Jump to content

இசைவு - இராசேந்திர சோழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசைவு

நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன்.

மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.

குடும்பச் சொத்து என்று மொத்தத்தில் நாலு காணி நஞ்சையும் ரெண்டு காணி புஞ்சையும் இருக்கிறது. மாமனார்தான் சாகுபடி செய்துவருகிறார். கூடவே அரவை நிலையம். சீசனைப் பொறுத்து நெல்லு வியாபாரம். அடிக்கடி வெளியூர் போய்விடுவார். மாமி மட்டும் தனியே.

மாமியையும் நடேசனின் மனைவியையும் ஒன்றாக நிறுத்தினால் தாயும் பெண்ணும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அக்கா தங்கை என்றுதான் சொல்வார்கள். அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் மாமியைத் தங்கை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு கச்சிதமான தோற்றம். நடேசனின் சம்சாரம் கொஞ்சம் பருமன், மாமி சற்றே ஒல்லி.

மழமழவென்று பூசி மெழுகினாற்போல எலும்பு தெரியாத அளவான திட்டமான சதை, அதே மழமழப்போடு கூடிய கை கால்கள், மெல்லிய சின்ன இடுப்பு, அளவான மார்பு, கனிவான முகம், தலை என எல்லாமே இதுதான் திட்டமான வளர்த்தி, இதற்குமேல் கிடையாது என்பது போலச் சொல்லாமல் சொல்லி நிற்கும். எந்நேரமும் அலுப்பு சலிப்பில்லாத இளநகை பூக்கும் வதனம். வாழ்க்கையில் துக்கப்பட என்ன இருக்கிறது என்பது மாதிரி. எதிலும் நிறைவு காணும் சாந்தம் மிகுந்த மனம். என்ன துயரமாயிருந்தாலும் மாமியை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டால் போதும். எல்லாம் ஓடி மறைந்துவிடும். மனசில் பளுவெல்லாம் குறைந்து லேசாகி மிதப்பதுபோல் இருக்கும். அப்படி ஒரு களை, ஈர்ப்பு.

இதற்காகவே நடேசன் அடிக்கடி இங்கு வந்துபோவான். எந்த நேரமும் மாமியார் வீடே கதியாய்க் கிடக்கிறானே என்று யாராவது பேசிக்கொள்வார்கள் என்றால்கூட நடேசனுக்கு அதுபற்றி கவலை இல்லை. அப்படி ஒரு மாமி கிடைத்திருந்தால் அதன் சுகம் அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும். அவள் அருகில் இருக்கிறோம் என்ற நினைவு ஒன்று போதும். வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்றும் தோன்றும்.

வாரத்தில் இரண்டு தலை முழுக்கும் கறிசோறும் சவரட்சணையும் வேறு எங்கு கிடைக்கிறது? நடேசனின் சம்சாரமும்தான்  சமைக்கிறாள். என்னத்துக்குப் பிரயோசனம்? அப்படி ஒரு பாகமும் ருசியும் இவளுக்கு வருமா?

அம்மாவின் கைப்பக்குவம் பெண்ணுக்கு அப்படியே வரும் என்பார்களே… இவளுக்கு மட்டும் ஏன் அப்படி வராமல் போய்விட்டது? 

நடேசன் அடிக்கடி மாமியாரைப் புகழ்ந்து ஏதாவது சொல்ல, ‘உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்சநாச்சமே கிடையாதா?’ என்பாள் மனைவி.

‘என்னாடி அவர போய் இந்த மாதிரி பேசிக்னு. வூட்டுக்கு ஒரு புள்ள இருந்தா…! இவராவது இப்படி கலகலன்னு இருக்காரே… மொத மருமகப்புள்ள மாதிரி உம்முன்னு இல்லாம…’ என்பாள் மாமி.

‘போம்மா… உனக்கும் ஒரு இது கெடையாது…’

‘என்னா கெடையாது… ஆளுக்கு ஒருபக்கம் மூஞ்ச தூக்கி வச்சிக்னு குந்திக்னு இருக்கணும்றியா…? கப்பல் கவுந்துட்டாப் போல… என்னாத்தடி வாரிக்னு போயிடப் போறம்…’

‘கரெக்ட் மாமி’ என்பான் நடேசன்.

மாமி சிரிப்பாள். ‘அவ சொல்றாளேன்னு நீங்க ஒன்னும் சங்கடப்படாதீங்க. அவ அப்படிதான்…’ என்பாள்.

மாமி எப்பவும் நடேசனின் பக்கம். அவன் மனைவி பேசாமல் வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். வெறுத்துப் போய், ‘எப்பிடியாவுது போங்க. மொதல்ல நீங்க ஊருக்குக் கௌம்புங்க. அப்பதான் சரிப்படும்…’ என்பாள்.

நடேசன் மாமியைப் பார்ப்பான்.

‘அவ கெடக்கிறா… இதுக்குள்ள என்ன அவசரம்? எல்லாம் கூட நாலு நாள் தங்கிட்டுப் போவலாம். அவ வேணுமின்னா மின்ன போவட்டும்.’

நடேசனின் முகம் மலரும்.

கலியாணமாகி ஒரு வருஷத்துக்குள் ஏழெட்டு தடவை வந்துபோய்விட்டிருப்பான். பக்கத்தில் பத்தொன்பது மைலில்தானே? சில சமயம் மாமி வீட்டிலேயே தங்கி தினம் பஸ்ஸில் ஆபீஸ் போய் வந்துவிடுவான்.

இந்தச் சமயம் நடேசனின் மனைவிக்கு வளைகாப்பு. மாமியும் மாமனாரும் சீர் வரிசைகளுடன் வந்து அழைத்துப் போனார்கள். தனியே ஓட்டலில் எங்கே சாப்பிடுவது? பஸ்ஸுக்கு அழுதால் அழுது தொலைகிறது என்று நடேசனும் கூடவே கிளம்பிப் போய்விட்டான்.

நடேசனுக்கு எல்லாக் கவனிப்பும் மாமிதான். மனைவிக்குச் சாதாரணமாகவே இங்கேயிருப்பதைத் தூக்கி அங்கே வைத்தால் புஸ்.. புஸ்.. என்று மூச்சு இறைக்கும். இப்போது வாயும் வயிறுமாக இருப்பதால் மூச்சு இன்னும் கொஞ்சம் மோசம். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்கார முடியாது.

குளித்துவிட்டு வந்த நடேசன் உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து வியர்வை முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்த மாமி, ‘என்னாடி இப்பிடி எளைக்க வச்சுட்ட இவர? எலும்பெல்லாம் தூக்கிக்னு இருக்குதே. ஏங்க… அவ என்னாதான் ஆக்கிப்போடறா உங்களுக்கு?’ என்றாள்.

நடேசன் சிரித்தான். உண்மையில் நெஞ்சு எலும்பு கொஞ்சம் கிளப்பிக்கொண்டுதான் இருந்தது. ‘பரவாயில்லை, போவறதுக்குள்ள சரியாப்பூடும்’ என்றான் நடேசன்.

மாமி சிரித்தாள்.

தட்டில் நாலு இட்டிலிகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சட்டினிக்காக உள்ளே போனாள் மாமி. நடேசனின் மனைவி அவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு, ‘ரொம்ப அழகுதான் போங்க…’ என்று பழிக்காமல் பழித்துக்காட்டுவது போன்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘சரிதான் போயேன்’ என்பதுபோல நடேசனும் அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு இட்டிலியைப் புட்டான்.

‘என்னா உங்க ரெண்டு பேருக்குள்ள…’ என்று கேட்டபடியே வந்தாள் மாமி.

‘என்ன ஊருக்குப் போவச் சொல்றா…’ என்றான் நடேசன்.

‘ஏண்டி?’ என்றாள் மா£மி.

‘சும்மா வாயெக் கௌறாதீங்க…’ என்றாள் நடேசனின் மனைவி.

