Jump to content

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் - கலாநிதி ஜெகான் பெரேரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

 
bachelet.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, Swissinfo

ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும்.

இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கடுமுயற்சிகளை எடுத்துவந்தன. ஆனால், அவை பயன்தரவில்லை. அரசாங்கங்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது.

இன்னமும் வரைவு கட்டத்தில் இருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 50/1 தீர்மானம் இலங்கை மீது தடைகளை விதிப்பதில் நாட்டம் காட்டவில்லை. மாறாக, நாடு எதிர்நோக்குகின்ற மோசமான பொருளாதார நெருக்கடியும் அதனால் மக்கள் அனுபவிக்கின்ற அவலங்களும் கருத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலைவரத்தை மனதிற்கொண்டு ஆதரவை வழங்கி இலங்கை நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு ஆதரவை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறத்தில், இரு தசாப்தங்களுக்கும் மேலாக கொலையையும் கொள்ளையையும் தாராளமாக செய்துவிட்டு அரசாங்க தரப்பினர் சுதந்திரமாக திரிவதற்கு வசதியாக அமைந்திருக்கின்ற ‘தண்டனை விலக்கீட்டு உரிமையை’ முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே புதிய தீர்மானத்தின் அடிநாதமாக அமையும் கருப்பொருளாகும். இந்தத் தீர்மானம் பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் (2021 ஆம் ஆண்டின் 46/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட) ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களின் வாழ்க்கை நிலைவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கடந்தகால மற்றும் சமகால மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிப்பதற்கான பொறிமுறையில்  46/1 தீர்மானம் நாட்டம் காட்டியது. அதே கண்காணிப்பு பொறிமுறை புதிய தீர்மான வரைவின் முக்கியமான அம்சமாகும். அத்தகைய சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை நாட்டின் தேசிய இறையாண்மைக்குப் பாதிப்பாக அமையும் என்று அரசாங்க பிரதிநிதிகள் முன்வைத்த ஆவேச உணர்ச்சியுடனான வாதங்களினால் தீர்மானத்தை வரைந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்பமுடியவில்லை.

மாறாக, தற்போதைய தீர்மானத்துக்கு அவர்கள் புதிய அம்சங்களைச் சேர்த்திருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல், பயன்படுத்தக்கூடாத சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி போராட்ட இயக்கத்தை ஒடுக்குதல் ஆகியவையே கவனம் செலுத்தப்பட்டுள்ள புதிய  இரு அம்சங்களாகும்.

அரசாங்கத்தின் பொறுப்பு 

மனித உரிமை மீறல்கள் மீதான ஐ.நா. கண்காணிப்பு பொறிமுறையை பலப்படுத்துவதுடன் சேர்த்து அந்த பொறிமுறையூடாக சேகரிக்கப்படும் சான்றுகளை உலகளாவிய நியாயாதிக்க சட்டக் கோட்பாட்டை பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கக்கூடிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. உலகளாவிய நியாயாதிக்கம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய நாடு எதுவாக இருந்தாலும்,குற்றத்தை இழைத்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் குற்றவியல் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதில் நாட்டம் கொண்ட அரசுகளை அல்லது சர்வதேச அமைப்புகளை அவ்வாறு செய்ய அனுமதிக்கும் ஒரு சட்டக் கோட்பாடே உலகளாவிய நியாயாதிக்கமாகும் (Universal Jurisdiction).

விடுதலை புலிகளை ஆதரித்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தின் சார்பில் செயற்பட்டவர்கள் இலங்கையில் அவர்கள் செய்த காரியங்களுக்காக வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கைளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்த ஒரு சில சந்தர்ப்பங்கள் இருந்தன. அரசாங்கத்தின் சார்பில் செயற்பட்டவர்கள் எவரும் இதுவரையில் அத்தகைய சட்ட  நடவடிக்கைகளுக்கு ஆளாகவில்லை. ஆனால், அரசாங்கப் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருந்த காரணத்தினால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து அவசர அவசரமாக அகற்றப்பட்ட பல சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பூர்வாங்க வரைவு அறிக்கை சட்ட மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியத்துக்கான அறிகுறியைக் காட்டுகிறது. அரசியலமைப்பு கட்டுப்பாடுகளையோ அல்லது பொருளாதார மீட்டிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவையையோ காரணம் காட்டுவதன் மூலமாக சர்வதேச நெருக்குதலை திசைதிருப்புவது  அரசாங்கத்துக்குக் கஷ்டமானதாகவே இருக்கும்.

பொருத்தமான சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பு ஊடாக, எல்லைகடந்த அல்லது உலகளாவிய நியாயாதிக்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நீதிச்செயன்முறைகள் ஊடாக (இலங்கையில் சகல தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய) சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரித்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கும்; அப்பட்டமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது பாரதூரமான மனிதாபிமான சட்டமீறல்களை செய்ததாக நம்பகமான முறையில் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற தடைவிதிப்புகளை செய்வது குறித்து ஆராய்வதற்கும்; மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் மீதான விசாரணைகளை நடத்துவதிலும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதிலும் இலங்கைக்கு ஆதரவளிக்கவும் சர்வதேச ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கை விதப்புரை செய்கிறது.

