Jump to content

மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா?

எம். எஸ். எம் ஐயூப்

நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. 

தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, அவை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. 

இம்முறை நடைபெற்று வருவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடராகும். இக்கூட்டத்தொடர், செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி வரை, ஜெனீவா நகரில் நடைபெறும். இதன்போது, இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்படவும் இருக்கிறது. 

இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இவற்றில், 2009ஆம் ஆண்டு பிரேரணை இலங்கையால் முன்வைக்கப்பட்ட பிரேரணையாகும். 

ஏனையவை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள், சில சிறிய நாடுகளுடன் சேர்ந்து, மனித உரிமைகள் பேரவைவில் சமர்ப்பித்தவையாகும். அவற்றில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு, அவ்வரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. ஏனையவற்றை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில், 2021ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையைத் தவிர, ஏனைய எந்தவொரு பிரேரணையும் இலங்கையின் எந்தவோர் அரசியல் அல்லது இராணுவ அதிகாரியையும் அச்சுறுத்தியதில்லை. 2021ஆம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட 46/1 இலக்கமிடப்பட்ட பிரேரணை மூலம், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் திட்டமொன்று முன்வைக்கப்பட்டு உள்ளது.

அதற்கு முந்திய சகல பிரேரணைகள் மூலமும், மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் பேரவை, இலங்கை அரசாங்கத்தையே கேட்டுக்கொண்டது. ஆனால், இலங்கை அவ்வாறு நடவடிக்கை எடுக்காதமையால், இந்தப் பிரேரணையின் மூலம், அந்தந்த நாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்க, உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. 

அத்தோடு, இலங்கையில் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைப் பற்றி தகவல்களைத் திரட்டி, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்காக, மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில், தகவல் காப்பகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

கடந்த வருட பிரேரணையின் பிரகாரம், எந்தவொரு நாட்டிலாவது இலங்கையில் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவற்றை நிரூபிப்பதற்காக இந்தத் தகவல் காப்பகத்தின் தகவல்கள் பயன்படுத்தப்படும். 

இதுவே, இலங்கையில் போர் முடிவடைந்ததன் பின்னர், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் மூலம் எடுக்கப்படவிருக்கும் மிகவும் கடுமையான நடவடிக்கையாகும். ஏற்கெனவே, பல்வேறு மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய 120,000 கோவைகளைத் தமது அலுவலகம் திரட்டி உள்ளதாக, 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தின் போது, முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்சலே தெரிவித்தார்.   

இதற்கு முன்னர், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை உதாசீனம் செய்த இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள், இந்தப் பிரேரணையைக் கண்டு நிச்சயமாக திடுக்கிட்டு இருப்பார்கள். ஏனெனில், இந்தப் பிரேரணையின்படி, இலங்கையல்லாது ஏனைய நாடுகள்தான், மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். அந்நாடுகளின் அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். 

மனித உரிமைகள் பேரவையின் இவ்வாறான கோரிக்கையொன்று இல்லாமலே, கடந்த காலங்களில் சில நாடுகளில், இலங்கையின் சில இராணுவ அதிகாரிகளுக்கு, மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக, விசா மறுக்கப்பட்டது. சில நாடுகளில், சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக, மனித உரிமைகள் அமைப்புகளால் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஜெர்மனியில், விடுதலை புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, வழக்கு விசாரிக்கப்பட்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. 

image_a7f24d3f74.jpg

இந்த நிலையில்த்தான் பலம் வாய்ந்த நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், இலங்கை விடயத்தில் கடுமையான பிரேரணையை நிறைவேற்றுமாறு, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன. 

இவ்வமைப்புகள், தாம் எதிர்பார்க்கும் கடுமையான நடவடிக்கைள் எவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. 46/1 பிரேரணையை மீண்டும் வலியுறுத்துமாறு மட்டுமே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன. 

