Jump to content

சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ் .

தமிழீழத் தாயகத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இன்னும் உயிர்த்திருப்பதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளே அடிப்படை. நவநீதன் பிள்ளையில் தொடங்கி மிஷேல் பச்லெட் வரை, தமிழ் மக்கள் மீதும், தமிழ்ச் சகோதரிகள் மீதும் உண்மையான அக்கறையுடன் பேசுகிறார்கள் ஒவ்வொருவரும்! சர்வதேச சமூகம் எந்த அளவுக்கு அதற்குச் செவி மடுக்கிறது என்பதுதான், மர்மமாகவே இருக்கிறது. 

 

 

QGox3x45cYXsCNBVbgJm.jpg

இலங்கை, பல ஆண்டுகளாக, தொடர்ந்து தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதைச் சுட்டிக்காட்டி மிஷேல் பச்லெட் அம்மையார் இந்த வாரத் தொடக்கத்தில் எழுதியிருக்கும் கடிதம், மனசாட்சி என்று ஒன்றிருந்தால், சர்வதேசத்தின் இதயத்தைக் கண்டிப்பாக உலுக்கும். கொடும் போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடைய உயர் ராணுவ அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதத்தில், அதைக்காட்டிலும் உயர் பதவிகளில் அவர்கள் அமர்த்தப்படுகிற அநீதியை மிஷேலின் கடிதம் கோடிட்டுக் காட்டுகிறது. சர்வதேசம் இதை அனுமதிக்கலாமா என்கிற வேதனையை வெளிப்படுத்துகிறது. 

மிஷேலின் கடிதம் வெளிவருவதற்கு இரண்டுநாள் முன்பே, தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டது, ரணில் அரசு. மைத்திரிபால மாதிரி பூனைக்குட்டியை மடியில் மறைத்து வைத்துக் கொண்டிருக்காமல், ‘பாரபட்சமற்ற விசாரணை என்கிற பெயரில் சர்வதேசப் பொறிமுறை எதையும் இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது… அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை…’ என்று, அரசின் சார்பில் வெளிப்படையாக  அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இது பல்லவி தான். அடுத்ததாக, ‘எங்களை நாங்களே விசாரித்துக் கொள்வோம்’ என்கிற வழக்கமான சரணம். இந்த கபட நாடகத்தை சர்வதேசம் எவ்வளவு காலம்  வேடிக்கை பார்க்கும் என்கிற கேள்வி எழுந்தாலும், இந்த நீதி மறுப்பை நாம் எவ்வளவு நாள் தான் வேடிக்கைப் பார்க்கப் போகிறோம் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி.

பொத்தாம்பொதுவாகப் பேசிக் கொண்டிருக்காமல், போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடைய 58 ராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும்படி, சென்ற மாதம் மிஷேல் அம்மையார் வலியுறுத்தியதுதான் ரணில் அரசின்  முன்னறிவிப்புக்கான காரணமாக இருக்க வேண்டும் என்று நம்ப வேண்டியிருக்கிறது. வேறொரு காரணமும் இருக்கலாம். அது பத்துநாள் கழித்துத்தான் தெரியவரும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை, ரணில் அரசின் அறிவிப்பு முக்கியமான ஒன்று.  கடைசி நிமிடம் வரை தகிடுதத்தம் செய்துகொண்டிருக்காமல், கடைசி நொடியில் குத்துக்கரணம் அடிக்காமல், குறித்த நேரத்துக்கு முன்பே இலங்கை இப்படி அறிவித்திருப்பது, நமக்கெல்லாம் சூடு சுரணை இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான லிட்மஸ் டெஸ்ட்! 

 

சர்வதேசப் பொறிமுறையை ஏற்க முடியாது - என்கிற இலங்கையின் நிலை  புதிதல்ல. அந்த அறிவிப்பு முன்னதாகவே வெளிவந்திருப்பதுதான் புதிது.  ஜெனிவாவில், சர்வதேசப் பொறிமுறையை முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்துவிட்டு, கொழும்பு திரும்பியதும் ‘அதையெல்லாம்  ஏற்க முடியாது’ என்று மறுத்துப் பேசியது மைத்திரிபால அரசு. ‘இலங்கையை வழிக்குக் கொண்டுவந்துவிட்டோம் பார்த்தீர்களா’ என்று ஜெனிவாவில் வாய்கிழியப் பேசிய தங்களது சொந்த ஏஜெண்ட் சுமந்திரனின் முகத்தில்,  தார்ச் சட்டியைக் கவிழ்த்தது. 

nEeZCZITKyKL4Zz7artb.jpg

ராஜபக்சக்களின் தர்பாரின் போது, ‘சர்வதேச விசாரணை என்று சொல்லிக்கொண்டு யாராவது இலங்கைக்குள் நுழைந்தால் உயிரோடு திரும்ப  முடியாது’ என்றெல்லாம் எச்சரிக்கை விடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. அது முரட்டு வெறியர்களின் காலம். மைத்திரிபால அரசு, ஜெனிவாவுக்கு ஒரு நாக்கு… கொழும்புக்கு ஒரு நாக்கு என்று இரட்டை நாக்கால் பேசியது. அங்கே வாலைச்சுருட்டிக் கொண்டிருந்துவிட்டு, கொழும்பில் வந்து ஆட்டியது. அது கோழைகளின் காலம். 

