Jump to content

மலக்குடல் புற்றுநோய்: கண்டறிவது எப்படி? சிகிச்சைகள் என்ன? - ஒரு மருத்துவ அறிவியல் விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலக்குடல் புற்றுநோய்: கண்டறிவது எப்படி? சிகிச்சைகள் என்ன? - ஒரு மருத்துவ அறிவியல் விளக்கம்

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
31 நிமிடங்களுக்கு முன்னர்
 

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிக விரைவிலேயே கண்டறியக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மலக்குடல் புற்றுநோய். சில நேரங்களில் இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கிறார்கள். இதைக் கண்காணிப்பதற்கு மிகவும் அடிப்படையானது மலத்தை பரிசோதிப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மலக்குடல் புற்றுநோயைக் எப்படிக் கண்டறியலாம்?

மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது:

  • எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் மலத்தில் ரத்தம் காணப்படும்போது - அது தெளிவான சிவப்பு நிறத்திலோ அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கிறதா?
  • மலம் கழிப்பதில் மாற்றம் - அடிக்கடி, மலச்சிக்கல் அடிக்கடி கழிவறைக்கு செல்லும் நிலையில் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் கழிக்கும் மலம் தண்ணீராகப் போகிறதா அல்லது கெட்டியாக வெளியேறுகிறதா?
  • உங்கள் அடிவயிற்றில் வலிப்பது போன்ற உணர்வு இருக்கிறதா அல்லது வீக்கமாக இருக்கிறதா, உங்கள் வயிறு முழுமையாக மற்றும் இறுக்கமாக இருப்பது போல உணர்கிறீர்களா?

இது போலவே மேலும் சில அறிகுறிகளும் கூட இருக்கலாம்

 
  • உங்கள் உடல் எடை திடீரெனக் குறைவது
  • மலம் கழித்த பிறகும் மலக்குடல் முழுமையாகக் காலியாகவில்லை என்பது போன்று உணர்வீர்கள்.
  • சோர்வாக அல்லது வழக்கத்துக்கு மாறான மயக்கமாக நீங்கள் உணர்வீர்கள்

இந்த அறிகுறிகளை நீங்கள் கொண்டிருந்தால் அது மலக்குடல் புற்றுநோய்தான் வந்துவிட்டது என்று நீங்கள் கருதத் தேவையில்லை. ஆனால், இவை எல்லாம் மூன்று வாரங்களுக்கு அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்கிறது என்று நீங்கள் அறிந்தால், ஏதோ சரியில்லை என்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அவற்றை விரைவாக சரிபார்க்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். ஆரம்பகட்ட பரிசோதனையின்போதே புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவற்றை எளிதாக சிகிச்சையின் மூலம் குணப்படுத்தமுடியும்.

சில நேரங்களில் மலக்குடல் வழியே கழிவு வெளியேறுவதை மலக்குடல் புற்றுநோய் தடுத்துவிடும். இதன் காரணமாக அடைப்பு ஏற்படும். இது தீவிரமான வயிற்று வலி, மலச்சிக்கல், உடல் நலக் கோளாறுகளை கொண்டுவரும். இது போன்ற சூழல்களில் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள அவசரகால சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும் அல்லது உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

 

கோடு

மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

  • மலம்கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் - மலச் சிக்கல், அடிக்கடி கழிவறைக்கு செல்வது, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
  • மலத்தில் ரத்தப்போக்கு - மூலம் போன்ற காரணங்கள் இல்லாமல் ரத்தம் வருதல்
  • அடிவயிற்றில் வலி, அசெளக்கர்யமாக உணர்தல் அல்லது வயிறு காலியாக இல்லாமல் இருப்பது - பொதுவாக உணவு உண்டபின் தோன்றும் அறிகுறிகள்
  • அதீத சோர்வு அல்லது திடீரென எடைகுறைதல் - போதுமான காரணமின்றி வரும் அறிகுறி
 

கோடு

என்னுடைய மலத்தை எவ்வாறு பரிசோதிப்பது?

