Jump to content

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்தை தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது சிம்பாப்வே

By RAJEEBAN

21 OCT, 2022 | 05:33 PM
image

ஸ்கொட்லாந்தை ஐந்து விக்கெட்களால் தோற்கடித்து சிம்பாப்வே அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளது.

zimbawe_win.jpg

ஹோபார்ட்டில் இன்று இடம்பெற்ற முதல்சுற்றின் 12 வது போட்டியில் சிம்பாப்வே  ஐந்துவிக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 132 ஓட்டங்களை பெற்றது 

Fflv0sbXwAIBbGb.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் தனது இலக்கை எட்டியது

சிம்பாப்வே அணியின் சார்பில் கிரெய்க் எர்வெய்ன் 58 ஓட்டங்களை பெற்றார்

FflyGDaXEAMBHYi.jpg

Fflwa35VIAIQcAe.png

சிம்பாப்வே அணி ரி20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவைநுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

https://www.virakesari.lk/article/138168

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையில் பந்து தாக்கியது - மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் பாக் வீரர்

By RAJEEBAN

21 OCT, 2022 | 02:52 PM
image

பாகிஸ்தான் துடுப்பாட்ட ஷான் மசூட் வீரர் தலையில் பந்து தாக்கியதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்

பாக்கிஸ்தான் உலக கிண்ண அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை ஷான் மசூட்டின் தலையின் வலது பக்கத்தில் பந்து பட்டதை தொடர்ந்து அவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார்

FfkXdDDXEAAzznQ.jpg

lxoQiLKc.jpg

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138149

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி.இருபது - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா ! சுப்பர் 12 சுற்றுடன் நாளை ஆரம்பம்

21 OCT, 2022 | 08:30 PM
image

(நெவில் அன்தனி)

அகிலம் முழுவதும் மிகவும் ஆவலுடன்  எதிர்பார்க்கப்படும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா, பிரதான  சுப்பர் 12 சுற்றுடன் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வருடம் 7ஆவது ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தை இறுதிப் போட்டியுடன் முடித்துவைத்த நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தும் எட்டாவது அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

சுப்பர் 12 சுற்றில் குழு 1 க்கான இந்தப் போட்டி சிட்னி விளையாட்டரங்கில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

12 அணிகள் இரண்டு குழுக்களில் தலா 6 அணிகள் வீதம் பங்குபற்றும் சுப்பர் 12 சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளன. சுப்பர் 12 சுற்று போட்டிகள் நவம்பர் 6ஆம் திகதியுடன் நிறைவுபெறும்.

சுப்பர் 12 சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள்  அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி சிட்னியில் நவம்பர் 9ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி அடிலெய்டில் நவம்பர் 10ஆம் திகதியும் நடைபெறும்.

உலக சம்பயினைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மெல்பர்னில் நவம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாடுவதை குறிக்கோளாகாக் கொண்டு 12 அணிகள் களம் இறங்குகின்றன. அவற்றில் 8 அணிகள் இரண்டு குழுக்களில் சுப்பர் 12 சுற்றில் நேரடியாக விளையாட தகுதி பெற்றிருந்தன.

இதற்கு முன்னோடியாக மெல்பர்ன், ஜீலோங்கிலும் ஹோர்பாட்டிலும் இரண்டு குழுக்களில் நடைபெற்ற முதல் சுற்றில் (தகுதிகாண்) எட்டு அணிகள் பங்குபற்றின.

நெதர்லாந்து, நமிபியா, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன பங்குபற்றிய ஏ குழுவிலிருந்து இலங்கையும் நெதர்லாந்தும் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இக் குழுவில் ஆரம்பப் போட்டியில் நமிபியாவிடம் முற்றிலும் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்த இலங்கை அதன் பின்னர் வீறுநடைபோட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தையும் நெதர்லாந்தையும் வெற்றிகொண்டு உலகக் கிண்ணப் போட்டியில் நிலைத்திருப்பதை உறுதிசெய்துகொண்டது.

அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன பங்குபற்றிய பி குழுவிலிருந்து ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.

இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் முற்றிலும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றுடன் வெளியேறியது.

பி குழுவில் ஸ்கொட்லாந்து, அயார்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்ததால் மேற்கிந்தியத் தீவுகளின் சுப்பர் 12 சுற்று வாய்ப்பு அற்றுப் போனது.

முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்ததை அடுத்து நடைபெறவுள்ள சுப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகள் வருமாறு:

குழு 1: ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து.

குழு 2: பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே, நெதர்லாந்து.

https://www.virakesari.lk/article/138172

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.10.2022 at 21:45, vasee said:

இலங்கை அணி தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்து போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நாடு திரும்பினால் எப்படியிருக்கும்?

இலங்கை அணி நெதர்லண்ட் அணியினை இலகுவாக வென்றுவிடும் என்பதால் அது நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

ஆனால் ஏனோ இந்த இலங்கை அணியினை பார்த்து இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் (தமக்கு அச்சுறுத்தலாக) என்பதுதான் விளங்கவில்லை? 

இப்போது உள்ள‌ இல‌ங்கை அணியின் ப‌ல‌மே சுழ‌ல் ப‌ந்து வீச்சு

அண்ணா

 

வ‌ஸ்ம‌ன்க‌ள் சுத‌ப்பினா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் அதை ச‌ரி செய்து அணிக்கு வெற்றிய‌ தேடி கொடுக்கின‌ம் 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகால வைரியான நியூஸிலாந்துடன் தனது சொந்த மண்ணில் மோதுகிறது அவுஸ்திரேலியா

By DIGITAL DESK 5

22 OCT, 2022 | 11:04 AM
image

(நெவில் அன்தனி)

கிரிக்கெட் அரங்கில் தனது நீண்டகால வைரியான நியூஸிலாந்துடனான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஈட்டிய சம்பியன் பட்டத்துடன் கடந்த வருட உலகக் கிண்ண அத்தியாயத்தை முடித்துவைத்த அவுஸ்திரேலியா, 8ஆவது அத்தியாயத்தில் குழு 1க்கான சுப்பர் 12 சுற்றை தனது சொந்த மண்ணில் அதே அணியுடனான போட்டியுடன் இன்று ஆரம்பித்துவைக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுகடன் குழு 1 இல் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

சிட்னி விளையாட்டங்கில் நடைபெறும் சுப்பர் 12 சுற்று ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் ஒன்றையொன்று வீழ்த்தி வெற்றிபெற முயற்சிக்கவுள்ளன.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் 2 தடவைகள் சந்தித்தித்திருந்தன. அவற்றில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை ஈட்டியுள்ளன.

துபாய் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் பெற்ற 85 ஓட்டங்களின் உதவியுடன் நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

ஆனால், மிச்செல் மார்ஷ் பெற்ற ஆட்டமிழக்காத 77 ஓட்டங்கள், டேவிட் வோர்னர் பெற்ற 53 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கையை 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களாக உயர்த்த அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்று உலக சம்பியனானது.

அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த வருடமும் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி பரபரப்வை ஏற்படுத்துவதாக அமையும்.

இந்த இரண்டு அணிகளும் இருபது 20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 15 சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியா 10 - 5 என முன்னிலையில் இருக்கிறது.

