Jump to content

உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அஜினோமோட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா?

சீன உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தலைவலி, குமட்டல், விசித்திரமான உணர்விழத்தல் போன்ற 'சிலருக்கு ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பு', 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்பட்டது. எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தான் அதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அது தான் இன்று உலகம் முழுக்க 'அஜினோமோட்டோ' என்று அழைக்கப்படுகிறது.

1968ஆம் ஆண்டில், டாக்டர் ராபர்ட் ஹோ மான் குவாக் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் என்ற ஆய்விதழுக்கு ஒரு கடிதம் எழுதினார். அமெரிக்காவில் உள்ள சீன உணவகங்களில் சாப்பிடும் போதெல்லாம் அவர் அனுபவித்த அறிகுறிகளுக்கு சாத்தியமான காரணங்களைப் பற்றி அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய பிறகு மோனோசோடியம் குளுட்டமேட் புகழ் பெற்றது.

குறிப்பாக, அவர் தனது கழுத்தின் பின்புறத்தில் ஏற்பட்ட உணர்விழத்தல் குறித்து விவரித்தார். அந்த உணர்விழத்தல் அவரது கைகள், முதுகு ஆகிய பகுதிகளுக்குப் பரவியதோடு, உடலில் பலவீனம், இதயத்துடிப்பு அதிகரித்த்ல் ஆகியவற்றையும் அனுபவித்துள்ளார்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

குவாக், 'சோயா சாஸ்' அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஊகித்தார். ஆனால், அதை வீட்டு சமையலில் இத்தகைய பாதிப்புகள் இன்றிப் பயன்படுத்தியதால் நிராகரித்தார். வணிகரீதியிலான உணவகங்களில் சீன சமையல் ஒயின் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு, சீன உணவகங்களில் பொதுவான சுவையூட்டலுக்காகப் பயன்படுத்தப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் கொண்ட கிளாங்கர் வந்தது. அவரது கூற்று வைரலாகப் பரவியது. ஏராளமான அறிவியல் ஆய்வுகள், எம்எஸ்ஜி பற்றிய 'உண்மையை' அம்பலப்படுத்தும் நூல்கள், எம்எஸ்ஜி எதிர்ப்பு சமையல் நூல்கள், சீன உணவகங்கள் எம்எஸ்ஜி பயன்படுத்தவில்லை என்று விளம்பரப்படுத்தும்ன் அளவுக்கு அவரது கூற்று வைரலானது.

மோனோசோடியம் குளுட்டமேட் என்பது குளுடாமிக் அமிலத்தின் சோடியம் உப்பு. டோக்கியோ பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் கிகுனே இகேடா 1908இல் கண்டுபிடித்ததைப் போல், எம்எஸ்ஜி குளுடாமிக் அமிலத்தின் மிக நிலையான உப்பு. மேலும் இது பலரால் விரும்பப்படும் உமாமி சுவையை வழங்குகிறது.

'உமாமி' - சுவை என்று மொழிபெயர்க்கப்படும் இது மாமிச சுவையுடன் தொடர்புடையது. இகேடா தன் கண்டுபிடிப்பின் மூலம், நான்கு அடிப்படை சுவைகளான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றை விட சுவையில் அதிகமாக விஷயங்கள் உள்ளதாக நம்பினார்.

 

அஜினோமோட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

குளுட்டமேட் என்பது எம்எஸ்ஜியில் உள்ள மந்திரப் பொருளைப் போன்றது. இதுவொரு பொதுவான அமினோ அமிலம் தான். இது தக்காளி, பார்மேசன் சீஸ், உலர்ந்த காளான், சோயா சாஸ், பல பழங்கள், காய்கறிகள், தாய்ப்பால் ஆகிய உணவுகளில் இயற்கையாகவே நிகழ்கிறது.

குவாக்கின் கடிதத்திற்குப் பிறகு, பல்வேறு உயிரினங்களில் அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட் செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்வது தொடர்ந்து நடந்தன.

