Jump to content

மியான்மரில் இருந்து தப்பித்த இந்தியர்கள் தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைப்பு - 13 தமிழர்கள் கதி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மரில் இருந்து தப்பித்த இந்தியர்கள் தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைப்பு - 13 தமிழர்கள் கதி என்ன?

  • பரணி தரன்
  • பிபிசி தமிழ்
22 செப்டெம்பர் 2022, 02:30 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தாய்லாந்து தடுப்பு முகாமில் உள்ள தமிழர்கள்

 

படக்குறிப்பு,

தாய்லாந்து தடுப்பு முகாமில் உள்ள தமிழர்கள்

வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற 13 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர், அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அந்த நாட்டில் இருந்து தப்பித்து தாய்லாந்து திரும்பியபோது அதன் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை மீட்க தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு புதன்கிழமை காலையில் கடிதம் எழுதியுள்ளார். அதன் அசல், விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இங்குள்ள தமிழக அதிகாரிகள் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் "மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

 

மேலும், ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு முகமைகள் மூலம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்துக்கு அவர்கள் சென்றதாகவும் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல் வருவதாகவும் கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மரில் சிக்கியவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் அவர்களுடன் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் தங்களை விரைவாக மீட்க அரசின் உதவியை நாடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசையிடம் உறுதியளித்த அமைச்சர்

இதற்கிடையே, மியான்மரில் சிக்கியுள்ள மேலும் பல இந்தியர்களில் காரைக்காலைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். அவரை மீட்க அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழசை செளந்தர்ராஜன் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனை மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை சந்தித்தபோது இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து அவரிடம் பேசியதாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அமைச்சர் முரளிதரன், இந்திய அரசிடம் உள்ள தகவலின்படி மியான்மரில் 54 பேர் சிக்கியுள்ளதாகவும் அதில் 30 பேரை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

13 தமிழர்கள் எங்கு உள்ளனர்?

 

தமிழக இளைஞர்கள்

பட மூலாதாரம்,GOOGLE

 

படக்குறிப்பு,

பிபிசி தமிழிடம் பேசியபோது, தாங்கள் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் இருப்பிடத்தை காண்பிக்கும் கூகுள் வரைபட விவரத்தை தமிழக இளைஞர்கள் பகிர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கருத்துக்களின்படி, இந்த தலைவர்கள் குறிப்பிடுவது 'மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காகவே' என தெரிய வருகிறது. ஆனால், மியான்மரில் சட்டவிரோத வேலைக்காக பணியமர்த்தப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 17 இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து ஏற்கெனவே தப்பித்து தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு அவர்களை தாய்லாந்து ராணுவம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது தடுப்பு முகாமில் வைத்திருப்பதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியில், பாதுகாப்பு கருதியும் பிடிபட்ட நபர்களின் எதிர்காலம் கருதியும் அவர்களின் பெயர் மற்றும் படத்தில் தோன்றும் அவர்களின் அடையாளத்தையும் மறைத்து வெளியிடுகிறோம்.

பிபிசி தமிழுக்கு தெரிய வந்துள்ள தகவலின்படி, மியான்மரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் இந்தியர்கள் தற்போதும் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பேர் கொண்ட ஒரு குழுவினர் அந்த நாட்டு ராணுவம் மற்றும் எல்லை காவல் படையின் உதவியுடன் மீட்கப்பட்டு பிறகு மியான்மர் எல்லையில் உள்ள தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப்பகுதியில் விடப்பட்டுள்ளனர்.

அப்படி எல்லை ஆற்றைக் கடந்து தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்துக்கு செல்வதற்காக 20 கி.மீ தூர பாதையை இரவில் கடக்கும் வேளையில்தான், தாய்லாந்தின் ராணுவத்திடம் இந்த 16 பேரும் பிடிபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த குழுவில் 17 பேர் இருப்பதாகவும் அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பிபிசி தமிழ் பேசியது.