fyDd2SzMBWcJZhAMlOue.jpg

இப்போது ரணில் என்கிற நரியின் காலம். ஆழம் பார்த்துக் காலை வைக்கத் தெரிந்த இந்த தந்திரமான மிருகம், தனக்கென்று எந்த பலமும் இல்லாவிட்டாலும், மற்றவர்களின் பலவீனத்தையே தனது பலமாக ஆக்கிக் கொண்டுவிடும்.  பெரிய மிருகங்கள் சாப்பிட்டுவிட்டுப் போன மிச்சம் மீதியைத் தின்றே உயிர் வளர்க்கும். இதற்காக அந்த மிருகம் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை  என்றாலும், மற்றவற்றைக் காட்டிலும் இதுதான் கொடியது, இதுதான் ஈவிரக்கமற்றது. நரியின் குணத்துக்கும் ரணிலுக்கும் எத்துணை ஒற்றுமை பாருங்கள். சிங்கள மக்கள் இந்த உண்மையைப்  புரிந்துகொண்டிருக்கிறார்கள். நீறுபூத்த நெருப்பு மாதிரி, ரணில் மீதான வெறுப்பு வேரூன்றியிருக்கிறது. தமிழர்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல லட்சம் தமிழரின் ரத்தத்தால் நனைந்த ஈழ மண்ணில் நின்றுகொண்டு, 2009ல் நடந்த துயர நிகழ்வுகளை மறந்துவிட வேண்டுமென்று போதித்த போதிசத்துவர் ரணில். ராணுவத்தினரைத் தமிழ்மக்கள் மன்னித்துவிட வேண்டுமென்றும், குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படுமென்றும், கூசாமல் பேசியவர். 

சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு வழிவகுக்கிற ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாததற்குக் காரணம் தான்தானென்றும், அந்த சாசனத்தில் கையெழுத்திடாததாலேயே சர்வதேசத்தின் விசாரணையிலிருந்தும் மின்சார நாற்காலியிலிருந்தும் ராஜபக்சக்கள் தப்பிக்க முடிந்தது என்றும், சிங்கள மக்களிடம் விலாவாரியாக விவரித்த இந்த மகானுபாவர், அதைப்பற்றித் தமிழ்மக்களிடையே ஒருபோதும் பேசியதில்லை. பேசப் போவதுமில்லை. இதுதான் ரணில். 

இனப்படுகொலைக்குத் திட்டமிட்ட ராஜபக்சக்களையும், அதில் நேரடியாக ஈடுபட்ட ராணுவ வெறியர்களையும் காப்பாற்ற மைத்திரிகளும் ரணில்களும் தலைகீழாக நின்றதற்கும் நிற்பதற்கும் காரணம், ஒன்றே ஒன்றுதான்! அவர்களைப் போலவே இவர்களுக்கும் சிங்கள ரத்தம். சிங்கத்தின் ரத்தம். சிங்க லே! அந்த ரத்தபாசம், குற்றவாளிகளைக் காப்பாற்றத் தூண்டியது. இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? 

தமிழர்களின் வாக்குகளை வாங்கியே கொழும்புக்குப் போன தமிழ் அரசியல்வாதிகள் சிலர், இனப்படுகொலையில் ஈடுபட்ட படையினரையும் ராஜபக்சக்களையும் காப்பாற்றத் தலைகீழாக நின்றார்களே, அந்தத் துரோகத்தைத்தான் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர்களது பெயர்ப்பட்டியல் சுமந்திரனிலிருந்து ஆரம்பிக்கிறது. 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி கேட்க தொடர்ந்து போராடிவருகிற புலம்பெயர் உறவுகளிடம் ‘இன அழிப்பு - என்கிற வார்த்தையை பாவிக்காதீர்கள்… போர்க்குற்றம் என்று குறிப்பிடுங்கள்’ என்று, பறந்து பறந்து பிரச்சாரம் செய்த சட்டத் தரணி அவர். பாம்பைப் பாம்பென்று சொல்லாதீர்கள், பல்லியென்று சொல்லுங்கள் - என்கிற நச்சுப்  போதனைக்காக அவர் வெட்கப்படவேயில்லை.

சுமந்திரன் போன்றவர்களின் அந்த விஷமப் பிரச்சாரத்துக்கான ‘ரோட் மேப்’ ராஜபக்சக்களால் போட்டுத்தரப்பட்டது என்பதை அப்போதே கணிக்க முடிந்தது. அது, ஓர் இன அழிப்பைப் போரென்று சித்தரிப்பதற்கான பம்மாத்து வேலை.  முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளின் உடல்களைத் தோண்டியெடுத்துத் தூக்கில் போட மேற்கொள்ளப்பட்ட மோசடி. சுமந்திரன் போட்ட அதே அழிவுப் பாதையில்தான் இப்போது பயணம் செய்கிறார், சென்னையில் படுகொலை செய்துவிட்டு,சிங்கள அரசியல்வாதிகளின் தயவில்  இலங்கையில் பதுங்கியிருக்கிற  திருவாளர் டக்ளஸ் தேவானந்தா. 

 

 

pkuoOMxnXD5twrHyBAgu.jpg

 

சுமந்திரனும் டக்ளஸும் வேறுவேறல்ல! இரண்டும் சிங்களக் குட்டையில் ஊறிய மட்டைகள். போர்க்குற்றம் என்று சொல்லும்படி போதித்த சுமந்திரனின் தயவில் வண்டி ஓட்டுகிறார் டக்ளஸ். அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும், சுமந்திரன் என்கிற விஷத்தில் தோய்த்தெடுக்கப்பட்டது. 

விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு கொடுப்பதைப் போல், ராணுவத்துக்கும் பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் - என்பது திருவாளர்  டக்ளஸின் கோரிக்கை. இப்படியெல்லாம் டக்ளஸைப் பேசவைப்பவர் சுமந்திரன் தான் என்பது, தெளிவாகத் தெரிகிறது. அவர்  வசனத்தைத் தான், இவர் பேசுகிறார். தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளையும், தமிழின அழிப்பில் வெறி கொண்டிறங்கிய சிங்களப் படைகளையும் ஒரே தட்டில் நிறுத்துப் பார்க்கிற வக்கிர குணம், டக்ளஸ் - சுமந்திரன் கள்ளக் கூட்டணியை அம்பலப் படுத்தியிருக்கிறது. 

சிங்கள எஜமானர்களின் தயவைப் பெறுவதற்காக, மானம் மரியாதையையெல்லாம் தியாகம் செய்தவர்கள் இவர்கள். சொந்த மக்களுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயங்காத நிகரற்ற  போராளிகளான  விடுதலைப்புலிகளின் பெயரை உச்சரிக்கக் கூட இவர்களுக்குத் தகுதியில்லை. 

 

 

j5RxWAwWYnWL7Pw4DYPq.jpg

இன்றைய சூழலில், 1987 ஆகஸ்ட் நான்காம் தேதி சுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை, இந்த மேதாவிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். பிரபாகரன் என்கிற அந்தப் போராளித்தலைவன், கையைக் காலையெல்லாம் ஆட்டி உணர்ச்சிபொங்க ஆவேசத்துடன் பேசுகிற மேடைப் பேச்சாளனாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், ஆகஸ்ட் 4 சுதுமலை உரை, ஒரு தலைவன் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கான இலக்கணமாக இருந்தது. 

‘எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் சேகரித்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிற இந்தக் கணத்திலிருந்து, எமது மக்களைப் பாதுகாக்கிற பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்’ என்கிற  வார்த்தைகள், வேலுப்பிள்ளை பிரபாகரனை, ஒரு ஆகச்சிறந்த ராஜதந்திரியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தும். 

அந்த வார்த்தைகள், இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரு நேர்மையான மனிதனின் இதயத்திலிருந்து வெளிப்பட்டவை. சொந்த மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட அவன், சுதுமலை மேடையில் மனம் திறந்து பேசினான். ஒளிவுமறைவில்லாமல் பேசினான். உள்ளதை உள்ளபடி பேசினான். 

அதனால்தான், அந்த மனிதன் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியபோது லட்சக்கணக்கான மக்களும் அவனுடன் வெளியேறினார்கள். ராமன் இருக்கிற இடம் அயோத்தி - என்கிறது ராமாயணம் என்கிற அழகான கதை. அதை நிஜத்தில் நிரூபித்தவர்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்கள்! பிரபாகரன் இருக்கிற இடம்தான் தமிழீழம் என்று அந்தத் தலைவனைப் பின்தொடர்ந்தனர். 

புலிகளிடம் ஆயுதங்கள் இருந்த வரை தமிழீழ மக்கள் பாதுகாப்பாக  இருந்தனர். சிங்கள வெறியர்கள் அவர்களை நெருங்க முடியவில்லை. அதனால்தான், புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்கத் தலைகீழாய் நின்றது சிங்களப் பேரினவாத அரசு. அவர்களுக்கு ஆயுதம் வருகிற வழிகள்  இந்தியா போன்ற அண்டை நாடுகளால் அடைக்கப்பட்டன. இது, வரலாறு தெரிவிக்கிற உண்மை. 

நிராயுதபாணிகளாய் நின்ற சில ஆயிரம் போராளிகளுக்கும், பேரழிவு ஆயுதங்களுடன் இருந்த லட்சக்கணக்கான படையினருக்கும் நடந்தது போரென்று யாராவது சொன்னால், அவர்கள் மன நலன் குன்றியவர்களாக இருக்கவேண்டும், அல்லது, சுயநலன் கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது…. சுமந்திரன் Agent Number ONE என்றால், டக்ளஸ் தான் Agent Number Two. 

2009-ல், சிங்கள ராணுவத்தின் பேரழிவு ஆயுதத் தாக்குதல்களிலிருந்தும், விமானக் குண்டுவீச்சிலிருந்தும், கொத்துக் குண்டுகளிலிருந்தும் லட்சக்கணக்கான தமிழீழ உறவுகளைக் காப்பாற்றியது, சுமந்திரன்களோ  டக்ளஸ்களோ இல்லை. சொற்ப ஆயுதங்களுடன் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போராளிகள் தான்,  தங்களை நேசித்துப் பின்தொடர்ந்த லட்சக்கணக்கான உறவுகளைக் காக்க ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது. அதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருந்தது.

பெரிய அளவில் ஆயுதங்களும் இல்லை, போதிய அளவு உணவுப் பொருட்களும் இல்லை. அப்படியொரு கையறு நிலையிலும், சொந்த மக்களைப் பாதுகாக்கிற கடமையை நிறைவேற்ற பிரபாகரனின் தோழர்கள்   தவறவில்லை. பதுங்கு குழிகளில் மக்கள் முடங்கிக் கிடந்த அந்த இருண்ட காலத்தில், வயிற்றுக்கு உணவின்றி குழிகளுக்குள் துடித்த மழலைச் செல்வங்களைக் காப்பாற்றக் களமிறங்கினார்கள் அவர்கள்.

