Jump to content

கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு

07 Sep, 2022 | 10:00 AM
image

கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். 

அவர்களின் அந்த நீண்ட கால கோரிக்கைக்கு மதிப்பளித்து கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் அமைந்தது. 

அதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் நீங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றார்.

அத்துடன், தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர்போராட்டங்கள், மற்றும் போரினால் பாதிக்கப்பட தமிழ்மக்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் நலிவடையச்செய்துள்ளமை தொடர்பிலும், பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதா பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

2.jpg

யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தெற்காசியாவின் சிறந்த பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, யாழ்.மாநகர சபை கட்டடம் முற்றாக தகர்க்கப்படமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். 

அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகிர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பின் முடிவில் கனடா மார்க்கம் மாநகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/135190

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தெற்காசியாவின் சிறந்த பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, யாழ்.மாநகர சபை கட்டடம் முற்றாக தகர்க்கப்படமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். 

அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகிர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பின் முடிவில் கனடா மார்க்கம் மாநகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வெளிநாட்டிலிருந்து உதவிகளை பெற யாழ் மாநகர சபைக்கு அதிகாரம் உள்ளதா?


இதே போல் தான் விக்கியரும் கனடா சென்று கோரிக்கைகள் வைத்த  ஞாபகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  விடயம்

இதே  போல் தொடர்ந்து தொடர்புகளை பேணுவதன்  ஊடாக

உதவிகளையும் நீதிகளையும் பெறவும்

கை கோர்க்கவும்  முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டிலிருந்து உதவிகளை பெற யாழ் மாநகர சபைக்கு அதிகாரம் உள்ளதா?


இதே போல் தான் விக்கியரும் கனடா சென்று கோரிக்கைகள் வைத்த  ஞாபகம்....

 

22 minutes ago, விசுகு said:

நல்லதொரு  விடயம்

இதே  போல் தொடர்ந்து தொடர்புகளை பேணுவதன்  ஊடாக

உதவிகளையும் நீதிகளையும் பெறவும்

கை கோர்க்கவும்  முடியும்

சுமந்திரன் தொடக்கம் பல அரசியல்வாதிகள் கனடாவுக்கு சென்று இருக்கின்றார்கள்.
ஆனால் மணிவண்ணன் செய்தது போல்…. ஒரு கனமான சந்திப்பை ஒருவரும் செய்யவில்லை. 👍🏽
சில அரசியல் வாதிகள்… கனடாவுக்குப் போய், கல்லெறி வாங்கிக் கொண்டு வருவார்கள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

 

சுமந்திரன் தொடக்கம் பல அரசியல்வாதிகள் கனடாவுக்கு சென்று இருக்கின்றார்கள்.
ஆனால் மணிவண்ணன் செய்தது போல்…. ஒரு கனமான சந்திப்பை ஒருவரும் செய்யவில்லை. 👍🏽
சில அரசியல் வாதிகள்… கனடாவுக்குப் போய், கல்லெறி வாங்கிக் கொண்டு வருவார்கள். 🤣

ஜப்பான் காரன் கொடுத்த காசை பயன்படுத்தல்ல எண்டு திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். 😬

இவர் உங்கை என்ன செய்கிறார்?  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

ஜப்பான் காரன் கொடுத்த காசை பயன்படுத்தல்ல எண்டு திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். 😬

இவர் உங்கை என்ன செய்கிறார்?  🤔

இலங்கை அரசாங்கம்தான்.... வயித்தெரிச்சலில்,
ஜப்பானிய பணத்தை, யாழ். மாநகரசபையால்...
பயன் படுத்த முடியாதபடி, முட்டுக்கட்டை   போட்டது.
👇 கீழே... உள்ள பதிவில், விபரமாக உள்ளது.  👇

 

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசாங்கம்தான்.... வயித்தெரிச்சலில்,
ஜப்பானிய பணத்தை, யாழ். மாநகரசபையால்...
பயன் படுத்த முடியாதபடி, முட்டுக்கட்டை   போட்டது.
👇 கீழே... உள்ள பதிவில், விபரமாக உள்ளது.  👇

 

 

நன்றி  சிறி

நானும்  தேடிக்கொண்டிருந்தேன் இணைக்க...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசாங்கம்தான்.... வயித்தெரிச்சலில்,
ஜப்பானிய பணத்தை, யாழ். மாநகரசபையால்...
பயன் படுத்த முடியாதபடி, முட்டுக்கட்டை   போட்டது.
👇 கீழே... உள்ள பதிவில், விபரமாக உள்ளது.  👇

 

வயித்தெரிச்சலோ இல்லையோ..... மத்தியவங்கியிடம் டொலர் இல்லை என்பது ஊருக்கு, உலகத்துக்கு தெரிந்த விடயம்.

