கும் தனது சகோதரி திலகவதி கங்காதரி பெயரில் இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார்.

நான்கு அறைகள், நான்கு குளியலறைகள், சினிமா அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் இரட்டை கேரேஜ் கொண்ட இந்த வீடு 500 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 13.5 லட்சம் டாலர்கள் செலுத்தப்பட்டது.

அதே நேரத்தில் கிரிப்டோகரன்சி நிறுவனமும் தனது தவறை உணர பல மாதங்கள் ஆயின.

ஆஸ்திரேலிய மாகாணமான விக்டோரியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் எலியட் ,"மனுதாரர் ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த பெரிய தவறை அறிந்து கொண்டதாகத் தெரிகிறது" என்று தனது தீர்ப்பில் கூறினார்.

 

நடிகர் மாட் டேமியன் CRYPTO.COM ஐ விளம்பரப்படுத்துகிறார்

பட மூலாதாரம்,CRYPTO.COM

 

படக்குறிப்பு,

நடிகர் மாட் டேமியன் CRYPTO.COM ஐ விளம்பரப்படுத்துகிறார்

நீதிமன்ற தீர்ப்பு

மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், முழுத் தொகை மட்டுமின்றி அதற்கான வட்டி மற்றும் சட்டச் செலவுகளையும் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது.

தேவ மனோகரி தனது சகோதரியின் பெயரில் வீடு வாங்கியது நிரூபணமானதால் அந்த வீட்டை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரிப்டோகரன்சி நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியது. மணிவேலுடன் இணைக்கப்பட்ட கணக்குகளை முடக்குவதிலும் வெற்றிபெற்றது.

இருப்பினும், கிரிப்டோ நிறுவனம் கணக்குகளை முடக்குவதற்குள் தேவமனோகரி பெரும்பாலான பணத்தை மற்ற கணக்குகளுக்கு மாற்றிவிட்டார்.

தேவ மனோகரி சொத்துக்கள் முடக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் அவரது சகோதரி வீட்டின் உரிமையாளரானார்.

இதனால் தேவ மனோகரி சகோதரியின் கணக்கையும் முடக்க வேண்டும் என்று கிரிப்டோ நிறுவனம் கோரியிருந்தது. இப்போது அவரது வீட்டை விற்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62787555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பநதப் பட்டவரின் மனஉளைச்சலுக்கு நட்டஈடு வழங்க வேணும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லட்சம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர்.

மலேசிய தமிழர் போல் உள்ளது.
அவர் வாங்கிய சொத்துக்களை… வங்கி மீள எடுக்கலாம்.
ஆனால்…. செலவழித்த பணத்தை எப்படி திரும்ப எடுக்கப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

மலேசிய தமிழர் போல் உள்ளது.
அவர் வாங்கிய சொத்துக்களை… வங்கி மீள எடுக்கலாம்.
ஆனால்…. செலவழித்த பணத்தை எப்படி திரும்ப எடுக்கப் போகிறார்கள்.

தப்பித் தவறி உங்கள் வங்கி கணக்கில் பத்து மில்லியன் யூரோ  வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ன செய்வீங்கள்   ?  இந்த பெண் செய்த அதேபோல தான் இல்லையா?  யாழ் களத்தில் ஒருவர் குறைத்து விடுவார் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

தப்பித் தவறி உங்கள் வங்கி கணக்கில் பத்து மில்லியன் யூரோ  வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ன செய்வீங்கள்   ?  இந்த பெண் செய்த அதேபோல தான் இல்லையா?  யாழ் களத்தில் ஒருவர் குறைத்து விடுவார் 😂

எனக்கு... கொத்து ரொட்டி சரியான விருப்பம்.
பத்து மில்லியனுக்கும்... கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விடுவேன். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... கொத்து ரொட்டி சரியான விருப்பம்.
பத்து மில்லியனுக்கும்... கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விடுவேன்.
அவங்களுக்கு 10 மில்லியன் திரும்ப வேணுமெண்டால், கக்கூசுக்குள்  போய், எடுக்கட்டும். 🤣