பொருத்தமான சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பு ஊடாக, எல்லைகடந்த அல்லது உலகளாவிய நியாயாதிக்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நீதிச்செயன்முறைகள் ஊடாக (இலங்கையில் சகல தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய) சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரித்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கும்; அப்பட்டமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது பாரதூரமான மனிதாபிமான சட்டமீறல்களை செய்ததாக நம்பகமான முறையில் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற தடைவிதிப்புக்கை செய்வது குறித்து  ஆராய்வதற்கும்; மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் மீதான விசாரணைகளை நடத்துவதிலும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதிலும் இலங்கைக்கு ஆதரவளிக்கவும் சர்வதேச ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கை விதப்புரை செய்கிறது.

ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறுவதாக அமைகிறது என்ற அடிப்படையில் அரசாங்கம் ஆட்சேபனை தெரிவிக்கின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் 51/1 தீர்மான வரைவு பொருளாதாரக் குற்றங்கள் கோட்பாட்டை கொண்டுவருகிறது. இரு வகையான சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இலங்கை உட்பட ஐ.நா.வின் உறுப்புரிமையைக் கொண்ட சகல நாடுகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஒன்று சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தம். மற்றையது பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தம். இவை ஒன்றுக்கொன்று சமமானவையும் தொடர்புபட்டவையுமாகும்.

அதனால், போர்க்குற்றங்கள் மற்றும் பொருளாதார குற்றங்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படக்கூடிய இலங்கையர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்க கோட்பாட்டை பிரயோகிக்க முடியும். மேலும் பொதுவில் சர்வதேச மனித உரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக அதை பிரயோகிக்கமுடியும்.

புதிய மீறல்

இப்போது முகங்கொடுக்க வேண்டியிருக்கும் பாதகமான தீர்மானத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னைய கூட்டத்தொடர்களின்போது அளித்த உறுதிமொழிகளை அரசாங்கம் காப்பாற்ற வில்லை. தற்போதைய தீர்மான வரைவு முன்னைய தீர்மானங்களின் உறுதிமொழிகளில் நிறைவேற்றப்படாதவற்றின் சாராம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. உறுதிமொழிகளை வழங்கிவிட்டு பிறகு அவற்றை காப்பாற்றாத நடைமுறை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வழங்கப்பட்ட உறுதிமொழியுடன் தொடங்கியது. “சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு இசைவான முறையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் வலுவான பற்றுறுதியை அரசாங்கம் கொண்டிருக்கிறது” என்று பான் கீ மூனுடனான மஹிந்தவின் கூட்டறிக்கையில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

2011ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளின் நடைமுறைப்படுத்தலில் கவனத்தைச் செலுத்தியது. ஆனால், ஒரு தேசிய ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட இந்த விதப்புரைகள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் தேசிய விசாரணை அல்லது தேசிய பொறிமுறையை முன்னெடுப்பதாகக் கூறும் உறுதிமொழி மெய்யான தேசிய இறையாண்மையுடனான கூற்றாக அன்றி ஒரு கானல்நீராகவும் மாயையாகவுமே தோன்றுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவான முறையில் மீளாய்வு செய்யப்படும்வரை, அதைப் பயன்படுத்துவதில்லை என்று அரசாங்கம் இறுதியாக நடந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2022 ஜூன் கூட்டத்தொடரில் அரசாங்கம் உறுதியளித்தது. போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கு அதே சட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கம் அந்த உறுதிமொழியை மீறியிருக்கிறது. மாணவ தலைவர்கள் ஏதோ பயங்கரவாதிகள் என்பது போல பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்க உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதையும் வன்செயல் சம்பவங்கள் இடம்பெற்றதையும் காரணமாகக் கூறுகிறது.

அந்த மாணவ தலைவர்கள் ஒரு மாதத்துக்கும் கூடுதலாக உளவியல் சித்திரவதைக்கு ஒப்பான சூழ்நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர்கள் பயங்கரவாதம் என்று கூறக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபட்டதற்கான சான்று எதையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை. அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை. நீதிமன்றத்துக்கு  கொண்டுவரப்படாமல் தனிமையில் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கும் வகையிலான இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவது தற்போது நாட்டுக்கு தேவைப்படுகின்ற பொருளாதார ஆதரவை முழு அளவில் பெறுகின்ற வாய்ப்புக்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும். அரசாங்கம் தீர்மானத்தை எதிர்த்து அதை தோற்கடிப்பதற்கான முயற்சிகளும் பயன்தராமல் போகும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் அதன் உறுதிமொழிகளை காப்பாற்றும் என்று நம்பமுடியாது என்ற செய்தியே உலகிற்கு சொல்லப்படும். இது நாட்டுக்குள் சர்வதேச பொருளாதார வளங்களைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாதகமாக அமையும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்ய விரும்பமாட்டார்கள் என்பதுடன் வெளிநாட்டு அரசாங்கங்களும் நம்ப முடியாத ஒரு அரசாங்கத்துக்கு அவற்றின் வரியிறுப்பாளர்களின் பணத்தை வழங்க தயக்கம் காட்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானம் வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக நிறைவேற்றப்படுமானால் அது தேசிய நலனைப் பாதிக்கும். கருத்தொருமிப்பின் அடிப்படையிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தையை நடத்தி அதை நடைமுறைப்படுத்துவதே  நல்லதாக இருக்கும்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா

 

 

https://maatram.org/?p=10354

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.