அதேவேளை, 2011க்குப் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் நியூஸிலாந்து வெற்றிபெற்றதில்லை. எவ்வாறாயினும் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற நியூஸிலாந்து முயற்சிக்கவுள்ளது.

நியூஸிலாந்தின் அண்மைக்கால இருபது 20 கிரிக்கெட் பெறுபேறுகள் (12-3) சிறப்பாக இருப்பதால் அவுஸ்திரேலியா பெரும் சவாலை எதிர்கொள்ளும் என கருதலாம்.

இரண்டு அணிகளிலும் அதிரடிகளுக்கு பெயர்பெற்றவர்களும் மிகத் துல்லியமாக பந்துவீசுக்கூடியவர்களும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி கடைசிவரை மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்

Cricket Australia Donates $50,000 To Help India Fight Covid-19 Pandemic |  Cricket News

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

Why New Zealand's little big guys are most impressive team in the world

நியூஸிலாந்து: மார்ட்டின் கப்டில், பின் அலன், டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் (தலைவர்), க்லென் பிலிப்ஸ், மிச்செல் ப்றேஸ்வெல், ஜிம்மி நீஷாம், மிச்செல் சென்ட்னர், டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட, அடம் மில்னே.

ஐ.சி.சி.இருபது - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா ! சுப்பர் 12 சுற்றுடன் ஆரம்பம்

https://www.virakesari.lk/article/138187

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை அபார வெற்றிகொண்டது நியூசிலாந்து 

22 OCT, 2022 | 06:00 PM
image

(நெவில் அன்தனி)

சிட்னி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (22) நடைபெற்ற நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய நியூஸிலாந்து, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 8 ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது.

குழு 1 க்கான சுப்பர்  12  சுற்றின் இந்த ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை  வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 111 ஓட்டங்களுக்கு சுருண்டு 89 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

Australia_-Twenty20-World-Cup-Cricket_-N

பின் அலன், டெவன் கொவன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், டிம் சௌதீயின் மிகவும் துல்லியமான பந்துவீச்சு, அணியின் மிகத் திறமையான களத்தடுப்பு என்பன நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடைய வைத்தன.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 11 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்து வெற்றிகொண்டது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 2ஆவது ஓவரில் டிம் சௌதீ விசிய முதலாவது பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த டேவிட் வோர்னர் (5) துரதிர்ஷ்டவசமாக போல்ட் ஆனார். அவர் அடித்த பந்து அவரது தொடையில் பட்டு மேலெழுந்தபோது   பந்து மீண்டும் துடுப்பில் பட்டு விக்கெட்டைப் பதம்பார்த்தது. (5-1 விக்.)

Australia_-Twenty20-World-Cup-Cricket_-N

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது மிச்செல் சென்ட்னரின் பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் இலகுவான பிடிகொடுத்த அணித் தலைவர் ஆரொன் பின்ச் (13)  வெளியேறினார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. கடந்த வருட இறுதி ஆட்டநாயகன் மிச்செல் மார்ஷ் (16), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (7), டிம் டேவிட் (11), மெத்யூ வேட் (2), க்லென் மெக்ஸ்வெல் (28), மிச்செல் ஸ்டார்க் (4), அடம் ஸம்ப்பா (0), பெட் கமின்ஸ் (21) ஆகிய அனைவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியபோது மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் பிடியை க்லென் பிலிப்ஸ் எடுத்த விதம் அரங்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் கண்டுகளித்த கோடிக்கணக்கான இரசிகர்களையும் பிரமிக்க வைத்தது.

ஸ்டொய்னிஸ் உயர்த்தி அடித்த பந்தை நோக்கி வலப்புறமாக சுமார் 25 யார் தூரம் ஓடிய பிலிப்ஸ், சுமார் 3 அடி தாவி பந்தை பிடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.

நியூஸிலாந்து  பந்துவீச்சில் 2.1 ஓவர்களை மாத்திரம் வீசிய டிம் சௌதீ 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 4 ஓவர்களில் 31 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Australia_-Twenty20-World-Cup-Cricket_-N

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான பின்  அலன், டெவன் கொன்வே ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 25 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பின் அலன் 16 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் சிரேஷ்ட வீரர் மார்ட்டின் கப்டிலுக்கு பதிலாக இன்றைய போட்டிக்கு தனக்கு வாய்ப்பு கொடுத்தது மிகச் சரியான தீர்மானம் என்பதை பின் அலன் நிரூபித்தார்.

தொடர்ந்து டெவன் கொன்வேயும் கேன் வில்லியம்சனும் 2ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து க்லென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 16 ஓவர்களில் 152 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் டெவன் கொன்வேயும் ஜெம்ஸ் நீஷாமும் 24 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கடைசிவரை துடுப்பெடுத்தாடிய  டெவன் கொன்வே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைக் குவித்தார். ஜேம்ஸ் நீஷாம் 13 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமிலிருந்தார்.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: டெவன் கொன்வே.

https://www.virakesari.lk/article/138226

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐசிசியின் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் நிலையில், இத்தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இது, இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் முதல்போட்டி. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் 10 நிமிடங்களில் இணையத்தில் விற்றுத் தீர்ந்தன.

இந்த மைதானத்தில் 90,000 பார்வையாளர்கள் அமர முடியும். இவ்வளவு வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது மைதானத்தில் பணியாற்றும் நபர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது.

இரு அணிகளின் செயல்பாடு எப்படி?

 

இந்தியாவின் இரு முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடவில்லை. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் இந்தாண்டு செயல்பாடு சிறப்பாகவே உள்ளது.

இந்தாண்டில் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 23 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி கடந்த மூன்று ஆண்டுகளாக பாபர் ஆசம் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. டி20 போட்டிகளில் அந்த அணியின் வெற்றி-தோல்வி அளவு 36-18 என்ற கணக்கில் உள்ளது.

இரு அணிகளும் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் எதிர்கொண்டன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 107 ரன்கள் குவித்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆனால், இரு அணிகளும் இந்தாண்டு இரண்டு டி20 போட்டிகளில் மோதின. அதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றன.

இந்திய அணியின் பலம் என்ன?

இந்தியாவின் பலம் பேட்டிங் வரிசைதான் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் விமர்சகருமான சாரதா.

"கே.எல். ராகுல் பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார். சூர்ய குமார் யாதவும் விராட் கோலியும் பார்மில் இருப்பது இந்தியாவுக்குச் சாதகமான அம்சம். சூர்ய குமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது 140-க்கும் அதிகமாவே இருக்கிறது. ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் ஃபினிஷர் பணியை தினேஷ் கார்த்திக்கும், ஹர்திக் பாண்ட்யாவும் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் "

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும். நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவர் பார்முக்குத் திரும்பியதை உணர்த்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

"விராட் கோலி இரட்டைப் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும். ஒன்று அதிரடி ஆட்டம், மற்றொன்று பாதுகாப்பு ஆட்டம். அவர் ஆட்டத்தின் எந்த ஓவரில் களமிறங்குகிறார் என்பதைப் பொறுத்து அந்தப் பங்களிப்பைத் தீர்மானிக்கலாம். பேட்டிங் நுட்பத்தில் தேர்ந்தவர் என்பதால் இந்த வகையில் அவர் இந்தியாவுக்கு உதவுவார்" என்கிறார் சாரதா.