அதைத்தொடர்ந்து நீண்ட முயற்சிக்குப் பிறகு மியான்மரில் சிக்கி அங்கிருந்து தப்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 அல்ல, 16 என்று தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் யார், அவர்களின் பெற்றோர் எங்குள்ளனர், அவர்களின் சொந்த ஊர் எது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளன.

அதன்படி, தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள 16 இந்தியர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் வேலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10 பேர் உள்ளனர். இவர்களுடன் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தலா ஒருவரும் இந்த குழுவில் உள்ளனர்.

 

Presentational grey line

 

Presentational grey line

தடுப்பு முகாமில் உள்ளவர்கள் வாக்குமூலம்

 

தமிழக இளைஞர்கள்

இந்த நிலையில், தடுப்பு முகாமில் உள்ள சில தமிழர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

முதலில் பேசிய அருண் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "நான் சிவில் இஞ்சினியரிங் படித்துள்ளேன். ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தேன். பிறகு உள்ளூர் முகவர் என்னுடன் இணைக்கப்பட்டார். அவர் மூலம் துபாய்க்கு செல்ல தீர்மானித்தேன். துபாய்க்கு சென்றபோது என்னைப் போல பல இந்தியர்கள் அங்கு வேலைக்காக வந்திருந்தனர். துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் என்ற இடத்தில் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து கொண்டிருந்தன. அங்கு சில நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் எங்களைப் போல விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தது," என்று கூறினார்.

"எங்களை தேர்வு செய்த நிறுவனம், உங்களுக்கு தாய்லாந்தில் உள்ள நிறுவனத்தில்தான் வேலை என்று கூறியது. ஏற்கெனவே சொந்த ஊரில் மிகவும் கடுமையான பொருளாதார சூழலில் வேலைக்கு விண்ணப்பித்து வெளிநாடுவரை வந்து விட்டதால் கிடைத்த வேலையில் சேருவதென்று தீர்மானித்து தாய்லாந்து வேலைக்கு ஒப்புக் கொண்டோம்," என்று அருண் கூறினார்.

"தாய்லாந்து சென்ற பிறகு அங்குள்ள உள்ளூர் முகவர்களிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம். அந்த முகவர்கள் குழுவுக்கு ஒரு பெண் தலைவர் இருந்தார். அவர் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 கி.மீ தூரமுள்ள எல்லை பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு வைத்து எங்களுடைய கடவுச்சீட்டு, விசா ஆவணங்கள் அனைத்தையும் அந்த முகவர்கள் வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதை கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும் என கூறினார். அதனால் எங்களுடைய செல்பேசி மற்றும் பிற ஆவணங்களை முகவர்கள் வாங்கிக் கொண்டனர்," என்று அருண் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மின்னணு பொறியியல் பட்டதாரியான பிரேம் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆற்றைக் கடந்த பிறகு நடந்தவற்றை விவரித்தார்.

 

தாய்லாந்து மியான்மர் எல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

தாய்லாந்து, மியான்மர் எல்லையை இணைக்கும் மோயி நதி

"ஆற்றைக் கடந்து மறுநாள் காலையில் எங்களிடம் செல்பேசி ஒப்படைக்கப்பட்டபோது, எங்களுடைய நெட்வொர்க்கை ஆன் செய்தோம். அப்போது நாங்கள் உள்ள இருப்பிடத்தை (லொக்கேஷன்) பார்த்தபோதுதான் நாங்கள் இருப்பது தாய்லாந்து அல்ல, மியான்மர் என்றே தெரிய வந்தது. காலையில் ஒரு கட்டுமான நிலையில் இருந்த பெரிய நிறுவனத்துக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். லேட்டஸ்ட் ஐபோன்கள், கணிப்பொறிகள் என அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன," என்று பிரேம் குமார் கூறினார்.

"எங்களுக்குள் இருந்தவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள், சிலர் பி.காம், பிபிஏ, டிப்ளோமா போன்ற படிப்பை முடித்தவர்கள் என தெரிந்து கொண்டோம். நாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ப வேலை தருவார்கள் என நினைத்தோம். ஆனால், 'எல்லோருக்குமே ஒரே மாதிரியான வேலைதான்' என்று அந்த தனியார் நிறுவனத்தார் எங்களிடம் கூறினர். அவர்கள் சில வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்கினர். அவர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதே உங்களுடைய பணி, சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறினர்," என்கிறார் பிரேம்குமார்.