 

eMy8bsXraLLkrA4tS6SN.jpg

 

அது, ஒரு குழியிலிருந்து இன்னொரு குழி என்று, அச்சத்திலும் துயரிலும் பசியிலும் வாழ்க்கை நகர்ந்த   நாட்கள். குழியிலிருந்து ஒரு தலை வெளியே தெரிந்தால் கூட விமானங்கள் குண்டுமழை பொழியும். பதுங்கு குழியே சவக்குழி ஆகிவிடும். அந்த நிலையிலும், விமானக் குண்டுவீச்சுக்கு அஞ்சாமல், குழிகுழியாகத் தேடிச்சென்று, உள்ளேயிருந்த குழந்தைகளுக்குக் கஞ்சி ஊற்றிய ஒரே இயக்கம், உலக வரலாற்றிலேயே விடுதலைப் புலிகள் இயக்கமாகத்தான் இருக்கும். 

ஒரு அரசாங்க ஏஜெண்டின் கடமையை நிறைவேற்றி எஜமானர்களிடம் நல்ல பெயரெடுக்க நாடு நாடாகப் பறந்த சுமந்திரன் போன்றவர்களையும், குழி குழியாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்குக் கஞ்சி ஊற்றுகிற கடமையில் ஈடுபட்டிருந்தபோது விமானக் குண்டுவீச்சில் உயிரிழந்த எங்கள் விடுதலைப் போராளிகளையும், இந்தத் தருணத்தில்  ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கும், அந்த அற்புதப் பிறவிகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தை நாம் எந்தக் காலத்திலும் மறந்துவிட முடியாது. இதையெல்லாம் நாம் மறந்திருப்போம் என்று நினைத்து, டக்ளஸ் என்கிற கொலைக் குற்றவாளி ‘புலிகளுக்குப் பொதுமன்னிப்பு’ என்று பிதற்றுவது, சுயநல வெறி ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் என்பதற்கான நிகழ்காலச் சான்று. 

தாயகத்திலிருக்கும் தமிழ் மக்களோ, புலம்பெயர் உறவுகளோ, தமிழ்நாட்டுத் தமிழர்களோ, போர்க்குற்றம் என்கிற போலி வார்த்தையை எப்போதாவது ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? ‘புலிகளுக்குப் பொதுமன்னிப்பு தரவேண்டும்’ என்று என்றைக்காவது கேட்டிருக்கிறோமா? 

நாம் கேட்பது, சர்வதேச விசாரணை. இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கைப் படையினர் மீதும்,  உத்தரவிட்ட அதிகாரிகள் மீதும், பக்கச் சார்பற்ற  விசாரணை தேவை என்பது மட்டும்தான், கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக நமது கோரிக்கையாக இருக்கிறது. ஒரு குற்றவாளி தன்னைத்தானே எப்படி விசாரித்துக் கொள்ள முடியும் என்கிற நியாயமான கேள்வி நம்முடையது. 

‘போர்க்குற்ற விசாரணை சர்வதேசத்தின் கைக்குப் போனால், விடுதலைப் புலிகள் கூட விசாரிக்கப்படக் கூடும்  என்று சுமந்திரன்கள் பீதி கிளப்பியபோதுகூட, நாம் பின்வாங்கவில்லை. சர்வதேச விசாரணை தான் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தோம், இருக்கிறோம். புலிகளின் அர்ப்பணிப்பை முற்றுமுதலாக அறிந்திருப்பதால், சுமந்திரன்களின் பூச்சாண்டியை நாம்  பொருட்படுத்தவில்லை. மடியில் கனம் இல்லாதவர்களுக்கு, வழியில் எதற்காக பயம்?

 

முதலில் சுமந்திரனை ‘போர்க்குற்றம்’ என்று பேசவைப்பது, அடுத்து  டக்ளஸை ‘பொதுமன்னிப்பு’ என்று உளற வைப்பது - என்பதெல்லாம் சிங்களப் பேரினவாதத்தின் அஜெண்டா. இந்தத் தகிடுதத்தத்துக்கெல்லாம் தமிழினம் துணைபோகாததால்தான், இப்போது மாற்றிப் பேசுகிறது இலங்கை. ‘சர்வதேசப் பொறிமுறையெல்லாம் இலங்கை அரசியலமைப்புக்குச் சரிப்பட்டு வராது’ என்று வியாக்கியானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நீதியும் நீதிமறுப்பும் ஒன்றல்ல. ஆனால், அந்த இரண்டின் விளைவும் ஒரே மாதிரியானது. மனித உரிமைகள் ஆணையரகம் சொல்கிற 58 அதிகாரிகளிலிருந்து  விசாரணையை  ஆரம்பித்தால், மேலதிகமாக யார் யார் குற்றவாளி என்பதை அந்த 58 பேரே போட்டுக் கொடுத்து விடுவார்கள்..

அதன்மூலம் மேலும் பல குற்றவாளிகள் விசாரணை வலயத்துக்குள் வருவார்கள். அவர்கள் மூலம் கூடுதலாக மேலும் பலர்… மேலும் பலர்… என்று அந்த வலயம் பெரிதாகிக் கொண்டே போகும். சிங்கமாவது ரத்தமாவது? அதெல்லாம் எடுபடாது. நான் உள்ளே நீ வெளியேவா…… என்கிற ஆத்திரம், இதுபோன்ற குற்றவாளிகளின் அடிப்படைக் குணம். 