 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பலவீனம் என்ன?

இந்திய அணியைப் பொறுத்தவரை தற்போதைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை விட பலமான அணியாகவே கருதப்பட்டாலும். சில பலவீனங்களையும் கொண்டிருக்கிறது.

பும்ரா இந்திய அணியில் இல்லாதது மிகப் பெரிய குறை என்கிறார் சாரதா. "ஷமி பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசினாலும். வரும் போட்டிகளில் டெத் ஓவர்களில் எப்படிப் பந்துவீசுவார் என்பது முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறும் "

ஆஸ்திரேலிய மைதானங்களில் ஸ்விங் பந்துவீச்சு பலனளிக்கவில்லை என்று இதுவரை நடந்திருக்கும் போட்டிகளைக் கொண்டு தீர்மானத்துக்கு வரமுடிகிறது. அதனால் இந்தியா ஸ்விங் பந்துவீச்சை மட்டுமே நம்பியிருக்க முடியாது

 

Sharada

பட மூலாதாரம்,SHARADA

 

படக்குறிப்பு,

கிரிக்கெட் விமர்சகர் சாரதா

"புவனேஸ்வர் குமார் ஸ்விங்கை அதிகம் பயன்படுத்தக்கூடியவர் என்பவர். அவரை இந்திய அணி கவனமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும்"

பாகிஸ்தான் அணியின் பலம் என்ன?

பாகிஸ்தான் அணியின் இப்போதைய பலம் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள்தான். காயத்தில் இருந்து அணிக்குத் திரும்பியிருக்கும் ஷாகின் ஷா அப்ரிடி அந்த அணிக்கு பெருமளவு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில் ஸ்விங் பந்துவீச்சு பயன்படவில்லை என்றாலும் வேகப் பந்துவீச்சில் பவுன்சர்கள் மூலமாக திணறடிக்க முடியும். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்" சாரதா.

 

ஷமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழைக்கு வாய்ப்பு

ஆனால், ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளதால் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இன்று காலையும் அதே நிலை தொடர்கிறது.

எனினும், வெள்ளிக்கிழமை பிற்பகல் மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் சிறுதூரல் மட்டுமே இருந்தது. அதனால், இரு அணி வீரர்களுமே வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை பயிற்சியாளர் ட்ராவிட் மேற்பார்வை செய்தார். மாலை நேரத்தில் பயிற்சியைத் தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூடுதல் நாள் இல்லை

தொடரின் லீக் போட்டிகள் பாதிக்கப்பட்டால் அந்தப் போட்டியை மற்றொரு நாளில் நடத்த கூடுதல் நாட்கள் திட்டமிடப்படவில்லை. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு மட்டுமே அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளபடி, ஞாயிறு பிற்பகல் முதல் 10 முதல் 25 மில்லிமீட்டர் மழை தொடர்ந்து பெய்தால், இரு அணிகளும் ஐந்து ஓவர்கள்கூட பந்து வீசுவது கடினம். எனவே போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

போட்டியில் வென்றால் இரு புள்ளிகள் கிடைக்கும் என்பதால், இது இரு அணிகளுக்குமே பாதிப்பான விஷயம். மேலும், பி பிரிவில் உள்ள பிற அணிகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடும்.

பாகிஸ்தான் தவிர்த்து, தென்ஆப்ரிக்கா. பங்களாதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.

தொடரின் முதல் சுற்றிலேயே முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியது.

(மெல்பர்ன் நகரில் இருந்து செய்தியாளர் ஸ்ரீவஸ்தவா வழங்கிய தகவல்களுடன்)

https://www.bbc.com/tamil/sport-63356469

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம் கரன் 5 விக்கெட்டுளை கைப்பற்றிய போதிலும் ஆப்கானை போராடி வென்றது இங்கிலாந்து !

22 OCT, 2022 | 09:02 PM
image

 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சாம் கரன் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த போதிலும் ஆப்பகானிஸ்தானுக்கு எதிரான குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

பேர்த் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

ஓட்டங்களைப் பெறுவதில் ஆரம்பம் முதல் சிரமத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று   ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. கடைசி 6 ஓவர்களில் ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஓட்டங்களுக்கு பதிலாக விக்கெட்கள் சரிந்தன.

இப்ராஹிம் ஸ்த்ரான் (32), உஸ்மான் கானி (30) ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடினர்.

ஏனையவர்களில் நஜிபுல்லா ஸத்ரான் (13), ரஹ்மானுல்லா குர்பாஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3.4 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த பந்துவீச்சுப் பெறுதி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக பதிவானது. அத்துடன் சாம் கரனின் அதிசிறந்த தனிப்பட்ட பந்துவீச்சு பெறுதியாகவும் அமைந்தது.

அவரை விட பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சுமாரான மொத்த எண்ணிக்கையான 113 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்தும் மந்தகதியிலேயே ஓட்டங்களைப் பெற்றது.

லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஸ் பட்லர், டேவிட் மாலன் ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கன் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி, முஜீப் உர் ரஹ்மான், ராஷித் கான், பரீத் அஹ்மத், மொஹமத் நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138227

large.353121112_t20pt22-10.JPG.1272506e7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்தை ஒன்பது விக்கெட்களால் தோற்கடித்தது இலங்கை

By RAJEEBAN

23 OCT, 2022 | 01:18 PM
image

அயர்லாந்துக்கு எதிராக ஹோபார்ட் பெலேரிவ் ஒவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற குழு 1 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.  

கட்டுப்பாடான பந்துவீச்சு, திறமையான களத்தடுப்பு, சிறப்பான துடுப்பாட்டம் என்பன இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தின.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் ஆகிய பிரதான வீரர்கள் இருவர் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு பதிலாக ஆரமப வீரராக களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு இருந்த நெருக்கடியை நீக்கினார்.

நிஸ்ஸன்கவுக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அப் போட்;டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 128 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று சுப்பர் 12 சுற்றில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

25 பந்துகளை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து திறமையாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்;து இலங்கை வெற்றி அடைவதை உறுதி செய்தனர்.

குசல் மெண்டிஸ் 43 பந்தகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் 22 பந்துகளை எதிர்கொண்ட சரித் அசலன்க 2 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 31 ஒட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மமானித்தஅயர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் 6 பேரும் மிகத் திறமையாக பந்துவீசி குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அயர்லாந்தை கட்டுப்படுத்தினர்.

சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங், இளம் வீரர் ஹெரி டக்டர் ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

 லஹிரு குமாரவின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை 2ஆவது ஓவரில்  இழந்த அயர்லாந்து, வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு கடும் பிரயத்தனம் எடுத்தது.

 ஹெரி டெக்டர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்;து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் டொக்ரெலின் ஆட்டமிழப்புடன் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் சரிந்ததால் அயர்லாந்தினால் பலமான நிலையை அடைய முடியவில்லை.

துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 45 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 34 ஓட்டங்களையும் ஜோர்ஜ் டொக்ரெல் 14 ஓட்டங்களையும் லோர்க்கன் டக்கர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.  

