Jump to content

மேதகு 2 மறைத்த உண்மைகள்


Recommended Posts

மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

Edited by shanthy
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
14 hours ago, shanthy said:

மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

அந்தக் கைதிகள் பிடிபட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 

தமிழீழ வரலாற்றில் சிங்களப் படையினர் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை. அந்தக் கைதிகளைப் பிடித்தது தவிபுவின் முதலாவது மகளீர் அணி பெண் போராளிகளே.

அங்கு சிறை பிடிக்கப்பட்ட கைதிகள் - இரு படையினர் - தங்க நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அப்படியேயே சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனராம், முல்லைத்தீவின் தென்பகுதியில், ஓமந்தை / அதற்கு கிட்டவான ஒரு இடத்தில். 

- எனது உறவினர் வழங்கிய தகவல். 

 

Link to comment
Share on other sites

8 hours ago, நன்னிச் சோழன் said:

 

அந்தக் கைதிகள் பிடிபட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 

தமிழீழ வரலாற்றில் சிங்களப் படையினர் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை. அந்தக் கைதிகளைப் பிடித்தது தவிபுவின் முதலாவது மகளீர் அணி பெண் போராளிகளே.

அங்கு சிறை பிடிக்கப்பட்ட கைதிகள் - இரு படையினர் - தங்க நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அப்படியேயே சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனராம், முல்லைத்தீவின் தென்பகுதியில், ஓமந்தை / அதற்கு கிட்டவான ஒரு இடத்தில். 

- எனது உறவினர் வழங்கிய தகவல். 

 

நீங்கள் சொல்லும் தரவு உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2022 at 18:15, shanthy said:

மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

On 8/9/2022 at 09:23, நன்னிச் சோழன் said:

 

அந்தக் கைதிகள் பிடிபட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 

தமிழீழ வரலாற்றில் சிங்களப் படையினர் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை. அந்தக் கைதிகளைப் பிடித்தது தவிபுவின் முதலாவது மகளீர் அணி பெண் போராளிகளே.

அங்கு சிறை பிடிக்கப்பட்ட கைதிகள் - இரு படையினர் - தங்க நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அப்படியேயே சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனராம், முல்லைத்தீவின் தென்பகுதியில், ஓமந்தை / அதற்கு கிட்டவான ஒரு இடத்தில். 

- எனது உறவினர் வழங்கிய தகவல். 

 

 

On 8/9/2022 at 18:18, shanthy said:

நீங்கள் சொல்லும் தரவு உண்மை. 

சில நேரங்களில் உண்மைகள்; கற்பனைகளைவிட வித்தியாசமானது (Truth is stranger than fiction).

சிங்களப்படைவீரர்கள் தமது தோட்டாக்கள் முழுவதுமாக முடித்த பின்னர் ( இரவை கூண்டில் 2 தோட்டாக்கள் மட்டுமே  மிகுதியாக இருந்த நிலையில்) நெருங்கி வந்த புலிகளை (ஆண் புலிகள்) கண்டவுடன் சிங்களப்படையினர் கைகளை உயர்த்தியவாறு எழுந்தனர், அப்போது ஒரு போராளி எதேச்சையாக ஒரு சிப்பாயின் காலில் சுட்டார் அவருடன் இருந்த போராளி (ஐயர்) அந்த போராளி சுடுவதை தடுத்து சரணடைபவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக்கூடாது என அந்த போராளிக்கு குறிப்பிட்டதாகவே நான் கேள்விப்பட்டேன்.

சம்பவம் நடந்த இடம் மன்னார், முல்லைதீவு இல்லை.

எமக்குக்கூட ஒரு வரலாற்றினை முழுமையாகத்தெரியவில்லை ( நான் கூறுவதுதான் சரியேன கூறவில்லை), இந்த நிலையில் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சரியான வரலாறு தெரியும்.

எமது போராட்ட வரளாற்றை எடுக்கக்கூடாது என சொல்ல எமக்கு எந்த உரிமையும் இருப்பதாகத்தெரியவில்லை.

முக்கியமாக, யாரையும் புண்படுத்துவதாக நினைக்கவேண்டாம், இந்த யாழ்கள உறவுகள் அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

 

Edited by vasee
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, vasee said:

 

 

சில நேரங்களில் உண்மைகள்; கற்பனைகளைவிட வித்தியாசமானது (Truth is stranger than fiction).

