Jump to content

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம்

என். கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. 

இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். 

இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு என்று கோட்டாபயவே ஒதுக்கிய காலிமுகத்திடலுக்கு எதிரிலான, ஜனாதிபதி மாளிகைக்கும், ‘ஷங்றி-லா’ ஹொட்டலுக்கும் அருகிலான இடம். இதற்கு ஒரு சிலர் ‘கோட்டா கோ கம’ (கோட்டா போ கிராமம்) என்று பெயரிட்டு, பெயர்ப்பலகையை  வைக்க, அதுவே இவ்விடத்தைக் குறிக்கும் பெயராகியது.

இதன் தொடர்ச்சியாக இலங்கை எங்கும், ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வௌிநாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்கள், அந்நாடுகளிலும் ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

மிகவும் அமைதியான வழியில் போராடுவதற்கான தமது உரிமையை பொதுமக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு கடும் அழுத்தத்தை வழங்கி, அதன் விளைவாக கோட்டாவையும் மஹிந்தவையும் தவிர, மற்றைய ராஜபக்‌ஷர்கள் எல்லாரும் பதவி விலகியிருந்த நிலையில்தான், இந்த ‘அறகலய’வின் அடுத்த கட்டம் உருப்பெற்றது. 

அது, அன்று பிரதமராக இருந்த மஹிந்தவின் பதவி விலகல். மஹிந்த பதவி விலகும் தினமன்று, அலரி மாளிகையில் கூட்டிய பெருங்கூட்டம், அங்கிருந்து புறப்பட்டு, அலரிமாளிகைக்கு முன்னிருந்த ‘மைனா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிவிட்டு, ‘கோட்டா கோ கம’ நோக்கிப் பயணித்து, அங்கிருந்த ஆாப்பாட்டக்காரர்களைத் தாக்கியது. 

இந்தக் கோரத் தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலில் ஈடுபடத் தூண்டியவர்கள் என அனைவரும் நீதியின் முன்னே நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் சாதாரண மக்கள் எவருக்கும் இருக்க முடியாது.

ஆனால், இதே தினம்தான் இந்த ‘அறகலய’வின் இன்னொரு பக்கம் வௌிச்சத்துக்கு வந்தது. அலரிமாளிகையிலிருந்து வந்த காடையர்கள், ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அங்கு விரைந்தார்கள். 

ஜே.வி.பி தலைவர் அநுர குமார, ‘கோட்டா கோ கம’வுக்கு வந்தபோது, ஒரு ‘ஹீரோ’ போல அவருக்கான வரவேற்பு, சில ஆர்ப்பாட்டக்காரர்களால் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்னவோடு அங்கு வந்தபோது, அவர்கள் மீது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி, அவர்களை ஓடஓட விரட்டினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன அங்கு வந்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 

இதுதான், பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்த ‘அறகலய’வின் முன்னரங்கிற்கு ஜனநாயக விரோத சக்திகள் வந்துவிட்டன என்பது அனைவருக்கும் வௌிப்படையாகத் தெரியவந்த முக்கிய சந்தர்ப்பம். தொடர்ந்து, அடுத்த தினங்களில், ராஜபக்‌ஷர்கள், மற்றும் அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துகள் எரியூட்டப்பட்டன. 

அமைதி வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஜனநாயக போராட்டத்துக்குள் ஜனநாயக விரோத சக்திகள் நுழைந்து, தம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கத் தொடங்கியது, தற்போது ‘வௌ்ளிடை மலை’யாகத் தெரிந்தது.

பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்த ‘அறகலய’வை சொந்தம் கொண்டாட, ஜனநாயக விரோத இடதுசாரி சக்திகள் தொடங்கின. ‘அறகலய’ முளைவிட்டு, வேர்விட்டு வளரும் வரை, பின்னரங்கில் பதுங்கியிருந்த இந்த ஜனநாயக விரோத இடதுசாரி சக்திகள், தற்போது, அதனை தாமே வழிநடத்த வேண்டுமென முன்னரங்கிற்கு முன்னேறியிருந்தார்கள். 

இதன் விளைவாக, ஜூலை ஒன்பதாம் திகதி, அதுவரை காலமும் எந்த வன்முறையும் சட்டவிரோத நடவடிக்கைகளுமின்றி அமைதிவழியில் போராடி, நிறையவற்றைச் சாதித்துக்கொண்ட மக்கள் போராட்டம், இந்த இடதுசாரி ஜனநாயக விரோதிகளின் வழிநடத்தலில் சிக்கி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பிரதமர் காரியாலயம் என்பவற்றுக்குள் உடைத்துக்கொண்டு உள்நுழைந்தது. 

இதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்த, ரணில் விக்கிரமசிங்கவோடு தனிப்பகை கொண்டிருந்த கூட்டமொன்று, ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் கூடியது. அதன் விளைவாக, ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரியூட்டப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வௌியேறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்து, பாராளுமன்றத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம், இதே இடதுசாரி ஜனநாயக விரோத சக்திகளின் தலைமையில் சென்றது. ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான முடிவால், அந்த நடவடிக்கை தகர்க்கப்பட்டது.

மேற்சொன்ன வன்முறைகளைக் கண்ட பொதுமக்களுக்கு, இந்த ஜனநாயக விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரல் புரிந்தது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதுதான் கோபமேயன்றி, ஜனநாயக ஆட்சி முறையை, அரசியலமைப்பை, சட்டத்தின் ஆட்சியை எல்லாம் தகர்ப்பது மக்களின் விருப்பமோ, நிகழ்ச்சிநிரலோ அல்ல. 

இந்த இடதுசாரி ஜனநாயக விரோத சக்திகள், மக்களின் ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளைத் தகர்த்து, தம்முடைய இடதுசாரி சர்வாதிகார நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கப் பயன்படுத்த முனைகின்றமை மக்களுக்கு தௌிவாகப் புரிந்ததால்தான், ஜூலை ஒன்பதாம் திகதிக்குப் பிறகு, மக்கள் தாமாக, இதுவரை மீண்டும் வீதிக்கு இறங்கவில்லை. 

இடதுசாரி கட்சிகளும் அவை சார்ந்த அமைப்புகளும் ஒரு 400-500 பேர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தகின்றனவே அன்றி, ‘அறகலய’ போல பொதுமக்கள் இவர்களின் ஜனநாயக விரோத நிகழ்ச்சி நிரலுக்குள் மீண்டும் வர விரும்பவில்லை என்பது, மிகத் தௌிவாகவே தெரிகிறது.

பொதுமக்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரம் வழங்கிப் பார்க்க விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. இடதுசாரிகளும் தற்போது தமது தனிப்பட்ட காரணங்களுக்காக, ரணிலோடு முறுகிக்கொண்டு நிற்கும் ரணிலின் முன்னாள் ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் படித்த, ஆங்கிலம் பேசும் ‘சிவில் சமூகமும்’ எதிர்கால அரசியல் கனவோடு, இந்தப் போராட்டத்தை தமது அரசியல் வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கருதும் சில இளைஞர்களும், இன்று ரணில் எதிர்ப்பை மும்முரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தமது நிகழ்ச்சி நிரலை இங்கு முன்னெடுக்க விரும்பும் சில வௌிநாடுகளும் பின்னணியில் ஆதரவளித்து வருகின்றன. 

இரண்டு மாதங்களுக்கு மேலாக, ரணில் எதிர்ப்பை கடுமையான முன்வைக்க இவர்கள் பகிரதப்பிரயத்தனப்பட்டாலும், இதுவரையும் இவர்களால் அவர்களது நிகழ்ச்சிநிரலுக்குள் பொதுமக்களைக் கொண்டு வரமுடியவில்லை. இதுவரை மக்கள், அதற்கு இடமளிக்கவில்லை என்பது மக்களின் வெற்றி. இவர்களது கைப்பிள்ளைகளல்ல நாங்கள் என்பதை, மக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதனை ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய வெற்றியாக எண்ணிவிடக் கூடாது. மக்கள் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்காக நேரமளித்து இருக்கிறார்கள். 6.9 மில்லியன் மக்களின் பேராதரவோடு வந்த கோட்டாவை வௌியேற்ற, இராணுவம், பொலிஸ் என எதற்கும் அஞ்சாமல் வீதிக்கிறங்கிய பொதுமக்களுக்கு, நாளை ரணிலை வௌியேற்ற வீதிக்கிறங்க முடியாது என்றில்லை. 

ஆகவே, மக்களுக்கு நன்மை செய்வதினூடாக மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய பெருங்கடமை ரணிலுக்கு இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்கவைக்க சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டிய கையறு நிலையில் நிற்கலாம். 

ஆனால், அவர் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் மட்டுமே, அவருக்கு அரசியலில் எதிர்காலம் இருக்கும் என்பது, பழுத்த அரசியல்வாதியான அவருக்கு சொல்லிப்புரிய வைக்க வேண்டியதொன்றல்ல; மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அறகலய-எனும்-அரசியல்-ஆயுதம்/91-304414

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.