இலங்கை பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 19 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க கருணாரட்ன, தனஞ்சய டி சில்வா ஆகியொர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

FfvJcqBWAAAojD_.png

https://www.virakesari.lk/article/138249

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 ஆயிரம் இரசிகர்கள் மத்தியில் இறுதிப் பந்துவரை பரபரப்பு : விராட்டின் அதிரடியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டது இந்தியா

23 OCT, 2022 | 06:11 PM
image

(நெவில் அன்தனி)

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் விளையாட்டரங்கில் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்திய குழு 2 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் அதிசயிக்கதக்க வகையில் வெற்றி ஈட்டியது.

விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

7ஆவது ஓவரில் இந்தியா 4ஆவது விக்கெட்டை ழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 31 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக இந்தியா தோல்வி அடையலாம் என பரவலாக கருதப்பட்டது.

ஆனால், தோல்விப் பாதையில் இருந்த இந்தியாவை விராத் கோஹ்லியும் ஹார்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்;டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து மீட்டெடுத்து அபார வெற்றிபெற வைத்தனர்.

கடைசி  ஓவரில் பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் மொஹமத் நவாஸ் இழைத்த தவறுகளும் இந்தியாவுக்கு பரபரப்பான வெற்றிக்கு வழிவகுத்தது.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நவாஸ் முதல் பந்தில் ஹார்திக்  பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றி பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டத்தை எடுத்து விராத் கோஹ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்த பந்தில் அவசரமான இரட்டையைப் பெற்ற விராத் கோஹ்லி, இடுப்புக்கு மேலாக வந்த 4ஆவது பந்தை சிக்ஸாக விளாசினார். அத்துடன் நோபோலுக்கான கேள்வியையும் எழுப்பினார். அதனை மத்தியஸ்தர் நோபாலாக அறிவிக்க, பாகிஸ்தான் வீரர்கள் மத்தியஸ்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், இறுதியில் மத்தியஸ்தர்களின் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து விளையாடினர்.

ஆனால் அடுத்த பந்து வைடானதால் தொடர்ந்து ப்றீ ஹிட் அமுலில் இருந்தது.

நவாஸின் 4ஆவது பந்து விக்கெட்டைப் பதம்பார்த்தபோதிலும் பந்து தேர்ட் மேன் திசையை நோக்கிச் செல்ல 3 உதிரி ஓட்டங்களை இந்தியா பெற்றது.

 

ஆனால், அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு அதிகரித்தது.

அடுத்தப் பந்து லெக் சைடில் வீசப்பட ரவிச்சந்திரன் அஷ்வின் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மத்தியஸ்தர் வைட் என அறிவித்தார்.

கடைசிப் பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட பாகிஸ்தான் களத்தடுப்பாளர்கள் 30 யார் வட்டத்திற்குள் நிறுத்தப்பட்டனர். ஆனால் கடைசிப் பந்தை அஷ்வின் நிதானத்துடன் உயர்தி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

விராத் கோஹ்லி 53 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஹார்த்திக் பாண்டியா 37 பந்துகளில் ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தானைப் போன்றே இந்தியாவின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (4) 2ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சிலும் கே. எல். ராகுல் (4) 4ஆவது ஓவரில் நசீம் ஷாவின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த சூரியகுமார் யாதவ் 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்மிழந்தார். இது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

துடுப்பாட்ட வரிசையில் அக்சார் பட்டேல் 5ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட அனுப்பப்பட்டார். ஆனால், அவர் இல்லாத ஓர் ஓட்டத்தை அவசரப்பட்டு எடுக்கு முயற்சித்து வீணாக விக்கெட்டை தாரை வார்த்தார். (31 - 4 விக்.)

இதன் காரணமாக இந்தியா படுதோல்வி அடையுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் 5ஆவது விக்கெட்டில் அதிரடியாக 113 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 20 ஓவரகளில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் பாபர் அஸாம் (0) 2ஆவது ஓவரிலும் மொஹமத் ரிஸ்வான் (4) 4ஆவது ஓவரிலும் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். (15 - 2 விக்.)

ஆனால். அதனைத் தொடர்ந்து ஷான் மசூத், இப்திகார் அஹ்மத் ஆகிய இருவரும் பொறுப்பாகவும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானைப் பலப்படுத்தினர்.

இப்திகார் அஹ்மத் 34 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்கடையும் வீழ்ந்தினர். (120 - 7 விக்.)

எனினும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷான் மசூதுடன் 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷஹீன் ஷா அப்றிடி 31 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார். ஷஹீன் ஷா அப்றிடி 16 ஓடட்ங்களைப் பெற்றிருந்தபோது கடைசி ஓவரில் புவ்ணேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அவரிடமே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷான் மசூத் 42 பந்தகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

ஹரிஸ் ரவூப் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/138279

large.1445451291_t20pt23-10.JPG.feba0fea

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.t20mr.JPG.791c14cca140f4722917f4bc

large.t20mw.JPG.0aad00df7aec5b2c03f646aa

இன்றைய 23/10/2022 அதிக ஓட்டம், அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 10 வீரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி: வெற்றியின் முகவராக மீண்டும் உயிர்த்தெழுந்த நாயகன்

  • அ.தா.பாலசுப்ரமணியன் & அஸ்ஃபாக் அகமது
  • பிபிசி தமிழ்
23 அக்டோபர் 2022, 14:28 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோலி

பட மூலாதாரம்,QUINN ROONEY/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆட்ட நாயகன் கோலி.

சில கிரிக்கெட் வீரர்கள் ஸ்கோர் செய்வதில் கெட்டிக்காரர்கள். சோதனைகள் ஏதுமற்ற நிதானமான களத்தில் அற்புதமான ஷாட்களை செதுக்கி அவர்கள் தங்கள் சாதனை வரலாற்றை எழுதுவார்கள். ஆனால், விராட் கோலிகள், மகேந்திர சிங் தோனிகள், யுவராஜ் சிங்குகள் வேறு வகை உயிரினங்கள்.

களம் கொதித்துக்கொண்டிருந்தாலும், அணி படுகுழியில் இருந்தாலும் நிதானம் தவறாமல், பதறாமல் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, உடன் நிற்கும் வீரரின் தோளைத் தட்டிக் கொடுத்து, புலியின் வாய்க்குள் சென்றுவிட்ட ஆட்டின் தலையை உயிரோடு மீட்பது போல அழகாக வெற்றியை மீட்டுவிடும் அசகாய சூரர்கள் இவர்கள்.

இந்த வகை வீரரான விராட் கோலி, நீண்ட நாள்களாக ஃபார்மில் இல்லாமல் இருந்தது அவருக்கும், அணிக்கும் கவலையளிக்கும் விஷயமாக இருந்துவந்தது.

சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தான் ஃபார்முக்கு மீண்டுவிட்ட செய்தியை கூறிவிட்டார் விராட் கோலி.

 

ஆனால், அது சாதாரண அறிவிப்பு. இப்போது ஆஸ்திரேலியாவில் அவர் செய்திருப்பது பிரகடனம்.