சிங்களப்படைவீரர்கள் தமது தோட்டாக்கள் முழுவதுமாக முடித்த பின்னர் ( இரவை கூண்டில் 2 தோட்டாக்கள் மட்டுமே  மிகுதியாக இருந்த நிலையில்) நெருங்கி வந்த புலிகளை (ஆண் புலிகள்) கண்டவுடன் சிங்களப்படையினர் கைகளை உயர்த்தியவாறு எழுந்தனர், அப்போது ஒரு போராளி எதேச்சையாக ஒரு சிப்பாயின் காலில் சுட்டார் அவருடன் இருந்த போராளி (ஐயர்) அந்த போராளி சுடுவதை தடுத்து சரணடைபவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக்கூடாது என அந்த போராளிக்கு குறிப்பிட்டதாகவே நான் கேள்விப்பட்டேன்.

சம்பவம் நடந்த இடம் மன்னார், முல்லைதீவு இல்லை.

எமக்குக்கூட ஒரு வரலாற்றினை முழுமையாகத்தெரியவில்லை ( நான் கூறுவதுதான் சரியேன கூறவில்லை), இந்த நிலையில் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சரியான வரலாறு தெரியும்.

எமது போராட்ட வரளாற்றை எடுக்கக்கூடாது என சொல்ல எமக்கு எந்த உரிமையும் இருப்பதாகத்தெரியவில்லை.

முக்கியமாக, யாரையும் புண்படுத்துவதாக நினைக்கவேண்டாம், இந்த யாழ்கள உறவுகள் அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

 

 

ஓம் நீங்கள் சொல்வது சரியே... எனது உறவினர் வழங்கிய தகவலில் நகை அணியப்பட்டது தவிர ஏனைய அனைத்தும் தவறானவை. உறுதிப்படுத்தாமல் வரலாற்றுச் சம்பவத்தை தவறாக பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்.

உறுதிப்படுத்தப்பட்ட உண்மை யாதெனில், நீங்கள் கூறியது போக, அச்சமர் நடைபெற்ற இடம் அடம்பன், மன்னார் ஆகும். அவர்களைப் பிடித்தவர்கள் ஆண் போராளிகளே. ஆனால் தகவலானது பெண் போராளிகள் பிடித்ததாகவே மக்களிடம் பரவியது. அவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொணரப்பட்டு, மெய்யாகவே நகை அணியப்பட்டு, நல்லூரிற்கு அண்மையாக கோட்டையாக இருக்கலாம் என்றார் - வைத்து கேணல் கிட்டு தலைமையில் சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது இந்தியப் படையினருக்கு முன்னதாக நடந்தேறிய சம்பவம் ஆகும். இதுவே சிங்களப் படையினர் முதன் முதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட சம்பவம் ஆகும். மேலும் இந்த நிகழ்படத்தில் கூறப்பட்டுள்ளது போலல்லாமல் - 1987 இல் கைது நடந்தாக கூறப்பட்டுள்ளது - சம்பவம் நடந்தது 1986 ஆம் ஆண்டு ஆகும். 

இரண்டாவது பிடிப்புச் சம்பவம் பலாலியில் நடந்தது. ஒரு சமரிற்குப் பின்னர் ஓரிடத்தில் ஒளித்திருந்த சிங்களப் படையினன் தட்டந்தனியாக பெண் போராளியொருவரால் பிடிக்கப்பட்டதே அதுவாகும்.

- தமிழீழ விடுதலைப் போராட்டப் போராளி 

------------------------------------------------------------

 

"சம்பவம் நடந்த இடம்" முல்லைத்தீவு என நான் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் "ஒப்படைக்கப்பட்ட இடமே" முல்லைத்தீவு என்றிருந்தேன். நீங்கள் தவறாக வாசித்துள்ளீர்கள் ஐயனே!

எல்லோருக்கும் எல்லாத் தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஐயனே. மேலும் தகவலை எனக்கு வழங்கியவர் ஒரு பொதுமகன், போராளியல்ல. தான் அறிந்ததையே என்னிடம் கூறினார், இந்த நிகழ்படத்தைப் பார்த்து விட்டு. நானும் உறுதிப்படுத்தாமல் பதிவிட்டமையும் தவறென்பதை ஒத்துக்கொள்கிறேன். இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன். 

