Jump to content

அமெரிக்க லொட்டோ விசா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-submit-entry1.html?wcmmode=disabled&fbclid=IwAR3V7_52S_2EJ3ugtMdj_In3hZ0czOFtXzqH6bMTjDxGHsZmgCN4_DMJtUs

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருடாவருடம் அதிஸ்டசாலிகள் விண்ணப்பம் செய்யலாம்.

மேலதிக விபரம்கள் பின்னர்.

Diversity Visa 2022 Applicants: DV applicants for the 2022 fiscal year (DV-2022) should wait to be notified of the scheduling of an interview in accordance with the phased resumption of visa services framework. All DV-2022 diversity visa program applicants must be found eligible for, and obtain, their visa or adjust status by the end of fiscal year 2022 (September 30, 2022).

Diversity Visa 2023 Applicants: All DV-2023 diversity visa program applicants must be found eligible for, and obtain, their visa or adjust status by the end of fiscal year 2023 (September 30, 2023).


Beware of fraud and scams. Some websites and emails attempt to mislead customers, posing as providers of official U.S. government information. Read our Fraud Warning.

Complete your own application. The online entry application is easy and free.

பன்முகத்தன்மை விசா 2022 விண்ணப்பதாரர்கள்: 2022 நிதியாண்டுக்கான DV விண்ணப்பதாரர்கள் (DV-2022) விசா சேவைகள் கட்டமைப்பின் கட்டம் கட்டமாக மீண்டும் தொடங்குவதற்கு ஏற்ப நேர்காணலின் திட்டமிடல் குறித்து அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். அனைத்து DV-2022 பன்முகத்தன்மை விசா திட்ட விண்ணப்பதாரர்களும் 2022 நிதியாண்டின் இறுதிக்குள் (செப்டம்பர் 30, 2022) தங்கள் விசாவிற்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, பெற வேண்டும் அல்லது நிலையை சரிசெய்ய வேண்டும்.

பன்முகத்தன்மை விசா 2023 விண்ணப்பதாரர்கள்: அனைத்து DV-2023 பன்முகத்தன்மை விசா திட்ட விண்ணப்பதாரர்களும் 2023 நிதியாண்டின் இறுதிக்குள் (செப்டம்பர் 30, 2023) தங்கள் விசாவிற்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, பெற வேண்டும் அல்லது நிலையை சரிசெய்ய வேண்டும்.

மோசடி மற்றும் மோசடிகளில் ஜாக்கிரதை. சில இணையதளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்குபவர்களாகக் காட்டி, வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. எங்கள் மோசடி எச்சரிக்கையைப் படியுங்கள்.

உங்கள் சொந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். ஆன்லைன் நுழைவு விண்ணப்பம் எளிதானது மற்றும் இலவசம்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விண்ணப்பம் வருடந்தோறும் பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்குகின்றது.

அனேகமாக ஐப்பசி(ஒக்ரோபர்) முதல் கிழமையிலிருந்து ஒரு மாதம்வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

முக்கியமாக தபால்மூல தொடர்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

கணனி மூலமாகவே சகல விண்ணப்பங்களும் அனுப்ப வேண்டும்.

இந்தவருடம்  விணப்பம் செய்து உங்களுக்கு அதிஸ்டம் இருந்திருந்தால்  2024இல்த் தான் அமெரிக்கா வரலாம்.

வந்தவர்கள் மீண்டும் ஊரில் போய் குறிப்பிட்டகாலம் வாழலாம்.

ஆரம்பத்தில் எல்லா விண்ணப்பங்களும் ஏற்றுக் கொண்டாலும் இப்போ உயர்தர சித்தி அல்லது ஏதாவது டிப்பிளோமோ போன்ற தொழில்நுட்ப அத்தாட்சி தேவை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

எத்தனையோ படித்த பட்டதாரிகள் எங்கே எப்படி ஓடுவதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவியாக இருக்குமெ என்று தான் பதிந்துள்ளேன்.

இதேநேரம் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் கூட இதற்கு விண்ணப்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

Ehp-L0ja-U0-AIAKvu.jpg

வன்னியர் நீங்க குடும்பமாகவே வரலாம்.

உங்கள் துறையில் நிறைய பணமும் சம்பாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனையோ படித்த பட்டதாரிகள் எங்கே எப்படி ஓடுவதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவியாக இருக்குமெ என்று தான் பதிந்துள்ளேன்.

இதேநேரம் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் கூட இதற்கு விண்ணப்பிக்கிறார்கள்.

