Jump to content

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

By DIGITAL DESK 5

21 SEP, 2022 | 10:00 AM
image

(என்.வீ.ஏ.)

மூன்று வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இங்கிலாந்துக்காக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டியில் அவரது அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

 

Alex Hales started brightly on his return to England colours, Pakistan vs England, 1st T20I, Karachi, September 20, 2022

159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை  நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை அடைந்துள்ளது. 

ஆரம்ப வீரர் பில் சோல்ட் (11), டேவிட் மாலன் (20), பென் டக்கெட் (21) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 11ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தது.

Moeen Ali leads England out for their first international in Pakistan in 17 years, Pakistan vs England, 1st T20I, Karachi, September 20, 2022

ஆனால் அலெக்ஸ் ஹேல்ஸ், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தன் மூலம் இங்கிலாந்தின் வெற்றி அண்மித்துக்கொண்டிருந்தது. (147 - 4 விக்.)

ஹேல்ஸ் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 13 ஓட்டங்களை ஹெரி ப்றூக் (42 ஆ.இ.), மொயீன் அலி (7 ஆ.இ.) ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் உஸ்மான் காதிர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Babar Azam clubs a short ball away, Pakistan vs England, 1st T20I, Karachi, September 20, 2022

பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் மொத்த எண்ணிக்கை 109 ஓட்டங்களாக இருந்தபோது ஹைதர் அலி (11), ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத் (7) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (120 - 3 விக்.)

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 46 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் இப்திகார் அஹ்மத் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் லூக் வூட் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/136081

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி : இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளால் வென்றது பாகிஸ்தான்

By DIGITAL DESK 5

23 SEP, 2022 | 09:34 AM
image

(என்.வீ.ஏ.)

 

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்.

இப் போட்டி முடிவை அடுத்து 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் குவித்த அபார சதமும் மொஹமத் ரிஸ்வான் பெற்ற அரைச் சதமும் பாகிஸ்தானின் 10 விக்கெட் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

Babar Azam scored his second T20I century, Pakistan vs England, 2nd T20I, Karachi, September 22, 2022

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ஓட்டங்களைக் குவித்து அமோக வெற்றியீட்டியது.

பாபர் அஸாம் 66 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசி 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இது அவர் குவித்த 2ஆவது   சர்வதேச இருபது 20    கிரிக்கெட்   சதம் ஆகும்.

மறுபக்கத்தில் ரிஸ்வான் 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் கடந்த 3 இன்னிங்ஸ்களில் குவித்த 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதம் என்பதுடன் 64 சர்வதேச இருபது 20 போட்டிகளில் அவர் பெற்ற 18ஆவது அரைச் சதமாகும்.

அஸாம், ரிஸ்வான் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த  203 ஓட்டங்கள் பாகிஸ்தான் சார்பாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பதிவான அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் ஆகும்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் இவர்கள் இருவரும் பகிர்ந்த 197 ஓட்டங்கள் 1 ஆவது விக்கெட்டுக்கான முந்தைய சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது,

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

Moeen Ali swings to leg during his 23-ball fifty, Pakistan vs England, 2nd T20I, Karachi, September 22, 2022

அணித் தலைவர் மொயீன் அலி குவித்த அரைச் சதம், பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.

பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஹேல்ஸ் 21 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த அடுத்த பந்தில் டேவிட் மார்லனும் வீரர்கள் அறைக்கு திரும்பினார்.

பில் சோல்ட்டும் பென் டக்கெட்டும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சோல்ட் 30 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (95 - 3 விக்.)

மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருந்தபோது பென் டக்கெட் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் ஹெரி ப்றூக், மொயீன் அலி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு தெம்பூட்டினார்.

Phil Salt crashes a boundary over the off-side, Pakistan vs England, 2nd T20I, Karachi, September 22, 2022

ஹெரி ப்றூக் 19 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து மொயீன் அலியும் சாம் கரணும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மொயீன் அலி 23 பந்துகளில் தலா 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைக் குவித்தார்.

