Jump to content

" இதுவும் கடந்து விடுவேன்"  .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

 

காலச்சக்கரத்தின் வேக  சுழற்சியால்  வாழ்க்கை 

இன்பமும் துன்பமுமாய்  போராடடமும்  வெற்றியுமாய் 

நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் 

 ஒரு திடீர் விபத்தாக  வந்து விடுகிறது . 

 

நோயற்று  வாழவே  எல்லோரும் விரும்புவோம்

நோய்  கண்டு, மருத்துவ மனைகண்டு 

தாதியர் துணை கொண்டு  படுக்கைதனில் வீழும்போது ..

"என்னடா வாழ்க்கை"  இது என்று  சலிக்க தோன்றி விடும்.  

அரை மயக்கத்தில்  உன் உறவினர் ,அருகில் அப்போது தான் 

 சத்திரசிகிச்சை முடித்து  படுக்கையில் கிடத்தியிருப்பார்கள்.  

 

எல்லாம்   மரத்துப்போய்  அசைக்க முடியாமல்  

உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக 

கொக்கியில் மாட்டிய ஜீவ  நீர் " சேலைன் " வழியாக 

துளித்துளியாக இறங்கி  கொண்டிருக்கும்.  நடப்புகள்   உறவுகளும் 

நினைவில் வந்து போவர் ,

 

அண்மையில் இந்நிலை கண்ட  நண்பன் 

அடிக்கடி வந்து போவான். இரண்டு வார்த்தை  அவனுடன்

 பகிர்வோமென்றால்   ஏன்  மீண்டும் அவனை  கவலைப்பட வைப்பான்" 

இது என்னுடனே போகட்டும் "என்பேன் .

 வலி கண்டவருக்குத் தானே  வலி உணர முடியும்.  "இது வும் கடந்து 

போகும்..." என  மனசு தன வலியை தேற்ற  முயலும்.  நாட்கள் ஒவ்வொன்றாக 

நகரும் . நிற நிறமாய்  தாதியர் அவசர வேகத்தில்  ."இந்தா  மருந்து" ..

.நாளை  எழுந்து நடக்க தயாராக இரு .... 

 

இயற்கை உபாதைகளை துணையின்றி  சென்று  

முடிக்க முடியாதிருக்கும் .  என் மீதே எனக்கு கோபம் வரும். 

 கை பிடித்து  ஆதரவாய்   கதை சொல்ல ஒரு உறவைத்தேடும்.   

இரவு உறக்கமும்  விழிப்புமாய்  வந்துபோகும்.  

 

காலை  விடியும் , கட்டிடம் கலகலப்பாகி விடும்.  சிட்டுக்களாக 

பறந்து திரியும்  தாதியரும்  உதவியாளர்களுமாய். 

உணவு வரும்  உயிரை பிடித்து வைக்க வேண்டுமே 

என உண்ணத்தோன்றும் . நாக்கு செத்துப்போகும்.   

வைத்தியர் வருவார் ..உடற்பயிற்சியாளர்  வருவார்.  

தங்கள் கடமை முடிந்ததென   கை கழுவி செல்வர்.  

மீண்டும் தனிமை  ..ஆட்டி  அசைத்த  கால் வலியெடுக்கும்.  

ஒரு வித மயக்க நிலைக்கும்  சோர்வுக்குமாய் கண் யாரும்.

கடைக்கு கண் வழியே  நீர் சொரியும்.   "பாவி என்னை  மறுபடியும் 

பிறக்க  வைக்காதே ".. என  மனம் ஓலமிடும்.   வீட்டுக்கு செல்ல அனுமதி  

தரப்படும்.அன்பான  ஒருவரின் கவனிப்பால்   நாட்கள்  நகரும் . 

"என்னால் இயங்க முடியவில்லையே என " மனம்  ஏங்கும் "  

"இதுவும் கடந்துபோகும். மீண்டு விடுவேன்"  என  

பழையபடி எண்ணத்தோன்றும். 

 என்னை நானே கொண்டு  நடத்த முடியாத  வாழ்க்கை ...

.சலிக்க தொடங்கு ம்.  அரிது அரிது மானிட ராதல் அரிது 

அதிலும் நோய் நீங்கி  பிறத்தல் அரிது.ஏன்  இத்தனை  துயரம் ? கர்மாவா ?

உணவுப் பழக் க வழக்கமா ?  உடல் உறுப்புகளின் இயக்க மின்மையா? 

 அவசர உலகில்   பிடுங்கி நடப்பட்ட்  மரமாக அந்நிய தேச கால  நிலையா ?

நஞ்சேற்றப்பட்ட் உணவா ?...  வேறு மருந்துகளின் தாக்கமா ? உன்னை நோய் 

பிடித்துக் கொள்ள (கொல்ல )....

 

உன் உடல் ஒரு கோவில் அதை  கவனித்து பேணு .