ஜப்பானிய உணவுகளில் காணப்படும் 'டாஷி ஸ்டாக்' என்ற டேபிள் சாஸை தயாரிக்க இகேடாவும் அவரது மனைவியும், மற்ற ஜப்பானிய சமையல்காரர்கள் பயன்படுத்தும் உலர்ந்த கொம்பு கடற்பாசியில் இருந்து அதைத் தனியாகப் பிரித்தெடுத்தனர்.

சமையல் உப்பில் உள்ள இரண்டு தனிமங்களில் ஒன்றான சோடியத்தைச் சேர்ப்பதன் மூலம், குளுட்டமேட்டை பொடியாக்கி உணவில் சேர்க்கலாம். இதனால் நமக்கு மோனோசோடியம் குளுட்டமேட் கிடைக்கிறது. இது கிகுனே இகேடாவை மிகுந்த பணக்காரர் ஆக்கியது. அவரது எம்எஸ்ஜி அடிப்படையில் உருவான அஜினோமோட்டோ இப்போது உலகம் முழுவதுமுள்ள பல உணவுகளில் காணப்படுகிறது.

குவாக்கின் கடிதத்திற்குப் பிறகு, விலங்குகள் மட்டுமின்றி மனிதர்கள் இடையிலேயும் அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட் வாய்வழியாகவும் நரம்பு வழியாகவும் கொடுக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்தில், இந்த விஷயத்தில் குவாக் கூறிய கூற்றில் உண்மை இருக்கலாம் என்பது போலத் தோன்றியது. ஆனால், வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் டபிள்யூ ஒல்னே புதிதாகப் பிறந்த எலிகளின் தோலுக்குக் கீழே அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட்டை செலுத்துவது மூளையில் இறந்த திசுக்களை மீட்டுருவாக்க வழிவகுத்ததைக் கண்டறிந்தார்.

 

அஜினோமோட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த எலிகள் வயது முதிர்ந்தபோது அவை வளர்ச்சி குன்றியதாகவும் பருமனாகவும் சிலநேரங்களில் மலட்டுத்தன்மையுடனும் இருந்தன. ஒல்னே ரீசஸ் குரங்கு குட்டிகளில் தனது ஆய்வை மீண்டும் மீண்டும் செய்து, அவற்றுக்கு எம்எஸ்ஜியை வாய்வழியாகக் கொடுத்து ஆய்வு செய்தபோதும் அதே முடிவுகள் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், மற்ற ஆய்வாளர்கள் குரங்குகள் மீது மேற்கொண்ட மற்ற 19 ஆய்வுகளில் இதே முடிவுகள் கிடைக்கவில்லை.

மனித ஆய்வுகளிலும் இதே நிலை நீடித்தது. ஓர் ஆய்வில், 71 ஆரோக்கியமான நபர்களுக்கு காப்ஸ்யூல் வடிவில் எம்எஸ்ஜியும் அதைப் போல் தெரியக்கூடிய ஆனால் எந்த எதிர்வினையும் அளிக்காத போலி ஒன்றையும் அளித்து சிகிச்சை அளித்தன. ஆனால், உண்மையான எம்எஸ்ஜியை எடுத்தவர்கள், போலியை எடுத்தவர்கள் என்று வேறுபாடின்றி ஏறக்குறைய இரண்டு தரப்பிலும் ஒரே விகிதத்தில் 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' அறிகுறிகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சிக்கலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், 1995ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக்கான அமைப்பு, அமெரிக்கன் சொசைட்டிஸ் ஃபார் ஃபெடரேஷன் ஆஃப் எக்ஸ்பெரிமென்டல் பயாலஜியிடம், அதற்குக் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து, எம்எஸ்ஜி சொல்லப்படுவதைப் போல் உண்மையில் உணவுக்கு ஆபத்தானதா என்பதைக் கண்டறியப் பணித்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

முதலில் வல்லுநர் குழு, 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்ற பதத்தை "இழிவானது, அறிகுறிகளின் அளவு மற்றும் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை" என்று கூறி நிராகரித்தது. அதற்குப் பதிலாக 'எம்எஸ்ஜி நோய்க்குறி பிரச்னை' என்ற பதத்தை இதன் நுகர்வுடன் தொடர்புடைய பல மாறுபட்ட அறிகுறிகுகளை விவரிக்கத் தேர்ந்தெடுத்தது.