சர்வதேசப் பொறிமுறை மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடந்தால், ‘நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல…. இன அழிப்பு…..’ என்கிற நிதர்சனம் நிச்சயம் வெளிப்படும். சுமந்திரன்களாலோ டக்ளஸ்களாலோ அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இன அழிப்பு தான் - என்பது அம்பலமானபிறகு, கொல்லப்பட்ட இனமும் கொன்ற இனமும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்கிற  வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.  இரண்டும் தனித்தனி நாடாவதை யாரும் தடுக்க முடியாது. சர்வதேசப் பொறிமுறையுடன் விசாரணைகள் நடந்தால், இதுதான் அதன் அதிமுக்கியப் பின் விளைவாக இருக்கும்.

 

 - புகழேந்தி தங்கராஜ்


பகுதி இரண்டு தொடரும் ...

 

https://www.thaarakam.com/news/daa241d1-0701-496f-ba6c-9db16da8fdde

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ் |பகுதி இரண்டு

13 ஆண்டுகளாக நீதி கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிற இலங்கை அரசு,  தமிழருக்கான நீதியை வழங்க முடியாது என்று இப்போதும் முரண்டு பிடித்தால், அதுவும் இலங்கைக்கு நல்லதல்ல! எந்த இனத்துக்கு சொந்த நாட்டில் தொடர்ந்து  நீதி மறுக்கப்படுகிறதோ, அந்த இனம் அந்த ஒரே காரணத்துக்காகப் பிரிந்து செல்கிற உரிமையை அழுத்தந்திருத்தமாக  நிலைநாட்டிவிட முடியும். அந்த ஒரே காரணத்தை வைத்தே, ‘பிரிவதைத் தவிர வேறு வழியில்லை’ என்கிற சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும் முடியும்.

இலங்கைக்கு இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன இப்போது! சர்வதேச விசாரணை நடக்க வழிவிடுவதன் மூலம் தமிழீழத்துக்கு வழிவகுக்கப்  போகிறதா? நீதியை மறுப்பதன் மூலம், தமிழீழக் கோரிக்கையை உலக அளவில் வலுப்படுத்தப் போகிறதா? சிங்கள அரசு, இரண்டில் எதைச் செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படியா அப்படியா என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும். 

இதெல்லாம் உடனடியாக நடந்துவிடுமா - என்கிற கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. இன்றில்லாவிட்டாலும் நாளை இதுதான் நடக்கும். நாளை நடக்காவிட்டாலும் நாளை மறுநாள் இதுதான் நடக்கும். தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள நினைத்துப் புதைகுழியில் இறங்கியிருக்கிறது இலங்கை. அதிலிருந்து விடுபட வாய்ப்பேயில்லை. இனவெறியால் தன்னுடைய தலைவிதியை அது தீர்மானித்துக் கொண்டுவிட்டபிறகு யார்தான் என்ன தான் செய்ய முடியும்? அநேகமாக ஒன்றுபட்ட இலங்கையின் கடைசி அதிபர் என்கிற பெயர், குறுக்கு வழியில் அரியணையில் அமர்ந்திருக்கும் ரணிலுக்குக் கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. 

 

fM4g03qeJQrzwZ5AQp8i.jpg

 

இதுதான் நடக்குமென்றாலும், இதை விரைவுபடுத்துவது  தமிழினத்தின் கையில் இருக்கிறது. இன அழிப்புக்கான சர்வதேச நீதியைப் பெற, சர்வதேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தை நாம் ஈர்த்தாக வேண்டும். மயிலே மயிலே இறகு போடு - என்றால் போடாது, போடு போடு என்று போட்டால்தான் போடும்! ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன், அடிவயிற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டும். குரல் கொடுப்பது என்றால், வெறுமனே குரல் கொடுப்பது மட்டுமல்ல…. களத்தில் இறங்கிச் செயல்படுவது! அதுதான்  முக்கியம்.

சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசியலமைப்பு ஒருபோதும்  அனுமதிக்காது -  என்று வெளிப்படையாகவே அறிவித்திருப்பதன் மூலம், இந்த நிலையில் தமிழினம் எப்படிப் போராட வேண்டும் என்பதைக் கோடுபோட்டுக் காட்டியிருக்கிறது  ரணில் அரசு. ஒன்றரை லட்சம் தமிழர்களின் உயிர்களுக்கு நீதி கிடைக்க எந்த அரசியலமைப்பு தடையாயிருக்கிறதோ, அந்த அரசியலமைப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்குவதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். இக்கினியாகலை கரும்பாலை நெருப்பில் நூற்றுக்கணக்கான தமிழ்த் தொழிலாளிகளைச் சுட்டுப் பொசுக்கிய ஒரு பேரினவாதத்தின் அரசியலமைப்பைத் தீக்கிரையாக்குவதில் எந்தத் தவறுமில்லை.

 

GXw5shpxuYHTOQ0kQ1Yt.jpg

 

லண்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஆப்பிரிக்கா, தமிழ்நாடு, தமிழீழம் - என்று, இந்த பூமிப்பந்தின் எட்டுத்திக்கும் தமிழர்கள் வாழ்கிற நிலத்திலெல்லாம், இலங்கைத் தூதுவரகங்களுக்கு முன் அந்த அரசியலமைப்பை நெருப்புக்கு இரையாக்குவது, அகிம்சைப் போராட்டமாகவும், அறப் போராட்டமாகவும் தான் அந்தந்த நாடுகளால் கருதப்படும். அதேசமயம், சிங்கள அரசுக்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒருங்கிணைந்து விடுக்கிற வலுவான எச்சரிக்கையாகவும் இருக்கும். 