குமாரசாமி அண்ணையின். பதிவைப்பார்த்து   தெருத்திருவிழா இன்று நேற்று முந்தநாள். நடக்கும் என்று அறிந்தேன்.   எனது இடத்திலிருந்து 90 கிலோமீட்டர் வரும் நேற்று மதியம் நானும் மகனும் போயிருத்தோம்.  நல்ல கொத்து ரோட்டி. ஏழு யூரோ  மட்டுமே வேண்டி சாப்பிட்டோம்.  அப்பம...தோசை..புரியாணி   நல்ல சாப்பாடு   ஆனால்   நாலு பக்கமும் யோகோவாக்காரர். துண்டுப்பிரசுரங்களுடன் நின்றார்கள்    வாந்தீர்களா?.   இல்லை அடுத்த முறை வாருங்கள்… மூன்று நாளும்  கொத்து சாப்பிடலாம் அல்லது நிறையவே பார்சல். செய்யலாம்      😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

குமாரசாமி அண்ணையின். பதிவைப்பார்த்து   தெருத்திருவிழா இன்று நேற்று முந்தநாள். நடக்கும் என்று அறிந்தேன்.   எனது இடத்திலிருந்து 90 கிலோமீட்டர் வரும் நேற்று மதியம் நானும் மகனும் போயிருத்தோம்.  நல்ல கொத்து ரோட்டி. ஏழு யூரோ  மட்டுமே வேண்டி சாப்பிட்டோம்.  அப்பம...தோசை..புரியாணி   நல்ல சாப்பாடு   ஆனால்   நாலு பக்கமும் யோகோவாக்காரர். துண்டுப்பிரசுரங்களுடன் நின்றார்கள்    வாந்தீர்களா?.   இல்லை அடுத்த முறை வாருங்கள்… மூன்று நாளும்  கொத்து சாப்பிடலாம் அல்லது நிறையவே பார்சல். செய்யலாம்      😁

இங்கும்… தெருத்திருவிழா நடக்கும் போது  வாங்கி சாப்பிடுவது.
பிள்ளைகளுக்கும்.. நல்ல விருப்பம்.
ஜேர்மன்காரரும் இப்போ கொத்து ரொட்டிக்கு அடிமையாகி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு... கொத்து ரொட்டி சரியான விருப்பம்.
பத்து மில்லியனுக்கும்... கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விடுவேன். 🤣

கொத்து ரொட்டி வெறும் மாவில் செய்வது சிறி 😂

உங்கள் கதையை பார்த்தால் பவுணில் என்பது போலிருக்கிறது

ல சப்பலுக்கு வாங்க கார் நிறைய கொண்டு போகலாம் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

கொத்து ரொட்டி வெறும் மாவில் செய்வது சிறி 😂

உங்கள் கதையை பார்த்தால் பவுணில் என்பது போலிருக்கிறது

ல சப்பலுக்கு வாங்க கார் நிறைய கொண்டு போகலாம் 😍

கார் நிறைய… கொத்து ரொட்டி தருகின்ற அளவுக்கு, விசுகருக்கு பெரிய மனசு.
நீங்கள் முன்பு நிறைய தந்த தாமரைக் கிழங்கை மறக்க மாட்டேன். 🥰

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும்… தெருத்திருவிழா நடக்கும் போது  வாங்கி சாப்பிடுவது.
பிள்ளைகளுக்கும்.. நல்ல விருப்பம்.
ஜேர்மன்காரரும் இப்போ கொத்து ரொட்டிக்கு அடிமையாகி விட்டார்கள்.