நாங்கள் இங்கே சாதாரணமாக ஒரு திரியில் வாதாடுகிறோம். ஆனால் அங்கே நடந்தேறியதோ பல பெரியோரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் திரைப்படத்தில் வேண்டுமென்றே செய்யப்பட்ட வரலாற்றுத் திரிபுகள் மற்றும் இருட்டடிப்புகள் ஆகும். சாதாரண பொதுமக்களுக்கு விடையங்கள் தெரிவதும் தெரியாமல் போவதும் சாதாரண விடையம். ஆனால் நாங்கள் ஒரு வரலாற்றை ஆவணத் திரைப்படமாக எடுக்கப்போகிறோம் என்று அறிவித்துவிட்டு - அது தமிழீழமோ அல்லது தமிழ்நாடோ எதுவாயினும் - தேவையான விடையங்களை, அதிலும் நன்கு பரவலறியானவற்றை, வேண்டுமென்றே மறைப்பது வரலாற்று இருட்டடிப்பாகும். ஒரு வரலாற்றை நேர்மையாக திரைப்படமாக எடுக்கும் போது வரலாற்றை வாசித்தறிந்துவிட்டோ அல்லது அது தொடர்பானவர்களோடோ கேட்டறிந்துவிட்டோ படமெடுக்க வேண்டும். இல்லையென்றால் எடுக்காமலிருப்பதே மேலானது; திரிப்பதற்கு ஒன்றும் செய்யாமலிருப்பதே நல்லம், என்னைப் பொறுத்தவரை. 

எமதின வரலாற்றை திரிவுக்குட்படுத்தி தமிழ்நாட்டில் படமெடுப்பது இதுவொன்றும் முதல்தடவையன்று. இதற்கு முன்னரும் நடந்துள்ளது. ஆனால் இம்முறை வந்தது கொஞ்சம் வேறுபட்ட வடிவிலானது. அவ்வளவுதான். 

மேலும், இவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்தோர் எம்மவரே. அவர்களும் துணைபோயிருப்பது நல்லதாகத் தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நன்னிச் சோழன் said:

"சம்பவம் நடந்த இடம்" முல்லைத்தீவு என நான் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் "ஒப்படைக்கப்பட்ட இடமே" முல்லைத்தீவு என்றிருந்தேன். நீங்கள் தவறாக வாசித்துள்ளீர்கள் ஐயனே!

 

தவறை சுட்டிக்காட்டிய்மைக்கு நன்றி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் தவிர, உண்மையிலேயே நடந்த சம்பவங்களை யாரும் முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆகவே, ஈழத்தமிழர்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது முழுமையாகாது. அதேபோல, போர்க்களத்திற்கு வெளியே இருந்து, செய்திகள் மூலம் மட்டுமே நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் தமிழக நண்பர்களுக்கு இச்சம்பவங்களின் உண்மைத்தன்மை பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனாலேயே ஆளாளுக்கு தமக்குத் தெரிந்த விதத்தில் எமது கதையினைக் கூறுகிறார்கள். ஆகவேதான் இவை எதுவுமே யதார்த்திற்கு அருகிலும் செல்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமலும், எமக்கு ஆதரவாகவும், அபத்தமின்றியும் எடுக்கப்படும் படைப்புக்களைப் பாராட்டலாம், தவறில்லை. 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2022 at 10:15, shanthy said:

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நானும்  பார்த்தேன் பின்னால் பூசாடி தான் இருக்கிறது 😄

Link to comment
Share on other sites

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நானும்  பார்த்தேன் பின்னால் பூசாடி தான் இருக்கிறது 😄

பலருக்கு அது புரியவில்லையே😀bro. 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 10:28, ரஞ்சித் said:

புலிகளைத் தவிர, உண்மையிலேயே நடந்த சம்பவங்களை யாரும் முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆகவே, ஈழத்தமிழர்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது முழுமையாகாது. அதேபோல, போர்க்களத்திற்கு வெளியே இருந்து, செய்திகள் மூலம் மட்டுமே நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் தமிழக நண்பர்களுக்கு இச்சம்பவங்களின் உண்மைத்தன்மை பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனாலேயே ஆளாளுக்கு தமக்குத் தெரிந்த விதத்தில் எமது கதையினைக் கூறுகிறார்கள். ஆகவேதான் இவை எதுவுமே யதார்த்திற்கு அருகிலும் செல்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமலும், எமக்கு ஆதரவாகவும், அபத்தமின்றியும் எடுக்கப்படும் படைப்புக்களைப் பாராட்டலாம், தவறில்லை. 

உண்மைதான் ரஞ்சித். சில விடயங்களை வரலாறு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டும்போது விமர்சனங்களை ஏற்று குறிப்புகளையாவது வெளியிடவேண்டும். இயக்க வரலாறை தலைவரை மைய்யப்படுத்தி மட்டும் எடுத்துவிடமுடியாது.  வரலாறில் சில விடயங்களை அப்படியே கடந்துவிட முடியாது.

