Jump to content

உங்கள் ரத்தத்தில் இத்தனை ரகசியங்கள் இருப்பது தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ரத்தத்தில் இத்தனை ரகசியங்கள் இருப்பது தெரியுமா?

7 செப்டெம்பர் 2022, 05:40 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு சிவப்பு ரத்த அணுக்கள் நமது உடலின் தலை முதல் காலின் நுனிவரை பயணம் செய்து ரத்த ஓட்ட அமைப்பில் அதன் பயணத்தை நிறைவு செய்கின்றன.

ஒவ்வொரு நொடியும் உங்களுடைய உடலில் இரண்டு மில்லியன் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகின்றன. இது ஏற்கனவே நமது உடலில் இறந்த சிவப்பு ரத்த அணுக்களுக்கு மாற்றாக இருக்கின்றன. அதனை எர்த்தோசியடீஸ் என்கிறோம்.

பிபிசிக்காக கணிதவியலாளர் ஹன்னா ஃப்ரே மற்றும் மரபணுவியலாளரும் ஆடம் ரூதர்போர்ட் பிபிசிக்காக தொகுத்த 13 தகவல்களில் ஒன்று. மற்ற 12 தகவல்களை இப்போது பார்க்கலாம்.

1. நமது உடலில் 3கோடி சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன

 

நமது உடலில் இருக்கும் அணுக்களில், சிவப்பு ரத்த அணுக்களே அதிகமாக உள்ளவை. ஆண்களின் உடலில் 26 பில்லியனும், பெண்களின் உடலில் இதுவே சற்று குறைவாக உள்ளது.

இதில் ரத்த தட்டுகளும் (Platelets) அதிகமாக உள்ளது. ஆனால், அதன் எண்ணிக்கை மிகவும் குறைவு. நமது உடலில் உள்ள மொத்த அணுக்களில், 90 சதவீதம் உங்கள் ரத்தத்தில் உள்ளது.

2. நமது உடலில் ஒரு சிவப்பு ரத்த அணு 3 அல்லது 4 மாதங்கள் இருக்கும். இது நமது உடலில் 1,50,000 முறை சுற்றிவரும்

இது நமது உடலில், மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்திற்கு, நமது நாடி, நரம்புகளில் ஓடும்.

 

ரத்தப் பிரிவுகள் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3. நமது உடலில் இறந்த சிவப்பு ரத்த அணுக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

நமது உடல் பழைய சிவப்பு ரத்த அணுக்களை அப்படியே வெளியேற்றாது. ஏனென்றால், அதில் இரும்புச்சத்து உள்ளது. இது புதிய சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவும்.

இதற்கு மாறாக, அதிலிருக்கும் இரும்புச்சத்தை அணுக்களைப் பிரித்தெடுத்து, (bilirubin) என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது. இது கல்லீரலை சென்று அடைகிறது. இந்த உறுப்பு அதனை செரிமான அமைப்பிற்கு கொண்டு சேர்கிறது.

4. 30க்கும் மேற்பட்ட ரத்தப்பிரிவுகள் உள்ளன

நமக்கு தெரிந்த ரத்த வகைகள் ஏ, பி, ஏபி மற்றும் ஒ பிரிவு மட்டுமே. ஆனால்,பல ரத்த வகைகள் உள்ளன.

உண்மையில், 30க்கும் ஏற்பட்ட ரத்தப் பிரிவுகளும், அதில் 300 வகையான மாறுப்பட்ட வகைகளும் உள்ளன," என்று செஞ்சிலுவை ரத்த வங்கிக்கு வேலை செய்யும் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஃபளார் கூறுகிறார்.

 

எல்லா ரத்தப் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

எல்லா ரத்தப் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை.

"அவை அனைத்தும் நமது ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் 'ஆன்டிஜென்கள்' மூலம் வகைப்படுத்தப்படுகின்றன."

"ஆன்டிஜென்கள் மூலக்கூறுகள் (பெரும்பாலும் புரதங்கள், ஆனால் கார்போஹைட்ரேட்டுகள்) நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் திறன் கொண்டவை," என்று அவர் மேலும் கூறினார்.

5. ஆனால், பரிசோதிக்கப்படும் இரண்டு முக்கிய பிரிவுகள்- ABO மற்றும் Rh பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ்

ஏ, பி, ஏபி , அல்லது ஒ ஆகிய நான்கு வகை, ரத்தப் பிரிவுகளில் ஏதேனும் உள்ளதா என்பதை ஏபிஓ (ABO) சோதனை காட்டுகிறது.

Rh சோதனை Rh ஆன்டிஜென் இருப்பதை பரிசோதிக்கிறது.

இவற்றில் துணைப்பிரிவுகள் உள்ளன.