நடேசன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

சட்டினியைக் கரண்டியில் மொண்டு தட்டில் வைத்துவிட்டு பக்கத்திலேயே குந்திக்கொண்டாள் மாமி. இவ்வளவு கிட்டத்தில் இப்படி எப்போதும் குந்தியதில்லை. நடேசன் மட்டும் தனியாக இருந்தால் கொஞ்சம் கூச்சப்பட்டு ஒருவேளை சற்றுத் தள்ளி உட்கார்ந்திருப்பாள். மகளும் இருக்கிறாளே என்பதனால் விரசமில்லாமல் குந்திவிட்டிருக்கலாம். தலைமுடி லேசாய்க் கலைந்து காதோரங்களில் தொங்கியது. வியர்வை ஈரத்தில் முகத்தோடு அழுந்திப் பதிந்து கிடந்தது. சிவந்த முகத்தில் கரிய மயிர்கள். சின்ன எடுப்பான மூக்கு. உற்சாகமான கண்கள். வியர்வை முத்திட்ட கழுத்து, கை, இடுப்பு, கீழே கொஞ்சம் பருமன். மட்டிபோட்டு தூணோரம் சாய்ந்து குந்தியிருந்தாள். சிவந்த பாதங்கள். விரல் நுனிகள் மேலும் சிவந்திருந்தன. கால் மோதிரம் நெட்டி… மொழுமொழுவென்று கணுக்கால் வரை சிகப்பு. கண்டஞ்சதை, புடவைக் கரை, இடுப்பு வரை புடவை. அப்புறம் அதே சிகப்பு ரவிக்கை வரைக்கும் தழைந்து சரிந்த முந்தானையின் ஊடே… சிவந்த வயிறு, மெல்லிய சின்னஞ்சிறு மடிப்பு. மடிப்பு மடிப்பாகத் தழைவான மடிப்பு…

பிட்ட இட்டிலியைச் சட்டினியிலேயே தோய்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மாமி, ‘கொஞ்சம் எண்ணெய் கொண்டு வரட்டா… சட்டினி காரமாயிருந்தா…’ என்றாள்.

நடேசன் மனசை உலுப்பிக்கொண்டு, ‘வேண்டாம்’ என்றான்.

‘என்னா நெனப்பெல்லாம் எங்கியோ இருக்குதா?’ என்றாள் லேசான கடுப்புடன் மனைவி.

‘எங்க இருக்கும்? எல்லாம் உன்னப் பத்தி, உன் பிரசவத்தப் பத்தித்தான்…’ என்று சிரித்தான். பின்பு மனைவிக்கு ஆறுதலான வகையில், ‘பொறக்கறது புள்ளையா இருக்குமா, பொண்ணா இருக்குமான்னு யோசனை…’ என்றான்.

‘ஆமா ஆமா… யோசனை வந்துட கிந்துடப்போவுது’ என்றாள் மனைவி.

‘ஏண்டி இருக்காதோ…? புள்ளைதான்…’

சிற்றுண்டி முடித்து ஆபீசுக்கு புறப்பட்டான் நடேசன். 

‘வேளையா வந்து சேருங்க. அவருகூடம் ஊருல இல்ல. தனியா வெட்டு வெட்டுனு…’ என்றாள் மாமி.

இரவு எல்லாம் சாப்பிட்டாகிவிட்டது. மொட்டை மாடியில் வழக்கம்போல நடேசனுக்கு படுக்கை விரித்திருந்தது. படுக்கையில் மனம் கொள்ளவில்லை. புரண்டுகொண்டிருந்தான். உள்ளங்காலிலிருந்து ஜிவு ஜிவு என்று ஏதோ ஏறி உடம்பெல்லாம் கிறுகிறுக்க வைத்த மாதிரி. அப்புறம் அப்படியே நெஞ்சில் குடுகுடுவென்று உருள்கிற மாதிரி துள்ளுகிறது.

ராத்திரி சாப்பிடும்போது ‘என்னா ஒரு மாதிரியிருக்கீங்க…?’ என்றாள் மாமி.

‘ஒன்னுமில்லே…’ என்றான் நடேசன்.

‘அவருக்கென்னா, அவரு நல்லாதான் இருக்காரு. நீ என்னாம்மா ஒரேடியா இது பண்ணிக்னு…’ என்றாள் நடேசன் சம்சாரம்.

‘சும்மா இருடி. ஒனக்கு ஒன்னும் தெரியாது’ என்று சொல்லி, சட்டென்று நடேசனின் நெற்றியில் புறங்கை வைத்துப் பார்த்துவிட்டு, ‘லேசா கனகனன்னு இருக்கிறாப்போல இருக்கு. என்ன ஒடம்புக்கு?’ என்றாள்.

‘ஒன்னுமில்லியே…’ என்றான் நடேசன்.

‘அடாடடடா…!’ மனைவி.

‘ஒனக்கு ஏண்டி எரிச்சலா இருக்குது?’ என்றாள் மாமி.

சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் கையை வாயைக் கழுவிக் கொப்பளித்துக்கொண்டு படியேறும் சமயம், மாடியில் நடேசனுக்குப் படுக்கை போட்டுவிட்டுக் கீழே இறங்கிக்கொண்டிருந்தாள் மாமி. ஒதுங்கி வழி விடலாமா… நேரே போலாமா… வேண்டுமென்றே லேசாய் உரசிப் பார்க்கலாமா… கொஞ்ச நேரத்தில் பித்துக்குளித்தனமான எத்தனையோ எண்ணங்கள் மத்தாப்பாய்ப் பொசுங்கின. மௌனமாய் ஏறினான்.

‘பாத்து வாங்க இருட்டுல…’

புடவை மணம். தலைமுடி வாசனை. மூச்சுக்காற்று. சோப்பு மணம். எல்லாம் நடேசனைக் கடந்துசென்றது. உடம்பு உரசவில்லை. காற்று உரசியது. ஒருகணம்தான். அது நெஞ்சில் அப்படியே தொற்றிக்கொண்டது.

தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்து, அப்படிப் புரண்டதினாலேயே ஒரு ஆயாசம் ஏற்பட்டு கண்ணை இழுக்க… கீழே சந்தடியெல்லாம் ஓய்ந்து, ஊர் சந்தடியும் அடங்கிவிட்டது. மொட்டை மாடியில் மங்கிய நிலா. மேலே தலை நீட்டியிருந்த வேப்ப மரத்தில் மட்டும் லேசாய் சலசலப்பு. தழைகள் தலையாட்டின. யாரோ பாய் பக்கத்தில் வந்து குந்தியது போல உணர்வு. புரண்டான். உடம்பு குந்தியிருந்த உடம்பின்மேல் பட்டது. ஒன்றோடொன்று இழைந்தது. கண் விழித்தான்.

‘தூங்கிட்டீங்களா…’ மாமிதான்.

‘ஆமா… லேசா கண்ணை இழுத்துக்னே பூடுத்து.’

‘ஒடம்பு சரியில்லாம இருந்துதே. எப்படி இருக்குதுன்னு பாத்துக்னு போலாம்னு வந்தேன்.’

‘தேவலாம். நீங்க தூங்கலியா…’

‘தூக்கம் வரல்ல…’

‘அவ தூங்கிட்டாளா…?’

‘கொரட்ட வுடுறா…’

படுத்தவாக்கிலேயே மெல்ல மார்பின்மேல் சாற்றிக்கொண்டான். கை இடுப்பைத் தடவி வளைத்துக்கொண்டது. நடேசனின் மூச்சின் உஷ்ணம் அவளைச் சுட்டது. தலையை ஒருக்களித்து வாகாக நெஞ்சில் தலை வைத்து கால்களைச் சரித்தாள். நடேசனின் இரண்டு கைகளும் தோள்களை நெருக்கி முதுகை வருடின. ரவிக்கையில் நூல் இழைகள் பிகுவாக உடம்போடு ஒட்டி, முதுகெலும்பு மேடு தட்டியது. விலாவுக்கு மேலே அவள் மார்பு புதைந்து கிடந்தது. கைகளால் மெல்லத் தலையைக் கோதினாள். நடேசன் அந்தக் கைகளைப் பிடித்து அவளைக் கீழே சரித்தான். அவள் முகம் நடேசனின் வயிற்றுக்கு நேரே… குழந்தை மாதிரி தூக்கி மேலே ஏற்றிப் படுக்க வைத்து இறுக்கி அணைத்தான். இறுக்கம்… இறுக்கம்… அவள் ‘அப்பா… போதும் மெதுவா…’ என்றாள்.

எல்லாம் முடிந்த பிறகும் மாமிக்கு எழுந்து போகவேண்டும் என்று தோன்றவில்லை. அப்படியே படுத்துக் கிடந்தாள்.

நிலவு மேற்குப் பக்கம் சாய்ந்து வெம்பிக் கிடந்தது. காணாததைக் கண்ட குமைச்சலாயிருக்கும். மாமி மெல்ல நடேசனின் கையை விலக்கித் தொட்டு எழுப்பி, அணைப்பிலிருந்து விலகிய பின், ‘கீழே போறேன். நடுராத்திரி தாண்டியிருக்கும்’ என்று எழ முற்பட்டாள். அவளை விட மனமில்லாமல் இழுத்து நெஞ்சில் முகம் புதைத்தான் நடேசன்.

‘போதும் போதும். ரொம்ப அழகுதான்…’ என்றாள்.

‘ஏன்? என்னா…’ என்றான் நடேசன்.

சிரித்துக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டாள்.

