Jump to content

ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா?

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
23 நவம்பர் 2020
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

துளசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

துளசி

(இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது. சர்வதேச ஓசோன் தினத்தை ஒட்டி இந்த செய்தி மறுபகிர்வு செய்யப்படுகிறது. )

துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள் படும் தகவல்கள் வாட்சாப் மூலம் உலா வருகின்றன.

அது மட்டுமல்ல, சில மைய நீரோட்ட நாளேடுகளும், செய்தி இணைய தளங்களும்கூட இத்தகைய கூற்றுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. தாவரவியலாளர்கள் என்பவர்களை மேற்கோள் காட்டிக்கூட இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

துளசி செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுவதாக ஒரு தகவலும் இந்த கட்டுரைகளிலும், வாட்சாப் ஃபார்வார்டுகளிலும் பரப்பப்படுகிறது.

 

உண்மையில் துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா? உண்மையாகவே ஒரு தாவரம் ஓசோன் வாயுவை வெளியிடுவதாக வைத்துக்கொண்டால்கூட அந்த வாயு புவியில் சுற்றுச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லதா என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்வோம்.

அதற்கு முன்னதாக துளசி, ஓசோன் இரண்டின் பின்னணியையும் பார்ப்போம்.

துளசி - மருத்துவமும், நம்பிக்கையும்

துளசி பாரம்பரியமாக இந்தியாவில் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, அதற்கு ஒரு சமய முக்கியத்துவமும் இருக்கிறது. குறிப்பாக வைணவத்தில் துளசி மிகவும் பக்திக்குரிய ஒரு செடி.

 

சிவப்புக் கோடு

துளசியைப் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சைகளையோ, அது தொடர்பான சமய நம்பிக்கையையோ நாம் இங்கே விவாதிக்கவில்லை.

ஓசோன் என்பது என்ன?

ஓசோன் என்பது ஒரு வாயு. நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்சிஜன் வாயுவின் இன்னொரு வடிவம், மாற்றுருதான் ஓசோன்.

ஓர் ஆக்சிஜன் மூலக்கூறில் இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும். எனவே இது O2 என குறிக்கப்படும். ஆக்சிஜனின் மாற்றுருவான ஓசோன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும். எனவேதான் ஓசோன் O3 என்று குறிக்கப்படுகிறது.

வளி மண்டலத்தின் மேலடுக்கில் பெருமளவு ஒரு படலம் போல படிந்திருக்கும் ஓசோன் வாயு, சூரியக் கதிர்களில் வெளிச்சத்தோடு சேர்ந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சை வடிகட்டி நிறுத்தி புவியில் உள்ள உயிர்களைப் பாதுகாக்கிறது.

 

ஓசோன் - 3 ஆக்சிஜன் அணுக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

3 ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஆக்சிஜனின் ஒரு மாற்றுருவே ஓசோன்.

புவியில் பல்வேறு மனித நடவடிக்கைகளால் உற்பத்தியாகும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்ற சில வாயுக்கள் மேலே சென்று இந்த ஓசோன் படலத்தை அரித்துவிடுவதால், ஆபத்தான கதிர்வீச்சு நேரடியாக புவியைத் தாக்கும் என்ற விழிப்புணர்வு கடந்த சுமார் 20 ஆண்டுகளாக பரவலாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓசோன் வாயு நல்லது என்ற எண்ணமும் பரவலாக ஊறிவிட்டது.

கேள்வி என்ன?

விளக்குத் திரியில் சுடராக இருந்து ஒளி தரும் நெருப்பு, கூரையில் பற்றினால், பேரழிவை உண்டாக்குகிறது. நெருப்பு எங்கே இருக்கிறது என்பதைப் பொருத்தே அதன் விளைவும் இருப்பதைப் போலவே, ஓசோன் எங்கே இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் பலனும். எனவே கேள்வி ஓசோன் நல்லதா என்பதல்ல. அது எந்த இடத்தில் நல்லது என்பதுதான்.

எனவே துளசி ஓசோனை வெளியிடுகிறதா? அப்படி ஓசோன் வெளியிடப்பட்டால், புவியில் நாம் வாழும் தரைப்பகுதியில் அது நன்மையை ஏற்படுத்துமா என்பது மட்டுமே நம் முன்பு உள்ள கேள்வி.

வெவ்வேறு விதமான பின்னணிகள் உடைய மூன்று விஞ்ஞானிகளிடம் இந்தக் கேள்வியை தனித்தனியாக கேட்டோம்.

