Jump to content

அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு

  • பல்லவ் கோஷ்
  • அறிவியல் நிருபர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோகோ மீனின் மாதிரி வடிவம்

பட மூலாதாரம்,PALEOZOO

 

படக்குறிப்பு,

கோகோ மீனின் மாதிரி வடிவம்

38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர்.

இது 'கோகோ' (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீன் இனம் அழிந்து போய்விட்டது.

பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த கண்டுபிடிப்பு, ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியானது.

 

தங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பை, தாமும் தமது சக ஊழியர்களும் நிகழ்த்திய தருணம் பற்றி பிபிசி நியூஸிடம் கர்டின் பல்கலைக்கழக பேராசிரியரும் முதன்மை ஆய்வாளருமான கேட் டிரினாஜ்ஸ்டிக் தெரிவித்தார்.

"நாங்கள் கணினி முன் இருந்தோம். நாங்கள் ஒரு இதயத்தை கண்டறிந்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இது எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது," என்றார்.

 

மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் மீனின் படிமம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது.

பட மூலாதாரம்,LINDSAY HATCHER

 

படக்குறிப்பு,

மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் இந்த மீனின் படிமம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது.

பொதுவாக, மென்மையான திசுக்களை விட எலும்புகள்தான் புதைபடிவங்களாக மாறுகின்றன. ஆனால் கிம்பர்லியில் உள்ள இந்த பகுதியில், கல்லீரல், வயிறு, குடல் மற்றும் இதயம் உட்பட மீனின் உள் உறுப்புகளில் பலவற்றைப் தாதுக்கள் பாதுகாத்துள்ளன. இதனை 'கோகோ பாறை உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

"இது நமது சொந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம்," இது என்று பேராசிரியர் டிரினாஜ்ஸ்டிக் கூறினார்.

 

Presentational grey line

 

Presentational grey line

"இது நாம் மிக தொடக்கத்தில் உருவாகியிருக்கும் உடல் அமைப்பை காட்டுகிறது. இந்த புதைபடிவங்களில் இதை முதன்முறையாகப் பார்க்கிறோம்."

அவருடன் இணைந்து பணியாற்றிய, அடிலெய்டில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் லாங், இந்த கண்டுபிடிப்பை "மனதைக் கவரும், ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு" என்று விவரித்தார்.

"இவ்வளவு வயதான விலங்குகளின் மென்மையான உறுப்புகளைப் பற்றி இதுவரை எங்களுக்கு எதுவும் தெரியாது," என்று அவர் கூறினார்.

 

கோகோ மீனுக்கு இதய அறைகள் இரண்டு உள்ளன. அது ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளது.

பட மூலாதாரம்,BBC NEWS

 

படக்குறிப்பு,

கோகோ மீனுக்கு இதய அறைகள் இரண்டு உள்ளன. அது ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளது.

கோகோ மீன் என்பது பிளாகோடெர்ம்ஸ் (placoderms) எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய மீன் வகைகளில் முதன்மையானது. இவை தாடைகள் மற்றும் பற்கள் கொண்ட முதல் மீன்கள். அவற்றிற்கு முன், மீன்கள் 30 செ.மீ.க்கு மேல் பெரிதாக இல்லை. ஆனால் பிளாக்கோடெர்ம்கள் 29.5 அடி (9மீ) நீளம் வரை வளரக்கூடியவை.

பிளாகோடெர்ம்கள் என்பது 6 கோடி ஆண்டுகளாக நமது புவியில் ஆதிக்கம் செலுத்தும் உயிரினங்களின் வடிவமாக இருந்தன. நமது பூமியில் முதல் டைனோசர்கள் நடமாடுவதற்கு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவை இருந்தன.

கோகோ மீன் புதைபடிவத்தின் ஸ்கேன் இந்த பழமையான மீன்களின் இதயம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது என்பதைக் காட்டுகிறது.

இது மனித இதயத்தைப் போன்ற அமைப்பில், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு இதய அறைகளைக் கொண்டிருந்தன. இந்த இதயம் மிகவும் திறம்பட இயங்கக்கூடியதாகவும், மெதுவாக நகரும் மீனில் இருந்து வேகமாக நகரும் வேட்டையாடும் உயிரினமாக மாற்றும் முக்கியமான படியாகவும் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ஆராய்ச்சியாளர்கள் பாறைகளுக்குள் ஸ்கேன் செய்து கல்லீரல், வயிறு, குடல் மற்றும் இதயத்தை கண்டறிந்தனர் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)

பட மூலாதாரம்,KATE TRINAJSTIC/SCIENCE

 

படக்குறிப்பு,

ஆராய்ச்சியாளர்கள் பாறைகளுக்குள் ஸ்கேன் செய்து கல்லீரல், வயிறு, குடல் மற்றும் இதயத்தை கண்டறிந்தனர் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)

இதுதான் அவற்றை முன்னோக்கி சென்று, வேட்டையாடும் உயிரினமாக மாற்றியது என்று பேராசிரியர் லாங் கூறுகிறார்.

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவற்றின் உடலில் இதயம் ஆரம்பநிலை மீன்களைவிட மிகவும் முன்னேறி இருந்தது.

அவற்றின் உடலில் இதயம் அமைந்துள்ள இடம் கோகோ மீனின் கழுத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. மேலும், பரிணாம வளர்ச்சியில் பிற்காலத்தில் நுரையீரல் வளர்வதற்கான இடத்தை உருவாக்குவதாகவும் இருந்துள்ளது.

 

பெரிய கண் குழிகளைக் கொண்ட கோகோ மீனின் தலையின் படிமம்

 

படக்குறிப்பு,

பெரிய கண் குழிகளைக் கொண்ட கோகோ மீனின் தலையின் படிமம்

பிளாகோடெர்ம்கள் பற்றிய ஆராய்ச்சியில் உலகில் முன்னணியில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் டாக்டர் ஜெரினா ஜோஹன்சன், இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்றும், மனித உடல் இப்போது உள்ளபடி ஏன் இருக்கிறது என்பதை விளக்க உதவுவதாகவும் உள்ளது என்று கூறினார்.

பேராசிரியர் டிரினாஜ்ஸ்டிக் குழுவை சேராதவர் இவர்.

"நீங்கள் பார்க்கும் பல விஷயங்கள் இன்னும் நம் உடலில் உள்ளன. உதாரணமாக, தாடைகள் மற்றும் பற்கள். மீனுக்கு பக்கவாட்டிலும், பின்புறத்திலும் இருக்கும் துடுப்பு போன்ற உறுப்பு (fin), நமது கைகளாவும் கால்களாகவும் உருவாயின.

."இந்த ப்ளாகோடெர்ம்களில் இன்று கழுத்து, இதயத்தின் வடிவம், அமைப்பு மற்றும் உடலில் அதன் நிலை போன்ற பல உறுப்புகள் பரிணமிப்பதை நாம் காண்கிறோம். "

ஆஸ்திரேலிய ஆராய்ச்சிக் குழுவிலிருந்து சுயாதீனமான லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பிளாகோடெர்ம் நிபுணரான டாக்டர் மார்ட்டின் பிரேஸோவின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்பு பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியை விளக்குகிறது

"இந்த முடிவைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார்.

"நானும் எனது ஊழியர்களும் ஆய்வு செய்யும் மீன்கள் நமது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். இது மனிதர்கள், நிலத்தில் வாழும் பிற விலங்குகள் மற்றும் இன்று கடலில் வாழும் மீன்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்," என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/science-62931776

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.