டி20 உலகக் கோப்பை தொடர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். ஆஸ்திரேலிய ஆடுகளம். அணி கடும் சோதனையில் சோதனையில் சிக்கிய தருணம். ஃபார்முக்குத் திரும்பியதை ஒருவர் பிரகடனம் செய்வதற்கு இதைவிட பொருத்தமான நேரம் எது?

விக்கெட்டுகள் உதிர்ந்துகொண்டிருந்த நிலையில், ஒரு முனையில் நிதானமாக நின்று அணியை தோல்வியின் புதைகுழியில் இருந்து மீட்டு, தன்னையும் ஃபார்முக்கு மீட்டுக்கொண்ட விராட் கோலி, இந்த வெற்றியை கண்ணீரோடு கொண்டாடியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

 

சிவப்புக் கோடு

ஆம் இந்த நாள் இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றிலும், கோலியின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத நாளாகத்தான் இருக்கப் போகிறது.

விராட் கோலிக்கு மட்டுமல்ல, அவரை உயிர் மூச்சாக பின்தொடரும் அவரது ரசிகர்களின் கன்னங்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியிருக்கும்.

காணொளிக் குறிப்பு,

தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தி ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நிகரான எதிர்பார்ப்புடன் நடைபெற்ற பாகிஸ்தானுடனான சூப்பர் 12 ஆட்டத்தில், விராட் கோலி செய்த பங்களிப்பு கிரிக்கெட் வரலாற்றின் ஒளிமயமான பக்கங்களில் ஒன்று.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், சேவாக், ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் இன்றைய போட்டியை கிரிக்கெட் வரலாற்றின் சிறந்ததொரு ஆட்டமாக வர்ணித்துள்ளனர்.

'அவர் அழுததைப் பார்த்ததில்லை'

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்தியாவை தனது அதிரடியான ஷாட்களால் மீட்டெடுத்திருக்கிறார் கோலி. 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகனை, ரோஹித் சர்மா தனது தோளில் தூக்கி வைத்து கொண்டாடியது ரசிகர்களை உணர்ச்சிவயப்படுத்தியது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆட்டம் முடிந்ததும் தனக்கே உரிய பாணியில் தரையில் ஓங்கி அடித்து உணர்ச்சிவசப்பட்டதோடு கோலியின் கண்களும் கலங்கியிருந்தன. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட விராட் கோலிக்கு இந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டம் ஓர் உற்சாக டானிக்.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,QUINN ROONEY/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

விராட் கோலி

"இது மாயம் போல இருந்தது. எனக்கு சொற்களே இல்லை. அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. எனக்கு உண்மையில் சொற்களே வரவில்லை. இறுதிவரை களத்தில் நின்றால் நம்மால் முடியும் என ஹர்திக் நம்பினார். ஷாஹின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடிவு செய்தோம். ஹாரிஸ் பாகிஸ்தானின் முதன்மையான பந்துவீச்சாளர். அவரது ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தேன். கணக்கு ரொம்ப சிம்பிள். நவாஸ் பந்துவீச மீதம் ஒரு ஓவர் இருந்தது. ஹாரிஸ் ஓவரை பிளந்துகட்டினால், அவர்கள் பயந்துவிடுவார்கள். அதைதான் நானும் செய்தேன். இதுநாள் வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் ஆடியது மறக்க முடியாததாக இருந்தது. ஆனால் அதைவிட ஒருபடி மேல் இன்றைய ஆட்டம் அமைந்தது" என்றார் விராட் கோலி.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

வெல்லவே முடியாது என்கிற சூழலிலும் நம்பிக்கையை துளிர்விடச் செய்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த விராட் கோலி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையிலேயே மிகச்சிறப்பான விருந்தை படைத்திருக்கிறார்.

விராட் கோலியை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.. நான் ஒருபோதும் அவர் அழுததை கண்டதில்லை. நான் இன்று அதை பார்த்தேன். இது மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே.

உங்கள் வாழ்க்கையிலேயே இதுதான் மறக்க முடியாத ஆட்டம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு விருந்தாக அமைந்தது. முக்கியமாக ரவுஃப் வீசிய 19வது ஓவரில் பேக் ஃபூட்டில் நீங்கள் அடித்த அந்த சிக்ஸ், கண்கொள்ளா காட்சியாக அமைந்தது என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டினார்.

தலை வணங்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

The KING is back . Take a bow, Virat Kohli (அரசர் மீண்டும் வந்தார். தலைவணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் விராட் கோலி) என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டு தலை வணங்கியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

டி20 இன்னிங்ஸில் நான் பார்த்ததிலேயே இதுதான் ஒரு சிறந்த இன்னிங்ஸ் என முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். கோலி நெருக்கடியை சந்தித்த சமயங்களில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். கோலியின் இன்றைய ஆட்டம், form is temporary and class is permanent என்பதற்கான ஒரு நினைவூட்டலாக அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி ஆடிய விதத்திற்கு ஹேட்ஸ் ஆஃப். இந்தியாவுக்காக அவர் விளையாடியதில் இது மிகவும் சிறப்பான ஆட்டம். பார்ப்பதற்கே நன்றாக இருந்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-63366505

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாட்சில்

IMG-20221024-075904.jpg

இவர்கள் இருவரும்

IMG-20221024-075816.jpg

உருண்டு உருண்டு , பிரண்டு பிரண்டு , குப்புற கவுண்டு கவுண்டு அடிப்பினம்.. ஏதோ ஒரு கொமடி பீஸு சிக்க போகுது..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 WorldCup 2022 : ”என் வாழ்க்கையின் சிறந்த போட்டி இதுதான்!” – விராட் கோலி

christopherOct 23, 2022 20:03PM
virat-kohli-6.jpg

”உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டி தான் எனது வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸ்” என்று ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்போர்ன் மைதானத்தில் மோதின.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்களை குவித்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றியை உறுதி செய்த கோலி – ஹர்திக் ஜோடி!

எளிதாக வென்று விடலாம் என்று எதிர்பார்த்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (4), ரோகித் சர்மா (4), சூர்யகுமார் யாதவ் (15) மற்றும் அக்‌ஷர் பட்டேல் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

virat-kohli-2-1.jpg

இந்நிலையில் தான் விராட்கோலி-ஹர்திக் பாண்டியா கூட்டணி இந்திய அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர்.

இந்த ஜோடி 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

virat-kohli1.jpg

நம்பிக்கை கொடுத்த பாண்டியா!

அப்போது தனக்கும் பாண்டியாவுக்கும் இடையேயான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், “இது நம்ப முடியாத சூழலாக இருக்கிறது. பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எப்படி நடந்தது என்பதே எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியா 4 விக்கெட்களை இழந்தவுடன் என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்போது ஹர்திக் பாண்ட்யாதான் எனக்கு பக்க பலமாய் இருந்தார்.

என்னிடம் தொடர்ச்சியாக, ’விராட், நாம் கடைசி வரை நின்று விளையாடினால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும்’ என கூறிக் கொண்டே இருந்தார். அதற்கேற்றார் போலவே ஒவ்வொரு ஓவரிலும் தனி தனியாக திட்டமிட்டு விளையாடினோம். நம்பிக்கை இல்லாத எனக்கு ஹர்திக்கின் வார்த்தைகள் மாற்றத்தை கொடுத்தது.

virat-kohli-3.jpg

சிறந்த இன்னிங்ஸ் இதுதான்!

