Jump to content

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

By DIGITAL DESK 5

21 SEP, 2022 | 10:00 AM
image

(என்.வீ.ஏ.)

மூன்று வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இங்கிலாந்துக்காக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டியில் அவரது அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

 

Alex Hales started brightly on his return to England colours, Pakistan vs England, 1st T20I, Karachi, September 20, 2022

159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை  நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை அடைந்துள்ளது. 

ஆரம்ப வீரர் பில் சோல்ட் (11), டேவிட் மாலன் (20), பென் டக்கெட் (21) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 11ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தது.

Moeen Ali leads England out for their first international in Pakistan in 17 years, Pakistan vs England, 1st T20I, Karachi, September 20, 2022

ஆனால் அலெக்ஸ் ஹேல்ஸ், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தன் மூலம் இங்கிலாந்தின் வெற்றி அண்மித்துக்கொண்டிருந்தது. (147 - 4 விக்.)

ஹேல்ஸ் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 13 ஓட்டங்களை ஹெரி ப்றூக் (42 ஆ.இ.), மொயீன் அலி (7 ஆ.இ.) ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் உஸ்மான் காதிர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Babar Azam clubs a short ball away, Pakistan vs England, 1st T20I, Karachi, September 20, 2022

பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் மொத்த எண்ணிக்கை 109 ஓட்டங்களாக இருந்தபோது ஹைதர் அலி (11), ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத் (7) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (120 - 3 விக்.)

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 46 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் இப்திகார் அஹ்மத் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் லூக் வூட் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/136081

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி : இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளால் வென்றது பாகிஸ்தான்

By DIGITAL DESK 5

23 SEP, 2022 | 09:34 AM
image

(என்.வீ.ஏ.)

 

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்.

இப் போட்டி முடிவை அடுத்து 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் குவித்த அபார சதமும் மொஹமத் ரிஸ்வான் பெற்ற அரைச் சதமும் பாகிஸ்தானின் 10 விக்கெட் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

Babar Azam scored his second T20I century, Pakistan vs England, 2nd T20I, Karachi, September 22, 2022

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ஓட்டங்களைக் குவித்து அமோக வெற்றியீட்டியது.

பாபர் அஸாம் 66 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசி 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இது அவர் குவித்த 2ஆவது   சர்வதேச இருபது 20    கிரிக்கெட்   சதம் ஆகும்.

மறுபக்கத்தில் ரிஸ்வான் 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் கடந்த 3 இன்னிங்ஸ்களில் குவித்த 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதம் என்பதுடன் 64 சர்வதேச இருபது 20 போட்டிகளில் அவர் பெற்ற 18ஆவது அரைச் சதமாகும்.

அஸாம், ரிஸ்வான் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த  203 ஓட்டங்கள் பாகிஸ்தான் சார்பாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பதிவான அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் ஆகும்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் இவர்கள் இருவரும் பகிர்ந்த 197 ஓட்டங்கள் 1 ஆவது விக்கெட்டுக்கான முந்தைய சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது,

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

Moeen Ali swings to leg during his 23-ball fifty, Pakistan vs England, 2nd T20I, Karachi, September 22, 2022

அணித் தலைவர் மொயீன் அலி குவித்த அரைச் சதம், பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.

பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஹேல்ஸ் 21 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த அடுத்த பந்தில் டேவிட் மார்லனும் வீரர்கள் அறைக்கு திரும்பினார்.

பில் சோல்ட்டும் பென் டக்கெட்டும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சோல்ட் 30 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (95 - 3 விக்.)

மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருந்தபோது பென் டக்கெட் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் ஹெரி ப்றூக், மொயீன் அலி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு தெம்பூட்டினார்.

Phil Salt crashes a boundary over the off-side, Pakistan vs England, 2nd T20I, Karachi, September 22, 2022

ஹெரி ப்றூக் 19 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து மொயீன் அலியும் சாம் கரணும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மொயீன் அலி 23 பந்துகளில் தலா 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைக் குவித்தார்.