ஈகோ பார்க்காமல், உள் முரண்களை விவாதித்துக் கொண்டிருக்காமல், அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒரே நாளில் உலகெங்கும் இந்த அக்கினிப் பரீட்சையில் இறங்கினால், சர்வதேச அரங்கில் சிங்களப் பேரினவாத அரசு தலைகுனிந்து நிற்க நேரும். ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்த அகிம்சைப் போராட்டத்தைக் கவனமாக அவதானிக்கும். ஜெனிவாவில் நிச்சயமாக அது எதிரொலிக்கும். இதைக்காட்டிலும் எளிதாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க வேறு போராட்ட வடிவம் இருந்தால், அதைக் கடைப்பிடிக்கலாம்…. தவறில்லை! எதுவாக இருந்தாலும், எதைச் செய்தாலும், விரைந்து செய்வது நல்லது. காலந் தாழ்த்துவது, தமிழினத்தின் முயற்சியை விரயமாக்கிவிடும். 

இனவெறியை வைத்து எதையெல்லாம் அனுபவிக்க முடியும் என்பதற்கு ஜெயவர்தன என்கிற கிழட்டு ஓநாய், வரலாற்று சாட்சி. ரணில், அந்த ஓநாயின் நீட்சி. தேவைப்படுகிறபோதெல்லாம் ஆட்டுத்தோலை அணிந்துகொண்டு ஆட்டுப்பட்டிகளைச் சுற்றிவருகிற நவீன ஓநாய் இது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். காலதாமதமில்லாமல் களத்தில் இறங்குவதும் அவசியம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் விஷயத்தில் வாய்திறந்து பேசுவோர்,  ஐந்து தரப்பினர். முதல் தரப்பினரான நாம், தாயக மண்ணில் பாதிப்புக்கு உள்ளான எளிய மக்களின் தரப்பு. இன அழிப்புக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் நீதி கேட்கிறோம். கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் நீதி கேட்கிறோம். சிதைக்கப்பட்ட ஒவ்வொரு சகோதரிக்கும் நீதி கேட்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கேட்கிறோம். 

இரண்டாம் தரப்பு, அரசத் தரப்பு. எங்களை நாங்களே தான் விசாரித்துக் கொள்வோம் என்று முரண்டுபிடிப்பதன் மூலம், வேண்டுமென்றே  விசாரணையை இழுத்தடிக்கிறது. இப்படியே பல ஆண்டுக்காலம் இழுத்தடித்து இன அழிப்புக் குற்றச்சாட்டை நீர்த்துப் போக வைக்க முயல்கிறது.  சர்வதேசத்தையெல்லாம் அனுமதிக்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறது.   மறப்போம் மன்னிப்போம் - என்று போதிக்கிறது. சர்வதேசத்தை ஏமாற்ற, வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்கிறது. அந்தப் போர்வையில், புலம்பெயர் தமிழர்களிடம் பிக் பாக்கெட் அடிக்க முயல்கிறது.

கடைசி மூன்று தரப்பினரும், 2009ல், சொந்த மக்களின் ரத்தவாடையை உணர முடிகிற அளவுக்கு அண்மையில் இருந்தவர்கள். சொந்த உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவிக்கப்பட்ட போது அதைத் தடுக்க முயலாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தவர்கள். இப்போது, சொந்த இனத்தை அழித்த கொலைக்குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக மணல்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தரப்பு, போர்க்குற்றம் என்கிற வார்த்தையை பாவிப்பதுதான் புத்திசாலித்தனம் என்று நைச்சியமாகப் பேசி, குற்றவாளிகளுக்கு சேஃப் பாசேஜ் கொடுக்கப் பார்க்கிறது. அடுத்த தரப்பு, ‘இன அழிப்புக்கு நீதி கேட்டால் மிச்சம் மீதி இருப்பதையும் அழித்துவிடுவார்கள்’ என்று நம்மை  மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது. ஐந்தாவது தரப்பு, போர்க்குற்றமென்று வந்தால் புலிகள் மீதும் சட்டம் பாயுமென்று பயமுறுத்திப் பார்க்கிறது. உண்மையில் இவர்கள் தான் ஐந்தாம்படையினர். 

 

brQ8TepDNT5pCnCbQEd4.jpg

 

 

இன அழிப்புக்குக் காரணமான சிங்கள அரசுத் தலைவர்களையும், அதைச் செயல்படுத்திய சிங்களத் தளபதிகளையும் அதிகாரிகளையும் ராணுவத்தினரையும் காட்டிலும் கொடியவர்கள், இன அழிப்புக் குற்றவாளிகள் மீது சர்வதேசம் பாய்ந்துவிடாதபடி பக்குவமாகப் பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுக்கிற இவர்கள் தான்!

அரசியலமைப்பைத் தீக்கிரையாக்கும் போராட்டம், அரசுக்கு மட்டுமின்றி, ஒன்றரை லட்சம் உறவுகளின் உயிருக்குப் பச்சைத் துரோகம் செய்கிற இந்த  ஐந்தாம் படையினருக்கும் விடுக்கிற எச்சரிக்கையாக இருக்கும். என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ன செய்வது, என்ன செய்வது…. என்கிற தன்னிரக்கத்திலேயே தலைதாழ்ந்து கிடக்கப் போகிறோமா? சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கிற அறப் போர்க்களத்தில் தலைநிமிர்ந்து நிற்கப்  போகிறோமா?