எங்களது கணக்கீடு எளிமையாக இருந்தது. பெவிலியன் முடிவில் இருந்து ஷாஹீன் அப்ரிடி பந்துவீசியபோது, அவரை வீழ்த்த முடிவு செய்தோம். நவாஸ் பந்து வீச ஒரு ஓவர் இருந்தது. 

ஹரிஸ் அவர்களின் முதன்மை பந்துவீச்சாளர். அவர் ஓவரில் அடித்துவிட்டால் அவர்கள் பீதியடைவார்கள் என்று தெரியும். அதன்படியே அவர் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தேன். நினைத்தது மாதிரியே நடந்தது.

இன்று வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி தான் எனது சிறந்த இன்னிங்ஸ். ஆனால் இன்றைய ஆட்டத்தை அதைவிடவும் மேலாக நான் உணர்கிறேன். 

மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்திய ரசிகர்களின் கூட்டம் அமோகமாக இருந்தது. நீங்கள் (ரசிகர்கள்) தொடர்ந்து என்னை ஆதரித்தீர்கள், உங்கள் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

 

https://minnambalam.com/sports/this-is-my-best-innings-in-my-lifetime-virat-kohli/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் இது ஒரு மஜிக் வெற்றி.கோலி கப்றினாக இருந்த போது அவரைப் பிடிக்காது.ஆனால் நேற்று நிலமை வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான போட்டியில் நெதர்லாந்தை 9 ஓட்டங்களால் தோற்கடித்தது பங்களாதேஷ்

By DIGITAL DESK 5

24 OCT, 2022 | 02:46 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் ஹோபார்ட். பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவித்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று  குழு 2  கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 9 ஓட்டங்களால் வெற்றியை ஈட்டியது

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தெநர்லாந்து கடைவரை போராடி தோல்வியைத் தழுவியது.

Colin Ackermann got his first fifty at a T20 World Cup, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

கொலின் அக்கர்மன் பெற்ற அரைச் சதமும் 11ஆம் இலக்க வீரர் போல் வென் மீக்கெரெனின் முயற்சியும் வீண்போயின.

நெதர்லாந்தின் முதல் இரண்டு விக்கெட்கள் தஸ்கின் அஹ்மதின் முதலாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் வீழ்த்தப்பட அவ்வணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

தஸ்கின் அஹ்மத் வீசிய 4ஆவது ஓவரில் மேலும் 2 விக்கெட்கள் சரிய மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

Taskin Ahmed tries to get an LBW decision going his way, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து மிக மேதுவாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது. அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்துக்கொண்டிருக்க கொலின் அல்டர்மன் பொறுமையுடனும் அதேவேளை அவ்வப்போது அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி நெதர்லாந்துக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.

இந்திய வீரர் கோஹ்லி போன்று அக்கர்மன் அதிசயம் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரிடம் கோஹ்லி போன்று வீராவேசம் இருக்கவில்லை. அவர் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டமிழக்க (101 - 9 விக்.) நெதர்லாந்தின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு தகர்ந்துபோனது.

11ஆம் இலக்க வீரர் போல் வென் மீக்கெரென் 14 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 1 சிக்ஸுடன் 24 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் பங்களாதேஷின் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை.

கடைசி விக்கெட்டில் ப்ரெட் க்ளாசெனுடன் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த மீக்கெரென் கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய தஸ்கின் அஹ்மத் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

Nurul Hasan swoops in to break the stumps and run Tom Cooper out for a diamond duck, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, சௌம்யா சர்க்கார் ஆகிய இருவரும் 5.1 ஓவர்களில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க முதல் 5 விக்கெட்கள் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 25 ஓட்டங்களையும் சௌம்யா சர்க்கார் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

லிட்டன் தாஸ் (9), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (7), யாசிர் அலி (3) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

Afif Hossain added impetus to Bangladesh's innings, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

எனினும் அபிப் ஹொசெயன், நூருல் ஹசன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 120 ஓட்டங்களாக உயர்த்தினர்.

நூருள் ஹசன் 13 ஓட்டங்களையும் அபிப் ஹொசெய்ன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாசிர் அலி (3), தஸ்கின் அஹ்மத் (0) ஆகிய இருவரும் வந்தவேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.

Two in two: Taskin Ahmed sent back two Dutch batters off the first two balls of the chase, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

மொசாடெக் ஹொசெய்ன் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஒட்டங்களைப் பெற்று பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையை 144 ஓட்டங்களாக உயர்த்தினார்.

நெதர்லாந்து பந்துவீச்சில் போல் வென் மீக்கெரென் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138334

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா - சிம்பாப்வே போட்டியில் மழையின் ஆட்டம் : போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி

24 OCT, 2022 | 07:38 PM
image

 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் 9 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி, மூன்றாவது தடவையாக மழையினால் தடைப்பட்டபோது  ஆட்டம்  கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 80 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பின்னர் 7 ஓவர்களில் 64 ஓட்டங்களாக திருத்தப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்கா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஹொபார்ட், பெலேரிவ் விளையாட்டரங்கில் இன்று மாலை பெய்த மழை காரணமாக அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி இரண்டரை மணித்தியாலங்கள் தாமதித்து இரவு 9.35 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத்   தீர்மானித்த ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 80 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைப்பட்டது. குவின்டன் டி கொக் 7  பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 2ஆவது ஓவரில் வீசப்பட்ட முதலாவது பந்து நோ-போலாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டம் தொடர்ந்தபோது தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி 7 ஓவர்களில் 64 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தென் ஆபிரிக்கா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழந்பின்றி 40 ஓட்டங்களைக் குவித்திருந்த தென் ஆபிரிக்கா அடுத்த ஓவரில் நிதானத்தைக் கடைப்பிடித்து 11 ஓட்டங்களைப் பெற்றதால்  அதன் வெற்றி அற்றுப்போனது.

குவின்டன் டி கொக் 18 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அணித் தலைவர் டெம்பா பவுமா 2 பந்துகளில் 2 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்காவைத் தொடரும் துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை என்பதை  இது  உணர்த்துவதாக அமைந்தது.

 

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 9 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது.

அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்த ஸிம்பாப்வேயின் முதல் 3 வீரர்கள் ஆடுகளம் நுழைந்த வேகத்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றதுடன் மற்றொரு வீரர் ரன் அவுட் ஆனார்.

அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (2), ரெஜிஸ் சக்கப்வா (8), சிக்கந்தர் ராஸா (0), சோன் வில்லியமஸ் (1) ஆகியோரே அவசரத் துடுகையால் ஆட்டமிழந்தனர். அவர்கள் நால்வரும் களம் விட்டகன்றிருந்தபோது 3.4 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து வெஸ்லி மதேவியர், மில்டன் ஷும்பா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 32 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 79 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வெய்ன் பார்னல் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அன்ரிச் நோக்கியா 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138352

large.1912397920_t20pt24-10.JPG.df600ee9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது அவுஸ்திரேலியா

25 OCT, 2022 | 09:23 PM
image

 

இலங்கை அணி நிர்ணயித்த 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைய 3 விக்கெட்டுகளை மாத்திரம் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

பேர்த், ஒப்டஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 கிரிக்கெட்: போடடியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு 158 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுளால் வெற்றி பெற்றது.

https://www.virakesari.lk/article/138417

large.1692195356_t20pt25-10.JPG.dfe1dce9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் தயவால் இங்கிலாந்தை வெற்றிகொண்டது அயர்லாந்து 

26 OCT, 2022 | 02:44 PM
image

(நெவில் அன்தனி)

முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இயற்கை அன்னையின் தயவால்  அயர்லாந்து அதிர்ஷ்டகரமான வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் சாரலுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. போட்டி இரண்டாவது தடவையாக மழையினால் தடைப்பட்டதால் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்து 5 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.   எனவே, அயர்லாந்து 5 ஓட்டங்களால் அதிர்ஷ்டவசமாக வெற்றிபெற்றது.