சாம் கரன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷாநவாஸ் தஹானி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/136240

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

By DIGITAL DESK 5

26 SEP, 2022 | 11:27 AM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூப் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய 2 விக்கெட்களின் பலனாக பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப் போட்டி பாகிஸ்தானின் 200ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியாக அமைந்ததுடன் 200 போட்டிகளைப் பூர்த்தி செய்த முதலாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது

இந்தப் போட்டி முடிவை அடுத்து 2 அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் எஞ்சிய 3 போட்டிகள் லாகூரில் செப்டெம்பர் 28, 30, அக்டோபர் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

Mohammad Rizwan started with positive intent in the fourth T20I, Pakistan vs England, 4th T20I, Karachi, September 25, 2022

மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதம், ஹாரிஸ் ரவூப், மொஹமத் நவாஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு என்பன பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தன.

கராச்சியில் நடைபெற்ற 4ஆவது போட்டியில் பாகிஸ்தானினால் நிர்ணியிக்கப்பட்ட 167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து 3ஆவது போட்டியில் 221 ஓட்டங்களைக் குவித்து 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்ததால் 4ஆவது போட்டியில் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஹாரிஸ் ரவூப், மொஹமத் நவாஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை தோல்வி அடையச் செய்தனர்.

குறிப்பாக முதல் 3 ஓவர்களில் வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்களும் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தப்பட்ட விக்கெட்களும் பாகிஸ்தானுக்கு திருப்பு முனைகளாக அமைந்தன.

முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (8), அலெக்ஸ் ஹேல்ஸ் (5) வில் ஜெக்ஸ் (0) ஆகிய மூவரும் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை வெறும் 14 ஓட்டங்களாக இருந்ததுடன் இங்கிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

Olly Stone barely had time to react, Pakistan vs England, 4th T20I, Karachi, September 25, 2022

எனினும் மத்திய வரிசை வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்தனர்.

பென் டக்கெட் (33), ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஹெரி ப்றூக்குடன் இணைந்த அணித் தலைவர் மொயீன் அலி 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆனால் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (113 - 6 விக்.).

ப்றூக் 34 ஓட்டங்களையும் மொயீன் அலி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 130 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வில்லி 11 ஓட்டஙகளுடன் 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

எனினும் லியாம் டோசன் 34 ஓட்டங்களைப் பெற்று 19ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையை 162 ஓட்டங்களாக உயர்த்தினார். வெற்றிக்கு மேலும் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரில் ஹாரிஸ் ரவூப் வீசிய 3ஆவது பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த லியாம் டோசன் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அறிமுக வீரர் ஒலி ஸ்டோனின் விக்கெட்டை ரவூப் நேரடியாகப் பதம் பார்த்தார். (162 - 9 விக்.)

கடைசி ஓவரில் ரீஸ் டொப்லே ரன் அவுட் ஆனதும் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஹஸ்நய்ன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை மொஹமத் ரிஸ்வான் பெற்றார்.

67 பந்துகளை எதிர்கொண்ட ரிஸ்வான் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 88 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆரம்ப விக்கெட்டில் அணித் தலைவர் பாபர அஸாமும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இந்த வருடம் தனது 11ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் விளையாடிய ரிஸ்வான் 6ஆவது அரைச் சதத்தைக் குவித்தார். அத்துடன் 55 இன்னிங்ஸ்களில் அவர் பெற்ற 19 அரைச் சதம் இதுவாகும்.

பாபர் அஸாம் 36 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட ஷான் மசூத் 21 ஓட்டஙகளையும் ஆசிவ் அலி ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டொப்லே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/136424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

By VISHNU

29 SEP, 2022 | 11:10 AM
image

(என்.வீ.ஏ.)

 

இங்கிலாந்துக்கு எதிராக லாகூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 5 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

PAK1.jpg

இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 3 - 2 என்ற ஆட்டங்கள் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை அடைந்துள்ளது.

மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதம் இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.

7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகள் நிறைவில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளை ஈட்டி தொடர் சமப்படுத்தப்பட்டிருந்ததால் இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டு அணிகளுமே துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கடும் சிரமத்துக்கு மத்தியில் மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறு பக்கத்தில் ரிஸ்வான் திறயைமாக துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்திக்கொண்டிருந்தார்.