இங்கிருக்கும் நாடுகளில் கொத்து ரொட்டி என்று பசைமாவும் மட்டின்கறியும் சேர்த்து குழைத்தால் கொத்து ரொட்டி என்று நினைகிறார்கள் உண்மையான கொத்து ஒருகிலோ மாவில் நாப்பது ரொட்டி வரனும் அதுதான் உண்மையான கொத்து இங்கு 2௦ ரொட்டி வீசி கறியை ஊத்தி களி ரொட்டி போடுகிறார்கள் .

மிக மிக முக்கியம் ரொட்டி கிழியகூடாது நாப்பது ரொட்டி போடுபவர்களுக்கு ரொட்டி மாஸ்ட்டர் என்பார்கள் இதெல்லாம் மழைக்கு முளைத்த சாப்பாட்டு கடைகளுக்கு தெரியாது .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும்… தெருத்திருவிழா நடக்கும் போது  வாங்கி சாப்பிடுவது.
பிள்ளைகளுக்கும்.. நல்ல விருப்பம்.
ஜேர்மன்காரரும் இப்போ கொத்து ரொட்டிக்கு அடிமையாகி விட்டார்கள்.

அட, நம்ம உடான்சு சுவாமியார் இருந்தால், நல்ல சட்ட விளக்கம் தந்திருப்பார். 🤔

உது பிழையான தீர்ப்பு.

$100 போட்டு பார்த்தேன். இவ்வளவு வந்தது.... அவர்கள் தான், போட்டார்கள். இதில களவு இல்லை. 

செலவழிச்சு முடிஞ்சுது. வேலை இல்லை. பெனிபிட் தான். 😎

வீடு, கார்.... எண்டு அம்புடுறதை வித்து எடுங்கோ.

மிச்சதுக்கு, கிழமைக்கு ஒரு டொலர் படி தந்து முடிக்கிறேன் என்று சொல்லி  இருந்தால், நிறுவனம் ஒத்துக்கொண்டிருக்கத்தான் வேணும். நான் இப்படியே கனடா, அமெரிக்கா பக்கம் போறன் எண்டு கிளம்பி இருக்கலாம். 🤑

பண்ணிப்பாருங்கோவன்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கார் நிறைய… கொத்து ரொட்டி தருகின்ற அளவுக்கு, விசுகருக்கு பெரிய மனசு.
நீங்கள் முன்பு நிறைய தந்த தாமரைக் கிழங்கை மறக்க மாட்டேன். 🥰

இரண்டு கிழமைக்கு முன்னர் கூட ஜேர்மனிக்கு வந்திருந்தேன். கொஞ்ச புத்தகங்களை கொண்டு வந்து உங்களை சந்திக்க நினைத்தேன். இந்த நேரத்தில் உங்களுக்கு அவை துணையாக இருக்கும் ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே என்பதால் அடுத்த முறை பார்க்கலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

குமாரசாமி அண்ணையின். பதிவைப்பார்த்து   தெருத்திருவிழா இன்று நேற்று முந்தநாள். நடக்கும் என்று அறிந்தேன்.   எனது இடத்திலிருந்து 90 கிலோமீட்டர் வரும் நேற்று மதியம் நானும் மகனும் போயிருத்தோம்.  நல்ல கொத்து ரோட்டி. ஏழு யூரோ  மட்டுமே வேண்டி சாப்பிட்டோம்.  அப்பம...தோசை..புரியாணி   நல்ல சாப்பாடு   ஆனால்   நாலு பக்கமும் யோகோவாக்காரர். துண்டுப்பிரசுரங்களுடன் நின்றார்கள்    வாந்தீர்களா?.   இல்லை அடுத்த முறை வாருங்கள்… மூன்று நாளும்  கொத்து சாப்பிடலாம் அல்லது நிறையவே பார்சல். செய்யலாம்      😁

கந்தையா அண்ணை முதலிலே சொல்லியிருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் 😊

23 minutes ago, விசுகு said:

இரண்டு கிழமைக்கு முன்னர் கூட ஜேர்மனிக்கு வந்திருந்தேன்.  ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே என்பதால் அடுத்த முறை பார்க்கலாம். 