இல்லையேல்   நோய்  பிணியும்  துயரமும்  தொற்றிக்கொள்ளும். 

சந்தர்ப்பங்கள் சம்பவங்களை  ஆக்கு கின்றன . சம்பவங்களை

 இறக்கி  வைக்கும்போது  மனதின் ஒரு ஓரத்தில்  சின்ன  அமைதி .

 

நீண்ட நேரம்  தடடச்சியதில்   கால் செங்குத்தானதில் ஒரு வலி ..முள்ளாக 

ஆரம்பிக்கிறது.   மீண்டும் பேசுகிறேன்  " காணும்  என்னும் கண்டிப்பான"    

கடடளையுடன்  படுக்கையில் ச ரிகிறே ன்.  "யாரும் கவலைப்படாதீர்கள்".  

என் நடப்புகள் தவிர வேறு யாரிடம்  பேசுவேன்..... ஆறு நாட களாக கனன்று 

கொண்டிருந்த  தீ ... தணியத்துடிக்கிறது.  எனக்கும் சத் திர சிகிச்சைக்  

  இரவும் பகலும் போல ........"இதுவும் கடந்து விடுவேன் .."...

 

Edited by நிலாமதி
  • Like 5
  • Thanks 2
  • Sad 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிலாமதி said:

 

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

 

காலச்சக்கரத்தின் வேக  சுழற்சியால்  வாழ்க்கை 

இன்பமும் துன்பமுமாய்  போராடடமும்  வெற்றியுமாய் 

நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் 

 ஒரு திடீர் விபத்தாக  வந்து விடுகிறது . 

 

நோயற்று  வாழவே  எல்லோரும் விரும்புவோம்

நோய்  கண்டு, மருத்துவ மனைகண்டு 

தாதியர் துணை கொண்டு  படுக்கைதனில் வீழும்போது ..

"என்னடா வாழ்க்கை"  இது என்று  சலிக்க தோன்றி விடும்.  

அரை மயக்கத்தில்  உன் உறவினர் ,அருகில் அப்போது தான் 

 சத்திரசிகிச்சை முடித்து  படுக்கையில் கிடத்தியிருப்பார்கள்.  

 

எல்லாம்   மரத்துப்போய்  அசைக்க முடியாமல்  

உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக 

கொக்கியில் மாட்டிய ஜீவ  நீர் " சேலைன் " வழியாக 

துளித்துளியாக இறங்கி  கொண்டிருக்கும்.  நடப்புகள்   உறவுகளும் 

நினைவில் வந்து போவர் ,

 

அண்மையில் இந்நிலை கண்ட  நண்பன் 

அடிக்கடி வந்து போவான். இரண்டு வார்த்தை  அவனுடன்

 பகிர்வோமென்றால்   ஏன்  மீண்டும் அவனை  கவலைப்பட வைப்பான்" 

இது என்னுடனே போகட்டும் "என்பேன் .

 வலி கண்டவருக்குத் தானே  வலி உணர முடியும்.  "இது வும் கடந்து 

போகும்..." என  மனசு தன வலியை தேற்ற  முயலும்.  நாட்கள் ஒவ்வொன்றாக 

நகரும் . நிற நிறமாய்  தாதியர் அவசர வேகத்தில்  ."இந்தா  மருந்து" ..

.நாளை  எழுந்து நடக்க தயாராக இரு .... 

 

இயற்கை உபாதைகளை துணையின்றி  சென்று  

முடிக்க முடியாதிருக்கும் .  என் மீதே எனக்கு கோபம் வரும். 

 கை பிடித்து  ஆதரவாய்   கதை சொல்ல ஒரு உறவைத்தேடும்.   

இரவு உறக்கமும்  விழிப்புமாய்  வந்துபோகும்.  

 

காலை  விடியும் , கட்டிடம் கலகலப்பாகி விடும்.  சிட்டுக்களாக 

பறந்து திரியும்  தாதியரும்  உதவியாளர்களுமாய். 

உணவு வரும்  உயிரை பிடித்து வைக்க வேண்டுமே 

என உண்ணத்தோன்றும் . நாக்கு செத்துப்போகும்.   

வைத்தியர் வருவார் ..உடற்பயிற்சியாளர்  வருவார்.  

தங்கள் கடமை முடிந்ததென   கை கழுவி செல்வர்.  

மீண்டும் தனிமை  ..ஆட்டி  அசைத்த  கால் வலியெடுக்கும்.  

ஒரு வித மயக்க நிலைக்கும்  சோர்வுக்குமாய் கண் யாரும்.

கடைக்கு கண் வழியே  நீர் சொரியும்.   "பாவி என்னை  மறுபடியும் 

பிறக்க  வைக்காதே ".. என  மனம் ஓலமிடும்.   வீட்டுக்கு செல்ல அனுமதி  

தரப்படும்.அன்பான  ஒருவரின் கவனிப்பால்   நாட்கள்  நகரும் . 

