Jump to content

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் நடப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் நடப்பது எப்படி?

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

படகில் சோதனை

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுப்படகில் கஞ்சா கடத்திச் சென்றதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, விவசாய உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும், இதில் ஈடுபட கூடிய நபர்களை கைது செய்யவும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களது கண்காணிப்பையும் மீறி சமீபகாலமாக அதிக அளவு கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

மீனவர்கள் போர்வையில் கஞ்சா கடத்திய ஐவர்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து புத்தளம் மாவட்டம் கல்பிட்டி குதிரைமலை முனை மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவெண் இல்லாத தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு ஒன்று நின்று கொண்டிருந்ததைக் கண்ட கடற்படையினர் நாட்டுப் படகை நோக்கிச் சென்றனர். இதையறிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுப்படகு அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது இலங்கை கடற்படையினர் விரட்டிப் பிடித்து சுற்றி வளைத்தனர். பின்னர் கடற்படை வீரர்கள் நாட்டுப்படகை சோதனை செய்ததில் கஞ்சா மூட்டைகள் படகுக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தப் படகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர், இலங்கை நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் பத்து பேரை விசாரணைக்காக கல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து பத்து பேரையும் இலங்கை கடற்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, பின் இலங்கை சிறையில் அடைத்தனர்.

மீனவர்களை கடத்தல்காரர்களாக மாற்றும் கும்பல்

கஞ்சா எவ்வாறு இலங்கைக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பிய நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் தொழில் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, பின்னர் விடுதலையாகி தற்போது போதைப் பொருள் கடத்தல் தொழிலை முற்றிலுமாக நிறுத்தி விட்டு மீன்பிடித் தொழில் செய்து வருகிறேன்."

 

படகில் சோதனை

"நான் ஒரு நாள் மாலை கடற்கரையில் மீன்பிடி வலைகளைச் சரி செய்து கொண்டிருந்த போது ஒருவர் வந்து 'மீன்பிடித் தொழில் எப்படிப் போகிறது' எனப் பேச ஆரம்பித்தார். சில நொடிகளில் 'குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம், அதற்கு நான் படகில் ஏற்றி விடும் பொருட்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகிற்கு கை மாற்றி விட்டால் மட்டும் போதும், செய்ய முடியுமா?' என்று என்னிடம் கேட்டார்.

முதலில் தயங்கிய நான் பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அதைச் செய்ய சம்மதித்தேன். உடனே அவர் 'நாளை இரவு உங்க நாட்டுப்படகை இந்த இடத்தில் நிறுத்தி விடுங்கள். நாங்கள் பொருட்களை ஏற்றியதும் தகவல் தருகிறோம்' எனத் தெரிவித்து விட்டுச் சென்றார்.

மறுநாள் இரவு அவர் சொன்ன இடத்தில் எனது நாட்டுப்படகைக் கொண்டு சென்று நிறுத்தினேன். சிலர் படகில் ஏறி கஞ்சா மூட்டைகளை படகின் அடிப்பகுதியில் வைத்து அதன் மீது மீன்பிடி வலைகளைப் போட்டு விட்டுச் சென்றனர். பிறகு எனது கைபேசி எண்ணிற்கு ஜிபிஎஸ் மார்க் எண் ஒன்று குறுஞ்செய்தியாக வந்தது. அப்போது குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்ட நபர் இந்த ஜிபிஎஸ் மார்க் எண்ணில் இலங்கை படகு ஒன்று நிற்கும் அல்லது அந்த இடத்தில் காத்திருந்தால் இலங்கை படகில் சிலர் வருவர். அங்கு வந்து இதைப் பெற்று செல்வார்கள் என்றார்.

இரவு படகில் புறப்பட்டு ஜிபிஎஸ் மார்க் குறிப்பட்ட இடத்திற்குச் சென்றவுடன் அவர் குறிப்பிட்டது போல் இலங்கை ஃபைபர் படகில் வந்த சிலர் கஞ்சா மூட்டைகளை நடுக்கடலில் வைத்து பெற்றுச் சென்றனர்.

அதேபோல் இரண்டு முறைக்கு மேல் செய்தேன். இலங்கை நபர்களுடன் ஏற்பட்ட நட்பால் கஞ்சா கடத்தலை நான் தனியாகச் செய்யத் திட்டமிட்டு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி வந்தேன்," என்றார் பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர்.

 

கஞ்சா

சாலை மார்க்கமாகக் கொண்டு வரப்படும் கஞ்சா

தொடர்ந்து பேசிய அந்த நபர், "கேரள வனப்பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சா செடிகள், தேனி வழியாக சாலை மார்க்கமாக தென் மாவட்டங்களுக்குள் கொண்டு வரப்படும். அதேபோல் ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்படும் கஞ்சா, நாகை மாவட்டம் வேதாரண்யம், முத்துப்பேட்டை, ஆறுகாட்டுதுறை பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும்.

கஞ்சா மூட்டைகளில் உள்ள கஞ்சாவை இரண்டு கிலோ பாக்கெட்டுகளாக பொட்டலம் கட்டி தேவைகேற்ப மூட்டைகளில் அடைத்து வாகனங்களில் கடலோர பகுதிகளுக்கு எடுத்து வரப்படும்.

இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் எடுத்து வரப்படுகிறது. அதேபோல் கஞ்சாவை இலங்கைக்கு எடுத்துச் செல்ல திட்டமிடும் நாளன்று மட்டும் கஞ்சா பொட்டலங்களை வரவழைப்போம். அதற்கு முன் கொண்டு வந்து சேமித்து வைக்க மாட்டோம்," என்றார்.

நடுக்கடலில் உயிர் பயத்தைக் காட்டும் கடற்படை

மேற்கொண்டு பேசியவர், "சில நேரம் கடற்படை நடுக்கடலில் படகில் கஞ்சா இருப்பதை அறிந்து எங்களைப் பிடிக்க துரத்தும் போது முடிந்தளவு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயல்வோம். அது முடியவில்லையெனில் கஞ்சா மூட்டைகளைக் கடலில் வீசி விடுவோம்.

கடலில் வீசும் கஞ்சா பொட்டலங்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு கடல் நீரோட்டத்தில் கடற்கரைகளில் ஆங்காங்கே கரை ஒதுங்கும். சில நேரங்களில் கடற்படை துரத்தும் போது சில படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து படகில் செல்பவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும்.

 

கஞ்சா

இலங்கையில் இருந்து இவ்வளவு கிலோ கஞ்சா தேவை என்ற தகவல் முதலில் குறுஞ்செய்தியாக வரும். ஆனால் இப்போது வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் தகவல் தெரிய வருகிறது. வாட்ஸ்ஆப் அழைப்பை போலீசாரால் இடைமறித்துக் கேட்க முடியாது என்பதால் அதன் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.

இலங்கைக்கு கடத்திச் செல்லும் கஞ்சாவுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக எங்களிடம் கொடுக்க மாட்டார்கள். கஞ்சாவுக்கு பணத்தை தமிழகத்தில் உள்ள சில நபர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்வார்கள். நாங்களும் அதே போல் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், ஓரிடத்திற்கு வரச் சொல்லி அங்கு வைத்து அந்தப் பணத்தை எங்களிடம் கொடுப்பார்கள்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

சில நேரங்களில் பணத்தை இரண்டு தவணையாகக் கொடுப்பார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்தத் தொழில் நடந்து வருகிறது.

உண்டியல் முறையில் பணப் பரிமாற்றம்

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொலைபேசி எண்கள், வெவ்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்று கொள்வோம். இது 'உண்டியல் முறை வரவு செலவு' என்று கடத்தல்காரர்கள் மத்தியில் அழைக்கப்படுகிறது.

ஆனால் பல நேரங்களில் எங்களுக்குக் கொடுக்கக்கூடிய பணத்திற்குப் பதிலாக அதற்கு நிகரான மதிப்பு கொண்ட தங்க கட்டிகள் இலங்கையிலிருந்து கொடுத்து விடப்படும். பண நெருக்கடியில் இருக்கும் எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்," என்றார்.

போதைப் பொருள் கடத்திய 91 நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கம்

ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பது குறித்து எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தும் நபர்கள் குறித்த தகவல்கள் முழுமையாகச் சேகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், "இதுவரை 589 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை முழுமையாகக் கண்காணித்து வருகிறோம். அதில் 130 நபர்கள் மீது கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறோம். போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் 91 நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் சமீபத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் மூவருக்கு முன்னதாகவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்பு உள்ளது. இருவர் புதிதாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி தங்கச்சிமடத்தில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டவர்கள் 14ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கிருந்து கஞ்சா கடத்தப்பட்டது, யார் மூலமாக கஞ்சா கடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது, போதைப்பொருள் கடத்தல் ஆகியவை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு மாவட்ட காவல்துறை சார்பில் '83000 31100' என்ற பிரத்யேக எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அந்த எண்ணுக்கு இதுவரை 12 தகவல்கள் வந்துள்ளன. தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரையிலான கடலோரப் பகுதிகளில் கூடுதலாக சோதனைச் சாவடி அமைப்பது குறித்து அந்தப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புப் பணியில் போலீசாரை ஈடுபடுத்துவது குறித்து விரிவான ஏற்பாடு செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

தங்கதுரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை எச்சரித்தார்.

 

Banner

சர்வதேச கடல் எல்லையில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பு

கடத்தல் சம்பவங்களைத் தடுப்பது குறித்து இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுகிறது.

கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர் கிராஃப்ட் ரோந்து கப்பல்கள் மணல்திட்டு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வான்வெளியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள், முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்களை 24 மணி நேரம் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். இருப்பினும் மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி போதைப் பொருட்களைக் கடத்திச் செல்வதால் கண்டுபிடிப்பதற்குச் சற்று சிரமமாக உள்ளது.

மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதம் ஒருமுறை மீனவ கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கடலில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம், நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், அந்நிய ஊடுருவல்கள் எதுவும் இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகிறோம்.

போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களை விரைவில் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடல் பாதுகாப்பு குழுமம் ஈடுபட்டு வருவதாக அந்த கடலேரா காவல் படை அதிகாரி தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62956020

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.