சென்ற சனிக்கிழமை நானும் சார்சலில் ஒரு திருமண நிகழ்விற்கு வந்திருந்தேன்
அப்படியே மாறி மாறி வந்து போய்க்   கொண்டிருக்கின்றோம்
ஒரு முறையாவது சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்🙏

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த பெண்மணிக்கு ஏரோப்பிளேனில் போன சனியன் ஏணி வைச்சு தலையில இறங்கிவிட்டுது.

கோவிட் காலகட்டத்தில் பாடசாலைகளை இல்லாமல் வீட்டில் தொலைதூர கல்வி நிகழ்ந்தபோது பிள்ளைகளுக்கு இணையத்தில் 2 சிறந்த கதிரைகள் வாங்க முயற்சித்தேன்

விலைகள் கதிரை ஒன்று தலா $150 அண்ணளவாக இருந்த நிலையில் ஒரு விளம்பரத்தில் கதிரை ஒன்று தலா $55 வீதம் இரண்டு கதிரைகள் $110 செலுத்தி கடனட்டை (டெபிட்) மூலம் வாங்கினேன்..

பொருள் உள்ள இடம் அமெரிக்கா எனக்காட்டியது,

பொருள் அனுப்ப  2 கிழமையிலிருந்து 45 நாள்களாகும் எனக்குறிப்ப்டிருந்தார்கள், ஒரு வாரத்தின் பின்னர் அந்த இணையத்தளத்தினை காணவில்லை, ஏமாற்றப்பட்டதாக உணரத்தொடங்கிய நிலையில் பணத்தினை வங்கியினை தொடர்புகொண்டு பெறமுடியுமா என இணையத்தில் தேடிய போது கடனட்டையில் வாங்கினால் வங்கியினால் அந்த பணத்தினை மீளப்பெற முடியும் என குறிப்பிட்டிருந்தது அனால் நான் வாங்கியது  டெபிட் அட்டை மூலம்.

45 நாள் வரை பொறுத்துகொள்ள முடிவெடுத்தேன், அதே நேரம் மின்ஞ்சலில் தொடர்புகொள்ள முயன்றேன் பதில் இல்லை.

பதிலழிக்கா நிலையில் வங்கியினை தொடர்பு கொண்டு காசினை மீளப்பெறப்போகிறேன் என மின்னஞ்ச்சலில் தெரிவித்தேன் அதற்கும் பதிலில்லை (வங்கி காசினை திரும்ப தராது என நினைத்தேன் ஒரு வேளை உண்மையாக ஒரு நிறுவனம் போக்குவரத்து தாமத்தினால் பாதிக்கப்படக்கூடாது என அவர்களுக்காகவும் சிந்தித்தேன்)

காசு வராது என்பது உறுதியான நிலையில் ஏமாற்றப்பட்டதாலோ அல்லது காசினை இழந்தனாலோ எது வென்று தெரியாத ஒரு அதிகமான மன அளுத்தம் ஏற்பட்டது.

 45 நாளின் பின் வங்கியினை தொடர்புகொண்டபோது அவர்கள் எந்த பிரச்சினையுமில்லை என உடனடியாக பண்த்தினை மீளழித்தார்கள், பொருள் வந்தால் பணத்தினை எவ்வாறு மீழ செலுத்துவது என்பது உனது பிரச்சினை என கூறிவிட்டார்கள்.

அது ஒரு உண்மயில் ஒரு மோசடி நிறுவனம்தான்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல காசினை இழந்தவர்கள் நிலையினுடன் ஒப்பிடும்போது இந்த தண்டனை தேவையானதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்.

பெரிய தொகையை வங்கி ஊடக மாற்றும் போது, முழுத்தொகையையும் ஒரேயடியாக  மாற்ற கூடாது. மிகச் சிறிய தொகையில் இருந்து தொடங்கி, பகுதிகளாக பிரித்து மாற்ற வேண்டும்.