 

 - புகழேந்தி தங்கராஜ்

https://www.thaarakam.com/news/343934e0-2626-4983-867a-1a8d7af371ec

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

சர்வதேசப் பொறிமுறை மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடந்தால், ‘நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல…. இன அழிப்பு…..’ என்கிற நிதர்சனம் நிச்சயம் வெளிப்படும். சுமந்திரன்களாலோ டக்ளஸ்களாலோ அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இன அழிப்பு தான் - என்பது அம்பலமானபிறகு, கொல்லப்பட்ட இனமும் கொன்ற இனமும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்கிற  வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.  இரண்டும் தனித்தனி நாடாவதை யாரும் தடுக்க முடியாது. சர்வதேசப் பொறிமுறையுடன் விசாரணைகள் நடந்தால், இதுதான் அதன் அதிமுக்கியப் பின் விளைவாக இருக்கும்.

ஐயா நல்லா தான் எழுதியுள்ளார்.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் சுமேந்திரனுக்கும் என்ன  வயல்ச்சண்டையோ??

ஏதோ  ஒருவகையில் விசாரணைக்கு  வரட்டுமன்

அவரே சொல்கிறார்

(சர்வதேசப் பொறிமுறை மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடந்தால், ‘நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல…. இன அழிப்பு…..’ என்கிற நிதர்சனம் நிச்சயம் வெளிப்படும். சுமந்திரன்களாலோ டக்ளஸ்களாலோ அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இன அழிப்பு தான் - என்பது அம்பலமானபிறகு, கொல்லப்பட்ட இனமும் கொன்ற இனமும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்கிற  வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.  இரண்டும் தனித்தனி நாடாவதை யாரும் தடுக்க முடியாது. சர்வதேசப் பொறிமுறையுடன் விசாரணைகள் நடந்தால், இதுதான் அதன் அதிமுக்கியப் பின் விளைவாக இருக்கும்.)

அப்போ எதுக்கு இத்தனை  பயமும் சுமேந்திரனுக்கெதிரான ஆர்ப்பாட்டமும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இவருக்கும் சுமேந்திரனுக்கும் என்ன  வயல்ச்சண்டையோ??

ஏதோ  ஒருவகையில் விசாரணைக்கு  வரட்டுமன்

அவரே சொல்கிறார்

(சர்வதேசப் பொறிமுறை மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடந்தால், ‘நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல…. இன அழிப்பு…..’ என்கிற நிதர்சனம் நிச்சயம் வெளிப்படும். சுமந்திரன்களாலோ டக்ளஸ்களாலோ அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இன அழிப்பு தான் - என்பது அம்பலமானபிறகு, கொல்லப்பட்ட இனமும் கொன்ற இனமும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்கிற  வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.  இரண்டும் தனித்தனி நாடாவதை யாரும் தடுக்க முடியாது. சர்வதேசப் பொறிமுறையுடன் விசாரணைகள் நடந்தால், இதுதான் அதன் அதிமுக்கியப் பின் விளைவாக இருக்கும்.)

அப்போ எதுக்கு இத்தனை  பயமும் சுமேந்திரனுக்கெதிரான ஆர்ப்பாட்டமும்???

அண்ணை, 

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இனவழிப்பு இடம்பெற்றதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இதையே சர்வதேசத்திலும் பிரச்சாரமாக முன்னெடுத்துவருகிறார்கள். ஆனால், இறுதி யுத்தத்தில் இனவழிப்பு நடைபெறவில்லை, அதற்கான சான்றுகள் இல்லையென்பதே சுமந்திரனின் இற்றைவரையான நிலைப்பாடு. சுமந்திரன் உண்மையாகவே இனவழிப்பு நடைபெறவில்லை என்று நம்புகிறாரா அல்லது அதனை தம்மால் நிரூபிக்க முடியாது என்பதால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால், இனவழிப்பென்பதை சுமந்திரன் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே அவரின் கருத்துக்கள் கூறிவருகின்றன.

ஆகவேதான், சுமந்திரன் என்ன சொன்னாலும்கூட இனவழிப்பு நடந்தது, அதனை அவரால் மறுத்துவிட முடியாது என்று புகழேந்தி கூறுவதாக நான் நினைக்கிறேன். இன்னொரு வகையில் சொல்லப்போனால், சுமந்திரன் என்னதான் முட்டுக்கட்டை போட்டாலும் இனவழிப்பு நடந்தேறியதை ஒருநாள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள் என்று இவர் நினைப்பதாகப் படுகிறது.

இதுதான் சுமந்திரனுக்கும், இனவழிப்பு நடந்தது என்று கூறுபவர்களுக்கும் இடையிலான வாய்க்கால்ச் சண்டை என்று நான் நினைக்கிறேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, 

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இனவழிப்பு இடம்பெற்றதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இதையே சர்வதேசத்திலும் பிரச்சாரமாக முன்னெடுத்துவருகிறார்கள். ஆனால், இறுதி யுத்தத்தில் இனவழிப்பு நடைபெறவில்லை, அதற்கான சான்றுகள் இல்லையென்பதே சுமந்திரனின் இற்றைவரையான நிலைப்பாடு. சுமந்திரன் உண்மையாகவே இனவழிப்பு நடைபெறவில்லை என்று நம்புகிறாரா அல்லது அதனை தம்மால் நிரூபிக்க முடியாது என்பதால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால், இனவழிப்பென்பதை சுமந்திரன் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே அவரின் கருத்துக்கள் கூறிவருகின்றன.

