Jump to content

அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை

By RAJEEBAN

14 SEP, 2022 | 11:32 AM
image

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட  அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகளை நினைத்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ள உலக தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அதன் பின்னர் சாத்தியமற்ற வாய்ப்புகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு உதவும் எங்கள் நோக்கம் தடைகள் தொடர்வது நீக்கப்படுவதற்கு அப்பாற்பட்டது என  குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வருடம் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களிற்கு பின்னர் கொவிட் பெருந்தொற்றினால் இலங்கையர்கள் பலர் பலியான வேளை உலக தமிழர் பேரவை இலங்கை மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக காணப்பட்ட 2.6மில்லியன் பெறுமதியான செயற்கை சுவாசக்கருவிகளை வழங்கியது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தடைகள் நாங்கள் உதவிகளை வழங்குவதை தடுக்கவில்லை,எனினும் இந்த தடை காரணமாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எங்கள் உதவிகளை நிராகரித்தனர் என குறிப்பிட்டுள்ள சுரேன்சுரேந்திரன் எங்கள் சலுகைகள் மற்றும் விலையுயர்ந்த மற்றும் அவசரமாக தேவைப்படும் உபகரணங்களை வேறு நாடுகளிற்கு வழங்குமாறு எழுத்துபூர்வமாக கோரினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 இல் இலங்கையின் தென்பகுதி வெள்ளத்தின் போது சிங்கள கிராமங்களான மாத்தறை களுத்துறைக்கு உதவுவதற்கு உலக தமிழர் பேரவை மருத்துவ பணியாளர்கள் மருந்துகளை அனுப்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் இலங்கையின் அனைத்து சமூகங்களிற்கும் நாங்கள் உதவுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளோமா இல்லையா என்பது பொருட்டல்ல என்பதை புலப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் இலங்கை அரசாங்கம் தடையை அகற்றும் தடையை அறிவிக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக இலங்கையின் இந்த தன்னிச்சையான அர்த்தபூர்வமற்ற நடவடிக்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனதெரிவித்துள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் நாங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு உதவி வழங்கினோம் என தெரிவித்து சில புலம்பெயர் அமைப்புகளையும் தனி நபர்களையும் தடை செய்தது,எனவும் அர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் நபர்கள் பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் இலங்கை முன்வைக்கவில்லை, இலங்கை தன்னிடமிருந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நபர்கள் அமைப்புகளிற்கு தெரியப்படுத்தி  அவர்கள் தங்கள் சார்பில் தடைக்கு எதிராக வாதாடுவதற்கான  வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்,எனினும் இந்த நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் தடைகள் விதிக்கப்பட்டன எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடை நடவடிக்கை தன்னிச்சையானது அர்த்தபூர்வமற்றதுஐநாவின் விதிமுறைகளைமுற்றாக மீறுவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தடையை முற்றாக புறக்கணித்தன,சில தரப்பினர் இது தன்னிச்சையானது நிராகரிக்கின்றோம் என  அறிக்கைகளை வெளியிட்டனர் அதேவேளை ஏனைய அரசாங்க அதிகாரிகள் பகிரங்கமாக எங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/135617

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் அதிகார பகிர்வு தரப்போவதில்லை.....நீங்கள் முதலீடு செய்யப்போதுமில்லை

செய்யப்போவதுமில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

உவர் ஒரு புரட்டுக்காரன். 

வெளியால சொல்லுற மாதிரி சொல்லிப்போட்டு அங்க எல்லாத்தையும் செஞ்சிருப்பாங்கள்.😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருதான் புலம்பெயர் தமிழரின்....நம்பிக்கை நிதியமோ?........நேரத்திற்கு ஒரு கதை சொல்லுவார்...இவருடைய இருப்பிடமே ..ஐ. நா. தானோ...அல்லது தமிழரி ன் வைப்புக்கள் எல்லாம் இவர்மூலம்தான் கையாளப்படுகிறதோ...புரியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது  சரி

அதுதான் தேவையும் கூட

(யார்  சொல்கிறார்  என்பதல்ல  என்ன  சொல்கிறார் என்பதே முக்கியம்)

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அவர் சொல்வது  சரி

அதுதான் தேவையும் கூட

(யார்  சொல்கிறார்  என்பதல்ல  என்ன  சொல்கிறார் என்பதே முக்கியம்)

சரி விசுகர்...நியாயம்தான்...இவரு நாளைக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு கதை கதைப்பார் பாருங்கள்...இவ்ரை2009 முதல் அவதானித்தபடியே இருக்கின்றேன்..தன்னிச்சையான கருத்துக்களை கூறி....தலைவனாக காட்ட முயல்வது...இத்வெ எனது கருத்துக்கு காரணம்..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

உவர் ஒரு புரட்டுக்காரன். 

வெளியால சொல்லுற மாதிரி சொல்லிப்போட்டு அங்க எல்லாத்தையும் செஞ்சிருப்பாங்கள்.😏

இலங்கையில் புலம்பெயர் தமிழர் முதலீடு செய்வது எப்போதுமே எமக்கு நன்மைதான். 