சாம் கரன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷாநவாஸ் தஹானி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/136240

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

By DIGITAL DESK 5

26 SEP, 2022 | 11:27 AM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூப் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய 2 விக்கெட்களின் பலனாக பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப் போட்டி பாகிஸ்தானின் 200ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியாக அமைந்ததுடன் 200 போட்டிகளைப் பூர்த்தி செய்த முதலாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது

இந்தப் போட்டி முடிவை அடுத்து 2 அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் எஞ்சிய 3 போட்டிகள் லாகூரில் செப்டெம்பர் 28, 30, அக்டோபர் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

Mohammad Rizwan started with positive intent in the fourth T20I, Pakistan vs England, 4th T20I, Karachi, September 25, 2022

மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதம், ஹாரிஸ் ரவூப், மொஹமத் நவாஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு என்பன பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தன.

கராச்சியில் நடைபெற்ற 4ஆவது போட்டியில் பாகிஸ்தானினால் நிர்ணியிக்கப்பட்ட 167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து 3ஆவது போட்டியில் 221 ஓட்டங்களைக் குவித்து 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்ததால் 4ஆவது போட்டியில் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஹாரிஸ் ரவூப், மொஹமத் நவாஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை தோல்வி அடையச் செய்தனர்.

குறிப்பாக முதல் 3 ஓவர்களில் வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்களும் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தப்பட்ட விக்கெட்களும் பாகிஸ்தானுக்கு திருப்பு முனைகளாக அமைந்தன.

முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (8), அலெக்ஸ் ஹேல்ஸ் (5) வில் ஜெக்ஸ் (0) ஆகிய மூவரும் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை வெறும் 14 ஓட்டங்களாக இருந்ததுடன் இங்கிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

Olly Stone barely had time to react, Pakistan vs England, 4th T20I, Karachi, September 25, 2022

எனினும் மத்திய வரிசை வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்தனர்.

பென் டக்கெட் (33), ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஹெரி ப்றூக்குடன் இணைந்த அணித் தலைவர் மொயீன் அலி 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆனால் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (113 - 6 விக்.).

ப்றூக் 34 ஓட்டங்களையும் மொயீன் அலி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 130 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வில்லி 11 ஓட்டஙகளுடன் 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

எனினும் லியாம் டோசன் 34 ஓட்டங்களைப் பெற்று 19ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையை 162 ஓட்டங்களாக உயர்த்தினார். வெற்றிக்கு மேலும் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரில் ஹாரிஸ் ரவூப் வீசிய 3ஆவது பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த லியாம் டோசன் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அறிமுக வீரர் ஒலி ஸ்டோனின் விக்கெட்டை ரவூப் நேரடியாகப் பதம் பார்த்தார். (162 - 9 விக்.)

கடைசி ஓவரில் ரீஸ் டொப்லே ரன் அவுட் ஆனதும் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஹஸ்நய்ன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை மொஹமத் ரிஸ்வான் பெற்றார்.

67 பந்துகளை எதிர்கொண்ட ரிஸ்வான் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 88 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆரம்ப விக்கெட்டில் அணித் தலைவர் பாபர அஸாமும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இந்த வருடம் தனது 11ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் விளையாடிய ரிஸ்வான் 6ஆவது அரைச் சதத்தைக் குவித்தார். அத்துடன் 55 இன்னிங்ஸ்களில் அவர் பெற்ற 19 அரைச் சதம் இதுவாகும்.

பாபர் அஸாம் 36 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட ஷான் மசூத் 21 ஓட்டஙகளையும் ஆசிவ் அலி ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டொப்லே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/136424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

By VISHNU

29 SEP, 2022 | 11:10 AM
image

(என்.வீ.ஏ.)

 

இங்கிலாந்துக்கு எதிராக லாகூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 5 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

PAK1.jpg

இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 3 - 2 என்ற ஆட்டங்கள் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை அடைந்துள்ளது.

மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதம் இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.

7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகள் நிறைவில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளை ஈட்டி தொடர் சமப்படுத்தப்பட்டிருந்ததால் இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டு அணிகளுமே துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கடும் சிரமத்துக்கு மத்தியில் மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறு பக்கத்தில் ரிஸ்வான் திறயைமாக துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்திக்கொண்டிருந்தார்.