ஆனால், பொது மக்களில் ஆரோக்கியமான நபர்களில் ஒரு சிறு கூட்டம் அதிகளவு எம்எஸ்ஜியை எடுத்துக் கொள்வதாப் பாதிக்கப்படுவதற்கான அறிவியல் சான்றுகள் இருப்பதாக அவர்கல் முடிவுக்கு வந்தனர். ஆனால், இந்த எதிர்வினைகள், 3 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு எம்எஸ்ஜி உணவில்லாமல் தண்ணீர் கொடுக்கப்பட்ட ஆய்வுகளில் காணப்பட்டன.

உணவு மற்றும் மருந்து அமைப்பின்படி, பெரும்பாலான மக்கள் தங்கள் உணவில் ஒரு நாளைக்கு 0.55 கிராம் எம்எஸ்ஜியை சேர்த்துக் கொள்கிறார்கள். ஆகவே, 3 கிராம் அல்லது அதற்கும் மேல் சேர்த்துக் கொள்வது நடைமுறையில் சாத்தியமில்லை.

2000ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, எம்எஸ்ஜி குறித்து மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள ஆரோக்கியமான 130 பேரிடம் ஆய்வு செய்ய முயன்றது. இந்த மக்களுக்கு முதலில் உணவில்லாமல் எம்எஸ்ஜி மட்டும் ஒருதரப்புக்கும் மற்றொரு தரப்புக்கு அதன் போலித் தோற்றம் கொண்ட பாதிப்பற்ற பொருளும் கொடுக்கப்பட்டது.

 

அஜினோமோட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பத்து அறிகுறிகளின் பட்டியலில் எவருக்கேனும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அறிகுறிகளின் அளவு ஏற்பட்டால், அவர்களின் எதிர்வினை சீரானதா என்பதைப் பார்க்க அதே அளவு டோஸ் மூலம் மீண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றொரு சுற்று பரிசோதனைகளுக்குப் பிறகு, 130 பேரில் இரண்டு பேருக்கு மட்டுமே எம்எஸ்ஜியின் எதிர்வினைகள் தெரிந்தன. ஆனால், அவர்களுக்கு உணவில் எம்எஸ்ஜி கலந்து வழங்கி பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களின் எதிர்வினைகள் வேறுபட்டன. எம்எஸ்ஜி மீதான சர்ச்சை மீது இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குளுட்டமேட்டில் நச்சுத்தன்மையின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் குறைவாக உள்ளது. ஓர் எலி குளுட்டமேட் நச்சுத்தன்மையால் உயிரிழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்படுவதற்கு, அது அதன் ஒரு கிலோ உடல் எடைக்கு 15-18 கிராம் அளவில் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அறிவியலின் முன்பாக இந்த விஷயத்தில் இதுதான் முற்றிலும் உண்மை என்று எதுவும் வைக்கப்படவில்லை என்றாலும், டாக்டர் ஜான் ஓல்னே தனது ஆரம்பக்காலத்தில் உயிரினங்கள் மீது நடத்திய பரிசோதனைகளுக்குப் பிறகு எம்எஸ்ஜி பயன்பாட்டை இறுக்கமான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த பிரசாரம் செய்வதில் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார். இப்போது உணவு மற்றும் மருந்துகளுக்கான அமைப்பு, எம்எஸ்ஜியை உணவுகளில் சேர்ப்பது 'பொதுவாகப் பாதுகாப்பானதாக அங்கீகரிக்கப்பட்டது; என்ற வகைப்பாட்டில் சேர்த்துள்ளது.

சீன உணவு வகைகளின் அதீத விருப்பம் கொண்ட உணவுப் பிரியர்களுக்கு, தங்கள் வார இறுதி நாட்களில் சோயா சாஸ் கலந்த சீன உணவுகளை ஆசையோடு தேடிச் சாப்பிடுவோருக்கு இது உறுதியளிக்கிறது.

https://www.bbc.com/tamil/india-62972047

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.