Jump to content

தேசிய, சர்வதேசிய கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய, சர்வதேசிய கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை

 
3000-scaled.jpeg?resize=1200%2C550&ssl=1

Photo, (AP Photo/Eranga Jayawardena)

கடந்த ஜூலையில் உச்சக்கட்டத்தை அடைந்த மக்கள் போராட்ட இயக்கத்துக்கு எந்த அளவிலாவது  தலைமைத்துவத்தை வழங்கியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் நிலையாக தொடருகின்றன. மிகவும் இறுதியாக கைதானவர் விருது பெற்ற ஒரு நடிகை. ஜனாதிபதி மாளிகை போராட்டக்கார்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர் அதற்குள் பிரவேசித்திருத்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அவர் ஒரு துடிப்பான பேச்சாளராகவும் இருந்தார். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவது தற்போதைய அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும். அது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஆனாலும், அடக்குமுறை தொடருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் விவேகமற்றவர்கள் என்பதனால் அல்ல, தங்களது நலன்களைப் பாதுகாப்பதில் அவர்கள் விவேகமானவர்கள் என்பதனாலேயே அவ்வாறு நடைபெறுகிறது. அவர்கள் நீண்டகாலம் பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடிய முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்று அவர்கள் உணர்ந்து செயற்படுகிறார்கள். பழைய மாதிரியான ஆட்சிமுறைக்கு சாத்தியமானளவு விரைவாக திரும்புவதற்கும் அவர்கள் விரும்புகிறார்கள்.

ஏற்கெனவே பதவிகளை வகிக்கும் 21 அமைச்சர்களுக்கு மேலதிகமாக 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களில் பலர் ஊழல் நடவடிக்கைகளிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க மீள்வருகை. மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவர்கள் பதவிகளில் இருந்து விரட்டப்பட்டார்கள்.

அடுத்த தேர்தல்கள் வரை ஒரு இடைக்காலத்துக்கு 15 க்கும் மேற்படாத அமைச்சர்களுடன் கூடிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முனானாள் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களின் தொகை 60 க்கும் அதிகமாகக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அவர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் எஞ்சியவர்கள் வேறு கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களாகவும் இருப்பர். இது “சர்வகட்சி அரசாங்கம் ” என்பதை கேலிக்கூத்தாக்குகிறது.

உண்மையில், போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர முக்கியமான சகல கட்சிகளும் அவற்றின் சுயநலன்களுக்காகவே செயற்படுகின்றன என்றுதான் கூறவேண்டும்.பொருளாதார இடர்பாடுகளினாலும் விரைவான மாற்றத்துக்கான இலட்சியத்தாலும் தூண்டப்பட்ட உணர்வுகளினால் போராட்டக்காரர்கள் கட்டுண்டார்கள். தேசிய நலனுக்காக சிந்தித்ததற்காகவும் ஊழல்தனமான அரசியல் தலைவர்களை பதவிகளில் இருந்து விரட்டிவிட்டு முறைமை மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று கோரியதற்காகவும் அவர்கள் இப்போது ஒவ்வொருவராக ‘விலையை’ செலுத்திக்கொண்டிருக்கிற்ர்கள். அரசாங்கத்தின் கைகளில் சட்ட அதிகாரமும் இராணுவ பலமும் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டிருந்த போதிலும் கட இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க போராட்ட இயக்கத்தவர்கள் பயப்படவில்லை.

மறுபுறத்தில் அரசாங்கம் அதன் சொந்த நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டு சலுகை அரசியலின் மூலமாக அதன் நாடாளுமன்ற பெரும்பான்மையை பேணுவதில் அக்கறையுடன் செயற்படுகிறது. ஆளும் கட்சி அதன் தன்னலத்துக்காக ஜனாதிபதி மீது பிரயோகித்த நெருக்குதல் காரணமாகவே அவர் பெரும் எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமித்தார். அந்த அமைச்சர்களில் அறகலய மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அரசாங்கத்தில் இருந்து பதவி விலகியவர்களும் சொந்த கட்சிகளின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்தவர்களும் அடங்குகிறார்கள். அவர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லாதவர்கள்.

