Jump to content

திருப்பு முனை 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒவ்வொருவருடைய வாழ்விலும்  சில சந்தர்ப்பங்கள்,  வாழ்வின்  திருப்பு முனையாக அமைவது உண்டு . அந்த வகையில்  சாதனா   வாழ்க்கையிலும்    ஒரு  சம்பவம்.  பள்ளிப் படிப்பின்   பத்தாம் ஆண்டு ,   முதற் தடவை  ஓல் பரீட்ச்சை யில்  எட்டுக்கு ஐந்து படங்கள் சித்தி எய்திய நிலையில்  கணிதம் அவளுக்கு  தோல்வியை   தந்தது . பெற்றோரிடமும்  ஆசிரியரிடமும் நன்றாக வாங்கி கட்டிக்க கொண்டாள் . " பராக்கு க்கு கூடிபோச்சு"  "படிச்சு முன்னேறும் வழியை பாரு " " தோழிகள்  சகவாசம்  கூடிப்போச்சு"  "தலை யலங்காரம் செய்யும் வேளை  படித்தால்  என்ன ? என   சில நாகரிகமற்ற வசவுகள் .  அவளை  மேலும் கவலை யும் கண்டனங்களும்   ஈட்டியாய்  குத்தின..

அடுத்த  கல்வி ஆண்டு ( ஏ எல்)  வேறு பாடசாலை க்கு  சக மாணவிகள்  பாடசாலை மாற தயாரானார்கள். கணிதத்தில் தோற்றவர்கள்,  அடுத்த வருடம்  பாஸ்  சித்தி எடுத்து தருவதாக உறுதி அளித்தால்  அவளும்  பள்ளி மாறலாம். அல்லது  மீண்டும்  பரீடசை  ( ஆண்டு இறுதி  ஒருவருடத் தால் ) தோற்றி சித்தியடைந்து  பள்ளிமாறலாம். சாதனா மிகுந்த  கவலைப் படடாள் சக மாணவிகள்  சென்று விடுவார்கள் என்ற கவலை , தன்னிலும் வயது குறைந்த வர்களுடன்   படிக்க வேணுமெனும் வெட்கம். சிலர்  maths  (கணிதம் ) எடுக்காமல்  எண்கணிதம்  (a rithmatic ) எடுத்து ஈடு செய்யலாம் எனும்  முயற்சியில்  பள்ளி மாறினர்.  சாதனவின்   பெற்ற்வர்கள்  மீண்டும் பரீடசைக்கு தோற்ற  அந்த பள்ளியில் படிக்க  வைத்தனர். 

அது ஒரு கன்னியர் மட த்தினர் நிர்வாகிக்க படும்  பாடசாலை . ஆண் ஆசிரியர்கள் படிப்பிப்பதில்லை. பெண்களை  ஆண் பையன்களுடன் பேச அனுமதிப்பதில்லை  மிகுந்த கட்டுப்பாடு . ஆனால் ஆண்கள் கல்லூரி பையன்கள் பெண்க ள் பாடசாலையை (தாண்டி ) கடந்து  தான்  தங்கள் பாடசாலைக்கு செல்வார்கள். எத்தனையோ ஜோடிக் கண்கள்  சந்தித்து கொள்ளும் .கதை  பேசும்  கடிதங்கள் பரிமாறப்படும்.  காதல் துளிர் விடும், கை கால் துரு துருக்கும் சைக்கிள் வண்டிகள் தேவையில்லாமல் வடடமிடும்.   மீண்டும் விடுமுறையில்  இள நெஞ்சங்கள்  திங்கள் கிழமைக்காய் ஏங்கும்  . 

சாதனா கணிதத்தில் சித்தி எய்து விடவேண்டும் எனும் பெரு முயற்சியில் இருந்தாள் . சக தோழி மாலை கல்வி முடிய ஒரு பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக தெரிவித்தாள். படடனத்தில் படிக்கும்  .பல்கலைக் கழக முதலாம் ஆண்டு இளைஞர்கள் இருவர் தமது (கைச் செலவு  புத்தக செலவு  படடனத்துக்குக்கான  போக்குவார்த்துச் செலவு )  பாடம்  நடத்தினர் . இவளும் சேர்ந்து கொள்ள ஆசைப்படடாள்.  வீட்டில்  அனுமதித்தாலும்  கன்னியர்கள் மட ஆசிரியரின் எதிர்ப்பை  தாங்கி   கொள்ள வேண்டி வந்தது.

.  கல்வியே கண்ணாக ( chemistry     physics   maths  ) பா டங்களில் தன் முழு ஈடுபாடடை  செலுத்தி கற்றாள்.  பரீடசையும்   வந்தது. கன்னியர் மட  பிள்ளைகள் எல்லாம் மிக திறமையான சித்திகள்  பெற்றார்கள்.  பள்ளி நிர்வாகத்துக்கு  உள்ளூர மகிழ்ச்சி .   சாதனா  2C  3S  முன்பு பெற்றவள். D 4C 3S  பெற்றாள் .  கணித்துக்கு  டி    தர சித்தி . அடுத்த கல்லூரி   வகுப்பு மாற்றத்துக்காக  ஆவலோடு காத்திருந்தாள். முதல் தடவை கணித்துக்கு  F எடுத்தவள்  தற்போது     தரத்துக்கு  சித்தி அடைந்தாள். கடின உழைப்பு  (விளையாட்டு, பசி  ,  பழைய பள்ளி தோழிகள் தன்னிலும் வயது (வருடம்) இளையவர்களுடன்  படிக்கும்  அசவுகரியங்கள்  சில தியாகங்கள் ) காலையில் நடந்து 8.30  க்கு கல்லூரியில்  வந்தால்  கட்டி வந்த காய்ந்த பிட்டு மதிய உணவாகும்.  மாலை 3.30 பாடசாலை விட்ட்தும் டியூஷன் மலை 4 மணிக்கு ,  முடிந்து மீண்டும்  வீடு செல்ல 7.௦௦ மணியாகி விடும். பள்ளிக்கு கூட வீட்டுப்பாடங்கள் , டியூஷன்  வீட்டுப் பாடங்கள் இரவு  விழிப்பு  , போதிய உறக்கமின்மை .. பெற்றவர்களின் ஒத்துழைப்பு  ( ஊக்கங் கண்டு உள்ளூர மகிழ்ச்சி) மீண்டும் மறுநாள் தொடரும் .

வாழ்வில்  தியாகங்கள், முழு ஈடுபாடு , சகிப்பு தன்மை வெற்றிக்கு வழி காட்டுகின்றன.  நிச்சயம் வாழ்வில் திருப்புமுனைகள் வந்தே தீரும்  இனங்கண்டு  முயற்சித்தாள் வாழ்வு வளம்  பெறும் 

 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு....👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு… நிலாமதி அக்கா. 👍🏽

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி மெய்வருந்தக் கூலி தந்து விட்டது ......நல்ல சிந்தனைக்குரிய கதை......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 20:51, நிலாமதி said:

வாழ்வில்  தியாகங்கள், முழு ஈடுபாடு , சகிப்பு தன்மை வெற்றிக்கு வழி காட்டுகின்றன.  நிச்சயம் வாழ்வில் திருப்புமுனைகள் வந்தே தீரும்  இனங்கண்டு  முயற்சித்தாள் வாழ்வு வளம்  பெறும் 


நன்று, நன்றி. இது கதையல்ல. எமது தாயகப் பிள்ளைகளின் அனுபவமாகும். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.