நீங்கள் கழிவறைக்கு செல்லும்போது உங்களிடம் இருந்து என்ன வெளியேறுகிறது என நன்றாக பாருங்கள், அது பற்றி பேசுவதில் தயக்கம் வேண்டாம். உங்கள் மலத்தில் ரத்தம் வருகிறதா என நீங்கள் பார்க்க வேண்டும். அதே போல உங்கள் ஆசனவாயில் ரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

உங்கள் ஆசனவாயில் ரத்த குழாய் அழற்சியால் (மூலம் காரணமாக) தெளிவான சிவப்பு ரத்தம் வெளியே வரலாம். தவிர இது மலக்குடல் புற்றுநோய் காரணமாகக்கூட இருக்கலாம். கருஞ்சிவப்பு அல்லது கருப்பு ரத்தம் உங்கள் மலக்குடலில் இருந்து அல்லது வயிற்றில் இருந்து வெளியே வரலாம். இதுவும் உங்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகும்.

 

மலக்குடல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றத்தை அதாவது வயிற்றுப்போக்கு அல்லது வழக்கத்தை விட அடிக்கடி மலம் கழித்தல் ஆகியவற்றின்போது நீங்கள் இதனை கவனித்திருக்கலாம். அல்லது மலக்குடலில் இருந்து முறையாக மலம் வெளியேறி மலக்குடல் காலியாகவில்லை என்று நீங்கள் உணரலாம். போதுமான அளவு வெளியேறவில்லை என்றும் உணரலாம்.

மருத்துவரை சந்திக்கப் போகும் முன்பு எதையும் மறந்து விடாமல் இருக்க அறிகுறிகள் குறித்த நாட்குறிப்பை வைத்திருக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பல்வேறு வகையான மலக்குடல் பிரச்னைகளுக்காக பல நோயாளிகளை மருத்துவர்கள் பார்க்க நேரிடுகிறது. எனவே, எந்த ஒரு மாற்றம் அல்லது ரத்தப்போக்கு குறித்தும் அவர்களிடம் சொல்லுங்கள். அப்போதுதான் அவர்கள் காரணத்தை கண்டறியமுடியும்.

மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

என்ன காரணத்தால் இது வருகிறது என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில விஷயங்கள் மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களாக இருக்க முடியும்.

 

மலக்குடல் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீங்கள் வயதானவர்களாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. மலக்குடல் புற்றுநோயும் அதற்கு விலக்கு இல்லை- பாதிப்புக்கு ஆளான பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டோர்தான்.

  • பன்றி இறைச்சி, சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளும் உணவு முறை
  • சிகரெட் புகைப்பது பல்வேறு புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
  • அதிக அளவு மது குடித்தல்
  • அதிக உடல் எடை அல்லது உடல் பருமனாக இருத்தல்
  • உங்களுடைய மலக்குடலில் பருக்கள் இருப்பதற்கான வரலாறு இருப்பின், அது கட்டியாக வளர வாய்ப்புள்ளது.

பரம்பரையாக கடந்து வருகிறதா?

பெரும்பாலானோர்களிடையே மலக்குடல் புற்றுநோய் பரம்பரையாக வருவதில்லை. ஆனால் 5 முதல் 10 சதவிகிதம் வரை பரம்பரையாக வர வாய்ப்பிருப்பதாக புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அனிதா ரமேஷ் கூறுகிறார்.

50 வயதுக்கு முன்னதாக உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு மலக்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதா என உங்கள் மருத்துவரிடம் அவசியம் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

"தாய், தந்தை, உறவினர் உள்ளிட்டோருக்கு மலக்குடல் புற்றுநோய் இருந்தால் உடனடியாக மலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்கிறார் அனிதா ரமேஷ்.

 

மலக்குடல் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லின்ஞ் சின்ட்ரோம் போன்ற சில மரபு நிலைகளில் மலக்குடல் புற்றுநோய் நேரிடுவதற்கான அபாயம் பெரும் அளவுக்கு இருக்கிறது. ஆனால், புற்றுநோயின் நிலையை மருத்துவர் அறிந்தால் அதனை அவர்களால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உங்களுக்கான அபாயத்தை குறைப்பது எப்படி?

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் குடல் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதிகம் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், அதிக நார்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளல், குறைவான கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல், தினமும் 6 முதல் 8 டம்ளர் நீர் குடிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

எனினும், ஏதேனும் கவலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் பொது மருத்துவரை சந்தித்து, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புற்றுநோய் பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும்,

மலக்குடல் புற்றுநோய்க்கு எங்கே பரிசோதனை செய்து கொள்வது?

"தமிழ்நாட்டைப் பொறுத்துவரை அனைத்து வகையான புற்றுநோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை பெரும்பாலும் இலவசமாகவே செய்து கொள்ள முடியும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்" என்கிறார் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான அனிதா ரமேஷ்.