காசு முதலே 2019ல் வந்திருந்தாலும், டொலர் பிரச்சணை இருக்கிறது என்று தெரிந்தே, பசளை இறக்குமதி தடை என்று, இரசாயண உரம் என்று சொல்லி நாட்டையே நாசமறுத்தார் கோத்தா.

கனடா மார்க்கம் போன முதல்வர், மத்திய வங்கியோட இழுபறிப்படாமல், நேரா ஜப்பானிய தூதரகம் போய், வண்டியை நீங்களே இறக்கி, நன்கொடையாக தாருங்கோ அல்லது, நாம் தெரிவு செய்யிறத்துக்கு, நீங்கள் வெளிநாட்டிலேயே டொலராக கொடுங்க என்று சொல்லி, அலுவலை பார்த்திருக்கலாமே.

கொரோணா காரணமாக, மூன்று வருடம் கணக்கு நியாயமில்லை என்று வாதாடியிருக்கலாம்.

இப்ப,  காசும் போச்சு, வண்டியும் இல்லை. 🙄

வக்கீலுக்கு படிச்சு, அம்மன் சல்லிக்கு பிரயோசனம் இல்லையோ? 🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

வயித்தெரிச்சலோ இல்லையோ..... மத்தியவங்கியிடம் டொலர் இல்லை என்பது ஊருக்கு, உலகத்துக்கு தெரிந்த விடயம்.

காசு முதலே 2019ல் வந்திருந்தாலும், டொலர் பிரச்சணை இருக்கிறது என்று தெரிந்தே, பசளை இறக்குமதி தடை என்று, இரசாயண உரம் என்று சொல்லி நாட்டையே நாசமறுத்தார் கோத்தா.

கனடா மார்க்கம் போன முதல்வர், மத்திய வங்கியோட இழுபறிப்படாமல், நேரா ஜப்பானிய தூதரகம் போய், வண்டியை நீங்களே இறக்கி, நன்கொடையாக தாருங்கோ அல்லது, நாம் தெரிவு செய்யிறத்துக்கு, நீங்கள் வெளிநாட்டிலேயே டொலராக கொடுங்க என்று சொல்லி, அலுவலை பார்த்திருக்கலாமே.

கொரோணா காரணமாக, மூன்று வருடம் கணக்கு நியாயமில்லை என்று வாதாடியிருக்கலாம்.

இப்ப,  காசும் போச்சு, வண்டியும் இல்லை. 🙄

வக்கீலுக்கு படிச்சு, அம்மன் சல்லிக்கு பிரயோசனம் இல்லையோ? 🤔

அந்த வாகனத்தை ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான செலவு , வரிகள் மற்றும் மாநகர சபைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான செல்வது என 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து வாகனத்தினை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பல்வேறு தரப்புகளுடனும் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2019.06.12 ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் மூலம் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரினோம்.

அவர்கள் எமக்கான அனுமதியை தரவில்லை. மீண்டும் 18 ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கு உரிய படிமுறைகள் அடிப்படையில் இறக்குமதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.

நீண்ட இழுபறியில் பின்னர் 2019.11.14ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அது மூன்று மாத கால பகுதிக்கே செல்லுபடியாகும். அதற்கு இறக்குவதற்கான மற்றைய அனுமதிகள் கிடைக்க தாமதமானதால், இறக்குமதி சான்றிதழ் 2020.02.17ஆம் திகதியுடன் காலாவதியானது.

அதன் காலாவதி திகதியை நீடித்து தருமாறு கோரிய போது அதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு சபை மறுத்தது.
பின்னர் திறைசேரிக்கு கடிதம் அனுப்பினோம். மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம்.

நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.

பிறகு அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்வதன் ஊடாக முயற்சிப்போம் என அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை தாக்கல் செய்தோம். ஆனால் பயன் கிடைக்கவில்லை.

இறுதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தன்னை சந்திக்கும் இராஜ தந்திரிகளிடம் வாகனத்தினை இறக்க முடியாத நிலைமை குறித்து எடுத்து கூறி இராஜதந்திர ரீதியாக முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதுவும் பயனற்று போனது.

இந்நிலையிலையே, ஜப்பான் அரசாங்கம் தமது திட்டமானது மூன்று கால பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது.

