Jump to content

" இதுவும் கடந்து விடுவேன்"  .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

 

காலச்சக்கரத்தின் வேக  சுழற்சியால்  வாழ்க்கை 

இன்பமும் துன்பமுமாய்  போராடடமும்  வெற்றியுமாய் 

நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் 

 ஒரு திடீர் விபத்தாக  வந்து விடுகிறது . 

 

நோயற்று  வாழவே  எல்லோரும் விரும்புவோம்

நோய்  கண்டு, மருத்துவ மனைகண்டு 

தாதியர் துணை கொண்டு  படுக்கைதனில் வீழும்போது ..

"என்னடா வாழ்க்கை"  இது என்று  சலிக்க தோன்றி விடும்.  

அரை மயக்கத்தில்  உன் உறவினர் ,அருகில் அப்போது தான் 

 சத்திரசிகிச்சை முடித்து  படுக்கையில் கிடத்தியிருப்பார்கள்.  

 

எல்லாம்   மரத்துப்போய்  அசைக்க முடியாமல்  

உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக 

கொக்கியில் மாட்டிய ஜீவ  நீர் " சேலைன் " வழியாக 

துளித்துளியாக இறங்கி  கொண்டிருக்கும்.  நடப்புகள்   உறவுகளும் 

நினைவில் வந்து போவர் ,

 

அண்மையில் இந்நிலை கண்ட  நண்பன் 

அடிக்கடி வந்து போவான். இரண்டு வார்த்தை  அவனுடன்

 பகிர்வோமென்றால்   ஏன்  மீண்டும் அவனை  கவலைப்பட வைப்பான்" 

இது என்னுடனே போகட்டும் "என்பேன் .

 வலி கண்டவருக்குத் தானே  வலி உணர முடியும்.  "இது வும் கடந்து 

போகும்..." என  மனசு தன வலியை தேற்ற  முயலும்.  நாட்கள் ஒவ்வொன்றாக 

நகரும் . நிற நிறமாய்  தாதியர் அவசர வேகத்தில்  ."இந்தா  மருந்து" ..

.நாளை  எழுந்து நடக்க தயாராக இரு .... 

 

இயற்கை உபாதைகளை துணையின்றி  சென்று  

முடிக்க முடியாதிருக்கும் .  என் மீதே எனக்கு கோபம் வரும். 

 கை பிடித்து  ஆதரவாய்   கதை சொல்ல ஒரு உறவைத்தேடும்.   

இரவு உறக்கமும்  விழிப்புமாய்  வந்துபோகும்.  

 

காலை  விடியும் , கட்டிடம் கலகலப்பாகி விடும்.  சிட்டுக்களாக 

பறந்து திரியும்  தாதியரும்  உதவியாளர்களுமாய். 

உணவு வரும்  உயிரை பிடித்து வைக்க வேண்டுமே 

என உண்ணத்தோன்றும் . நாக்கு செத்துப்போகும்.   

வைத்தியர் வருவார் ..உடற்பயிற்சியாளர்  வருவார்.  

தங்கள் கடமை முடிந்ததென   கை கழுவி செல்வர்.  

மீண்டும் தனிமை  ..ஆட்டி  அசைத்த  கால் வலியெடுக்கும்.  

ஒரு வித மயக்க நிலைக்கும்  சோர்வுக்குமாய் கண் யாரும்.

கடைக்கு கண் வழியே  நீர் சொரியும்.   "பாவி என்னை  மறுபடியும் 

பிறக்க  வைக்காதே ".. என  மனம் ஓலமிடும்.   வீட்டுக்கு செல்ல அனுமதி  

தரப்படும்.அன்பான  ஒருவரின் கவனிப்பால்   நாட்கள்  நகரும் . 

"என்னால் இயங்க முடியவில்லையே என " மனம்  ஏங்கும் "  

"இதுவும் கடந்துபோகும். மீண்டு விடுவேன்"  என  

பழையபடி எண்ணத்தோன்றும். 

 என்னை நானே கொண்டு  நடத்த முடியாத  வாழ்க்கை ...

.சலிக்க தொடங்கு ம்.  அரிது அரிது மானிட ராதல் அரிது 

அதிலும் நோய் நீங்கி  பிறத்தல் அரிது.ஏன்  இத்தனை  துயரம் ? கர்மாவா ?

உணவுப் பழக் க வழக்கமா ?  உடல் உறுப்புகளின் இயக்க மின்மையா? 

 அவசர உலகில்   பிடுங்கி நடப்பட்ட்  மரமாக அந்நிய தேச கால  நிலையா ?

நஞ்சேற்றப்பட்ட் உணவா ?...  வேறு மருந்துகளின் தாக்கமா ? உன்னை நோய் 

பிடித்துக் கொள்ள (கொல்ல )....

 

உன் உடல் ஒரு கோவில் அதை  கவனித்து பேணு .