ஒருவேளை கெரத் டிலேனி வீசிய 15ஆவது ஓவர் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் போட்டி முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும். ஏனெனில் அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் மொயீன் அலி 12 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 82 ஓட்டங்கள் அயர்லாந்து அணி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற வழிவகுத்தது.

பெல்பேர்னி 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்க சிக்ஸ்கள் உட்பட  62 ஓட்டங்களைக் குவித்ததுடன் லோர்க்கன் டக்கர் 27 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட கேர்ட்டிஸ் கெம்ஃபர் 17 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க் வூட் 34 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

158 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட போட்டி முடிவு டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தீர்மானிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

முதல் ஓவரிலேயே அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்ததுடன் 3ஆவது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார்.

பென் ஸ்டோக்ஸ் 6 ஓட்டங்களுடன் 6ஆவது ஓவரில் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் நிலைமை மேலும் மோசம் அடைந்தது.

இதனை அடுத்து டேவிட் மாலன் (35), ஹெரி ப்றூக் (18) ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க கடும் பிரயத்தனம் எடுத்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தபோது ஹெரி ப்றூக் ஆட்டமிழந்ததுடன் மேலும் 19 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு 19 ஓட்டங்கள் சேர்ந்தபோது டேவிட் மாலன் வெளியேறினார்.

அடுத்து களம் நுழைந்த டக்வேர்த் லூயிஸ் முறைமை நினைவில் கொண்டு அதிரடியில் இறங்கிய மொயீன் அலி 12 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிடவே அவரது முயற்சி வீண்போனதுடன் அயர்லாந்துக்கு அதிர்ஷ்டகரமான வெற்றி கிடைத்தது.

அயர்லாந்து பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/138459

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழு 1 அணிகள் நிலையில் இலங்கை 2 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

By VISHNU

26 OCT, 2022 | 08:40 PM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (26) நடைபெறவிருந்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

Untitled-1_copy.jpg

ஆட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன.

இந்தப் போட்டியுடன் குழு 1இல் இடம்பெறும் 6 அணிகளும் சுப்பர் 12 சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகளை நிறைவுசெய்துள்ளன.

இதற்கு அமைய குழு 1க்கான அணிகள் நிலையில் நியூஸிலாந்து 3 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.

அதேவேளை, அயர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததை அடுத்து அணிகள் நிலையில் இலங்கை 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அணிகள் நிலையில் தற்போது முறையே முதல் 3 இடங்களில் உள்ள நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து மற்றும் 5ஆம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிகளுக்கு முன்னேறு வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளக்கூடிய தீர்மானம் மிக்க போட்டிகள் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நடைபெறவுள்ளன.

அத்தடன் அணிகள்   நிலையில்   4ஆம் இடத்திலுள்ள அயர்லாந்துக்கும் கடைநிலையில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளன.

குழு 1 அணிகள் நிலை (26-10-2022 வரை)

https://www.virakesari.lk/article/138483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தை தோற்கடித்த்து இந்தியா !

27 OCT, 2022 | 05:17 PM
image

(நெவில் அன்தனி)

 

நெதர்லாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

விராத் கொஹ்லி, அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அணியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் கே. எல். ராகுல் 9 ஓட்டங்களுடன் 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோதிலும் அதன் பின்னர் 3 துடுப்பாட்ட வீரர்கள் அரைச் சதங்களைக் குவித்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 39 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றிய விராத் கோஹ்லி மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது தொடர்ச்சியான தடவையாக ஆட்டமிழக்காமல் அரைச் சதத்தைக் குவித்தார்.

ரோஹித் ஷர்மாவுடன் 2ஆவது விக்கெட்டில் 73  ஓட்டங்களைப்   பகிர்ந்த விராத் கோஹ்லி, பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 48 பந்துகளில் மேலும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

44 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

180 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் நெதர்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

டிம் ப்ரிங்ள் (20), கொலின் அக்கர்மன் (17), மெக்ஸ் ஓ'டவ்ட் (16), பாஸ் டி லீட் (16), ஷரிஸ் அஹ்மத் (16), போல் வென் மீக்கெரென் (14 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்ளைப் பெரும் அளவிற்கு துடுப்பாட்டத்தில் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.

பொறுப்பற்ற மற்றும் தவறான அடி தெரிவுகள் என்பனவே அவர்களது ஆட்டமிழப்புகளுக்கு காரணமாகின.

இந்திய பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அவரைவிட அக்ஸார் பட்டேல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்.

இந்தப் போட்டி முடிவுடன் குழு 2க்கான அணிகள் நிலையில் 2 வெற்றிகளுடன் இந்தியா +1.425 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் 4 புள்ளிகளைப் பெற்று   முதலிடத்தில் இருக்கிறது.

தென் ஆபிரிக்கா ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன்  3 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது. அதன் நிகர ஓட்ட வேகம் +5.200ஆக இருக்கிறது.

https://www.virakesari.lk/article/138548

Link to comment
Share on other sites

On 23/10/2022 at 22:36, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடுத்த மாட்சில்

IMG-20221024-075904.jpg

இவர்கள் இருவரும்

IMG-20221024-075816.jpg

உருண்டு உருண்டு , பிரண்டு பிரண்டு , குப்புற கவுண்டு கவுண்டு அடிப்பினம்.. ஏதோ ஒரு கொமடி பீஸு சிக்க போகுது..😢

நியூசிலாந்து 200 ஓட்டங்களை அவுஸ்திரேலியா மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வென்று விட்டு அமைதியாக அடுத்த போட்டிக்கு தயாராகிறார்கள்.  கிந்திய குழு ஏதோ ஒரு போட்டியை வென்று விட்டு வாய் வீரத்துக்கு மட்டும் ஒரு குறைவும் இல்லை. அதற்குள் பிபிசியின் துதிபாடல் சொல்லவே தேவை இல்லை.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சதத்தை பதிவுசெய்த ரில்லி ரூசோ

By NANTHINI

27 OCT, 2022 | 05:11 PM
image

(எம்.எம். சில்வெஸ்டர்)

வுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி.யின் 8ஆவது உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது சதத்‍தை தென் ஆபிரிக்காவின் ரில்லி ரூசோ அடித்து அசத்தினார்.

மேலும், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் பதிவான 10ஆவது சதமும் இதுவாகும்.