மியான்மர் நிறுவனம், ஒவ்வொரு ஊழியரும் எத்தனை டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்ததாக இந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட ஊழியர்கள்

முதல் ஒரு வாரத்துக்கு தங்களுக்கு மூன்று வேலை உணவும், நல்ல வசதியும் கொடுத்து உபசரித்ததாகவும் ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உரிய இலக்கை எட்டாதவர்களுக்கு உணவு அளவை குறைத்தும் தரக்குறைவாக நடத்தியும் அடித்தும் துன்புறுத்தினர் என்றும் அந்த இளைஞர்கள் கூறினர். பல நேரங்களில் துப்பாக்கி முனையில் இலக்குகளை எட்ட தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த இளைஞர்களுள் சிலர், பணி நேரத்துக்கு பிறகு வெளியே சென்று வந்த வேளையில், உள்ளூர் ராணுவ அதிகாரியின் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் தங்களுடைய நிலை குறித்து கூறியுள்ளனர். இந்த தகவல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தெரியவரவே அதன் நிர்வாகிகள் 16 பேரின் ஆவணங்களை பறித்துக் கொண்டு வேலையைத் தொடரும்படி துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தியதாக தமிழர்கள் கூறினர்.

சுமார் ஒரு மாதமாக பணியாற்றிய இவர்கள், சம்பளம் வாங்க வேண்டிய நேரத்தில், இந்த இளைஞர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ராணுவமும், எல்லை படையினரும் சோதனை நடத்தி 16 பேரை மீட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காமல் மீட்கப்பட்ட அனைவரையும் தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப்பகுதிக்கே கொண்டு வந்து மியான்மர் ராணுவத்தினர் விட்டுச் சென்றுள்ளனர்.

 

தமிழ்நாடு வக்பு வாரியம்

முன்பே எச்சரித்த இந்திய வெளியுறவுத்துறை

கடந்த சில மாதங்களுக்கு முன்பே மியான்மரில் சட்டவிரோத பணிகளுக்காக இந்தியர்களை இலக்கு வைத்து சில வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வலையை வீசி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை எச்சரித்ததாக அதன் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை ட்விட்டரில் ஒரு இடுகையை வெளியிட்டிருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

மியான்மரின் யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்திய குடிமக்களுக்காக ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது.

அதில், "மியன்மரின் தொலைதூர கிழக்கு எல்லைப் பகுதிகளில் டிஜிட்டல் மோசடி/ஃபோர்ஜ் கிரிப்டோ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சில ஐடி நிறுவனங்கள், பல்வேறு இடங்களிலிருந்து இந்திய தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்வதை தூதரகம் சமீப காலமாக கவனித்து வருகிரது. தகவல் தொழில்நுட்பத் துறையில் சாத்தியமான வேலை வாய்ப்புகள் என்ற சாக்குப்போக்கில் அவர்களின் ஆட்சேர்ப்பு முகவர்கள் அப்படி செய்கிறார்கள்."

"இந்தியத் தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் "சட்டவிரோதமாக" மியான்மருக்குள் நுழைய வசதி செய்யப்படுவது அவர்களின் "சிக்கலுக்கு" வழிவகுக்கிறது," என்று அந்த அறிவுறுத்தலில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