இல்லையேல்   நோய்  பிணியும்  துயரமும்  தொற்றிக்கொள்ளும். 

சந்தர்ப்பங்கள் சம்பவங்களை  ஆக்கு கின்றன . சம்பவங்களை

 இறக்கி  வைக்கும்போது  மனதின் ஒரு ஓரத்தில்  சின்ன  அமைதி .

 

நீண்ட நேரம்  தடடச்சியதில்   கால் செங்குத்தானதில் ஒரு வலி ..முள்ளாக 

ஆரம்பிக்கிறது.   மீண்டும் பேசுகிறேன்  " காணும்  என்னும் கண்டிப்பான"    

கடடளையுடன்  படுக்கையில் ச ரிகிறே ன்.  "யாரும் கவலைப்படாதீர்கள்".  

என் நடப்புகள் தவிர வேறு யாரிடம்  பேசுவேன்..... ஆறு நாட களாக கனன்று 

கொண்டிருந்த  தீ ... தணியத்துடிக்கிறது.  எனக்கும் சத் திர சிகிச்சைக்  

  இரவும் பகலும் போல ........"இதுவும் கடந்து விடுவேன் .."...

 

Edited by நிலாமதி
  • Like 5
  • Thanks 2
  • Sad 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிலாமதி said:

 

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

 

காலச்சக்கரத்தின் வேக  சுழற்சியால்  வாழ்க்கை 

இன்பமும் துன்பமுமாய்  போராடடமும்  வெற்றியுமாய் 

நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் 

 ஒரு திடீர் விபத்தாக  வந்து விடுகிறது . 

 

நோயற்று  வாழவே  எல்லோரும் விரும்புவோம்

நோய்  கண்டு, மருத்துவ மனைகண்டு 

தாதியர் துணை கொண்டு  படுக்கைதனில் வீழும்போது ..

"என்னடா வாழ்க்கை"  இது என்று  சலிக்க தோன்றி விடும்.  

அரை மயக்கத்தில்  உன் உறவினர் ,அருகில் அப்போது தான் 

 சத்திரசிகிச்சை முடித்து  படுக்கையில் கிடத்தியிருப்பார்கள்.  

 

எல்லாம்   மரத்துப்போய்  அசைக்க முடியாமல்  

உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக 

கொக்கியில் மாட்டிய ஜீவ  நீர் " சேலைன் " வழியாக 

துளித்துளியாக இறங்கி  கொண்டிருக்கும்.  நடப்புகள்   உறவுகளும் 

நினைவில் வந்து போவர் ,

 

அண்மையில் இந்நிலை கண்ட  நண்பன் 

அடிக்கடி வந்து போவான். இரண்டு வார்த்தை  அவனுடன்

 பகிர்வோமென்றால்   ஏன்  மீண்டும் அவனை  கவலைப்பட வைப்பான்" 

இது என்னுடனே போகட்டும் "என்பேன் .

 வலி கண்டவருக்குத் தானே  வலி உணர முடியும்.  "இது வும் கடந்து 

போகும்..." என  மனசு தன வலியை தேற்ற  முயலும்.  நாட்கள் ஒவ்வொன்றாக 

நகரும் . நிற நிறமாய்  தாதியர் அவசர வேகத்தில்  ."இந்தா  மருந்து" ..

.நாளை  எழுந்து நடக்க தயாராக இரு .... 

 

இயற்கை உபாதைகளை துணையின்றி  சென்று  

முடிக்க முடியாதிருக்கும் .  என் மீதே எனக்கு கோபம் வரும். 

 கை பிடித்து  ஆதரவாய்   கதை சொல்ல ஒரு உறவைத்தேடும்.   

இரவு உறக்கமும்  விழிப்புமாய்  வந்துபோகும்.  

 

காலை  விடியும் , கட்டிடம் கலகலப்பாகி விடும்.  சிட்டுக்களாக 

பறந்து திரியும்  தாதியரும்  உதவியாளர்களுமாய். 

உணவு வரும்  உயிரை பிடித்து வைக்க வேண்டுமே 

என உண்ணத்தோன்றும் . நாக்கு செத்துப்போகும்.   

வைத்தியர் வருவார் ..உடற்பயிற்சியாளர்  வருவார்.  

தங்கள் கடமை முடிந்ததென   கை கழுவி செல்வர்.  

மீண்டும் தனிமை  ..ஆட்டி  அசைத்த  கால் வலியெடுக்கும்.  

ஒரு வித மயக்க நிலைக்கும்  சோர்வுக்குமாய் கண் யாரும்.

கடைக்கு கண் வழியே  நீர் சொரியும்.   "பாவி என்னை  மறுபடியும் 

பிறக்க  வைக்காதே ".. என  மனம் ஓலமிடும்.   வீட்டுக்கு செல்ல அனுமதி  

தரப்படும்.அன்பான  ஒருவரின் கவனிப்பால்   நாட்கள்  நகரும் . 