இவர் கூறும் முதலீடு இலங்கை அரசை உயிர் பிழைக்க வைக்கும் நடவடிக்கையுடன் தொடர்புபட்டது. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

சரி விசுகர்...நியாயம்தான்...இவரு நாளைக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு கதை கதைப்பார் பாருங்கள்...இவ்ரை2009 முதல் அவதானித்தபடியே இருக்கின்றேன்..தன்னிச்சையான கருத்துக்களை கூறி....தலைவனாக காட்ட முயல்வது...இத்வெ எனது கருத்துக்கு காரணம்..

எனக்கும் இவரைப் பற்றி தெரியும் ஆனால் அவர் சொல்லும் தொடக்கம் சரி. இறுதி வரைவு என்பது இன்னும் ஆயிரம் படிகளை தாண்டணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இவர் கூறும் முதலீடு இலங்கை அரசை உயிர் பிழைக்க வைக்கும் நடவடிக்கையுடன் தொடர்புபட்டது. 

உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை

By RAJEEBAN

14 SEP, 2022 | 11:32 AM
image

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட  அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகளை நினைத்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ள உலக தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அதன் பின்னர் சாத்தியமற்ற வாய்ப்புகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு உதவும் எங்கள் நோக்கம் தடைகள் தொடர்வது நீக்கப்படுவதற்கு அப்பாற்பட்டது என  குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வருடம் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களிற்கு பின்னர் கொவிட் பெருந்தொற்றினால் இலங்கையர்கள் பலர் பலியான வேளை உலக தமிழர் பேரவை இலங்கை மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக காணப்பட்ட 2.6மில்லியன் பெறுமதியான செயற்கை சுவாசக்கருவிகளை வழங்கியது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தடைகள் நாங்கள் உதவிகளை வழங்குவதை தடுக்கவில்லை,எனினும் இந்த தடை காரணமாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எங்கள் உதவிகளை நிராகரித்தனர் என குறிப்பிட்டுள்ள சுரேன்சுரேந்திரன் எங்கள் சலுகைகள் மற்றும் விலையுயர்ந்த மற்றும் அவசரமாக தேவைப்படும் உபகரணங்களை வேறு நாடுகளிற்கு வழங்குமாறு எழுத்துபூர்வமாக கோரினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 இல் இலங்கையின் தென்பகுதி வெள்ளத்தின் போது சிங்கள கிராமங்களான மாத்தறை களுத்துறைக்கு உதவுவதற்கு உலக தமிழர் பேரவை மருத்துவ பணியாளர்கள் மருந்துகளை அனுப்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் இலங்கையின் அனைத்து சமூகங்களிற்கும் நாங்கள் உதவுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளோமா இல்லையா என்பது பொருட்டல்ல என்பதை புலப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் இலங்கை அரசாங்கம் தடையை அகற்றும் தடையை அறிவிக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக இலங்கையின் இந்த தன்னிச்சையான அர்த்தபூர்வமற்ற நடவடிக்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனதெரிவித்துள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் நாங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு உதவி வழங்கினோம் என தெரிவித்து சில புலம்பெயர் அமைப்புகளையும் தனி நபர்களையும் தடை செய்தது,எனவும் அர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் நபர்கள் பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் இலங்கை முன்வைக்கவில்லை, இலங்கை தன்னிடமிருந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நபர்கள் அமைப்புகளிற்கு தெரியப்படுத்தி  அவர்கள் தங்கள் சார்பில் தடைக்கு எதிராக வாதாடுவதற்கான  வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்,எனினும் இந்த நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் தடைகள் விதிக்கப்பட்டன எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடை நடவடிக்கை தன்னிச்சையானது அர்த்தபூர்வமற்றதுஐநாவின் விதிமுறைகளைமுற்றாக மீறுவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தடையை முற்றாக புறக்கணித்தன,சில தரப்பினர் இது தன்னிச்சையானது நிராகரிக்கின்றோம் என  அறிக்கைகளை வெளியிட்டனர் அதேவேளை ஏனைய அரசாங்க அதிகாரிகள் பகிரங்கமாக எங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/135617

இப்படி புலம்பெயர் தமிழர்கள் சொன்னால்   இலங்கை அரசாங்கம் உன்னோட முதலீடுகள் வேண்டாம் உனக்கு அதிகாரப்பங்கீடுமில்லை என்று பதில் தரலாம்   நாங்கள் என்ன செய்ய முடியும்?.  ..எனவே… முதலீடு செய்தாலும் செய்ய விட்டாலும்   தீர்வு என்பது கண்டிப்பாக உடனடியாக முன் வைக்க படவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அவர் சொல்வது  சரி

அதுதான் தேவையும் கூட

(யார்  சொல்கிறார்  என்பதல்ல  என்ன  சொல்கிறார் என்பதே முக்கியம்)

யார் என்ன சொல்கிறார் என்பது முக்கியமல்ல இவரின் கூட்டு, வாக்கு நிலைப்பு சொன்ன சொல்லில் நிலைத்து நிற்பாரா என்பது முக்கியம். இன்று ஒன்று நாளை வேறொன்று பேசுபவரின் வார்த்தை பயனற்றது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.