ஆகவேதான், சுமந்திரன் என்ன சொன்னாலும்கூட இனவழிப்பு நடந்தது, அதனை அவரால் மறுத்துவிட முடியாது என்று புகழேந்தி கூறுவதாக நான் நினைக்கிறேன். இன்னொரு வகையில் சொல்லப்போனால், சுமந்திரன் என்னதான் முட்டுக்கட்டை போட்டாலும் இனவழிப்பு நடந்தேறியதை ஒருநாள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள் என்று இவர் நினைப்பதாகப் படுகிறது.

இதுதான் சுமந்திரனுக்கும், இனவழிப்பு நடந்தது என்று கூறுபவர்களுக்கும் இடையிலான வாய்க்கால்ச் சண்டை என்று நான் நினைக்கிறேன். 

இனவழிப்பு என்பதன் விஞ்ஞான/சட்டரீதியிலான வரையறை மற்றும் பொறுப்பு என்ன என்பதுதான் இங்கே பொதுமக்களுக்கும் சுமந்திரனுக்குமான பிரச்சனை என நினைக்கிறேன். 

(இலங்கையில் இனவழிப்பு இடம்பெறவில்லை என்பது  சுமந்திரனின் நிலைப்பாடு என்பதாக நான் நம்பவில்லை)

Link to comment
Share on other sites

உக்ரேனில் போர் தொடங்கி இரண்டாம் நாளே இனப்படுகொலை நடைபெறுகிறது என்று மேற்கு ஊடகங்கள் கூறினவே?

ஏன் டகளசையோ, சுமந்திரனையோ போர்க்குற்றம் நடந்தது என கேட்டறிய வேண்டும்?
ஓராயிரம் சாட்சிகள், சம்பவங்கள் போதாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

உக்ரேனில் போர் தொடங்கி இரண்டாம் நாளே இனப்படுகொலை நடைபெறுகிறது என்று மேற்கு ஊடகங்கள் கூறினவே?

ஏன் டகளசையோ, சுமந்திரனையோ போர்க்குற்றம் நடந்தது என கேட்டறிய வேண்டும்?
ஓராயிரம் சாட்சிகள், சம்பவங்கள் போதாதா?

சர்வதேச போர்க்குற்ற விசாரணையும் ஆரம்பிச்சட்டாங்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. இதில் இருந்து தெரிகிறது இவர்களை ஆட்டிவிப்பது யார் என்பது. இத்தனைக்கும் ஐநாவின் கணிப்புப் படி 5700 பேர் தான் பொதுமக்கள் பலி.

ஆனால் நாம் இலச்சக்கணக்கில் சாகக் கொடுத்த போதும்.. எமது சில வித்துவான்களும் இந்த மேற்குக் குடி ஆக்களும் அது இனப்படுகொலை என்று சொல்ல சாவுத் தொகை காணாது என்று சொன்னது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது. 

https://www.bbc.co.uk/news/world-europe-62945155

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2022 at 19:29, Kapithan said:

இனவழிப்பு என்பதன் விஞ்ஞான/சட்டரீதியிலான வரையறை மற்றும் பொறுப்பு என்ன என்பதுதான் இங்கே பொதுமக்களுக்கும் சுமந்திரனுக்குமான பிரச்சனை என நினைக்கிறேன். 

(இலங்கையில் இனவழிப்பு இடம்பெறவில்லை என்பது  சுமந்திரனின் நிலைப்பாடு என்பதாக நான் நம்பவில்லை)

சுமந்திரனின் இனவழிப்புத் தொடர்பான சுருதி சற்று மாறியிருக்கிறது. இனவழிப்பு நடந்ததாக ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கான சான்றுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினாலும், இதுதொடர்பாக அழுத்தம் கொடுப்பதுபற்றி அவதானம் தேவையென்றும், அதனை முன்னெடுக்க தற்போதைக்கு சூழ்நிலைகள் இல்லையென்றும் கூறுகிறார். இதுதான் இவரின் பிரச்சினை. இவரது மேட்டுக்குடி - சிங்கள சிநேக அரசியல்,  இனவழிப்புத்தொடர்பாக அவரை தீர்க்கமாகச் செயற்பட விடுவதில்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2022 at 05:29, Kapithan said:

இனவழிப்பு என்பதன் விஞ்ஞான/சட்டரீதியிலான வரையறை மற்றும் பொறுப்பு என்ன என்பதுதான் இங்கே பொதுமக்களுக்கும் சுமந்திரனுக்குமான பிரச்சனை என நினைக்கிறேன். 

(இலங்கையில் இனவழிப்பு இடம்பெறவில்லை என்பது  சுமந்திரனின் நிலைப்பாடு என்பதாக நான் நம்பவில்லை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

நன்றி பிரியன்,

அண்மையில் ஒரு (பரம்பரை) வழக்கறிஞருடன் கதைக்கும்போது அவர் கூறினார் "இலங்கையின் வரலாறு என்பது மேற்கத்தேயர்களின் வருகையுடனே ஆரம்பமாகிறது. அதற்கு முன்னரான காலப்பகுதி UN ஆல் கணக்கில் எடுக்கப்படாது. (அதாவது இலங்கையின் ஆதிக்குடிகளில் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் இல்லை என்கிற ரீதியில்) என்று கூறினார்.  

இவர் கூறியதன் முழுமையான விளக்கத்தை அறிய முயன்றேன், முடியவில்லை. 

(எங்கள் விருப்பப்படி நாங்கள் எதற்கும் வியாக்கீனங்கள் கொடுக்க முடியாது . அதற்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும். அப்போதுதான் எங்கள் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வரையறை சமூகத்தின் எல்லா விடயங்களுக்கும் பொருந்தும்)

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.