மாறிவரும் இந்த நிலைமையின் காரணமாகத்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவில்லைப் போலும்! கோட்டா கடும் போக்குள்ளவர் என்பது சகலரும் அறிந்த விடயமாகும்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்தபோதே, வடக்கு - கிழக்கில் கடும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு இருந்தது. கட்டுநாயக்க, சிலாபம், ரத்துபஸ்வல, வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், அவர் ஆர்ப்பட்டக்காரர்களை தாக்க இடமளிக்கவில்லை. 

2021ஆம் ஆண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களைத் தாக்கி, கலைத்துவிட வேண்டும் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக அப்போது இருந்த சரத் வீரசேகர ஆலோசனை கூறியிருந்தார். “எனக்கு வெளிநாடொன்றுக்குப் போக முடியாத நிலைமையை உருவாக்கப் போகிறீரா” என, கோட்டா அப்போது கேட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. 

ஆயினும், மனித உரிமைகள் பேரவையின் பணிகள் நடைபெறும் வேகத்தைப் பார்க்கும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்குமா? அதற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரும் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. அதுவரை, மனித உரிமைகள் பேரவையும் இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களும், இந்தப் பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டே இருப்பார்கள் போலும்! 

ஒவ்வொரு வருடமும் இலங்கை தலைவர்கள் ஜெனீவாவுக்குச் சென்று, மனித உரிமைகள் பேரவையின் தலைவர்களுக்கு, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வருகிறார்கள். பின்னர் அவற்றை உதாசீனம் செய்கிறார்கள். இதைப் பேரவையின் தலைவர்கள் அறியாமலில்லை. இம்முறை இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், அது தெளிவாகத் தெரிகிறது. 

பதில் உயர்ஸ்தானிகர் நதா அல் நஷிப்பால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஓரிடத்தில், ‘போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் சென்றடைந்த போதிலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்னமும் காணாமற்போனோர் தொடர்பான உண்மையையும் அவர்களுக்கான நியாயத்தையும் எதிர்ப்பார்த்து நிற்கின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களாக, மனித உரிமைகள் மீறல்கள் விடயத்தில் குறியீடுகளாக விளங்கும் சம்பவங்கள் தொடர்பில், எந்தவித முன்னேற்றமும் காண்பதற்கில்லை’ என்று மற்றோர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றங்களுக்கு தண்டனை இல்லாமை, மேன்மேலும் குற்றங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மை நிலைமையை அறிய, ‘உண்மைத் தேடும் ஆணைக்குழு’வை நியமிப்பது தொடர்பாக, அரசாங்கத்தின் தலைவர்களும் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளும் போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு முதல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறிருக்க, உண்மையை அறியும் பொறிமுறையை நிறுவ, அரசாங்கம் முயன்று வருவதாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, இம்முறை பேரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். 

இதுவரை, மனித உரிமைகள் விடயத்தில் நியமிக்கப்ட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலித்து, நியாயம் வழங்கும் விடயத்தில் என்ன செய்யலாம் என்பதை ஆராய, மற்றோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாத கூட்டத்தின் போது, அப்போதைய வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். 

ஆனால், 2021ஆம் ஆண்டு மார்ச் கூட்டம் நெருங்கும் வரை, அரசாங்கம் அவ்வாறானதோர் ஆணைக்குழுவை நியமிக்கவில்லை. ஒரு விடயத்தை இழுத்தடிப்பது எவ்வாறு என்பதற்கு, இது சிறந்த எடுத்துக்காட்டாகும். 2021ஆம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்ட அந்த ஆணைக்குழு, இந்த வருடம் பெப்ரவரி மாதம், தனது இரண்டாவது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. அதற்குள் அரசாங்கம் மாறியிருக்கிறது. ஒவ்வோர் அரசாங்கமும், இவ்வாறு தொடர்ந்தும் இழுத்தடிக்கலாம் என்று சிந்திக்கிறது போலும்!

இதன் விளைவாகவே, மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு சிறிது சிறிதாகக் கடுமையாகி வருகிறது. ஆரம்பத்தில், “நீங்களே குற்றச்சாட்டுகளை விசாரித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய பேரவை, இப்போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்குமாறு, ஏனைய நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

எனினும், பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மனித-உரிமைகள்-பேரவை-தொடர்-கதையா/91-304530

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.