பெரிய தொகையில் பொருள் வாங்கும் பொது, கடன் அதை வழியாக வாங்குவதில், உங்களை அறியாமல் மோசடி இருந்தால் பணத்தை மீள பெறர் முயதர்சிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு  (uk இல் நுகர்வோர் கிரடிட் பாதுகாப்பு பகுதி 75. வேறு நாடுகளிலும் இருக்கும்).    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kadancha said:

அனுபவம்.

பெரிய தொகையை வங்கி ஊடக மாற்றும் போது, முழுத்தொகையையும் ஒரேயடியாக  மாற்ற கூடாது. மிகச் சிறிய தொகையில் இருந்து தொடங்கி, பகுதிகளாக பிரித்து மாற்ற வேண்டும்.

பெரிய தொகையில் பொருள் வாங்கும் பொது, கடன் அதை வழியாக வாங்குவதில், உங்களை அறியாமல் மோசடி இருந்தால் பணத்தை மீள பெறர் முயதர்சிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு  (uk இல் நுகர்வோர் கிரடிட் பாதுகாப்பு பகுதி 75. வேறு நாடுகளிலும் இருக்கும்).    

நீங்கள் கூறுவது சரிதான், அதனால்தான் டெபிட் அட்டையில் வாங்கிய  காசினை மீளப்பெறமுடியாது என உறுதியாக நம்பினேன், ஆனால் வங்கி, மோசடியாளரின் கணக்கிலிருந்து மீளப்பெற்றிருக்கும் என நம்புகிறேன், ஒரு வேளை மோசடியாளர் தனது வங்கி கணக்கினை மூடி இருந்தால் காசினை மீளப்பெறமுடியாது முடியாது என நினைக்கிறேன்.

நான் கடனட்டை சிறிது காலம் வைத்திருந்தேன் பின்னர் அதனை மூடிவிட்டேன், தேவைக்கதிகமான பராமரிப்பு செலவீனம்  என்பதால்.

எப்போதும் டெபிட் மற்றும் பேபால் பாவிப்பதுண்டு, அந்த காசினை கூகிள் பே மூலம் தான் செலுத்தியிருந்தேன் அவர்களை தொடர்பு கொண்ட போது கையை விரித்துவிட்டார்கள். வங்கியிடம் தொடர்பு கோள்ளுங்கள் ஆனால் டெபிட் அட்டை மூலம் பொருளுக்கான கட்டணம் செலுத்தியமையால் காசினை மீளப்பெற இயலாது என கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

45 நாளின் பின் வங்கியினை தொடர்புகொண்டபோது அவர்கள் எந்த பிரச்சினையுமில்லை என உடனடியாக பண்த்தினை மீளழித்தார்கள்,

உங்கள் பணம்  திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி.

9 hours ago, vasee said:

பாவம் அந்த பெண்மணிக்கு ஏரோப்பிளேனில் போன சனியன் ஏணி வைச்சு தலையில இறங்கிவிட்டுது.

 

அந்த பெண் பாவம் இல்லை. யாருடைய காசை எடுத்து செலவழித்து விளையாடி இருக்கிறா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அந்த பெண் பாவம் இல்லை. யாருடைய காசை எடுத்து செலவழித்து விளையாடி இருக்கிறா.

அவோட பிழை இல்லை.

கிறீப்டோகாரர் அடித்து விட்ட பொய்களுடன், அவர்கள் தவறும் சேர்ந்து கொண்டதால் வந்த விளைவு. 🤨

ஜட்ஜ் அய்யா, களவு என்று சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா🤗

களவாயின் சிறை🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

மிச்சதுக்கு, கிழமைக்கு ஒரு டொலர் படி தந்து முடிக்கிறேன் என்று சொல்லி  இருந்தால், நிறுவனம் ஒத்துக்கொண்டிருக்கத்தான் வேணும். நான் இப்படியே கனடா, அமெரிக்கா பக்கம் போறன் எண்டு கிளம்பி இருக்கலாம். 🤑

பண்ணிப்பாருங்கோவன்.