அணித் தலைவர் பாபர் அஸாம் (9), ஷான் மசூத் (7), ஹைதர் அலி (4), இப்திகார் அஹ்மத் (15), அசிவ் அலி (5), மொஹமத் நவாஸ் (0), ஷதாப் கான் (7), ஆமிர் ஜமால் (10), ஹாரிஸ் ரவூப் (5) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

எனினும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 46 பந்துகளில் 3 சிக்கஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருடம் 12 போட்டிகளில் ரிஸ்வான் பெற்ற 7ஆவது அரைச் சதம் இதுவாகும். இந்த 7 அரைச் சதங்களும் 26 நாட்களுக்குள் பெறப்பட்டுள்ளது விடேச அம்சமாகும்.

மொஹமத் வசீம் 8 ஓட்டங்களுடன் ஆட்டமமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வூட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி, சாம் கரன் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிதானினால் நிர்ணயிக்கப்பட்ட 146 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 15ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தது.

ஆரம்ப வீரர்களான பில் சோல்ட் (3), அலெக்ஸ் ஹேல்ஸ் (1) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் மாலன் (36), பென் டக்கெட் (10) ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

ஆனால் பென் டக்கெட்டும் அவரைத் தொடர்ந்து ஹெரி ப்றூக்கும் (4) ஆட்டமிழக்க இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றம் அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 62 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மாலனும் மேலும் 17 ஓட்டங்கள் சேர்ந்தபோது சாம் கரனும் (17) ஆட்டம் இழக்க இங்கிலாந்து மோசமான நிலையை அடைந்தது.

எனினும் அணித் தலைவர் மொயீன் அலியும் க்றிஸ் வோக்ஸும் 7ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 131 ஓட்டங்களாக உயர்த்தினர். அப்போது 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த க்றிஸ் வோக்ஸ் ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை கட்டுப்பாட்டுடன் வீசிய ஆமிர் ஜமால் 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.

மொயீன் அலி 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/136634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை 8 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

By DIGITAL DESK 5

01 OCT, 2022 | 11:14 AM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற 6ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பில் சோல்ட் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் இங்கிலாந்தின் 8 விக்கெட் வெற்றியில் பிரதான பங்காற்றியது.

இப் போட்டி முடிவுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டு அணிகளும்  தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 23 பந்துகளில் 55 ஓட்டங்களைக் குவித்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 12 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

346728.webp

தொடர்ந்து பில் சோல்ட், டேவிட் மாலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து   பாகிஸ்தானுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.

டேவிட் மாலன் 18 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 42 ஓட்டங்களை பில் சோல்ட், பென் டக்கெட் ஆகிய இருவரும் நிதானத்துடன் பெற்றுக்கொடுத்தனர்.

346805.webp

பில் சோல்ட் 41 பந்துகளில் 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 88 ஓட்டங்களுடனும் பென் டக்கெட் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அணித் தலைவர் பாபர் அஸாமின் அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் துடுப்பாட்ட நட்சத்திரம் மொஹமத் ரிஸ்வான் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மொஹமத் ஹாரிஸ் ஆரம்ப வீரராக அணித் தலைவர் பாபர் அஸாமுடன் களம் இறங்கினார்.

ஆனால், அவரால் பிரகாசிக்க முடியவில்லை. 7 ஓட்டங்களுடன் அவர ஆட்டமிழந்ததும் ஷான் மசூதும் (0) களம் விட்டகன்றார்.

எனினும் பாபர் அஸாமுடன் இணைந்த ஹைதர் அலி 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் அணியைப் பலப்படுத்திக்கொண்டிருந்தார்.

346802.webp

அவருடன் 4ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த இப்திகார் அஹ்மத் அதில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அவரைத் தொடர்ந்து அசிப் அலி 9 ஓட்டங்களுடனும் கடைசிப் பந்தில் மொஹமத் நவாஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பாபர் அஸாம் 59 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 88 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சாம் கரன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/136772

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.