6. வெற்றிகரமான முதல் ரத்த மாற்று சிகிச்சை

வெற்றிகரமான முதல் ரத்த மாற்று சிகிச்சை, 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் ப்ளண்டெல் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ரத்தமாற்று சிகிச்சை, ஒரு குழந்தையை பிரசவித்த பெண் மீது நடத்தப்பட்டது.

ப்ளூன்டெல் , அந்த பெண்ணின் கணவரின் கையிலிருந்து ரத்தத்தை எடுத்து ஒரு ஊசியைப் பயன்படுத்தி அந்த பெண் மீது செலுத்தினார். அவர் உயிர் பிழைத்தார். இந்த ரத்த மாற்று சிகிச்சையில் இறந்தவர்கள் ரத்தப் பிரிவுகள் பொருந்தாத காரணத்தால் இறந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

7. வெவ்வேறு ரத்தப் பிரிவுகள் சேர்ந்தால், அதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளாது

ஏபிஓ பரிசோதனை (ABO) செய்த பிறகு, உங்களின் ரத்தப் பிரிவு ஏ, பி அல்லது ஓ வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் .

ஏ ரத்தப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் 'பி' ரத்தப் பிரிவில் இருந்து ரத்தத்தைப் பெற்றால், அவர்களின் உடல், பி ரத்தப் பிரிவில் இருந்து உள்ள அன்னிய புரதங்களைத் தாக்க முயற்சிக்கும்.

 

ரத்தப் பிரிவுகள் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8. உங்களுக்கு ஏபி ரத்தப்பிரிவு இருந்தால், நீங்கள் 'யூனிவர்சல் ரீசிவர்'

உங்களிடம் ஏ மற்றும் பி இருப்பதால், ரத்தமாற்றத்தில் உங்கள் உடல், ஏ மற்றும் பி உள்ள எந்த ரத்தப் பிரிவுகளையும் ஏற்கும்.

9. நீங்கள் 'ஓ'வகை என்றால், நீங்கள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்கலாம்

'ஓ' ரத்தப்பிரிவில் எந்த ஒரு ரத்தப்பிரிவும் ஏற்றுக்கொள்ளாத புரதம் இல்லை. அதனால், எந்த ரத்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் ரத்தம் கொடுக்கலாம்.

இது மருத்துவமனை அவசர அறைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் வைக்கப்படும் ரத்தப் பிரிவாகும். ஏனென்றால், ரத்தம் செலுத்துவதற்கு முன் ரத்த வகையை பரிசோதிக்க நேரம் இருக்காது.

10. உங்கள் ரத்தப் பிரிவு 'ஓ' ஆக இருந்தால், நீங்கள் ஆழமான நரம்பு ரத்த உறைவு நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு

இந்த நோய் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஓர் உறைவு. இந்த நோயால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது எந்த நேரத்திலும் யாருக்கும் ஏற்படலாம். ஆனால் இந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்தை குறைக்கிறது.

 

ரத்தப் பிரிவுகள் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

11. Rh என்பது ரத்த சிவப்பணுக்களுக்கு வெளியே உள்ள மற்றொரு வகை புரதமாகும்.

'Rh Factor' புரதம் மரபணுக்கள் மூலம் பெறப்படுகிறது. இது உங்கள் உடலில் இருந்தால், நீங்கள் Rh பாசிட்டிவ். உங்கள் உடலில் அது இல்லையென்றால், Rh நெகட்டிவ்

பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு Rh நெகட்டிவ் இருக்கிறதா என்று சோதிக்கப்படும். உங்கள் குழந்தை Rh பாசிட்டிவ் மற்றும் பிரசவத்தின் போது ஏதேனும் ரத்தப் பிரிவு கலந்தால், தாய் ஒரு நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டலாம். மேலும், ஆன்டிபாடிகளை உருவாக்கலாம், இது அடுத்தடுத்த கர்ப்பங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

கர்ப்ப காலத்தில் Rh factor பரிசோதிக்க வேண்டும்.

'Rh factor' இருக்கிறதா என்பதை கண்டறியப்பட்டு, தேவைப்பட்டால், தாயுக்கு நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தடுக்கவும், எதிர்காலத்தில் கரு உருவாகுவதை பாதுகாக்கவும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தலாம்.

12. சில ரத்தப் பிரிவுகளுக்கு சில சிறப்பம்சங்கள் உள்ளன

உதாரணமாக, உங்களிடம் "டஃபி நெகட்டிவ்" (Duffy Negative) ரத்தம் இருந்தால், உங்களுக்கு மலேரியாவை எதிர்க்கும் திறன் அதிகம்.

மேற்கு ஆப்ரிக்காவில், 95% க்கும் அதிகமான மக்கள் இதன் பயனைப் பெற்றுள்ளனர்.

https://www.bbc.com/tamil/science-62813989

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.