மறுநாளும் அதற்கு மறுநாளும் மாமி மெத்தைக்கு வந்தாள். அதற்கும் மறுநாள் மாமனார் ஊரிலிருந்து வந்துவிட்டார். கொஞ்ச நாள் கழித்து மனைவிக்குப் பிரசவமாகியது. பெண் குழந்தை. சுகப் பிரசவம். பிரசவத்துக்குப் பின் தீட்டெல்லாம் கழிந்த பிறகு, மாமனார் மறுபடியும் வெளியூர் போனார். இரவு வந்தது. மாமியும் வந்தாள். நிலவும் வந்தது; வேடிக்கை பார்க்க!

நடேசனின் கையைத் தன் மடியில் எடுத்து வைத்து விரல்களை எண்ணுவது மாதிரி பிரித்துப் பிரித்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள் மாமி. எப்படியும் நடேசனின் சம்சாரத்தைவிட பதினெட்டு இருபது வயதாவது கூடுதலாக இருக்கும். பார்த்தால் தெரிகிறதா? செலவாகிப் போகாமல், செலவுக்கு வேண்டும் என்று அப்படியே தேங்கிவிட்டதா? இந்த வயதிலும் எப்படித் துடிப்புடனும் குதுகுதுப்புடனும் இருக்கிறாள்? பாவம் மாமனார். கொடுத்து வைக்காதவர். அவருக்கு ஆளத் தெரியவில்லை.

ரெண்டு பெண்டுகள் கூடம் எப்படிப் பிறந்ததோ? மூத்த பெண் அப்படியே அம்மா ஜாடை. பார்த்திருக்கிறான். ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கும். அவளுக்கு அம்மாவிடம் அதிகமான ஒட்டுதல், பிரியம், பாசம் எல்லாம் உண்டு. ஆனால் அவள் புருஷன் மட்டும் கொஞ்சம் முசுடு. உம்மென்று ஆச்சு, ஆச்சு என்று கிளம்புவதிலேயே இருப்பான். அதிகமாய் வருவதுகூட இல்லை.

நடேசனின் சம்சாரத்துக்கும் மாமிக்கும் முகஜாடை கொஞ்சம் ஒப்புமை இருந்தாலும் அங்க அமைப்பில் சம்பந்தமே இல்லை. இந்த உறுதியும் நளினமும் குழைவும் எங்கே… அந்தப் பொதபொதப்பும் கதனை கதனையான பொறுத்தமற்ற சதையும் எங்கே…

மாமியையே பார்த்துக்கொண்டிருந்தான். புருவ மேட்டுக்குக் கீழே கண் குழியிலும், வதன மடிப்புக்குக் கீழும் மேலுதட்டிலும் இருள் பரவியிருந்தது. மற்ற இடமெல்லாம் நிலவொளியில் தெளிவாய்த் தெரிந்தது. 

மஞ்சளுமில்லாமல் வெள்ளையுமில்லாமல் மழமழவென்று பளிங்கு மாதிரி இருந்தது. இடதுகை விரல் நுனியால் மெல்ல அவள் வலது கன்னத்தில் கோலம் போட்டான் நடேசன். அந்தக் கையையும் இழுத்து மடியில் வைத்துக்கொண்டாள் அவள். அவளின் மன ஓட்டத்துக்கு அது தடைசெய்ததோ என்னவோ?

‘என்ன யோசனை?’ என்றான் நடேசன்.

‘யோசனையா?’ கலகலவென்று, ஆனால் ஓசைப்படாமல் சிரித்தாள். ‘உங்களை ரெண்டாந்தாரம் கட்டிக்கலாமான்னு யோசனை.’

நடேசனுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தான்.

‘கட்டிக்கோங்களேன்… அதப்பத்தி என்னா…’

நடக்கமுடியாத எத்தனையோ விஷயங்களை இப்படிப் பேசி, வெளியிட்டு, நெஞ்சின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அபிலாஷைகளை அவிழ்த்துவிட்டுக் கொள்வதில்தான் எத்தனை சுகம்! அதுவும் தனிமையில் அதன் காரண கர்த்தாக்களுக்குள். அப்படித்தான் இருந்தாள் அவள்.

‘இங்க பாருங்க’ என்று மெல்லத் தலையைத் திருப்பினான். ‘மூனாம் மாசம் அழைச்சிம் போயிடட்டுமா…’

‘ஏன்? என்னா அவசரம்?’

‘எனக்கு அவசரம் எதுவுமில்ல. கேக்கணும்னு தோனுச்சு. கேட்டேன்’ என்றான்.

‘ஒம்பதாவது மாசமாவது, பதினோராவது மாசமாவது அழைச்சிக்னு போகலாம்’ என்றாள் அவள்.

‘பொண்ணுக்கு பாட்டி பேரதான் வக்யணும்…’

‘நான் பாட்டியா?’ என்று சிரித்தாள்.

‘பின்ன இல்லியா…?’ என்று இழுத்து அணைத்துச் சிரித்தான் நடேசன். அவன் வாய் அவள் மூக்கைக் கவ்வியது. மூக்கு, வாய், கன்னம் – கன்னம், வாய், மூக்கு – வாய்… எவ்வளவு நேரமோ…

கீழே முனகல் சத்தம் கேட்டது. ‘அம்மா…ம்மா…’ பெண்தான் கூப்பிடுகிறாள். நடேசன் தட்டி எழுப்பி, ‘அவ முழிச்சிக்னா போலக்து… கூப்புடுறா…’ என்றான். 

மாமி தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு கீழே இறங்கினாள். கீழே சிறிது பேச்சுக்குரல் கேட்டது. தாய்க்கும் மகளுக்கும்தான். எதுவும் சரியாக காதில் விழவில்லை. குழந்தைக்கு குளுக்கோஸ் தண்ணி போடக் கூப்பிட்டிருக்கலாம். கொஞ்ச நேரம் வரைக்கும் விழித்திருந்தான். மாமி திரும்ப வரவில்லை. தூங்கிப் போய்விட்டான்.

மறுநாள் முற்பகல் சமையல் வேலை எல்லாம் முடித்து தோட்டத்தில் பூப்பறிக்கும் போது மாமி நடேசனைக் கண்டு லேசாய் சிரித்து மெல்லக் கிசுகிசுத்தாள். ‘அவளுக்கு சந்தேகம் வந்துட்டுது. எரிபுரின்னு இருக்குறா…’ என்றாள்.

சொன்ன மாதிரியே மனைவி அப்படித்தான் இருந்தாள். நடேசனிடம்கூடச் சரியாக எதுவும் பேசவில்லை.

மாமியின் இஷ்டப்படியே பதினோராம் மாசம் வரைக்கும் சம்சாரம் இருக்கவிடவில்லை. அஞ்சாம் மாசமே, கிளம்பு கிளம்பு என அரித்தெடுத்துவிட்டாள். அவள் அவசரத்தின் காரணம் சம்பந்தப்பட்ட இருவருக்கும் புரிந்தது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை விட்டுக் கிளம்பினான். வீடு வந்த பிறகு ரகளை.

‘உங்களுக்குக் கொஞ்சம்கூட இதுவே கெடையாதா…?’

‘என்னா?’ நடேசன் முறைத்தான்.

‘சே… உங்களுக்குத்தான் மூளையில்லேன்னாலும் அவுங்களுக்கும் மூளையில்ல…’

‘என்னா சொல்ற நீ?’

‘ஒன்னுந் தெரியாதுன்னு நெனச்சிக்னு சும்மா வாயக் கௌறாதீங்க… அப்புறம்…’ என்று இழுத்தாள்.

‘சரி சரி. அதெல்லாம் ஒன்னுங் கெடையாது. சும்மா இரு’ என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

‘இனிமே மாமி வூடு… அது இதுன்னு… எப்பனா பொறப்டு போனீங்க… அப்புறம் அவ்ளவுதான்…’

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டது. மாமனார் மட்டும் நடுவில் இரண்டு மூன்று முறை வந்து போனார், பேத்தியைப் பார்க்க. ஒருதடவை வந்தபோது ரொம்பக் கூச்சத்துடன் தன் சம்சாரம் முழுகாமலிருக்கிற சேதியைச் சொல்லிவிட்டுப் போனார். நடேசனுக்கு நெஞ்சமெல்லாம் கிறுகிறுத்தது. மனைவி முகத்தைச் சுழித்துக்கொண்டாள். 

மகள் குழந்தை பெற்று பேரன் பேத்திகளைக் காண்கிற இந்த வயதில் இப்படி ஒரு கருத்தரிப்பு தேவையா என்பது கேள்வியாக இருந்தாலும், பல பேரின் எள்ளல் பேச்சுக்கு உள்ளாகி இருந்தாலும், எக்காரணத்தை முன்னிட்டும் கருக்கலைப்பு என்ற எண்ணத்திற்கு மட்டும் இடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஏதாவது செய்ய முனைவது, உடம்பு தாங்காது, உயிருக்கு ஆபத்தாய் முடிந்தாலும் முடியலாம். இயற்கையாக உடம்பு எந்த அளவு அனுமதித்ததோ, அந்த அளவு நடக்கட்டும். இயற்கை விதிப்படி எது நடக்கிறதோ நடக்கட்டும். நாமாக எதுவும் செய்யவேண்டாம் என்று உறுதிபடச் சொல்லிவிட்டார் டாக்டர்.