அதி உயர் ஆற்றல், கதிர்வீச்சு

உயிரித் தொழில்நுட்பவியல் வல்லுநரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின், யு.கே. டெமென்ஷியா ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநராக இருந்தவருமான லாரன்ஸ் ராஜேந்திரனிடம், துளசி செடி ஓசோனை வெளியிடும், அது சூழலுக்கு நல்லது போன்ற இந்த வாதங்களை சுட்டிக் காட்டியபோது, "இவை அபத்தமானவை" என்றார்.

ஓசோன் உற்பத்தி நடக்கவேண்டுமானால், அதற்கு அதி உயர் ஆற்றல், கதிரியக்கம் தேவை. இந்த அளவிலான ஆற்றல் வளி மண்டலத்தின் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில்தான் கிடைக்கும். புவியில் கிடைக்காது என்று அவர் விளக்கினார்.

இதைத் தவிர, சில வகை மரங்களில் இருந்து வெளியாகும் நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்கள் (Volatile Organic Compounds) புவியில் உண்டாகும் மாசுபாடுகளுடன் வினைபுரிந்து சிறிதளவு ஓசோனை உற்பத்தி செய்யும். அந்த ஓசோனால் புவியில் நன்மை ஏதும் இல்லை. ஆனால், அப்படி ஓசோன் உற்பத்தி ஆவதற்கான நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்களை வெளியிடும் தாவரங்களின் பட்டியலில் துளசி இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினார் லாரன்ஸ் ராஜேந்திரன். இது தொடர்பாக சில அறிவியல் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டினார் அவர்.

 

துளசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

துளசி

அப்படி அவர் மேற்கோள் காட்டிய கட்டுரைகளில் ஒன்று ப்ளூம்பெர்க் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. சில வகை மரங்கள் அதிக அளவில் நிலயற்ற கரிம கூட்டுப் பொருளை வெளியிட்டு ஓசோன் உற்பத்திக்கு காரணமாகின்றன என்றும் எனவே, அத்தகைய மரங்களை நகர்ப்புறங்களில் அதிகம் நடக்கூடாது என்றும் எச்சரித்திருந்தது அந்தக் கட்டுரை.

அதாவது, நேரடியாக தாவரங்கள் ஓசோன் உற்பத்தி செய்வதில்லை என்றாலும், அப்படி ஓசோன் உற்பத்திக்கு மறைமுகமாக காரணமாகும் மரங்களை நடக்கூடாது என்று பரிந்துரைக்கிறது அந்தக் கட்டுரை.

எந்த உயிரியாவது ஓசோனை உற்பத்தி செய்யுமா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரித் தகவலியல் துறையின் முதுநிலை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவரான எஸ்.கிருஷ்ணசாமியிடம் இதே கேள்விகளைக் கேட்டோம்.

துளசி என்று இல்லை எந்த உயிரிகளாலும் ஓசோனை உற்பத்தி செய்ய முடியாது என்றார் அவர்.

"ஓசோனை உற்பத்தி செய்வதற்கான எந்த பரிணாம பொறியமைப்பும் (evolutionary mechanism) தாவரங்களிடம் இல்லை. ஓசோனை உற்பத்தி செய்வதற்கான எந்தவிதமான உயிரி வேதியியல் வழிவகையும் (bio chemical pathway) தாவரங்களில் இல்லை" என்று அறுதியிட்டுக் கூறினார் அவர்.

அதைப் போலவே கிருமி நாசினியாக சில தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, நாம் வாழும் புவியின் தரைப்பகுதியில் ஓசோனுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

லாரன்ஸ் ராஜேந்திரன் குறிப்பிட்டதைப் போலவே, பேராசிரியர் கிருஷ்ணசாமியும் இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்தினார். நேரடியாக எந்த தாவரத்தாலும் ஓசோனை உற்பத்தி செய்ய முடியாது என்றாலும், சில வகை மரங்கள் வெளியிடும் நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்கள் (VOC) வாகனப்புகை போன்ற மாசுபாடுகளில் உள்ள சில பொருள்களோடு வினைபுரிந்து சிறிதளவு ஓசோனை உற்பத்தி செய்யும்.

 

புவியை வந்தடையும் சூரியக் கதிர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த ஓசோன்கூட தரைப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதே என்று குறிப்பிட்ட அவர், அப்படிப்பட்ட நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்களை வெளியிடும் தாவரங்களின் பட்டியலில் துளசி இல்லை என்பது மட்டுமல்ல, துளசி இடம் பெற்றுள்ள உயிரியல் குடும்பமான லேமியேசியே குடும்பத்தில் இருந்து ஒரு சிற்றினம்கூட அந்தப் பட்டியலில் இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

ஓசோன் -சுவாசித்தால் உயிரைப் பறிக்கும்

இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் இது பற்றிக் கேட்டோம்.