ஆர்ப்பாட்டத்தை குற்றமாக்குதல்

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியே உண்மையில் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்த 2/3 பெரும்பான்மையில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிரிந்து சென்றிருக்கும் குழுக்கள் தங்களை பெரும்பான்மையினராக அணிதிரட்டி அரசாங்கத்தை தோற்கடிக்கக்கூடியவர்களாக இல்லை. அமைச்சர் பதவியை இன்னமும் பெறாமல் இருக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருப்பதால் அண்மைய எதிர்காலத்தில் மேலும் அமைச்சர்கள் நியமிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்கள், வீடுகள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் நியமனம் என்று இந்த அமைச்சர்களுக்கான வசதிகளுக்காக பெருமளவு பணம் செலவாகிறது. தேசிய வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு அரசாங்கம் கடுமையாக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அமைச்சர்களுக்கான இந்த செலவுகள் பெரும் வீண்விரயமாகும்.

போராட்ட இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறையின் பின்புலத்தில் நோக்கும்போது அரசாங்கம் மீது மக்கள் எதிர்ப்பு கிளம்புவதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை. இது அரசியல் உறுதிப்பாடு ஏற்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. அரசாங்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அதன் முயற்சிகளில் பயனைக் கண்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை முழுப்பலத்துடன் பயன்படுத்துவதன் மூலம் இதை அரசாங்கம் சாதித்திருக்கிறது.

அரசாங்கத்திடம் இருக்கும் ‘ஆயுதங்களில் ‘ பிரதானமான சட்ட ஆயுதம் பயங்கரவாத தடைச்சட்டமாகும். வடபகுதியில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ் தீவிரவாதத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு தற்காலிகமான ஒரு ஏற்பாடாகவே இந்தச் சட்டம் 1979ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. போராட்ட இயக்க தலைவர்கள் சிலருக்கு எதிராக இந்தச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமகள் குழுக்களிடம் இருந்தோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளிடம் இருந்தோ வந்திருக்கக்கூடிய ஆட்சேபனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்திருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாதத்தின் அர்த்தத்தை வரைவிலக்கணம் செய்யவில்லை. ஆனால் அரசாங்கம் பயங்கரவாதத்தை வரைவிலக்கணம் செய்வதில் நிராயுதபாணிகளினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தையும் சேர்த்திருக்கிறது.

மக்கள் ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் குற்றச்செயலாகக் கருதி அடக்குமுறையை மேற்கொள்கிறது. அதன் காரணத்தினால்தான் மக்களின் பொருளாதார நிலைமை தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டு  போகின்றபோதிலும் கூட இப்போது போராட்ட இயக்கம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கான அறிகுறியைக் காணவில்லை. போராட்ட இயக்கத் தலைவர்களை அரசாங்கம் இலக்கு வைப்பதனால் (6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதைப் போன்று) திட்டமிடப்படாத முறையிலும் தன்னெழுச்சியாகவும் பொதுமக்கள் குழுக்கள் எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கக்கூடியதாக இருக்கும்.

போராட்ட இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்தவர்களும் போராட்டங்களின்போது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுமாக 4000 க்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருக்கிறார்கள். இவர்களில் எந்தவிதமான வன்முறையிலும் இறங்காமல் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

போராட்ட இயக்கத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் நிலையில் அல்லது நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணையில் விடப்பட்டிருக்கும் நிலையில், முன்னைய ஜனாதிபதியை பதவி துறக்கவைத்ததுடன் முன்னைய அரசாங்கத்தையும் பதவியில் இருந்து இறங்கச் செய்ததைப் போன்ற மக்கள் கிளர்ச்சியொன்று எதிர்காலத்தில் இடம்பெறுவதற்காக சாத்தியப்பாடுகள் குறைவு.

தற்போது அரசாங்கத்துக்கு ஒரு தடுப்பை போடக்கூடியதென்றால் அது சர்வதேச நெருக்குதல் மாத்திரமே. சட்ட மற்றும் பொருளாதார ரீதியான தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியப்பாட்டுக்கான ஒரு அறிகுறியாக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட பூர்வாங்க அறிக்கையை கருதலாம். அரசியலமைப்பு ரீதியான  கட்டுப்பாடுகளை அல்லது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவையை காரணம் காட்டி சர்வதேச நெருக்குதலின் கவனத்தை திருப்புவதென்பது அரசாங்கத்துக்கு கஷ்டமானதாகவே இருக்கும்.