இதற்கு முன்னர், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் (117 & 100) இரண்டு சதங்களும்,  இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101), இலங்கையின் மஹல ஜயவர்தன (100), நியூஸிலாந்தின் பிரெண்டன் மெக்கலம் (123), இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (116), பாகிஸ்தானின் அஹமட் ஷேஷாட் (111), பங்களாதேஷின் தமீம் இக்பால் (103), இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (101) ஆகியோர் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் குவித்த வீரர்களாக உள்ளனர். 

இந்நிலையில், இப்போட்டித் தொடரின் 22ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை தென் ஆபிரிக்கா அணி ‍எதிர்கொண்டது. சிட்னியில் இன்று (ஒக் 27) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 205 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் ரில்லி ரூசோ 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களை விளாசினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்கவே, தென் ஆபிரிக்க அணி 104 ஓட்டங்களால் இமாலய வெற்றியை ஈட்டியது.

https://www.virakesari.lk/article/138533

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்ற ஸிம்பாப்வே

27 OCT, 2022 | 09:23 PM
image

 

(நெவில் அன்தனி)

பேர்த், மேற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (27) கடைசிவரை விறுவிறுப்பைத் தோற்றுவித்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை கடைசிப் பந்தில் ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட  ஸிம்பாப்வே, இந்த வருட உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய தலைகீழ் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்தது.

 

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய  முதல் சந்தர்ப்பத்திலேயே ஸிம்பாப்வே வெற்றிபெற்று பெருமை தேடிக்கொண்டது.

அத்துடன் எட்டாவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பாகிஸ்தான் அடுத்தடுத்த போட்டிகளில் கடைசிப் பந்தில் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஸிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று  முற்றிலும் எதிர்பாராத தோல்வியைத் 

ஸிம்பாப்வேயைப் போன்று பாகிஸ்தானின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

அணித் தலைவர் பாபர் அஸாம் (4), மொஹமத் ரிஸ்வான் (14), இப்திகார் அஹ்மத் (5) ஆகியோர் ஆட்டமிழக்க 8அவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து 14ஆவது ஓவரில் ஷதாப் கான் (17), ஹய்தர் அலி (0) ஆகிய இவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷான் மசூத் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் பெரும் நெருக்கடிக்குள்ளானது. (94 - 6 விக்.)

கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 32 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதமிருந்தது.

இங்கராவா வீசிய 17ஆவது ஓவரில் 3 ஓட்டங்களும் முஸராபனி வீசிய 18ஆவது ஓவரில் 7 ஓட்டங்களும் பெறப்பட்டன. ஆனால் இங்கராவா வீசிய 19ஆவது ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ப்றெட் இவான்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 2, 4, 1 என ஓட்டங்கள் பெறப்பபட்டது  . ஆனால், 4ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மொஹமத் நவாஸ், 5ஆவது பந்தை மிட் ஒவ் நிலைக்கு மேலாக அடிக்க முயற்சித்து ஏர்வினிடம் பிடிகொடுத்து 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

அதுவே ஸிம்பாப்வே அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. 

கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தும் நோக்கில் 2ஆவது ஓட்டத்தை எடுக்க முயற்சித்த ஷஹீன் ஷா அப்ரிடி, ரன் அவுட் ஆக, ஒரு ஓட்டத்தால் பாகிஸ்தான் தொல்வி அடைந்தது.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றெட் இவான்ஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதைத் தெரிவு செய்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி மெதேவியர் (17), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (19) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஒரு  ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டமிழந்த பின்னர் மொத்த எண்ணக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது மில்டன் ஷும்பா 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து 14ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கையை 95 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால் அதே மொத்த எண்ணிக்கையில் நான்கு விக்கெட்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சரிந்தன.

13ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்களையும் 14ஆவது ஓவரில் 3ஆவது, 4ஆவது பந்தகளில் 2 விக்கெட்களையும் இழந்ததால் ஸிம்பாப்வே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

சோன் வில்லியம்ஸ் (31), ரெஜிஸ் சக்கப்வா (0), சிக்கந்தர் ராஸா (9), லூக் ஜொஹ்வே (0) ஆகியோரே அடுத்தடுத்து ஆட்டமிழந்தவர்களாவர். (95 - 7 விக்.)

இந் நிலையில் ரெயான் பியூரி (10 ஆ.இ.), ப்றட் இவான்ஸ் (19) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைத் தடுத்தனர்.

ரிச்சர்ட் இங்கராவா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் வசிம் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138550

large.1640499340_t20pt27-10.JPG.decc9bb6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலசாலிகளை அசத்திய அயர்லாந்தை ஆப்கானிஸ்தான் இன்று சந்திக்கிறது

By DIGITAL DESK 5

28 OCT, 2022 | 09:52 AM
image

(என்.வீ.ஏ.)

 

இங்கிலாந்துக்கு எதிராக மெல்பர்னில் ஈட்டிய மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில் மேலும் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி அக்குழுவில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அயர்லாந்துக்கு உருவாகியுள்ளது.

ஆனால், ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய ஆப்கானிஸ்தானுடான இன்றைய போட்டியில் அயர்லர்நது வெற்றிபெறத் தவறினால் அந்த வாய்ப்பு அற்றுப்போகும்.

இந்த இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது அந்தத் தொடர் மிகவும் பரபரப்வை தோற்றுவித்ததுடன் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றிபெற்ற அயர்லாந்து தொடரை 3 - 2 என தனதாக்கிக்கொண்டிருந்தது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 23 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் 16 - 6 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. சமநிலையில் முடிவுற்ற போட்டியிலும் சுப்பர் ஓவரில் அயர்லாந்துக்கு தோல்வியே கிடைத்தது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். எனவே, மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கும்.

இந்த விளையாட்டரங்கில் ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த சுழ்பந்துவிச்சாளர்கள் (ராஷித் கான், மொஹமத் நபி, முஜீப் உர் ரஹ்மான்) மூவரும் அயர்லாந்துக்கு பெரும் சவால் விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு அவசியமான வியூகங்களை அயர்லாந்து பிரயோகிக்கும் என்பது உறுதி.

ஒட்டுமொத்தத்தில் இந்தப் போட்டியில் எந்த அணி தவறுகள் இழைக்காமல் மிகச் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றிவாய்ப்பு கிடைக்கும்.

அணிகள்

Live Cricket Score - Afghanistan vs Ireland, Super 12, T20 World Cup 2022 |  Cricbuzz.com

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், உஸ்மான் கானி, நஜிபுல்லா ஸத்ரான், மொஹமத் நபி (தலைவர்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பரீத் அஹ்மத் மாலிக், பஸால்ஹக் பாறூக்கி.

Afghanistan vs Ireland Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11  Team, Playing XI, Pitch Report, Injury Update- ICC Men's T20 World Cup 2022

அயர்லாந்து: போல் ஸ்டேர்லிங், அண்ட்றூ பெல்பேர்னி (தலைவர்), லொர்க்கன் டக்கர், ஹெரி டக்கர், ஜோர்ஜ் டொக்ரெல், கேர்ட்டிஸ் கெம்ஃபர், கெரத் டிலேனி, மார்க் அடயார், சிமி சிங், பெறி மெக்கார்த்தி, ஜொஸ் லிட்ல்.

https://www.virakesari.lk/article/138556

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.