இந்திய தூதரகம்

பட மூலாதாரம்,INDIAN EMBASSY, YANGON

"இந்த தகவல்களை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல் பின்புலத்தை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்த வாய்ப்பையும் ஏற்கும் முன்னர் தேவையான அனைத்து தகவல்களையும் (வேலை விவரம், நிறுவன விவரங்கள், இடம், வேலைவாய்ப்பு ஒப்பந்தம் போன்றவை) சரியாக கேட்டு அறிந்து வைத்திருப்பது நல்லது," என்று அந்த அறிவுறுத்தலில் மேலும் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழ் மேலும் விசாரித்தபோது, மோசடி நபர்கள் அல்லது முகவர்களால் 'வெளிநாட்டு வேலைவாய்ப்பு' என்ற பெயரில் இந்திய குடிமக்கள் நூற்றுக்கணக்கில் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. அவ்வாறு ஏமாற்றப்படுபவர்கள் மியான்மரின் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த பகுதி முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அங்கு சில நேரங்களில் ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் இருக்கும் என்றும் ராணுவமும் உள்ளூர் போலீஸாரும் அரிதாகவே அங்கு வந்து செல்வர் என்றும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் மியாவாடியில் உள்ள இந்தியர்களை மீட்க மியான்மர் அரசுடன் மாதக்கணக்கில் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அண்டை நாடுகளில் மியான்மரும் ஒன்று. அந்த நாடு, இந்திய வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்டவற்றுடன் 1,640 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

 

தமிழ்நாடு வக்பு வாரியம்

தாய்லாந்து ராணுவம் கைது நடவடிக்கை

 

தாய்லாந்து குடிவரவுத்துறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆற்றுப்பகுதியை கடந்துதான் ஒரு மாதத்துக்கு முன்பு, இந்த 16 பேரும் மியான்மர் நிறுவன பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடவுச்சீட்டு, கையில் வைத்துள்ள உள்ளூர் பணத்துடன் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் செல்ல இவர்கள் சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும்.

அந்த வகையில், ஒரே குழுவாக இந்த 16 பேரும் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு சென்றபோது, தாய்லாந்து ராணுவம் இவர்களை சுற்றி வளைத்து சட்டவிரோதமாக மியான்மரில் இருந்து நாட்டுக்குள் வந்ததாகக் கூறி கைது செய்ததாக தமிழக இளைஞர்கள் தெரிவித்தனர்.

ஆனால், "நாங்கள் சட்டவிரோதமாக வரவில்லை. துபாயில் இருந்து தாய்லாந்துக்கு உரிய விசாவில் வந்தோம். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மருக்கு சில நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மீண்டும் தாய்லாந்துக்கே தப்பி வந்தோம் என அந்நாட்டு ராணுவத்தினரிடம் விளக்கினோம்," என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் பிறகு குடிவரவுத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். பிறகு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியர்களிடம், உங்கள் மீதான விசாரணை மீது முடிவெடுக்கப்படும்வரை தடுத்து வைக்கப்படுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிடிபட்ட ஒவ்வொருவரிடமும் தாய்லாந்து காவல்துறை புலனாய்வாளர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு இவர்களுடைய புகைப்படம், கைரேகை போன்றவற்றை பதிவு செய்த தாய்லாந்து காவல்துறை, எல்லை தாண்டிச் சென்ற குற்றத்துக்காக 16 பேரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால், அந்த தொகையை ரொக்கமாக செலுத்த அவர்களால் இயலவில்லை. இதனால், தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு இந்த 16 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் விளையாட்டரங்கு போன்ற அந்த தடுப்பு முகாமில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தவர்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Presentational grey line

 

Presentational grey line

"இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை"

 

தாய்லாந்து இந்திய தூதரகம்

பட மூலாதாரம்,INDIAN EMBASSY, BANGKOK

 

படக்குறிப்பு,

பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம்

அங்கிருந்தபடி 16 இந்தியர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் மற்றும் அதிகாரிகளை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் சுகாதாரமற்ற சூழலில் தாங்கள் வசிப்பதாகவும் விரைவாக தங்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அந்த மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

இந்திய தூதரகம்

 

படக்குறிப்பு,

செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலையில் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இந்தியர்கள் அனுப்பிய மின்னஞ்சல்

இப்படியாக கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, மியான்மரில் இருந்து தப்பி வந்த பிறகு கடந்த 36 நாட்களாக இந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தாய்லாந்து காவல்துறை கட்டுப்பாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மியான்மர் நிறுவனத்தில் சட்டவிரோத பணிகளில் இன்னும் பல இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக தடுப்பு முகாம்களில் உள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய சூழலில் பிடிபட்டுள்ள இந்தியர்கள் உரிய ஆவணமில்லாத காரணத்தால் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை உயரதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இந்தியர்களை மீட்க உயரிய அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

