Jump to content

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது: 'ஆ. ராசா, திமுகவுக்கு மிரட்டல்' விடுத்ததாக புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது: 'ஆ. ராசா, திமுகவுக்கு மிரட்டல்' விடுத்ததாக புகார்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையுடன் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி. (இடது)

பட மூலாதாரம்,@BALAJI_UTHAM TWITTER

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையுடன் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி. (இடது)

கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கும் திமுகவினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தாம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள ஆ. ராசா, மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதையே தாம் குறிப்பிட்டுப் பேசியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பாக பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது, "ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன். திமுகவினர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்," என்று கூறியதுடன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான சில கருத்துகளையும் கூறியிருந்தார்.

 

பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முதல்வர், தந்தை பெரியார் ஆகியோர் குறித்து இழிவாக பேசியதோடு, பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று புகாரளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை பீளமேடு காவல் துறையினர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு மதத்தை குறித்து பேசிய எம்.பி-யை கண்டிக்காமல் உள்ளனர். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை நிரூபிக்கவும். நீதித்துறை மீது முழுநம்பிக்கை இருக்கிறது. இதை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். என் சகோதரிகளை, தாய்மார்களை பழித்துப் பேசியவர் எவராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்," என்றார்.

போலீசார் அவர்களை காவல் நிலையத்தின் உள்ளே அனுமதிக்காமல் இரும்புத் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பாலாஜி உத்தம ராமசாமி தனியார் வாகனத்தில் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

 

dmk raja

பட மூலாதாரம்,@DMK_RAJA

காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த பாஜகவினர் காவல்துறையினர் வெளியேறவிடாமல் தடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளு முள்ளுக்கு இடையே பாலாஜி உத்தம ராமசாமி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பாஜகவினர் அவினாசி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாலாஜி உத்தம ராமசாமி கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ஏ (இரு தர்ப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாகப் பேசுதல்), பிரிவு 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் பேசுதல்), மற்றும் பிரிவு 505 (அவதூறான செய்திகளைப் பேசுதல் அல்லது பதிப்பித்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் நடுவர் செந்தில் ராஜன், பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

அண்ணாமலை கண்டனம்

பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

''தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராஜா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் திரு. ராஜாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் திரு. ராஜாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்,'' என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-62977304

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.