துளசி ஓசோனை வெளியிடும் என்ற கூற்றையும், புவியின் தரைப்பகுதியில் ஓசோன் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் என்ற கூற்றையும் அவர் கடுமையாக மறுத்தார். "இப்படி சில பத்திரிகைகளில் வெளியான தகவல்களை மறுத்து ஏற்கெனவே கட்டுரையே எழுதியிருக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், இது தாவரவியலின் அடிப்படைகளுக்கே முரணான தகவல் என்றார்.

மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே முக்கியமாக இயற்கையில் ஓசோன் உற்பத்தியாகும் என்று குறிப்பிட்ட அவர் அந்த மூன்று சூழ்நிலைகளைப் பட்டியலிட்டார். வளி மண்டல மேலடுக்கான ஸ்ட்ரேடோஸ்பியரில் ஆக்சிஜன் மூலக்கூறுகளோடு, சூரியனின் ஆற்றல் வினைபுரிந்து ஓசோன் உருவாகிறது. சூரியனின் இன்னொரு கதிர்வீச்சால் அது சிதையவும் செய்கிறது.

மின்னல் அடிக்கும்போது உண்டாகும் அதீத ஆற்றல் காரணமாக கொஞ்சம் ஓசோன் உற்பத்தியாகிறது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

எரிமலை வெடிப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் கொஞ்சம் ஓசோன் உற்பத்தியாகிறது. இவை மூன்றும்தான் இயற்கையில் ஓசோன் உற்பத்தியாகும் சூழ்நிலைகள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓசோனை வெளியிடும் உயிரினங்கள் இருக்கவே முடியாது என்பதற்கு அவர் வேறொரு வாதத்தையும் வைத்தார். ஓசோனை வெளியிடவேண்டுமானால், அதற்கு அதீதமான ஆற்றலை செலவிடவேண்டும். அப்படி ஓர் உயிரினம் கற்பனையாக அதீதமான ஆற்றலை செலவிடுவதாக வைத்துக்கொண்டால், அது பலவீனமாக மாறி அப்படி ஓசோனை வெளியிடாத உயிரினங்களின் முன்பு பிழைத்திருக்க முடியாமல் அழிந்துவிடும். ஆனால், இது கற்பனையான வாதம்தான். உண்மையில் ஓசோனை வெளியிடும் உயிரினம் எதுவும் இல்லை என்றார் வெங்கடேஸ்வரன்.

 

புவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு வேளை துளசி செடி ஓசோனை வெளியிடுவதாக வைத்துக் கொண்டால் அதை சுவாசிப்பவர்களுக்கு அதனால் தீங்குதான் ஏற்படும். ஏனெனில் ஓசோன் வாயு அதை சுவாசிப்பவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும். ஓசோன் புவியின் தரைப்பகுதியில் இருந்து 15 கி.மீ. உயரத்துக்கு மேல் இருக்கும்போது அது கதிர்வீச்சை வடிகட்டி நன்மை செய்யும். ஆனால், தரைப்பகுதியில் நேரடியாக உயிரினங்கள் அதை சுவாசித்தால் அது உயிருக்கு ஆபத்துதான் என்றார் அவர்.

எனவே, அவர்கள் சொல்வது போல துளசி செடி உண்மையில் ஓசோன் உற்பத்தி செய்யுமானால், அதையும் பிடுங்கி அழிக்கவேண்டியிருக்கும். ஆனால், உண்மை என்னவெனில், துளசி ஓசோன் உற்பத்தி செய்யவில்லை என்பதுதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

மூன்று விஞ்ஞானிகளின் கருத்து - சாரம்

இந்த மூன்று விஞ்ஞானிகளுமே கூறுகிற விஷயத்தின் சாரம் இதுதான்.

துளசி செடி மட்டுமல்ல, எந்த தாவரமும், உயிரினமும் ஓசோனை வெளியிட முடியாது. அதற்கான கட்டமைப்பே எந்த உயிரினத்திடமும் இல்லை. வளி மேலடுக்கில் கவசமாக இருந்து காப்பாற்றுகிற ஓசோன் புவியின் தரைப் பகுதியில் ஒருவேளை உற்பத்தியாகுமானால், அது சுற்றுச்சூழலுக்கும் தீங்குதான். உடல் நலத்துக்கும் தீங்குதான். ஆனால், அப்படி ஒரு தீங்கை துளசி செடி செய்யவில்லை. https://www.bbc.com/tamil/science-55026742

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.