பொன்னமான் கேடில்ஸ் நாவற்குழி தாக்குதல்.
குமுதினி படுகொலை
செல்லக்கிளி அம்மான் மாடு விற்று வாங்கிய ஆயுதங்கள்

கப்டன் பண்டிதரின் தீரமிகு சுற்றிவளைப்பு

மேஜர் கணேஷின் மூதூர் தாக்குதல்
விக்ரர் அண்ணையின் நேரடித்தாக்குதல்
தலைவரின் திருமணம்.
ராதா அண்ணையின் தலைமையில் பெண்கள் படைப்பிரிவு
மன்னார் அடம்பனில் இரு இராணுவ வீரர்களின் கைது 
கைதிப்பரிமாற்றம்
தலைவரின் உண்ணாவிரதப்போராட்டம்
திம்பு பேச்சுவார்த்தை
மாற்று இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் /  தடை
புலிகளின் கொடியில் இருக்கும் சன்னங்களின் எண்ணிக்கை
ஒப்பரேசன் லிபரேசன்
மில்லரின் கரும்புலித்தாக்குதல்
இன்னும் பல எல்லாம் சாதாரண பொருளாதார பற்றாக்குறையில் கடந்துவிட முடியாது. (இன்னும் பல பாகங்கள் வர இருக்கையில்)

சீலன் (சாள்ஸ் அன்ரனி) கொடியில் வைத்தது பொஸ்பரஸ் இல்லை பொற்றாசியம். அது காற்றில் பட்டவுடன் எரிபற்றுநிலையை அடைந்து எரியக்கூடியது.

நவீனரக கைத்துப்பாக்கிகள் தானியங்கிகளை வைத்து ஆரம்ப தாக்குதல்கள்

சாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலுக்கு பயன்படும் நவீனரக வாகனம் போன்றவற்றையாவது தவிர்த்திருக்கலாம்.

தலைவரை பேனை பிடிக்கும் விதம், அவர் எழுத்துக்களை சரித்து எழுதும் விடயங்களையாவது கவனத்தில் எடுங்கள்.

அவசரமாக சுதுமலை பிரகடனம் வரை இரண்டாம் பாகத்தை கொண்டுவந்திருக்கத்தேவை இல்லை. தலைவரின் வரலாறு மெதுவாகவே ஆழமாகவே நகரட்டும் என்பதே என் அவா.

வரலாறை தலைவர்தான் முழுமையாக சொல்லமுடியும் என்றாலும் அவர் தமிழீழ தேசிய தொலைகாட்சிக்கு வரலாறாக சொன்னவற்றில் இருந்தாவது முக்கியமானவற்றை வெளிப்படுத்துங்கள். 

இன்னும் பொன்னம்மானிடம் பயிற்சி எடுத்து கடைசிவரை களத்தில் நின்றவர்களும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதை கதை வழங்கிகள் தெரிந்துகொண்டால் நல்லது.

Edited by முதல்வன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 04:28, ரஞ்சித் said:

புலிகளைத் தவிர, உண்மையிலேயே நடந்த சம்பவங்களை யாரும் முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆகவே, ஈழத்தமிழர்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது முழுமையாகாது. அதேபோல, போர்க்களத்திற்கு வெளியே இருந்து, செய்திகள் மூலம் மட்டுமே நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் தமிழக நண்பர்களுக்கு இச்சம்பவங்களின் உண்மைத்தன்மை பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனாலேயே ஆளாளுக்கு தமக்குத் தெரிந்த விதத்தில் எமது கதையினைக் கூறுகிறார்கள். ஆகவேதான் இவை எதுவுமே யதார்த்திற்கு அருகிலும் செல்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமலும், எமக்கு ஆதரவாகவும், அபத்தமின்றியும் எடுக்கப்படும் படைப்புக்களைப் பாராட்டலாம், தவறில்லை. 

இது தான் உண்மை ரஞ்சித்.

புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே ஏதாவது தாக்குதல் கொஞ்சம் பிசகினால் சீ அப்படி போய் அடித்திருக்கலாம்.இப்படி போய் அடித்திருக்கலாம்.அது இது என்று வெளிநாடுகளில் இருந்தபடியே தளபதிகளுக்கும் தலைவருக்கும் வகுப்பெடுத்தவர்கள் நம்மவர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.