சும்மா பகிடிக்கு.... கிடைச்சால்..... கிழிச்சே எறியப்போறம்.....

பிரித்தானியாவில் வாழ்ந்த பிறகு, அதன் காலணிகளில் வாழப் பிடிப்பதில்லை.... இலங்கையில் கூட....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

DV-2024 Program: Online Registration

 

DV-2024 Program: The online registration period for the DV-2024 Program begins on Wednesday, October 5, 2022, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 8, 2022, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person will disqualify all entries for that person.

 

DV-2024 Program Instructions

 

The English version of the DV-2024 Program Instructions in PDF format is the only official version.  Unofficial translations in additional languages will be added to this webpage as they become available. 

 Note: As indicated in the instructions, for the purposes of eligibility some countries include components and dependent areas overseas.  If you are a native of a dependency or overseas territory, please select the appropriate country of eligibility.  For example, natives of Macau S.A.R should select Portugal, and natives of Martinique should select France. 

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html#:~:text=DV-2024 Program%3A The online,) (GMT-5).

DV-2024 Program: The online registration period for the DV-2024 Program begins on Wednesday, October 5, 2022, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 8, 2022, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person will disqualify all entries for that person.

DV-2024 Program: The online registration period for the DV-2024 Program begins on Wednesday, October 5, 2022, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 8, 2022, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person will disqualify all entries for that person.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்…  உடனுக்குடன், புதிய தகவல்களை தருவதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2022 at 21:10, ஈழப்பிரியன் said:

இப்போ உயர்தர சித்தி அல்லது ஏதாவது டிப்பிளோமோ போன்ற தொழில்நுட்ப அத்தாட்சி தேவை.

இதுதான்  கொஞ்சம் இடிக்குது 
 

@colomban  
இப்ப எங்க கட்டார் பக்கமா அல்லது ஊர் பக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2022 at 12:05, Nathamuni said:

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

துவக்கு கலாச்சாரம் கூடத்தான். ஆனாலும் வாழ்வதற்கு மிகவும் நல்ல ஊர் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

துவக்கு கலாச்சாரம் கூடத்தான். ஆனாலும் வாழ்வதற்கு மிகவும் நல்ல ஊர் .

உங்க, வீட்டில கொடுத்த சாப்பாடு, பார்ட்டி இல்லை எண்டு பொய் சொல்லிப்போட்டார் எண்டு பிரமரை வீட்ட அனுப்பியாச்சு. ராணியம்மா செத்தவீட்டுக்கு கார் ஓடினவர், கையில் மோபைல் வைத்தருந்தார் எண்டு லைசன் கான்சலாகி வீட்ட அனுப்பியாச்சு. அஙக, காங்கிரஸை உடைக்க ஆட்கள் அனுப்பிய டொனால்ட் அடுத்த எலக்சனில நிக்கப்போறார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

துவக்கு கலாச்சாரம் கூடத்தான். ஆனாலும் வாழ்வதற்கு மிகவும் நல்ல ஊர் .

அதுதானே.......
அங்கை எங்கடை ஊர்களிலை வாள்,அருவாள்,சைக்கிள் செயின்,கொட்டன்  எண்டால் அமெரிக்காவிலை துவக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 நேற்று ஒக்ரோபர் 5ம் திகதி இந்த விண்ணப்பம் அனுப்ப தொடங்கிவிட்டது.

அடுத்த மாதம் நவம்பர் 8ம் திகதி முடிவடையும்.

கணனி கையாளத் தெரிந்தவர்கள் நீங்களாகவே செய்யலாம்.

மீண்டும் இப்போது விண்ணப்பம் செய்தால் 2024 இல்த் தான் முடிவு தெரியும்.

விண்ணப்பம் செய்யும் போதே ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இலக்கங்களை தவறாமல் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை தெரிவு செய்திருக்கிறார்களா இல்லையா என்பதை உங்களுக்கு அறியத் தரமாட்டார்கள்.

நீங்களாகவே குறிப்பிட்ட தளத்தில் போய் உங்கள் பெயர் பதிவிலக்கம் என்பவற்றை போட்டு தேடிப் பார்க்க வேண்டும்.

தற்போது நீங்கள் வேறு நாடுகளில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

அமெரிக்கா போகவே மாட்டேன் என்கிறவர்கள் தயது செய்து விண்ணப்பித்து இன்னொருவரின் தலையில் மண்ணைப் போடாதீர்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா போகவே மாட்டேன் என்கிறவர்கள் தயது செய்து விண்ணப்பித்து இன்னொருவரின் தலையில் மண்ணைப் போடாதீர்கள்.