ஒரு தடவையாவது நடுவில் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று துடிப்பு. தெரியாமல் போய் வந்துவிடலாம் என்றால் எப்படியும் முடியாது. மெல்ல அவளிடம் பீடிகை போட்டான்.

‘பாவம் உங்க அம்மா. போய் பாத்துட்டு வர்றதுக்குக் கூடம் இல்ல. எப்பிடி இருக்காங்களோ…’ என்றான் நடேசன்.

‘போதும் உங்க கரிசனம். எல்லாம் அங்க இருக்கிறவங்க பாத்துக்குவாங்க. நீங்க சும்மா இருங்க.’

பிறகு அவன் அந்தப் பேச்சையே எடுப்பதில்லை. தனியே இருக்கும்போது மனம் பரிதவிக்கும். கிடந்து வதைவான். அந்த வதைவு, அது யாருக்குப் புரியும்?

‘சார் தந்தி!’ என்று ஆபிஸ் சேவகன் நீட்டிய அஞ்சல் தாளை நடுக்கத்துடன் வாங்கிப் பாரத்தில் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டுப் பிரித்தான். மாமனார் கொடுத்திருந்தார். ‘உடனே புறப்பட்டு வரவும். மாமிக்கு மோசம்.’ அப்படியே கால் காகிதத்தில் பரபரவென்று லீவு எழுதி மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து கட்டின துணியோடு அவளையும் கூட்டிக்கொண்டு அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டுவிட்டான்.

என்ன, ஏது என்று விவரமாக ஒன்றும் இல்லாமல் மாமிக்கு மோசம் என்றால் என்னவென்று நினைப்பது? மனசு எங்கெல்லாமோ தட்டுக்கெட்டுத் தடுமாறி அலைபாய்ந்து தவித்துத் திரும்பியது. நல்ல காலம் வீட்டெதிரில் எதுவும் கூட்டமில்லை.

அவளுக்கு முன் நடேசன்தான் உள்ளே நுழைந்தான். கட்டிலில் மாமி. ஓரத்தில் ஒரு டாக்டர். பக்கத்தில் மாமனார். இன்னும் அக்கம் பக்கத்து வீட்டு பொம்பளைகள் ரெண்டு மூணு பேர்.

மாமி தன் உடம்புக்குப் பொருத்தமில்லாத பாரத்தைத் தாங்கியவள் போல் துவண்டு கண்ணை மூடியிருந்தாள்.

‘நடுவில் நீண்டநாள் இடைவெளி இல்ல. கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கும். கவலப்படாதீங்க. ஒன்னும் ஆவாது’ என்றார் டாக்டர்.

இரவு ரொம்ப கஷ்டமாகவும் வேதனையுடனும் கழிந்தது. நடேசன் வந்தபிறகு கண்ணை விழித்த மாமியின் முகத்தில் ஒரு ஒளி பரவி மறைந்தது. பக்கத்தில் போய் உட்கார்ந்து கையைப் பிடித்துக்கொள்ளவும் தலையைக் கோதிவிடவும் தேறுதல் சொல்லவும் நெஞ்சம் பதைத்தது. அதே ஏக்கம் அவள் முகத்திலும் பிரதிபலித்தது. யாரும் தனியாக இருக்கவிடவில்லை. ஒருத்தர் மாற்றி ஒருத்தர். அதை நினைத்துக் கசந்தபடியே உறக்கத்தில்… இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு பெரிய சப்தம். உயிர் பிரிகிறது மாதிரி. உடம்பிலிருந்து உயிர் பிரிகிற சத்தம் இல்லை. உயிரிலிருந்து உயிர் பிரிகிற சத்தம்.

பொழுது விடிந்துவிட்டது. சுகப் பிரசவம். ஆண் பிள்ளை. தீட்டு, தடுக்கு, தலைமுழுக்கு எல்லாம் ஒரு வாரத்தில் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது. பத்து மணிக்கு மேல் மாமனார் வெளியே புறப்பட்டுப் போனார் போஸ்டாபீசுக்கு. சொந்தக்காரர்களுக்கு கார்டு எழுதிப் போட. அடுப்பில் குழம்பு கூட்டிப் போட்டுவிட்டு குழந்தையை மடியில் தாங்கிப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள் நடேசன் சம்சாரம். அவளும் எழுந்து தோட்டப்பக்கமாவது எங்கியாவது போவ மாட்டாளா… இன்னும் குழந்தை எப்படியிருக்கும் என்றுகூடப் பார்க்கவில்லை. மாமி எப்படியிருக்கிறாளோ…

‘ஏண்டி…’ பிரசவித்த அறையிலிருந்து கீச்சென்று ஒலித்தது மாமியின் குரல் பல்வேறு தவிப்புகளுடன்.

‘என்னாம்மா…?’ உட்கார்ந்த நிலையிலேயே இவள் கேட்டாள்.

‘அவரு இல்லியா…?’

‘அப்பாவா…?’

கொஞ்ச நேரம் மௌனம்.

‘மாப்பிள்ளை…!’ மீண்டும் உள்ளிருந்து குரல் வந்தது.

‘இருக்காரு இருக்காரு’ என்று சொல்லிவிட்டு நடேசனைப் பார்த்தாள் மனைவி.

‘கொஞ்சம் வரச்சொல்லு…’

நடேசன் தயங்கி அறைக்குள் போனான்.

சோர்ந்து வெளுத்திருந்தாள் மாமி. பக்கத்தில் செவேலென்று சிசு. பிறந்த வீச்சம் மாறாத சிசு. கண்ணை மூடி கைகளை மூடிக் கிடந்தது. 

உதடுகள் நெளிய மெல்லச் சிரித்த மாமி, ‘உக்காருங்க’ என்றாள். அவன் வெளியே எட்டிப் பார்த்தான்.

‘அவ கெடக்கறா… ஒக்காருங்க…’

நடேசன் உட்கார்ந்தான். நடேசனின் கைகள் இரண்டையும் எடுத்துத் தன் கன்னங்களில் பதித்துக்கொண்டு, ‘நடுவில ஒருதரம்கூட வரலியே’ என்றாள்.

அவன் மௌனமாயிருந்தான். எத்தனை நாள் ஆவேசமோ? நெஞ்சிலிருந்து நீராய்ப் பீரிட்டு கண்களில் முட்டியது.

‘கொழந்தையப் பாத்தீங்களா…?’

அவன் கண்களை ஒற்றிக்கொள்ள கைகளை விடுவித்துக்கொண்டு சிரித்தான்.

‘நான்தான் தந்தி குடுக்கச் சொன்னேன். எனக்கே நம்பிக்கை இல்ல…’ என்றாள்.

‘நான் பயந்தே போயிட்டேன்.’

‘செத்திடுவனேன்னா…’ சிரித்தாள் அவள். கைகளை எடுத்து நெஞ்சில் வைத்து இறுக்கிக்கொண்டு, ‘ஒரு மாசத்துக்கு இங்கியே இருந்துட்டுப் போலாம். அவளும் எனக்கு ஒத்தாசையா இருப்பா…’

‘அவகிட்ட சொல்லுங்க’ என்றான் நடேசன். எவ்வளவோ இழந்துவிட்ட பொருமலுடன்.

‘அவ என்னா சொல்றது? இருடீன்னா இருக்க வேண்டியதுதானே?’ என்று தீர்மானமாய்ச் சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் நடேசனையே பார்த்துக்கொண்டிருந்தாள். மனசிலிருந்த பளுவெல்லாம் இறங்கிய மாதிரியிருந்தது. செல்லமாய் உரிமையுடன் லேசாய் கன்னத்தைக் கிள்ளினான்.

‘ஸ்…’ என்றாள் கையை விலக்கிவிட்டு. கொஞ்சம் ஒருக்களித்து சிசுவைச் சீண்டி, ‘அப்பா பாருடா கண்ணா’ என்று சிரித்தாள். அந்தப் பலவீனத்திலும் என்ன ஒரு களை.

‘அப்பா இல்ல. மாமா!’ என்று திருத்தினான் நடேசன்.‘அப்பா வர்றாருமா…’ தெருப் பக்கமிருந்து எதிலும் படாதவள் போல் குரல் கொடுத்தாள் நடேசனின் சம்சாரம். அதுதான் என் சம்சாரம் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் நடேசன்.

 

https://tamizhini.in/2022/08/30/இசைவு/

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2022 at 21:33, கிருபன் said:

இசைவு

நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன்.

மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.