"என்னால் இயங்க முடியவில்லையே என " மனம்  ஏங்கும் "  

"இதுவும் கடந்துபோகும். மீண்டு விடுவேன்"  என  

பழையபடி எண்ணத்தோன்றும். 

 என்னை நானே கொண்டு  நடத்த முடியாத  வாழ்க்கை ...

.சலிக்க தொடங்கு ம்.  அரிது அரிது மானிட ராதல் அரிது 

அதிலும் நோய் நீங்கி  பிறத்தல் அரிது.ஏன்  இத்தனை  துயரம் ? கர்மாவா ?

உணவுப் பழக் க வழக்கமா ?  உடல் உறுப்புகளின் இயக்க மின்மையா? 

 அவசர உலகில்   பிடுங்கி நடப்பட்ட்  மரமாக அந்நிய தேச கால  நிலையா ?

நஞ்சேற்றப்பட்ட் உணவா ?...  வேறு மருந்துகளின் தாக்கமா ? உன்னை நோய் 

பிடித்துக் கொள்ள (கொல்ல )....

 

உன் உடல் ஒரு கோவில் அதை  கவனித்து பேணு .

இல்லையேல்   நோய்  பிணியும்  துயரமும்  தொற்றிக்கொள்ளும். 

சந்தர்ப்பங்கள் சம்பவங்களை  ஆக்கு கின்றன . சம்பவங்களை

 இறக்கி  வைக்கும்போது  மனதின் ஒரு ஓரத்தில்  சின்ன  அமைதி .

 

நீண்ட நேரம்  தடடச்சியதில்   கால் செங்குத்தானதில் ஒரு வலி ..முள்ளாக 

ஆரம்பிக்கிறது.   மீண்டும் பேசுகிறேன்  " காணும்  என்னும் கண்டிப்பான"    

கடடளையுடன்  படுக்கையில் ச ரிகிறே ன்.  "யாரும் கவலைப்படாதீர்கள்".  

என் நடப்புகள் தவிர வேறு யாரிடம்  பேசுவேன்..... ஆறு நாட களாக கனன்று 

கொண்டிருந்த  தீ ... தணியத்துடிக்கிறது.  எனக்கும் சத் திர சிகிச்சைக்  

  இரவும் பகலும் போல ........"இதுவும் கடந்து விடுவேன் .."...

 

ஒரு நோயாளியின் நிலையில் இருந்து…. அத்தனை நினைவுகளையும்,
தவறாமல் வடித்த அழகிய கவிதை. 👍🏽

ஆஸ்பத்திரி சாப்பாட்டை, சாப்பிட்டு… செத்துப் போன நாக்கு,
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குவதைப் பற்றியும் எழுதி இருக்கலாம்.
அருமையான கவிதைக்கு, நன்றி நிலாமதி அக்கா. 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீத்தம்பி ...........சில நாட்களாக நினைத்து கொண்டிருந்த ஒருவர்  நீங்கள் தான்  தற்போது சற்று தேறி வருகிறேன். மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆஸ்பித்திரி சாப்பாடு பழகி விட்ட்து . வீட்டுச் சாப்பாடு  என் அன்பான  கணவனால்  தரப்படுகிறது.  பசியில்லை  மனமில்லை ...மிகவும் கஷ்ட படுத்துகிறேன் என் உள்ளுணர்வு ....காதல் மனைவியை கண் கலங்காமல் கவனிக்கும்   கடமையை செய்யும் திருப்தி  அவருக்கு . நல்ல காலம் "பென்சனியார் " அவர் பொழுது என்னுடனே  கழிகிறது . இல்லவிட்டால் பேரப்பிள்ளைகளுடன்  செலவிடுவார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிலாமதி said:

சிறீத்தம்பி ...........சில நாட்களாக நினைத்து கொண்டிருந்த ஒருவர்  நீங்கள் தான்  தற்போது சற்று தேறி வருகிறேன். மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆஸ்பித்திரி சாப்பாடு பழகி விட்ட்து . வீட்டுச் சாப்பாடு  என் அன்பான  கணவனால்  தரப்படுகிறது.  பசியில்லை  மனமில்லை ...மிகவும் கஷ்ட படுத்துகிறேன் என் உள்ளுணர்வு ....காதல் மனைவியை கண் கலங்காமல் கவனிக்கும்   கடமையை செய்யும் திருப்தி  அவருக்கு . நல்ல காலம் "பென்சனியார் " அவர் பொழுது என்னுடனே  கழிகிறது . இல்லவிட்டால் பேரப்பிள்ளைகளுடன்  செலவிடுவார். 