குடும்பத்தினர் உருக்கம்

 

தமிழக இளைஞர்கள்

இந்த நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ள தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் தெரியாமல் தமிழ்நாட்டில் வாழும் அவர்களின் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் தமது சகோதரரை உள்ளூர் முகவர்கள் சிலர் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவறான நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாக சென்னையில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஆறு முகவர்களின் விவரங்களை குறிப்பிட்டு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தமது சகோதரனை கண்டுபிடித்து மீட்க உதவிடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜகுபர் அலியும் தமது மகனை மீட்க உதவிடும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி, தென்காசி, ஊட்டியில் உள்ள தமிழ்நாட்டு இளைஞர்களின் பெற்றோரையும் தொடர்பு கொண்டோம். கடைசியாக தங்களுடன் பிள்ளைகள் பேசி ஒரு வாரமாகிறது. அவர்களை விரைவாக மீட்க தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இந்தியர்கள் தாய்லாந்தில் சிக்கியுள்ளது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளிடம் பேசினோம்.

"இந்த விவகாரத்தை பிரத்யேகமாக கவனிக்க தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறையுடனும் தமிழ்நாடு அரசுடனும் ஒருங்கிணைந்து அவர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-62988919

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து தடுப்பு மையத்தில் உள்ள 13 தமிழர்கள் எப்போது தாயகம் திரும்புவர்? கவலையில் குடும்பங்கள்

  • பரணி தரன்
  • பிபிசி தமிழ்
27 செப்டெம்பர் 2022
 

தமிழ்நாடு மோசடி வேலைவாய்ப்பு இளைஞர்கள்

துபாயில் இருந்து மியான்மர் நாட்டுக்கு சட்டவிரோத வேலைக்காக கடத்தப்பட்டு மீண்டும் தாய்லாந்து திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட 16 இந்தியர்களை, அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களை மீட்கும் நடவடிக்கை தற்போது எந்த அளவில் உள்ளது?

மியான்மரில் சட்டவிரோத வேலைக்காக பணியமர்த்தப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து தப்பித்து, தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்தபோது அதன் ராணுவத்தால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு உள்ளூர் காவல்துறை மூலம் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் துபாயில் இருந்து தாய்லாந்துக்கு வந்ததற்கான பயணச்சீட்டு மற்றும் விசா இருந்ததால், அவர்களை 'தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்கு சென்று திரும்பியவர்கள்' என அடையாளப்படுத்தி வழக்கு தொடர்ந்தது தாய்லாந்து காவல்துறை.

இதுபோன்ற வழக்கில் வெளிநாட்டினர் சிக்கினால், அவர்களிடம் உரிய அபராதத்தை வசூலிக்கும் தாய்லாந்து அரசு அதன் பிறகு அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும். இந்த அபராதத் தொகையை 'பிடிபட்ட நபர்கள்' அவர்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் செலுத்தலாம் அல்லது அவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காட உரிமை பெற்ற வழக்கறிஞர்கள் மூலமாகவும் செலுத்தலாம். பெரும்பாலும் இந்த தொகையை இளைஞர்களை வேலைக்கு பணியமர்த்தும் முகவர்களே செலுத்தி விட்டு அவர்களை வெளியே கொண்டு வர முயற்சி எடுப்பர்.

இந்த நிலையில், சமீபத்தில் பிடிபட்ட 16 இந்தியர்களிடமும் அபராதத் தொகையை செலுத்த ரொக்கம் இல்லாததால் அதற்கு ஏற்பாடு செய்யும்வரை அவர்களை தடுப்பு மையத்தில் வைக்கும்படி தாய்லாந்து குடிவரவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஆனால், அபராதத் தொகையை செலுத்த போதிய பணம் கைவசம் இல்லாததால் இந்திய இளைஞர்கள் குடிவரவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்தத் துறையினர் அந்த இளைஞர்களை தனித்தனியாக விசாரித்தனர். அதைத்தொடர்ந்து முதலில் இந்திய இளைஞர்களை சிறையில் வைத்தும் பிறகு சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்படும் மையத்துக்கும் தாய்லாந்து அதிகாரிகள் மாற்றினர்.