குடும்பச் சொத்து என்று மொத்தத்தில் நாலு காணி நஞ்சையும் ரெண்டு காணி புஞ்சையும் இருக்கிறது. மாமனார்தான் சாகுபடி செய்துவருகிறார். கூடவே அரவை நிலையம். சீசனைப் பொறுத்து நெல்லு வியாபாரம். அடிக்கடி வெளியூர் போய்விடுவார். மாமி மட்டும் தனியே.

மாமியையும் நடேசனின் மனைவியையும் ஒன்றாக நிறுத்தினால் தாயும் பெண்ணும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அக்கா தங்கை என்றுதான் சொல்வார்கள். அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் மாமியைத் தங்கை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு கச்சிதமான தோற்றம். நடேசனின் சம்சாரம் கொஞ்சம் பருமன், மாமி சற்றே ஒல்லி.

மழமழவென்று பூசி மெழுகினாற்போல எலும்பு தெரியாத அளவான திட்டமான சதை, அதே மழமழப்போடு கூடிய கை கால்கள், மெல்லிய சின்ன இடுப்பு, அளவான மார்பு, கனிவான முகம், தலை என எல்லாமே இதுதான் திட்டமான வளர்த்தி, இதற்குமேல் கிடையாது என்பது போலச் சொல்லாமல் சொல்லி நிற்கும். எந்நேரமும் அலுப்பு சலிப்பில்லாத இளநகை பூக்கும் வதனம். வாழ்க்கையில் துக்கப்பட என்ன இருக்கிறது என்பது மாதிரி. எதிலும் நிறைவு காணும் சாந்தம் மிகுந்த மனம். என்ன துயரமாயிருந்தாலும் மாமியை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டால் போதும். எல்லாம் ஓடி மறைந்துவிடும். மனசில் பளுவெல்லாம் குறைந்து லேசாகி மிதப்பதுபோல் இருக்கும். அப்படி ஒரு களை, ஈர்ப்பு.

இதற்காகவே நடேசன் அடிக்கடி இங்கு வந்துபோவான். எந்த நேரமும் மாமியார் வீடே கதியாய்க் கிடக்கிறானே என்று யாராவது பேசிக்கொள்வார்கள் என்றால்கூட நடேசனுக்கு அதுபற்றி கவலை இல்லை. அப்படி ஒரு மாமி கிடைத்திருந்தால் அதன் சுகம் அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும். அவள் அருகில் இருக்கிறோம் என்ற நினைவு ஒன்று போதும். வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்றும் தோன்றும்.

வாரத்தில் இரண்டு தலை முழுக்கும் கறிசோறும் சவரட்சணையும் வேறு எங்கு கிடைக்கிறது? நடேசனின் சம்சாரமும்தான்  சமைக்கிறாள். என்னத்துக்குப் பிரயோசனம்? அப்படி ஒரு பாகமும் ருசியும் இவளுக்கு வருமா?

அம்மாவின் கைப்பக்குவம் பெண்ணுக்கு அப்படியே வரும் என்பார்களே… இவளுக்கு மட்டும் ஏன் அப்படி வராமல் போய்விட்டது? 

நடேசன் அடிக்கடி மாமியாரைப் புகழ்ந்து ஏதாவது சொல்ல, ‘உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்சநாச்சமே கிடையாதா?’ என்பாள் மனைவி.

‘என்னாடி அவர போய் இந்த மாதிரி பேசிக்னு. வூட்டுக்கு ஒரு புள்ள இருந்தா…! இவராவது இப்படி கலகலன்னு இருக்காரே… மொத மருமகப்புள்ள மாதிரி உம்முன்னு இல்லாம…’ என்பாள் மாமி.

‘போம்மா… உனக்கும் ஒரு இது கெடையாது…’

‘என்னா கெடையாது… ஆளுக்கு ஒருபக்கம் மூஞ்ச தூக்கி வச்சிக்னு குந்திக்னு இருக்கணும்றியா…? கப்பல் கவுந்துட்டாப் போல… என்னாத்தடி வாரிக்னு போயிடப் போறம்…’

‘கரெக்ட் மாமி’ என்பான் நடேசன்.

மாமி சிரிப்பாள். ‘அவ சொல்றாளேன்னு நீங்க ஒன்னும் சங்கடப்படாதீங்க. அவ அப்படிதான்…’ என்பாள்.

மாமி எப்பவும் நடேசனின் பக்கம். அவன் மனைவி பேசாமல் வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். வெறுத்துப் போய், ‘எப்பிடியாவுது போங்க. மொதல்ல நீங்க ஊருக்குக் கௌம்புங்க. அப்பதான் சரிப்படும்…’ என்பாள்.

நடேசன் மாமியைப் பார்ப்பான்.

‘அவ கெடக்கிறா… இதுக்குள்ள என்ன அவசரம்? எல்லாம் கூட நாலு நாள் தங்கிட்டுப் போவலாம். அவ வேணுமின்னா மின்ன போவட்டும்.’

நடேசனின் முகம் மலரும்.

கலியாணமாகி ஒரு வருஷத்துக்குள் ஏழெட்டு தடவை வந்துபோய்விட்டிருப்பான். பக்கத்தில் பத்தொன்பது மைலில்தானே? சில சமயம் மாமி வீட்டிலேயே தங்கி தினம் பஸ்ஸில் ஆபீஸ் போய் வந்துவிடுவான்.

இந்தச் சமயம் நடேசனின் மனைவிக்கு வளைகாப்பு. மாமியும் மாமனாரும் சீர் வரிசைகளுடன் வந்து அழைத்துப் போனார்கள். தனியே ஓட்டலில் எங்கே சாப்பிடுவது? பஸ்ஸுக்கு அழுதால் அழுது தொலைகிறது என்று நடேசனும் கூடவே கிளம்பிப் போய்விட்டான்.

நடேசனுக்கு எல்லாக் கவனிப்பும் மாமிதான். மனைவிக்குச் சாதாரணமாகவே இங்கேயிருப்பதைத் தூக்கி அங்கே வைத்தால் புஸ்.. புஸ்.. என்று மூச்சு இறைக்கும். இப்போது வாயும் வயிறுமாக இருப்பதால் மூச்சு இன்னும் கொஞ்சம் மோசம். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்கார முடியாது.

குளித்துவிட்டு வந்த நடேசன் உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து வியர்வை முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்த மாமி, ‘என்னாடி இப்பிடி எளைக்க வச்சுட்ட இவர? எலும்பெல்லாம் தூக்கிக்னு இருக்குதே. ஏங்க… அவ என்னாதான் ஆக்கிப்போடறா உங்களுக்கு?’ என்றாள்.

நடேசன் சிரித்தான். உண்மையில் நெஞ்சு எலும்பு கொஞ்சம் கிளப்பிக்கொண்டுதான் இருந்தது. ‘பரவாயில்லை, போவறதுக்குள்ள சரியாப்பூடும்’ என்றான் நடேசன்.

மாமி சிரித்தாள்.

தட்டில் நாலு இட்டிலிகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சட்டினிக்காக உள்ளே போனாள் மாமி. நடேசனின் மனைவி அவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு, ‘ரொம்ப அழகுதான் போங்க…’ என்று பழிக்காமல் பழித்துக்காட்டுவது போன்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘சரிதான் போயேன்’ என்பதுபோல நடேசனும் அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு இட்டிலியைப் புட்டான்.

‘என்னா உங்க ரெண்டு பேருக்குள்ள…’ என்று கேட்டபடியே வந்தாள் மாமி.

‘என்ன ஊருக்குப் போவச் சொல்றா…’ என்றான் நடேசன்.

‘ஏண்டி?’ என்றாள் மா£மி.

‘சும்மா வாயெக் கௌறாதீங்க…’ என்றாள் நடேசனின் மனைவி.

நடேசன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

சட்டினியைக் கரண்டியில் மொண்டு தட்டில் வைத்துவிட்டு பக்கத்திலேயே குந்திக்கொண்டாள் மாமி. இவ்வளவு கிட்டத்தில் இப்படி எப்போதும் குந்தியதில்லை. நடேசன் மட்டும் தனியாக இருந்தால் கொஞ்சம் கூச்சப்பட்டு ஒருவேளை சற்றுத் தள்ளி உட்கார்ந்திருப்பாள். மகளும் இருக்கிறாளே என்பதனால் விரசமில்லாமல் குந்திவிட்டிருக்கலாம். தலைமுடி லேசாய்க் கலைந்து காதோரங்களில் தொங்கியது. வியர்வை ஈரத்தில் முகத்தோடு அழுந்திப் பதிந்து கிடந்தது. சிவந்த முகத்தில் கரிய மயிர்கள். சின்ன எடுப்பான மூக்கு. உற்சாகமான கண்கள். வியர்வை முத்திட்ட கழுத்து, கை, இடுப்பு, கீழே கொஞ்சம் பருமன். மட்டிபோட்டு தூணோரம் சாய்ந்து குந்தியிருந்தாள். சிவந்த பாதங்கள். விரல் நுனிகள் மேலும் சிவந்திருந்தன. கால் மோதிரம் நெட்டி… மொழுமொழுவென்று கணுக்கால் வரை சிகப்பு. கண்டஞ்சதை, புடவைக் கரை, இடுப்பு வரை புடவை. அப்புறம் அதே சிகப்பு ரவிக்கை வரைக்கும் தழைந்து சரிந்த முந்தானையின் ஊடே… சிவந்த வயிறு, மெல்லிய சின்னஞ்சிறு மடிப்பு. மடிப்பு மடிப்பாகத் தழைவான மடிப்பு…

பிட்ட இட்டிலியைச் சட்டினியிலேயே தோய்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மாமி, ‘கொஞ்சம் எண்ணெய் கொண்டு வரட்டா… சட்டினி காரமாயிருந்தா…’ என்றாள்.

