Jump to content

மனம் ஒரு குரங்கு-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு-பா.உதயன் 

அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் 
கோபமும் கொண்ட என் மனக்குரங்கு 
ஏன் தான் எதுகும் புரியவில்லை 
எப்பவும் பாய மறுப்பதில்லை 

மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட 
குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை 
எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது 
குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை 

சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் 
சும்மாய் இருக்கவும் முடியவில்லை 
எப்பவும் கத்துது எதிலும் பாயுது 
அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் 

தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன்
தான் என்றே துள்ளுது குரங்கு 
தனக்கே எல்லாம் தெரிந்தது போல் 
தாவுது குரங்கு எப்பவுமே 

இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது 
இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாமல் 
அந்தக் குரங்கைப்போல் வாழவும் பார்க்குது 
ஆடம்பரமாக சீவிக்க எண்ணுது 

பித்தனைப் போல் சில காலம் 
பிடிவாதமாய் சில காலம் பாசமாய் பல காலம் 
கோபமாய் சில காலம் எத்தனை மாயம் 
எத்தனை வேடங்கள் குரங்கின் நாடகம்

எவ்வளவு  உயரம் தான் என்று 
எப்பவும் குரங்குக்கு தெரிவதில்லை 
இருப்பது எல்லாம் நிரந்தரம் இல்லை 
இன்னும் குரங்குக்கு விளங்கவில்லை 

எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு 
எதுகும் குரங்குக்கு புரிவதில்லை 
ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் 
அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை .

பா.உதயன் ✍️
 

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, uthayakumar said:

பா.உதயன் ✍️

கவிதை அருமை.... 👍🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, uthayakumar said:

 

எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு 
எதுகும் குரங்குக்கு புரிவதில்லை 
ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் 
அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை .

பா.உதயன் ✍️
 

இதை புரிவதிற்குள் வாழ்கை முடிந்துவிடுகின்றது, நல்ல சிறப்பான கவிதை👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, uthayakumar said:

எவ்வளவு  உயரம் தான் என்று 

எப்பவும் குரங்குக்கு தெரிவதில்லை 
இருப்பது எல்லாம் நிரந்தரம் இல்லை 
இன்னும் குரங்குக்கு விளங்கவில்லை 

எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு 
எதுகும் குரங்குக்கு புரிவதில்லை 
ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் 
அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை .

பா.உதயன் ✍️
 

நல்ல ஒரு கவிதைக்கு நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2022 at 11:50, குமாரசாமி said:

கவிதை அருமை.... 👍🏼

 

On 11/9/2022 at 13:17, உடையார் said:

இதை புரிவதிற்குள் வாழ்கை முடிந்துவிடுகின்றது, நல்ல சிறப்பான கவிதை👍

 

On 11/9/2022 at 15:26, தமிழ் சிறி said:

நல்ல ஒரு கவிதைக்கு நன்றி.

நல்ல கருதிட்ட அனைவருக்கும் நன்றிகள்!🌺

Link to comment
Share on other sites

On 11/9/2022 at 15:57, uthayakumar said:

சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் 
சும்மாய் இருக்கவும் முடியவில்லை 
எப்பவும் கத்துது எதிலும் பாயுது 
அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் 

இத்தகைய குரங்கு மனத்தை நெறிப்படுத்திச் சமநிலையில் வைப்பது என்பது வாழ்நாள் நீண்ட ஒரு போராட்டம் தான். இதில் வென்றோர் ஞானியர். அவர்கள் கூட எத்தனையோ சோதனைகளைத் தாண்டியே பல்வேறு பயிற்சிகள் மூலம் தான் ஞான நிலையை அடைந்தனர். 😊

சிந்திக்கத் தூண்டும் கவிதையைத் தந்தமைக்கு நன்றி உதயன். 😊

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.