சுமார் 25 வருடங்களுக்கு முன், என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவர்…
இந்த விசாவுக்கு விண்ணப்பித்து, அவருக்கு அமெரிக்கா போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்த பின்…
அவர் போக விருப்பம் இல்லை என்று ஜேர்மனியிலே நின்று விட்டார்.
இப்படி எத்தனை பேர்… மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கிடைக்கச் செய்யாமல் இருக்கிறார்களோ… 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான தகவல்களை உடனுக்கு உடன் தந்து கொண்டிருக்கிறீர்கள் பிரியன்.......நன்றி.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமார் 25 வருடங்களுக்கு முன், என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவர்…
இந்த விசாவுக்கு விண்ணப்பித்து, அவருக்கு அமெரிக்கா போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்த பின்…
அவர் போக விருப்பம் இல்லை என்று ஜேர்மனியிலே நின்று விட்டார்.
இப்படி எத்தனை பேர்… மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கிடைக்கச் செய்யாமல் இருக்கிறார்களோ… 

அப்படி இல்லை.

பிறந்த நாட்டின் அடிப்படையில் தான். பின்னர் வந்த குடியுரிமையில் அல்ல.

சிங்களவரும் விண்ணப்பம் செய்வர். பெரும்பான்மை.

ஆகவே உங்கள் விண்ணப்பம் எங்கே ஆப்படிக்கும் என்று பாருங்கோவன்.

சரத் பொன்னர் கிடைத்தது, போகவில்லை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுமார் 25 வருடங்களுக்கு முன், என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவர்…
இந்த விசாவுக்கு விண்ணப்பித்து, அவருக்கு அமெரிக்கா போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்த பின்…
அவர் போக விருப்பம் இல்லை என்று ஜேர்மனியிலே நின்று விட்டார்.
இப்படி எத்தனை பேர்… மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கிடைக்கச் செய்யாமல் இருக்கிறார்களோ… 

சிறி இதற்கு விண்ணப்பம் செய்யும் பலர் இன்றிருக்கும் நிலையில் இரண்டு வருடத்தின் பின் இருக்க மாட்டார்கள்.

ஆனபடியால் அவர்களிலும் குற்றமில்லை.

சிலர் நல்ல நாடுகளில் நல்ல நிலையில் கிடைத்தாலும் போக மாட்டேன் என்று தெரிந்தும் 

காசா பணமா சும்மா தானே என்று விண்ணப்பிக்கிறவர்களை சொன்னேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பிரயோசனமான தகவல்களை உடனுக்கு உடன் தந்து கொண்டிருக்கிறீர்கள் பிரியன்.......நன்றி.......!  👍

சுவி எத்தனையோ பேர் படித்து பட்டங்கள் பெற்ற பின்பும் வேலை இல்லை வெளிநாடு போக முடியவில்லை என்கிறார்கள்.

அவுசுக்கு கூட எவ்வளவு ஆபத்தான உயிரை பணயம் வைத்து போக முயற்சி பண்ணுகிறார்கள்.

யாருக்காவது பிரயோசனப்படட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*அமெரிக்க குடியுரிமை 2024 green card Visa Lottery விண்ணப்பம் வெளியானது*

*Us lottery visa 2024 intake application*

நீங்களும் ஒரு us citizen ஆக மாற முடியும்.. இம்முறை இலங்கை மக்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..

விண்ணப்பித்தல் முற்றிலும் இலவசம். உயர்தர தகமை(A/L) மட்டும் போதும்

*Full details|முழு விபரம்* - https://bit.ly/3SY3SjZ

(எப்பிடி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விபரம் முழுமையாக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது..)

🗓️ *Closing date - 08.11.2022*
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொட்டரி விசாவில் மோசடி: முக்கிய அறிவிப்பு இதோ !

லொட்டரி விசாவில் மோசடி: முக்கிய அறிவிப்பு இதோ !

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே பயணிகள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை விசா கட்டணங்கள் உத்தியோகபூர்வ வங்கிகள் அல்லது அமெரிக்க தூதரகத்தின் தூதரக காசாளருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மோசடிகள் இடமபெறுவதை சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் டி.வி.லொட்டரி மோசடிகளும் அதிகளவில் நடக்கின்றன என குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரகம் வீசா தகவல்களை http://ustraveldocs.com/lk இலிருந்து பெறலாம் என அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1305040

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.