 

Presentational grey line

 

Presentational grey line

முதல்வர் கடிதம் - வேகமெடுத்த நடவடிக்கை

 

தாய்லாந்து

பட மூலாதாரம்,GOOGLE

 

படக்குறிப்பு,

13 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு மையத்தை (சிவப்பு நிற குறிப்பில்) காட்டும் படம்

சமீபத்திய தகவலின்படி, பிடிபட்டுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பாங்காக்கில் உள்ள சாதோர்ன் மாவட்டத்தின் சோய் சுவால்ப்லூ என்ற இடத்தில் உள்ள குடிவரவுத்துறை தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, தங்களை மீட்கக் கோரி இளைஞர்கள் வெளியிட்ட காணொளி ஒன்று கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதன் பிறகே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி அந்த இளைஞர்களை மீட்கும்படி கேட்டுக் கொண்டார்.

சிறை போன்று நாலாபுறமும் மிக நீளமான பெருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கும் அந்த மையத்தில், பிடிபட்டவர்கள் சட்ட ரீதியாக உதவிகளைப் பெறுவதற்காக அலுவல்பூர்வமற்ற வகையில் செல்பேசி பயன்படுத்த அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். அந்த செல்பேசி மூலம் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயரதிகாரிகளையும் இந்திய தூதரக அதிகாரிகளையும் 13 தமிழர்களும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அவர்களில் சிலரிடம் பிபிசி தமிழ் தொடர்ந்து பேசி வருகிறது. பிடிபட்டவர்களில் ஒருவரான அருண் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நம்மிடம் பேசுகையில், "முதலாவதாக நாங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் அதிக கட்டுப்பாடுகள் இல்லை. வெளியில் இருந்து யாரும் எங்களை சந்திக்க முடியாது. ஒரு நாளில் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மட்டுமே கட்டண அடிப்படையில் செல்பேசி பயன்படுத்த அனுமதிப்பர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நாங்கள் அந்த மையத்தில்தான் வைக்கப்பட்டு இருந்தோம். கடைசி வாரத்தில்தான் எங்களுக்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்பு ஒன்றின் மூலம் வாரத்தில் ஒரு நாளுக்கு மட்டும் வெளி உணவுப்பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது," என்று கூறினார்.

வேறு மையத்துக்கு திடீர் மாற்றம்

"கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்களை இரு வளாகங்கள் தள்ளி அமைந்திருக்கும் வேறொரு மையத்துக்கு தாய்லாந்து குடிவரவுத்துறை அதிகாரிகள் மாற்றினர். அந்த மையம், கிட்டத்தட்ட சிறைச்சாலை போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது." என்று அங்கிருக்கும் தமிழர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

 

தாய்லாந்து காவல்துறை

பட மூலாதாரம்,THAI POLICE

அவர்களுடன் நமது செய்தியாளர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேசியபோது, "தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், உளவுப்பிரிவு உயரதிகாரி ஒருவர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். நாங்கள் தமிழ்நாடு திரும்ப அரசு எல்லா உதவியும் எடுக்கும் என்று எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், எப்போது தாயகம் திரும்புவோம் என்றுதான் தெரியவில்லை," என்று கூறினார்.

இதற்கிடையே, தாய்லாந்து மையத்தில் உள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்று சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஜெசிந்தா லாசரஸிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"கடந்த இரண்டு வாரங்களாக இது தொடர்பாக தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய வெளியுறவுத்துறையுடன் தமிழக அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. சில நிர்வாக அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் அதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று ஜெசிந்தா தெரிவித்தார்.