நடேசன் மனசை உலுப்பிக்கொண்டு, ‘வேண்டாம்’ என்றான்.

‘என்னா நெனப்பெல்லாம் எங்கியோ இருக்குதா?’ என்றாள் லேசான கடுப்புடன் மனைவி.

‘எங்க இருக்கும்? எல்லாம் உன்னப் பத்தி, உன் பிரசவத்தப் பத்தித்தான்…’ என்று சிரித்தான். பின்பு மனைவிக்கு ஆறுதலான வகையில், ‘பொறக்கறது புள்ளையா இருக்குமா, பொண்ணா இருக்குமான்னு யோசனை…’ என்றான்.

‘ஆமா ஆமா… யோசனை வந்துட கிந்துடப்போவுது’ என்றாள் மனைவி.

‘ஏண்டி இருக்காதோ…? புள்ளைதான்…’

சிற்றுண்டி முடித்து ஆபீசுக்கு புறப்பட்டான் நடேசன். 

‘வேளையா வந்து சேருங்க. அவருகூடம் ஊருல இல்ல. தனியா வெட்டு வெட்டுனு…’ என்றாள் மாமி.

இரவு எல்லாம் சாப்பிட்டாகிவிட்டது. மொட்டை மாடியில் வழக்கம்போல நடேசனுக்கு படுக்கை விரித்திருந்தது. படுக்கையில் மனம் கொள்ளவில்லை. புரண்டுகொண்டிருந்தான். உள்ளங்காலிலிருந்து ஜிவு ஜிவு என்று ஏதோ ஏறி உடம்பெல்லாம் கிறுகிறுக்க வைத்த மாதிரி. அப்புறம் அப்படியே நெஞ்சில் குடுகுடுவென்று உருள்கிற மாதிரி துள்ளுகிறது.

ராத்திரி சாப்பிடும்போது ‘என்னா ஒரு மாதிரியிருக்கீங்க…?’ என்றாள் மாமி.

‘ஒன்னுமில்லே…’ என்றான் நடேசன்.

‘அவருக்கென்னா, அவரு நல்லாதான் இருக்காரு. நீ என்னாம்மா ஒரேடியா இது பண்ணிக்னு…’ என்றாள் நடேசன் சம்சாரம்.

‘சும்மா இருடி. ஒனக்கு ஒன்னும் தெரியாது’ என்று சொல்லி, சட்டென்று நடேசனின் நெற்றியில் புறங்கை வைத்துப் பார்த்துவிட்டு, ‘லேசா கனகனன்னு இருக்கிறாப்போல இருக்கு. என்ன ஒடம்புக்கு?’ என்றாள்.

‘ஒன்னுமில்லியே…’ என்றான் நடேசன்.

‘அடாடடடா…!’ மனைவி.

‘ஒனக்கு ஏண்டி எரிச்சலா இருக்குது?’ என்றாள் மாமி.

சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் கையை வாயைக் கழுவிக் கொப்பளித்துக்கொண்டு படியேறும் சமயம், மாடியில் நடேசனுக்குப் படுக்கை போட்டுவிட்டுக் கீழே இறங்கிக்கொண்டிருந்தாள் மாமி. ஒதுங்கி வழி விடலாமா… நேரே போலாமா… வேண்டுமென்றே லேசாய் உரசிப் பார்க்கலாமா… கொஞ்ச நேரத்தில் பித்துக்குளித்தனமான எத்தனையோ எண்ணங்கள் மத்தாப்பாய்ப் பொசுங்கின. மௌனமாய் ஏறினான்.

‘பாத்து வாங்க இருட்டுல…’

புடவை மணம். தலைமுடி வாசனை. மூச்சுக்காற்று. சோப்பு மணம். எல்லாம் நடேசனைக் கடந்துசென்றது. உடம்பு உரசவில்லை. காற்று உரசியது. ஒருகணம்தான். அது நெஞ்சில் அப்படியே தொற்றிக்கொண்டது.

தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்து, அப்படிப் புரண்டதினாலேயே ஒரு ஆயாசம் ஏற்பட்டு கண்ணை இழுக்க… கீழே சந்தடியெல்லாம் ஓய்ந்து, ஊர் சந்தடியும் அடங்கிவிட்டது. மொட்டை மாடியில் மங்கிய நிலா. மேலே தலை நீட்டியிருந்த வேப்ப மரத்தில் மட்டும் லேசாய் சலசலப்பு. தழைகள் தலையாட்டின. யாரோ பாய் பக்கத்தில் வந்து குந்தியது போல உணர்வு. புரண்டான். உடம்பு குந்தியிருந்த உடம்பின்மேல் பட்டது. ஒன்றோடொன்று இழைந்தது. கண் விழித்தான்.

‘தூங்கிட்டீங்களா…’ மாமிதான்.

‘ஆமா… லேசா கண்ணை இழுத்துக்னே பூடுத்து.’

‘ஒடம்பு சரியில்லாம இருந்துதே. எப்படி இருக்குதுன்னு பாத்துக்னு போலாம்னு வந்தேன்.’

‘தேவலாம். நீங்க தூங்கலியா…’

‘தூக்கம் வரல்ல…’

‘அவ தூங்கிட்டாளா…?’

‘கொரட்ட வுடுறா…’

படுத்தவாக்கிலேயே மெல்ல மார்பின்மேல் சாற்றிக்கொண்டான். கை இடுப்பைத் தடவி வளைத்துக்கொண்டது. நடேசனின் மூச்சின் உஷ்ணம் அவளைச் சுட்டது. தலையை ஒருக்களித்து வாகாக நெஞ்சில் தலை வைத்து கால்களைச் சரித்தாள். நடேசனின் இரண்டு கைகளும் தோள்களை நெருக்கி முதுகை வருடின. ரவிக்கையில் நூல் இழைகள் பிகுவாக உடம்போடு ஒட்டி, முதுகெலும்பு மேடு தட்டியது. விலாவுக்கு மேலே அவள் மார்பு புதைந்து கிடந்தது. கைகளால் மெல்லத் தலையைக் கோதினாள். நடேசன் அந்தக் கைகளைப் பிடித்து அவளைக் கீழே சரித்தான். அவள் முகம் நடேசனின் வயிற்றுக்கு நேரே… குழந்தை மாதிரி தூக்கி மேலே ஏற்றிப் படுக்க வைத்து இறுக்கி அணைத்தான். இறுக்கம்… இறுக்கம்… அவள் ‘அப்பா… போதும் மெதுவா…’ என்றாள்.

எல்லாம் முடிந்த பிறகும் மாமிக்கு எழுந்து போகவேண்டும் என்று தோன்றவில்லை. அப்படியே படுத்துக் கிடந்தாள்.

நிலவு மேற்குப் பக்கம் சாய்ந்து வெம்பிக் கிடந்தது. காணாததைக் கண்ட குமைச்சலாயிருக்கும். மாமி மெல்ல நடேசனின் கையை விலக்கித் தொட்டு எழுப்பி, அணைப்பிலிருந்து விலகிய பின், ‘கீழே போறேன். நடுராத்திரி தாண்டியிருக்கும்’ என்று எழ முற்பட்டாள். அவளை விட மனமில்லாமல் இழுத்து நெஞ்சில் முகம் புதைத்தான் நடேசன்.

‘போதும் போதும். ரொம்ப அழகுதான்…’ என்றாள்.

‘ஏன்? என்னா…’ என்றான் நடேசன்.

சிரித்துக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டாள்.

மறுநாளும் அதற்கு மறுநாளும் மாமி மெத்தைக்கு வந்தாள். அதற்கும் மறுநாள் மாமனார் ஊரிலிருந்து வந்துவிட்டார். கொஞ்ச நாள் கழித்து மனைவிக்குப் பிரசவமாகியது. பெண் குழந்தை. சுகப் பிரசவம். பிரசவத்துக்குப் பின் தீட்டெல்லாம் கழிந்த பிறகு, மாமனார் மறுபடியும் வெளியூர் போனார். இரவு வந்தது. மாமியும் வந்தாள். நிலவும் வந்தது; வேடிக்கை பார்க்க!