அணித் தலைவர் பாபர் அஸாம் (9), ஷான் மசூத் (7), ஹைதர் அலி (4), இப்திகார் அஹ்மத் (15), அசிவ் அலி (5), மொஹமத் நவாஸ் (0), ஷதாப் கான் (7), ஆமிர் ஜமால் (10), ஹாரிஸ் ரவூப் (5) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

எனினும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 46 பந்துகளில் 3 சிக்கஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருடம் 12 போட்டிகளில் ரிஸ்வான் பெற்ற 7ஆவது அரைச் சதம் இதுவாகும். இந்த 7 அரைச் சதங்களும் 26 நாட்களுக்குள் பெறப்பட்டுள்ளது விடேச அம்சமாகும்.

மொஹமத் வசீம் 8 ஓட்டங்களுடன் ஆட்டமமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வூட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி, சாம் கரன் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிதானினால் நிர்ணயிக்கப்பட்ட 146 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 15ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தது.

ஆரம்ப வீரர்களான பில் சோல்ட் (3), அலெக்ஸ் ஹேல்ஸ் (1) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் மாலன் (36), பென் டக்கெட் (10) ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

ஆனால் பென் டக்கெட்டும் அவரைத் தொடர்ந்து ஹெரி ப்றூக்கும் (4) ஆட்டமிழக்க இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றம் அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 62 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மாலனும் மேலும் 17 ஓட்டங்கள் சேர்ந்தபோது சாம் கரனும் (17) ஆட்டம் இழக்க இங்கிலாந்து மோசமான நிலையை அடைந்தது.

எனினும் அணித் தலைவர் மொயீன் அலியும் க்றிஸ் வோக்ஸும் 7ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 131 ஓட்டங்களாக உயர்த்தினர். அப்போது 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த க்றிஸ் வோக்ஸ் ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை கட்டுப்பாட்டுடன் வீசிய ஆமிர் ஜமால் 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.

மொயீன் அலி 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/136634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை 8 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

By DIGITAL DESK 5

01 OCT, 2022 | 11:14 AM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற 6ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பில் சோல்ட் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் இங்கிலாந்தின் 8 விக்கெட் வெற்றியில் பிரதான பங்காற்றியது.

இப் போட்டி முடிவுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டு அணிகளும்  தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 23 பந்துகளில் 55 ஓட்டங்களைக் குவித்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 12 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

346728.webp

தொடர்ந்து பில் சோல்ட், டேவிட் மாலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து   பாகிஸ்தானுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.

டேவிட் மாலன் 18 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 42 ஓட்டங்களை பில் சோல்ட், பென் டக்கெட் ஆகிய இருவரும் நிதானத்துடன் பெற்றுக்கொடுத்தனர்.

346805.webp

பில் சோல்ட் 41 பந்துகளில் 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 88 ஓட்டங்களுடனும் பென் டக்கெட் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அணித் தலைவர் பாபர் அஸாமின் அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் துடுப்பாட்ட நட்சத்திரம் மொஹமத் ரிஸ்வான் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மொஹமத் ஹாரிஸ் ஆரம்ப வீரராக அணித் தலைவர் பாபர் அஸாமுடன் களம் இறங்கினார்.

ஆனால், அவரால் பிரகாசிக்க முடியவில்லை. 7 ஓட்டங்களுடன் அவர ஆட்டமிழந்ததும் ஷான் மசூதும் (0) களம் விட்டகன்றார்.

எனினும் பாபர் அஸாமுடன் இணைந்த ஹைதர் அலி 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் அணியைப் பலப்படுத்திக்கொண்டிருந்தார்.

346802.webp

அவருடன் 4ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த இப்திகார் அஹ்மத் அதில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அவரைத் தொடர்ந்து அசிப் அலி 9 ஓட்டங்களுடனும் கடைசிப் பந்தில் மொஹமத் நவாஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பாபர் அஸாம் 59 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 88 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சாம் கரன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/136772

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.