நிலாமதி அக்கா…   நீங்கள் நோய் வாய்ப்பட்டு, மருத்துவ மனையில் இருந்ததை,
யாழ். கள உறவுகள் எவருமே அறியவில்லை. தற்போது… உங்கள் மூலமே அறிந்தோம்.
விரைவில் பூரண சுகம் பெற, பிரார்த்திக்கின்றோம். 🙏

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததை அறிந்து சந்தோசம். பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

ஒரு வயது வர எதுவும் வரும் என்னவும் வரும் என மனதை திடப்படுத்திக்கொண்டு வாழ வேண்டிய காலம்.

பூரண நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அக்கா நலம் பெற வேண்டுகிறேன். ஓய்வெடுங்கள். உடற்பயிற்சி (அவர்கள் சொன்னபடி) செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நீங்கள் பூரண சுகத்துடன் வாழ்வீர்கள்.....நாங்கள் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் வருத்தம் வந்து தொல்லை தரும் எண்டால் அது தந்தே தீரும்......எனக்கும்தான்  கடந்த ஒன்றரை மாதத்துக்குள் பல்வலி + காது  என்னை சிப்பிலியாட்டி கொண்டிருக்கு.......என்ன இதுவும் கடந்து போகும் என்றுதான் வாழவேண்டி இருக்கு......துணைவர்கள் அன்பாய் இருப்பது பெரிய பாக்கியம்.......! 

கவிதைமூலம் அறியத்தந்ததுக்கு நன்றி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா என்னாச்சு?

பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா பூரண நலம் பெற்று மீண்டும் வர எல்லாம் வல்லானை இறைஞ்சுகின்றேன்..!

கவிதை கனக்கின்றது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா பூரண நலம்பெற வேண்டுகிறேன், ஓய்வெடுத்து ஆரோக்கியத்துடன் மீளவும் யாழுக்கு வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா விரைவில் பூரணமாகக் குணமடைந்து பழையபடி யாழில் வலம்வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு வந்ததில் சந்தோசம் அக்கா மனச்சுமைய இறக்கி விட்டீர்கள் இனியெல்லாம் நலமே இறைவன் துணைபுரிவாராக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா முழுமையான சுகம் பெற வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்   பாட்டி

இதுவும் கடந்து  போகும்...

கிட்டத்தட்ட  இந்த  நேரத்தில் நான்  கனடாவில் தான் நின்றேன்

தம்பியின் இழப்பால் சோர்ந்து  போயிருக்கும் எனக்கும் 

அதே நிலையில்  உள்ள  அக்காக்கும்  ஒத்தொடமாக  இருக்கவே  வந்தேன்

அதனால்  இம்முறை வெளியே  எங்கும் செல்லவில்லை  செல்லும் மனநிலையுமில்லை

ஆனால் இப்பொழுது ஒரு  உறவு தனித்திருந்து  எமை  நினைத்திருக்கிறதே  எனும்போது

வாழ்வில்  எத்தனை  போற்றுதற்குரிய கணங்களை இழந்து  வருகிறோம் என்று வருத்தமாக  இருக்கிறது

ஒருவர் மறைந்த  பின்  அழுவதிலும் இரங்கல்  போடுவதிலும்  உடன்பாடில்லாதவன்  என்ற வகையில் தான் ஒவ்வொரு  வருடமும் ஒவ்வொரு  சகோதரிகள்  வீடுகளுக்கு  சென்று சில நாட்கள் தங்கி  வருவதை  கடந்த  சில  வருடங்களாக செய்து  வருகிறேன். ஆனால் ......???

வாழ்வின்  ஒரு  படி  மேலே நீங்கள்

நாங்கள்  அடுத்தபடியில்

அவ்வளவு  தான் வாழ்வு

இதுவும் கடந்து  போகக்கடவது  பாட்டி

வாழ்க  நலமுடன்....

 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் உறவுகளின் ஆறுதல் வார்த்தை என்னை விரைந்து குணமடைய வைக்கும் என நம்புகிறேன். நான் விருப்பும் பொழுதுபோக்கு .அதிக நேரம் செலவிடும் தளம். தற்போது  குறிக்க படட   நேரமே என்னவர் அனுமதிப்பார்.  கால் தொங்க விடும்போது வீக்கம் அதிகரிக்கும். சில மணித்துளிகளாவது   எட்டிப்பாராமல் இருக்க முடியாது. என பாரங்களை இறக்கி  வைத்த ஒரு அமைதி . சிறகில்லாத இந்த மனம் எங்கெங்கோ  அலைகிறது.வருந்தாதே மனமே 

  • Like 4
Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா!  யாழில் நான் இணைந்தவுடன் என்னை முதன் முதலில் வரவேற்ற நிலாமதி அக்கா, மீண்டும் சுகமாகி முன்னர் போன்று எம்முடன் இணைந்திருப்பார் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.