 

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அனிதா ரமேஷ்

பட மூலாதாரம்,DR ANITA RAMESH

 

படக்குறிப்பு,

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அனிதா ரமேஷ்

எனினும் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும்கூட பரிசோதனைகளைச் செய்ய முடியும் என்றும் கூறும் அவர், வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் வழக்கம் இந்தியாவில் பரிந்துரைக்கப்படுவதில்லை என்கிறார்.

மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

முதலில் மலப் பரிசோதனை மூலம் நோய்க்கான ஆய்வு தொடங்கப்படுகிறது என்கிறார் மருத்துவர் அனிதா ரமேஷ்.

"இதன் பிறகு கலோனோஸ்கோபி, சிக்மோய்டோஸ்கோபி முறையில் மலக்குடல் புற்றுநோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது"

கலனோஸ்கோபி, சிக்மோய்டோஸ்கோபி நீண்ட குழாய் வடிவிலான இதனுள் இருக்கும் கேமரா உங்களுடைய ஒட்டு மொத்த மலக்குடலையும் பார்க்கும் வகையிலான முறையாக இருக்கும். சிக்மோய்டோஸ்கோபி என்ற பரிசோதனை முறையில் மலக்குடலின் ஒரு பகுதியை மட்டும் பார்க்கும் வகையில் இருக்கும்.

மலக்குடல் புற்றுநோய் வந்தால் உயிர் பிழைக்க முடியுமா?

சில புற்றுநோய்களைப் போல் அல்லாமல் மலக்குடல் புற்றுநோயை மிக விரைவிலேயே அறிகுறிகள் மூலம் தெரி்ந்து கொள்ள முடிகிறது. அதனால் பெரும்பாலும் தொடக்க நிலையிலேயே இது கண்டறியப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

"மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றைப் போல மலக்குடல் புற்றுநோயையும் நோய் வருவதற்கு முன்பே கண்டறிந்துவிட முடியும். அதற்கான சோதனைகள் இருக்கின்றன" என்கிறார் மருத்துவர் அனிதா ரமேஷ்.

 

கலோனோஸ்கோபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஸ்டேஜ் 1 எனப்படும் முதல் கட்டம் அல்லது இரண்டாவது கட்டத்திலேயே மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதில் உயிர்பிழைக்கும் விகிதம் 70%-க்கும் அதிகம். மூன்றாவது கட்டத்துக்கு நோய் முற்றியிருந்தாலும் 60 சதவிகிதம் வரை குணமாக்க முடியும். ஆனால் கடைசிக் கட்டத்தில்தான் மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்றால் உயிர் பிழைப்பது கடினம். எனினும் தற்போதைய மருத்துவ வசதிகளைக் கொண்டு மரணத்தைத் தள்ளிப்போட முடியும்"

இந்தியாவில் என்ன மாதிரியான சிகிச்சைகள் கிடைக்கின்றன?

முன்கூட்டியே கண்டறியப்பட்டால் மலக்குடல் புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது.

எந்த ஒரு நிலையில் உங்கள் புற்றுநோய் கண்டறியப்பட்டாலும், கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் வாயிலாக உங்களுக்கு உதவி கிடைக்கும். அது ஓர் அறுவை சிகிச்சையாக அல்லது கீமோ தெரபியாக, ரோடியோ தெரப்பியாக அல்லது ஒன்று அல்லது இதர உங்களுடைய புற்றுநோயைப் பொறுத்ததாக அந்த சிகிச்சை இருக்கும்.

"அறுவைச் சிகிச்சை, ஊசிமருந்துகள், கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை அடிப்படையாகச் செய்யப்படுகின்றன. தமிழக அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். தனியார் மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெறலாம்" என மருத்துவர் அனிதா ரமேஷ் கூறுகிறார்.

மலக்குடல் புற்றுநோயின் கட்டங்கள் என்னென்ன?

கட்டம் 1 - கட்டி சிறியதாக இருக்கும், ஆனால் பரவாது

கட்டம் 2 - கட்டி பெரியதாக இருக்கும், ஆனால் இதற்குமேல் பரவாது

கட்டம் 3 - லிம்ப் நோட்ஸ் எனப்படும் சுற்றியுள்ள சில திசுக்களில் இப்போது பரவ ஆரம்பிக்கும்

கட்டம் 4 - உடலில் உள்ள இன்னொரு பாகத்தில் பரவும். இரண்டாம் நிலை கட்டியை உருவாக்கும்.

https://www.bbc.com/tamil/science-62914664

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.