"என்னால் இயங்க முடியவில்லையே என " மனம்  ஏங்கும் "  

"இதுவும் கடந்துபோகும். மீண்டு விடுவேன்"  என  

பழையபடி எண்ணத்தோன்றும். 

 என்னை நானே கொண்டு  நடத்த முடியாத  வாழ்க்கை ...

.சலிக்க தொடங்கு ம்.  அரிது அரிது மானிட ராதல் அரிது 

அதிலும் நோய் நீங்கி  பிறத்தல் அரிது.ஏன்  இத்தனை  துயரம் ? கர்மாவா ?

உணவுப் பழக் க வழக்கமா ?  உடல் உறுப்புகளின் இயக்க மின்மையா? 

 அவசர உலகில்   பிடுங்கி நடப்பட்ட்  மரமாக அந்நிய தேச கால  நிலையா ?

நஞ்சேற்றப்பட்ட் உணவா ?...  வேறு மருந்துகளின் தாக்கமா ? உன்னை நோய் 

பிடித்துக் கொள்ள (கொல்ல )....

 

உன் உடல் ஒரு கோவில் அதை  கவனித்து பேணு .

இல்லையேல்   நோய்  பிணியும்  துயரமும்  தொற்றிக்கொள்ளும். 

சந்தர்ப்பங்கள் சம்பவங்களை  ஆக்கு கின்றன . சம்பவங்களை

 இறக்கி  வைக்கும்போது  மனதின் ஒரு ஓரத்தில்  சின்ன  அமைதி .

 

நீண்ட நேரம்  தடடச்சியதில்   கால் செங்குத்தானதில் ஒரு வலி ..முள்ளாக 

ஆரம்பிக்கிறது.   மீண்டும் பேசுகிறேன்  " காணும்  என்னும் கண்டிப்பான"    

கடடளையுடன்  படுக்கையில் ச ரிகிறே ன்.  "யாரும் கவலைப்படாதீர்கள்".  

என் நடப்புகள் தவிர வேறு யாரிடம்  பேசுவேன்..... ஆறு நாட களாக கனன்று 

கொண்டிருந்த  தீ ... தணியத்துடிக்கிறது.  எனக்கும் சத் திர சிகிச்சைக்  

  இரவும் பகலும் போல ........"இதுவும் கடந்து விடுவேன் .."...

 

ஒரு நோயாளியின் நிலையில் இருந்து…. அத்தனை நினைவுகளையும்,
தவறாமல் வடித்த அழகிய கவிதை. 👍🏽

ஆஸ்பத்திரி சாப்பாட்டை, சாப்பிட்டு… செத்துப் போன நாக்கு,
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குவதைப் பற்றியும் எழுதி இருக்கலாம்.
அருமையான கவிதைக்கு, நன்றி நிலாமதி அக்கா. 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீத்தம்பி ...........சில நாட்களாக நினைத்து கொண்டிருந்த ஒருவர்  நீங்கள் தான்  தற்போது சற்று தேறி வருகிறேன். மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆஸ்பித்திரி சாப்பாடு பழகி விட்ட்து . வீட்டுச் சாப்பாடு  என் அன்பான  கணவனால்  தரப்படுகிறது.  பசியில்லை  மனமில்லை ...மிகவும் கஷ்ட படுத்துகிறேன் என் உள்ளுணர்வு ....காதல் மனைவியை கண் கலங்காமல் கவனிக்கும்   கடமையை செய்யும் திருப்தி  அவருக்கு . நல்ல காலம் "பென்சனியார் " அவர் பொழுது என்னுடனே  கழிகிறது . இல்லவிட்டால் பேரப்பிள்ளைகளுடன்  செலவிடுவார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிலாமதி said:

சிறீத்தம்பி ...........சில நாட்களாக நினைத்து கொண்டிருந்த ஒருவர்  நீங்கள் தான்  தற்போது சற்று தேறி வருகிறேன். மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆஸ்பித்திரி சாப்பாடு பழகி விட்ட்து . வீட்டுச் சாப்பாடு  என் அன்பான  கணவனால்  தரப்படுகிறது.  பசியில்லை  மனமில்லை ...மிகவும் கஷ்ட படுத்துகிறேன் என் உள்ளுணர்வு ....காதல் மனைவியை கண் கலங்காமல் கவனிக்கும்   கடமையை செய்யும் திருப்தி  அவருக்கு . நல்ல காலம் "பென்சனியார் " அவர் பொழுது என்னுடனே  கழிகிறது . இல்லவிட்டால் பேரப்பிள்ளைகளுடன்  செலவிடுவார். 