மூன்று வருடங்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்.மாநகர சபையும் தன் சக்திக்கு மேலாக பல முயற்சிகளை எடுத்தமையை நாம் அறிவோம்.

நாமும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடாத்தினோம். எந்த பயனும் இல்லை எனவே ஒப்பந்தத்தை முடிவுறுத்துகிறோம்.

மேலும், வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

இந்த விடயத்தில் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட்டையோ தற்போதைய முதல்வர் மணிவண்ணனையோ அல்லது மாநகர நிர்வாகத்தையோ குறை கூறவோ குற்றம் சாட்டவோ முடியாது முடியாது.

இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டது.

தமது தலையீடு இன்றி வெளிநாடுகளோ வெளிநாட்டில் வசிப்போரோ எவரும் மாகாணங்களுக்கு நேரடியாக உதவ விடக்கூடாது எனும் குறுகிய சிந்தனையில் செயற்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கி அவர்களை இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு அரசாங்கம் கோருகின்றதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

மேலும், வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

வாசித்துத் தான் பதிலலித்தேன்.

இவர்கள் இப்போது சொல்வது, இலங்கை அரசியல்வாதிகளுக்குரிய பம்மாத்து வியாக்கியானம்.

யாழ் ஆஸ்பத்திரில ஸ்கானர் அனுப்பிய இலண்டன் தமிழர்கள், தாம் பணம் போட்டு சிங்கப்பூரில் வாங்கி, இலவசமா அனுப்பி, சுகாதார அமைச்சர் ராஜிதவை சந்தித்து, சுங்க வரி இல்லாமல் இறக்க ஏற்பாடு செய்தார்கள்.

அது முடியுமாயின், இதனை செய்திருக்கலாமே.

நோக்கம் கொமிசனில் இருந்தால் வேலை நடக்காது கண்டியளே....

வடிவா, விசாரித்தால், தாமதத்துக்கு காரணம் கமிசன் படியாமை தான்..... என்று தெரியவரும்.

ஸ்கானர் விசயத்தில, கமிசனுக்கு வழியில்லை..... விசயம் டபக்கெண்டு முடிஞ்சுது.

ஜப்பான்காரர், காசை கொடுத்துவிட்டு, நீங்களே வாங்குங்கோ எண்டால்?

அமைச்சர் ஜங்கரநேசனும் ஊழலில் சிக்கியவர் தானே.... அப்புறம் ?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

வாசித்துத் தான் பதிலலித்தேன்.

இவர்கள் இப்போது சொல்வது, இலங்கை அரசியல்வாதிகளுக்குரிய பம்மாத்து வியாக்கியானம்.

யாழ் ஆஸ்பத்திரில ஸ்கானர் அனுப்பிய இலண்டன் தமிழர்கள், தாம் பணம் போட்டு சிங்கப்பூரில் வாங்கி, இலவசமா அனுப்பி, சுகாதார அமைச்சர் ராஜிதவை சந்தித்து, சுங்க வரி இல்லாமல் இறக்க ஏற்பாடு செய்தார்கள்.

அது முடியுமாயின், இதனை செய்திருக்கலாமே.

நோக்கம் கொமிசனில் இருந்தால் வேலை நடக்காது கண்டியளே....

வடிவா, விசாரித்தால், தாமதத்துக்கு காரணம் கமிசன் படியாமை தான்..... என்று தெரியவரும்.

ஸ்கானர் விசயத்தில, கமிசனுக்கு வழியில்லை..... விசயம் டபக்கெண்டு முடிஞ்சுது.

ஜப்பான்காரர், காசை கொடுத்துவிட்டு, நீங்களே வாங்குங்கோ எண்டால்?

அமைச்சர் ஜங்கரநேசனும் ஊழலில் சிக்கியவர் தானே.... அப்புறம் ?

 

நீங்கள்  குறிப்பிடும்  இரண்டுக்கும்  வித்தியாசம்  இருக்கு

எனக்கு  இதில்  நேரடி  அனுபவமும் இருக்கு

வடக்கு  மாகாணத்தினூடாக (அதன்  ஆளுனரின்  செயலாளரின்  முழு  ஒத்துழைப்பு இருந்தும்)

செய்ய முடியாததை தனி  நபர்கள்  மூலமாக  செய்தோம்

அரசு,  அதிகாரம்,  கட்சி வாக்கு, உரிமை....... என்று  வந்து  விட்டால்  பெரும்பான்மைப்பேய்  விழித்துக்கொள்ளும்

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.