இலங்கையில் சகல தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச குற்றங்களைச் செய்தவர்களை பொருத்தமான சர்வதேச வலையமைப்பு ஊடாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும் (ஏற்றுக்கொள்ளப்பட்ட புலம்கடந்த அல்லது சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளின் கீழ் உட்பட) தேசிய நியாயாதிக்கத்தில் உள்ள நீதிச் செயன்முறைகள் ஊடாக விசாரித்து வழக்கு தொடருவதற்கும்; மோசமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக நம்பகமாக குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற தடைவிதிப்புக்களை செய்வதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கும்; இலங்கையில் மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைக்கவேண்டும் என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கை விதப்புரை செய்கிறது.

இவ்வாரம் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினன 51ஆவது கூட்டத்தொடரில் இம்மாத பிற்பகுதியில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது முன்னர் எதிர்பார்க்கப்படாததாகும். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு ஜெனீவாவில் உள்ள இலங்கை அரசாங்கத் தூதுக்குழு ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் மத்தியில் ஆதரவை திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது. பெரும்பான்மையான மக்களை வறுமையின் எல்லைக்கோட்டுக்கு அல்லது மெய்யான வறுமைக்கு தள்ளிவிட்டிருக்கும் பொருளாதார சவால்களை சமாளிப்பதாக இருந்தால்  சர்வதேசத்தின் தடைகள் அல்ல அதன் புரிந்துணர்வும் ஆதரவுமே இலங்கைக்கு தேவை என்பதே தூதுக்குழுவின் வேண்டுகோளாகும்.

ஆனால், ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் ஜேர்மனி மற்றும் கனடாவுடன் சேர்ந்து (அவையே தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கும் முக்கிய நாடுகள்) இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவைக் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.

நம்பகமான சான்றுகள் உள்ளவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கு தங்களது சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்படக்கூடிய சர்வதேச நியாயாதிக்கத்தை செயற்படுத்துவதற்கு விரும்புகின்ற நாடுகளுக்கு சட்ட மற்றும் ஏனைய வழிகாட்டல்களை வழங்கி உதவுவதே தீர்மானத்தின் நோக்கமாகும். இலங்கையில் மனித உரிமைகள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள் மற்றும்  அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மான வரைவு விதப்புரை செய்கிறது.

இலங்கையை முழுமையாக எதிர்மறையான முறையில் பாதிக்கக்கூடிய தடைகளை விதிப்பதை விடுத்து உரிமை மீறல்களைச் செய்த முக்கிய குற்றவாளிகளை இலக்குவைப்பதே சர்வதேச சமூக தந்திரோபாயமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

ஜெனீவாவில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு அனுசரணையாகச் செயற்படும் அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு வழங்கவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஏனைய நலன்புரி நோக்கங்களுக்காகவும் 6 கோடி டொலர்களை ஒதுக்கீடு செய்வும் உறுதியளித்ததில் இருந்து இதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சர்வதேச உதவி நாட்டுக்கு அவசியமாக தேவைப்படுகின்ற இத்தகைய பின்புலத்தில், கடந்த காலத்தில் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிராக தேசியவாத எதிர்ப்பை தூண்டிவிட்டதைப் போன்று இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் செய்யக்கூடியது சாத்தியமில்லை. பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பானவர்களையும் எதிர்ப்பியக்கங்களை நசுக்குவதில் நாட்டம் கொண்டிருப்பவர்களையும் பொறுப்புக்கூற வைக்கக்கூடிய நடவடிக்கைகளை பலர் ஏற்றுக்கொள்வார்கள்.

அபிவிருத்தியை தாமதிக்கின்றதும் மக்களின் அவலங்களை நீடிக்கின்றதுமான அடக்குமுறை பெரும்பாலும் சகலருக்குமே பாதிப்பாக அமையக்கூடிய கொந்தளிப்புகளையே கொண்டுவரும். இதை நன்றாக தெரிந்துகொண்டாலும், அரசியல் தலைவர்கள் தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்தால் தேசிய அனர்த்தத்துக்கே அது வழிவகுக்கும்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா

 

https://maatram.org/?p=10346

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.