நிலாமதி அக்கா…   நீங்கள் நோய் வாய்ப்பட்டு, மருத்துவ மனையில் இருந்ததை,
யாழ். கள உறவுகள் எவருமே அறியவில்லை. தற்போது… உங்கள் மூலமே அறிந்தோம்.
விரைவில் பூரண சுகம் பெற, பிரார்த்திக்கின்றோம். 🙏

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததை அறிந்து சந்தோசம். பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

ஒரு வயது வர எதுவும் வரும் என்னவும் வரும் என மனதை திடப்படுத்திக்கொண்டு வாழ வேண்டிய காலம்.

பூரண நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அக்கா நலம் பெற வேண்டுகிறேன். ஓய்வெடுங்கள். உடற்பயிற்சி (அவர்கள் சொன்னபடி) செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நீங்கள் பூரண சுகத்துடன் வாழ்வீர்கள்.....நாங்கள் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் வருத்தம் வந்து தொல்லை தரும் எண்டால் அது தந்தே தீரும்......எனக்கும்தான்  கடந்த ஒன்றரை மாதத்துக்குள் பல்வலி + காது  என்னை சிப்பிலியாட்டி கொண்டிருக்கு.......என்ன இதுவும் கடந்து போகும் என்றுதான் வாழவேண்டி இருக்கு......துணைவர்கள் அன்பாய் இருப்பது பெரிய பாக்கியம்.......! 

கவிதைமூலம் அறியத்தந்ததுக்கு நன்றி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா என்னாச்சு?

பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா பூரண நலம் பெற்று மீண்டும் வர எல்லாம் வல்லானை இறைஞ்சுகின்றேன்..!

கவிதை கனக்கின்றது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா பூரண நலம்பெற வேண்டுகிறேன், ஓய்வெடுத்து ஆரோக்கியத்துடன் மீளவும் யாழுக்கு வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா விரைவில் பூரணமாகக் குணமடைந்து பழையபடி யாழில் வலம்வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு வந்ததில் சந்தோசம் அக்கா மனச்சுமைய இறக்கி விட்டீர்கள் இனியெல்லாம் நலமே இறைவன் துணைபுரிவாராக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா முழுமையான சுகம் பெற வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்   பாட்டி

இதுவும் கடந்து  போகும்...

கிட்டத்தட்ட  இந்த  நேரத்தில் நான்  கனடாவில் தான் நின்றேன்

தம்பியின் இழப்பால் சோர்ந்து  போயிருக்கும் எனக்கும் 

அதே நிலையில்  உள்ள  அக்காக்கும்  ஒத்தொடமாக  இருக்கவே  வந்தேன்

அதனால்  இம்முறை வெளியே  எங்கும் செல்லவில்லை  செல்லும் மனநிலையுமில்லை

ஆனால் இப்பொழுது ஒரு  உறவு தனித்திருந்து  எமை  நினைத்திருக்கிறதே  எனும்போது

வாழ்வில்  எத்தனை  போற்றுதற்குரிய கணங்களை இழந்து  வருகிறோம் என்று வருத்தமாக  இருக்கிறது

ஒருவர் மறைந்த  பின்  அழுவதிலும் இரங்கல்  போடுவதிலும்  உடன்பாடில்லாதவன்  என்ற வகையில் தான் ஒவ்வொரு  வருடமும் ஒவ்வொரு  சகோதரிகள்  வீடுகளுக்கு  சென்று சில நாட்கள் தங்கி  வருவதை  கடந்த  சில  வருடங்களாக செய்து  வருகிறேன். ஆனால் ......???

வாழ்வின்  ஒரு  படி  மேலே நீங்கள்

நாங்கள்  அடுத்தபடியில்

அவ்வளவு  தான் வாழ்வு

இதுவும் கடந்து  போகக்கடவது  பாட்டி

வாழ்க  நலமுடன்....

 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் உறவுகளின் ஆறுதல் வார்த்தை என்னை விரைந்து குணமடைய வைக்கும் என நம்புகிறேன். நான் விருப்பும் பொழுதுபோக்கு .அதிக நேரம் செலவிடும் தளம். தற்போது  குறிக்க படட   நேரமே என்னவர் அனுமதிப்பார்.  கால் தொங்க விடும்போது வீக்கம் அதிகரிக்கும். சில மணித்துளிகளாவது   எட்டிப்பாராமல் இருக்க முடியாது. என பாரங்களை இறக்கி  வைத்த ஒரு அமைதி . சிறகில்லாத இந்த மனம் எங்கெங்கோ  அலைகிறது.வருந்தாதே மனமே 

  • Like 4
Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா!  யாழில் நான் இணைந்தவுடன் என்னை முதன் முதலில் வரவேற்ற நிலாமதி அக்கா, மீண்டும் சுகமாகி முன்னர் போன்று எம்முடன் இணைந்திருப்பார் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.