கனடா, அமெரிக்கா பக்கம் போனாலும்….
“இன்ரபோல்” வந்து கதவை… டொக், டொக் என்று தட்டுமே… 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கனடா, அமெரிக்கா பக்கம் போனாலும்….
“இன்ரபோல்” வந்து கதவை… டொக், டொக் என்று தட்டுமே… 😁

இல்லையே....

களவு, கிரிமினல் குற்றம்.

இது, தவறான பணச் செலுத்துகை.

முன்பின் தெரியாதவரிடம் இருந்து வந்து, அதனை செலவு செய்தாலும் தவறு.

இன்னாரிடம் இருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்தீர்களா?

முதலாவது கேள்விக்கு, முன்பின் தெரியாதவராயின், பதில் இல்லை.

இங்கே, பதில் ஆம்... ஆக.... ஒரு சட்டபூர்வமான தொடர்பு இருந்தது.

எதிர்பார்த்ததிலும் கூடுதலாக அனுப்பி, பல மாதங்கள், சும்மா இருந்தது, கம்பனி தவறு.

அதுக்கு, ஜட்ஜ் அய்யா ஒண்டும் செய்ய ஏலாது. பிடுங்கக் கூடியதை பிடுங்கி கொடுக்கலாம்.

இல்லாவிடில், ஒரு சமாதானம் செய்யலாம்.

அதை தான் செய்திருக்கிறார்.

என்னைப் பொறுத்த வரை, பெரும் தொகை என்பதால் இந்தப்பெண்ணும் சட்ட ஆலோசணை பெற்றிருப்பார்.

வீடு வாங்குவது சும்மா அல்ல. பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள்.

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாத்தியார் said:

கந்தையா அண்ணை முதலிலே சொல்லியிருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் 😊

சென்ற சனிக்கிழமை நானும் சார்சலில் ஒரு திருமண நிகழ்விற்கு வந்திருந்தேன்
அப்படியே மாறி மாறி வந்து போய்க்   கொண்டிருக்கின்றோம்
ஒரு முறையாவது சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்🙏

 

வாத்தியார் அடுத்த வருடம் சேர்த்து சாப்பிடுவோம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2022 at 17:44, விளங்க நினைப்பவன் said:

உங்கள் பணம்  திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி.

அந்த பெண் பாவம் இல்லை. யாருடைய காசை எடுத்து செலவழித்து விளையாடி இருக்கிறா.

நன்றி விளங்க நினைப்பவன்,

அந்த பெண்மணியின் உங்கள் நிலைப்பாடு மிகவும் சரி என கருதுகிறேன், ஆனால் காசை தனது கணக்கில் வைத்திருந்த காலத்திற்கு வட்டி வேறு கட்ட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது, அந்த காசு சுனாமி மாதிரி வந்து அவரது காசையும் எடுத்து சென்று விட்டதுதான் கொடுமை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 30 வருடங்களுக்கு முன் எனது வங்கிக்கணக்கில் அண்ணளவாக $250.00 தவறுதலாக வைப்பிலிட்டார்கள். நான் வங்கிக்கு சென்று அது எனது பணம் இல்லை அதை உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள் என்றதும் அங்கிருந்த பணியாளர் யாருடைய பணம் என்று கண்டுபிடிப்பதற்கு நான் அண்ணளவாக $17.50 - $20.00 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். நான் பரவாயில்லை பணம் எனது கணக்கிலேயே இருக்கட்டும் நீங்களாக கண்டுபிடித்தால் பணத்தை எடுத்து உரியவரிடம் கொடுங்கள் என்றுவிட்டு வந்துவிட்டேன்.
இன்றுவரை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.