நடேசனின் கையைத் தன் மடியில் எடுத்து வைத்து விரல்களை எண்ணுவது மாதிரி பிரித்துப் பிரித்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள் மாமி. எப்படியும் நடேசனின் சம்சாரத்தைவிட பதினெட்டு இருபது வயதாவது கூடுதலாக இருக்கும். பார்த்தால் தெரிகிறதா? செலவாகிப் போகாமல், செலவுக்கு வேண்டும் என்று அப்படியே தேங்கிவிட்டதா? இந்த வயதிலும் எப்படித் துடிப்புடனும் குதுகுதுப்புடனும் இருக்கிறாள்? பாவம் மாமனார். கொடுத்து வைக்காதவர். அவருக்கு ஆளத் தெரியவில்லை.

ரெண்டு பெண்டுகள் கூடம் எப்படிப் பிறந்ததோ? மூத்த பெண் அப்படியே அம்மா ஜாடை. பார்த்திருக்கிறான். ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கும். அவளுக்கு அம்மாவிடம் அதிகமான ஒட்டுதல், பிரியம், பாசம் எல்லாம் உண்டு. ஆனால் அவள் புருஷன் மட்டும் கொஞ்சம் முசுடு. உம்மென்று ஆச்சு, ஆச்சு என்று கிளம்புவதிலேயே இருப்பான். அதிகமாய் வருவதுகூட இல்லை.

நடேசனின் சம்சாரத்துக்கும் மாமிக்கும் முகஜாடை கொஞ்சம் ஒப்புமை இருந்தாலும் அங்க அமைப்பில் சம்பந்தமே இல்லை. இந்த உறுதியும் நளினமும் குழைவும் எங்கே… அந்தப் பொதபொதப்பும் கதனை கதனையான பொறுத்தமற்ற சதையும் எங்கே…

மாமியையே பார்த்துக்கொண்டிருந்தான். புருவ மேட்டுக்குக் கீழே கண் குழியிலும், வதன மடிப்புக்குக் கீழும் மேலுதட்டிலும் இருள் பரவியிருந்தது. மற்ற இடமெல்லாம் நிலவொளியில் தெளிவாய்த் தெரிந்தது. 

மஞ்சளுமில்லாமல் வெள்ளையுமில்லாமல் மழமழவென்று பளிங்கு மாதிரி இருந்தது. இடதுகை விரல் நுனியால் மெல்ல அவள் வலது கன்னத்தில் கோலம் போட்டான் நடேசன். அந்தக் கையையும் இழுத்து மடியில் வைத்துக்கொண்டாள் அவள். அவளின் மன ஓட்டத்துக்கு அது தடைசெய்ததோ என்னவோ?

‘என்ன யோசனை?’ என்றான் நடேசன்.

‘யோசனையா?’ கலகலவென்று, ஆனால் ஓசைப்படாமல் சிரித்தாள். ‘உங்களை ரெண்டாந்தாரம் கட்டிக்கலாமான்னு யோசனை.’

நடேசனுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தான்.

‘கட்டிக்கோங்களேன்… அதப்பத்தி என்னா…’

நடக்கமுடியாத எத்தனையோ விஷயங்களை இப்படிப் பேசி, வெளியிட்டு, நெஞ்சின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அபிலாஷைகளை அவிழ்த்துவிட்டுக் கொள்வதில்தான் எத்தனை சுகம்! அதுவும் தனிமையில் அதன் காரண கர்த்தாக்களுக்குள். அப்படித்தான் இருந்தாள் அவள்.

‘இங்க பாருங்க’ என்று மெல்லத் தலையைத் திருப்பினான். ‘மூனாம் மாசம் அழைச்சிம் போயிடட்டுமா…’

‘ஏன்? என்னா அவசரம்?’

‘எனக்கு அவசரம் எதுவுமில்ல. கேக்கணும்னு தோனுச்சு. கேட்டேன்’ என்றான்.

‘ஒம்பதாவது மாசமாவது, பதினோராவது மாசமாவது அழைச்சிக்னு போகலாம்’ என்றாள் அவள்.

‘பொண்ணுக்கு பாட்டி பேரதான் வக்யணும்…’

‘நான் பாட்டியா?’ என்று சிரித்தாள்.

‘பின்ன இல்லியா…?’ என்று இழுத்து அணைத்துச் சிரித்தான் நடேசன். அவன் வாய் அவள் மூக்கைக் கவ்வியது. மூக்கு, வாய், கன்னம் – கன்னம், வாய், மூக்கு – வாய்… எவ்வளவு நேரமோ…

கீழே முனகல் சத்தம் கேட்டது. ‘அம்மா…ம்மா…’ பெண்தான் கூப்பிடுகிறாள். நடேசன் தட்டி எழுப்பி, ‘அவ முழிச்சிக்னா போலக்து… கூப்புடுறா…’ என்றான். 

மாமி தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு கீழே இறங்கினாள். கீழே சிறிது பேச்சுக்குரல் கேட்டது. தாய்க்கும் மகளுக்கும்தான். எதுவும் சரியாக காதில் விழவில்லை. குழந்தைக்கு குளுக்கோஸ் தண்ணி போடக் கூப்பிட்டிருக்கலாம். கொஞ்ச நேரம் வரைக்கும் விழித்திருந்தான். மாமி திரும்ப வரவில்லை. தூங்கிப் போய்விட்டான்.

மறுநாள் முற்பகல் சமையல் வேலை எல்லாம் முடித்து தோட்டத்தில் பூப்பறிக்கும் போது மாமி நடேசனைக் கண்டு லேசாய் சிரித்து மெல்லக் கிசுகிசுத்தாள். ‘அவளுக்கு சந்தேகம் வந்துட்டுது. எரிபுரின்னு இருக்குறா…’ என்றாள்.

சொன்ன மாதிரியே மனைவி அப்படித்தான் இருந்தாள். நடேசனிடம்கூடச் சரியாக எதுவும் பேசவில்லை.

மாமியின் இஷ்டப்படியே பதினோராம் மாசம் வரைக்கும் சம்சாரம் இருக்கவிடவில்லை. அஞ்சாம் மாசமே, கிளம்பு கிளம்பு என அரித்தெடுத்துவிட்டாள். அவள் அவசரத்தின் காரணம் சம்பந்தப்பட்ட இருவருக்கும் புரிந்தது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை விட்டுக் கிளம்பினான். வீடு வந்த பிறகு ரகளை.

‘உங்களுக்குக் கொஞ்சம்கூட இதுவே கெடையாதா…?’

‘என்னா?’ நடேசன் முறைத்தான்.

‘சே… உங்களுக்குத்தான் மூளையில்லேன்னாலும் அவுங்களுக்கும் மூளையில்ல…’

‘என்னா சொல்ற நீ?’

‘ஒன்னுந் தெரியாதுன்னு நெனச்சிக்னு சும்மா வாயக் கௌறாதீங்க… அப்புறம்…’ என்று இழுத்தாள்.

‘சரி சரி. அதெல்லாம் ஒன்னுங் கெடையாது. சும்மா இரு’ என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

‘இனிமே மாமி வூடு… அது இதுன்னு… எப்பனா பொறப்டு போனீங்க… அப்புறம் அவ்ளவுதான்…’

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டது. மாமனார் மட்டும் நடுவில் இரண்டு மூன்று முறை வந்து போனார், பேத்தியைப் பார்க்க. ஒருதடவை வந்தபோது ரொம்பக் கூச்சத்துடன் தன் சம்சாரம் முழுகாமலிருக்கிற சேதியைச் சொல்லிவிட்டுப் போனார். நடேசனுக்கு நெஞ்சமெல்லாம் கிறுகிறுத்தது. மனைவி முகத்தைச் சுழித்துக்கொண்டாள். 

மகள் குழந்தை பெற்று பேரன் பேத்திகளைக் காண்கிற இந்த வயதில் இப்படி ஒரு கருத்தரிப்பு தேவையா என்பது கேள்வியாக இருந்தாலும், பல பேரின் எள்ளல் பேச்சுக்கு உள்ளாகி இருந்தாலும், எக்காரணத்தை முன்னிட்டும் கருக்கலைப்பு என்ற எண்ணத்திற்கு மட்டும் இடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஏதாவது செய்ய முனைவது, உடம்பு தாங்காது, உயிருக்கு ஆபத்தாய் முடிந்தாலும் முடியலாம். இயற்கையாக உடம்பு எந்த அளவு அனுமதித்ததோ, அந்த அளவு நடக்கட்டும். இயற்கை விதிப்படி எது நடக்கிறதோ நடக்கட்டும். நாமாக எதுவும் செய்யவேண்டாம் என்று உறுதிபடச் சொல்லிவிட்டார் டாக்டர்.

ஒரு தடவையாவது நடுவில் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று துடிப்பு. தெரியாமல் போய் வந்துவிடலாம் என்றால் எப்படியும் முடியாது. மெல்ல அவளிடம் பீடிகை போட்டான்.

‘பாவம் உங்க அம்மா. போய் பாத்துட்டு வர்றதுக்குக் கூடம் இல்ல. எப்பிடி இருக்காங்களோ…’ என்றான் நடேசன்.

‘போதும் உங்க கரிசனம். எல்லாம் அங்க இருக்கிறவங்க பாத்துக்குவாங்க. நீங்க சும்மா இருங்க.’

பிறகு அவன் அந்தப் பேச்சையே எடுப்பதில்லை. தனியே இருக்கும்போது மனம் பரிதவிக்கும். கிடந்து வதைவான். அந்த வதைவு, அது யாருக்குப் புரியும்?

‘சார் தந்தி!’ என்று ஆபிஸ் சேவகன் நீட்டிய அஞ்சல் தாளை நடுக்கத்துடன் வாங்கிப் பாரத்தில் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டுப் பிரித்தான். மாமனார் கொடுத்திருந்தார். ‘உடனே புறப்பட்டு வரவும். மாமிக்கு மோசம்.’ அப்படியே கால் காகிதத்தில் பரபரவென்று லீவு எழுதி மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து கட்டின துணியோடு அவளையும் கூட்டிக்கொண்டு அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டுவிட்டான்.

என்ன, ஏது என்று விவரமாக ஒன்றும் இல்லாமல் மாமிக்கு மோசம் என்றால் என்னவென்று நினைப்பது? மனசு எங்கெல்லாமோ தட்டுக்கெட்டுத் தடுமாறி அலைபாய்ந்து தவித்துத் திரும்பியது. நல்ல காலம் வீட்டெதிரில் எதுவும் கூட்டமில்லை.

அவளுக்கு முன் நடேசன்தான் உள்ளே நுழைந்தான். கட்டிலில் மாமி. ஓரத்தில் ஒரு டாக்டர். பக்கத்தில் மாமனார். இன்னும் அக்கம் பக்கத்து வீட்டு பொம்பளைகள் ரெண்டு மூணு பேர்.

மாமி தன் உடம்புக்குப் பொருத்தமில்லாத பாரத்தைத் தாங்கியவள் போல் துவண்டு கண்ணை மூடியிருந்தாள்.

‘நடுவில் நீண்டநாள் இடைவெளி இல்ல. கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கும். கவலப்படாதீங்க. ஒன்னும் ஆவாது’ என்றார் டாக்டர்.

இரவு ரொம்ப கஷ்டமாகவும் வேதனையுடனும் கழிந்தது. நடேசன் வந்தபிறகு கண்ணை விழித்த மாமியின் முகத்தில் ஒரு ஒளி பரவி மறைந்தது. பக்கத்தில் போய் உட்கார்ந்து கையைப் பிடித்துக்கொள்ளவும் தலையைக் கோதிவிடவும் தேறுதல் சொல்லவும் நெஞ்சம் பதைத்தது. அதே ஏக்கம் அவள் முகத்திலும் பிரதிபலித்தது. யாரும் தனியாக இருக்கவிடவில்லை. ஒருத்தர் மாற்றி ஒருத்தர். அதை நினைத்துக் கசந்தபடியே உறக்கத்தில்… இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு பெரிய சப்தம். உயிர் பிரிகிறது மாதிரி. உடம்பிலிருந்து உயிர் பிரிகிற சத்தம் இல்லை. உயிரிலிருந்து உயிர் பிரிகிற சத்தம்.

பொழுது விடிந்துவிட்டது. சுகப் பிரசவம். ஆண் பிள்ளை. தீட்டு, தடுக்கு, தலைமுழுக்கு எல்லாம் ஒரு வாரத்தில் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது. பத்து மணிக்கு மேல் மாமனார் வெளியே புறப்பட்டுப் போனார் போஸ்டாபீசுக்கு. சொந்தக்காரர்களுக்கு கார்டு எழுதிப் போட. அடுப்பில் குழம்பு கூட்டிப் போட்டுவிட்டு குழந்தையை மடியில் தாங்கிப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள் நடேசன் சம்சாரம். அவளும் எழுந்து தோட்டப்பக்கமாவது எங்கியாவது போவ மாட்டாளா… இன்னும் குழந்தை எப்படியிருக்கும் என்றுகூடப் பார்க்கவில்லை. மாமி எப்படியிருக்கிறாளோ…

‘ஏண்டி…’ பிரசவித்த அறையிலிருந்து கீச்சென்று ஒலித்தது மாமியின் குரல் பல்வேறு தவிப்புகளுடன்.

‘என்னாம்மா…?’ உட்கார்ந்த நிலையிலேயே இவள் கேட்டாள்.

‘அவரு இல்லியா…?’

‘அப்பாவா…?’

கொஞ்ச நேரம் மௌனம்.

‘மாப்பிள்ளை…!’ மீண்டும் உள்ளிருந்து குரல் வந்தது.

‘இருக்காரு இருக்காரு’ என்று சொல்லிவிட்டு நடேசனைப் பார்த்தாள் மனைவி.

‘கொஞ்சம் வரச்சொல்லு…’

நடேசன் தயங்கி அறைக்குள் போனான்.

சோர்ந்து வெளுத்திருந்தாள் மாமி. பக்கத்தில் செவேலென்று சிசு. பிறந்த வீச்சம் மாறாத சிசு. கண்ணை மூடி கைகளை மூடிக் கிடந்தது. 

உதடுகள் நெளிய மெல்லச் சிரித்த மாமி, ‘உக்காருங்க’ என்றாள். அவன் வெளியே எட்டிப் பார்த்தான்.

‘அவ கெடக்கறா… ஒக்காருங்க…’

நடேசன் உட்கார்ந்தான். நடேசனின் கைகள் இரண்டையும் எடுத்துத் தன் கன்னங்களில் பதித்துக்கொண்டு, ‘நடுவில ஒருதரம்கூட வரலியே’ என்றாள்.

அவன் மௌனமாயிருந்தான். எத்தனை நாள் ஆவேசமோ? நெஞ்சிலிருந்து நீராய்ப் பீரிட்டு கண்களில் முட்டியது.

‘கொழந்தையப் பாத்தீங்களா…?’

அவன் கண்களை ஒற்றிக்கொள்ள கைகளை விடுவித்துக்கொண்டு சிரித்தான்.

‘நான்தான் தந்தி குடுக்கச் சொன்னேன். எனக்கே நம்பிக்கை இல்ல…’ என்றாள்.

‘நான் பயந்தே போயிட்டேன்.’

‘செத்திடுவனேன்னா…’ சிரித்தாள் அவள். கைகளை எடுத்து நெஞ்சில் வைத்து இறுக்கிக்கொண்டு, ‘ஒரு மாசத்துக்கு இங்கியே இருந்துட்டுப் போலாம். அவளும் எனக்கு ஒத்தாசையா இருப்பா…’

‘அவகிட்ட சொல்லுங்க’ என்றான் நடேசன். எவ்வளவோ இழந்துவிட்ட பொருமலுடன்.

‘அவ என்னா சொல்றது? இருடீன்னா இருக்க வேண்டியதுதானே?’ என்று தீர்மானமாய்ச் சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் நடேசனையே பார்த்துக்கொண்டிருந்தாள். மனசிலிருந்த பளுவெல்லாம் இறங்கிய மாதிரியிருந்தது. செல்லமாய் உரிமையுடன் லேசாய் கன்னத்தைக் கிள்ளினான்.

‘ஸ்…’ என்றாள் கையை விலக்கிவிட்டு. கொஞ்சம் ஒருக்களித்து சிசுவைச் சீண்டி, ‘அப்பா பாருடா கண்ணா’ என்று சிரித்தாள். அந்தப் பலவீனத்திலும் என்ன ஒரு களை.

‘அப்பா இல்ல. மாமா!’ என்று திருத்தினான் நடேசன்.‘அப்பா வர்றாருமா…’ தெருப் பக்கமிருந்து எதிலும் படாதவள் போல் குரல் கொடுத்தாள் நடேசனின் சம்சாரம். அதுதான் என் சம்சாரம் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் நடேசன்.

 

https://tamizhini.in/2022/08/30/இசைவு/

நல்ல கதை கிருபன். நன்றிகள் இணைப்புக்கு இப்படியான கதைகளை தொடர்ந்தும் இணையுங்கள்   🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மனம் தறி கெட்டு ஓடுகின்ற கற்பனை . இது கற்பனையாகவே இருந்து விட வேண்டும். உலகம் தாங்காது . 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.