"தற்போது பிடிபட்டுள்ள 16 இந்தியர்களுக்கு முன்பாகவே எட்டு தமிழர்கள் தாய்லாந்தில் சிக்கியிருந்தபோது அவர்களை மும்பை வழியாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல, மிகவும் விரைவாக 13 தமிழர்களை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுப்போம்," என்று ஜெசிந்தா கூறினார்.

இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரிடம் பேசினோம். "மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிடிபட்டுள்ள இந்தியர்கள் வெளிநாட்டு மண்ணில் உள்ளனர். அதுவும் அவர்கள் துபாயில் இருந்து தாய்லாந்துக்கு சென்று விட்டு அங்கிருந்து மியான்மருக்கு முறையான அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் தாய்லாந்துக்குள் நுழைந்தபோது பிடிபட்டிருக்கிறார்கள். இரு நாடுகளுடனான சிறந்த நல்லுறவைப் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் தாய்லாந்தில் சிக்கியவர்கள் கடைசியாக தங்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் நிலையை அறிய அவர்கள் அரசின் பல நிலைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் சிலர், தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறையில் ஏதும் நடந்து விடக்கூடாது கவலைப்படுவதாக நம்மிடம் தெரிவித்தனர்.

காணொளிக் குறிப்பு,

''எங்களை காப்பாற்றுங்கள்" - தாய்லாந்தில் இருந்து தமிழர்கள் அழுகுரல்

பயணச்சீட்டை முன்பதிவு செய்வது யார்?

 

தாய்லாந்து தடுப்பு மையம்

இந்த நிலையில், தடுப்பு முகாமில் உள்ள இந்தியர்கள் அனைவரிடமும் வரும் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்படும் விமானத்தில் அவர்களுக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்படி தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் அனுப்பியிருப்பதாக பிபிசி தமிழுக்கு தெரிய வந்துள்ளது.

பாங்காக்கில் இருந்து இடைநில்லா விமான சேவை மூலம் சென்னைக்கு வர 3.30 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி இந்த ஒரு வழிப்பயணத்துக்கான செலவு தலா ரூ. 15,000 முதல் ரூ. 18,000 வரை உள்ளது. ஒருவருக்கு ரூ. 15 ஆயிரம் என கணக்கிட்டாலும் 13 பேர் சென்னை வருவதற்கான பயணச்சீட்டு செலவு ரூ. 1,95,000 முதல் ரூ. 2,34,000 வரை ஆகும்.

சிறை போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த வளாகத்தில் இருந்தபடி இந்தியர்களால் தாயகம் புறப்படுவதற்கான பயணச்சீட்டுகளை எவ்வாறு முன்பதிவு செய்ய இயலும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது. தாய்லாந்தில் உள்ள மீட்கப்பட்ட தமிழர்களின் பயணச் செலவை மாநில அரசே ஏற்கும் என்று சில தினங்களுக்கு முன்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியிருந்தார்.

அதன்படி, தடுப்பு முகாமில் உள்ள 16 பேரில் 13 தமிழர்களுக்கான பயணச்சீட்டை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்வதாக சம்பந்தப்பட்டவர்களிடம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு முகாமில் மேலும் நான்கு தமிழர்கள்

தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாமில் தற்போது உள்ள 16 இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். கன்னியாகுமரி, கோவை, கரூர், வேலூரை சேர்ந்த தலா இருவர், அரியலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

 

தாய்லாந்து குடிவரவுத்துறை

பட மூலாதாரம்,@REALHUMANRIGHTS

இதற்கிடையே, தாய்லாந்து தடுப்பு மையத்தில் கன்னியாகுமரி, தஞ்சாவூரைச் சேர்ந்த தலா ஒருவர், திருநெல்வேலியைச் சேர்ந்த இருவர் என மேலும் நான்கு தமிழர்கள் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக அவர்கள் அந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களும் 13 தமிழர்களைப் போலவே வெளிநாடு வேலைவாய்ப்பு தகவலை நம்பி தாய்லாந்து சென்றதும் அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோத பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் இருந்து 'வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது ஆலோசகர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்ளப்படுவோர் மூலம் தாய்லாந்து வரை வந்த அவர்கள், அபராதம் செலுத்திய பிறகே நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை தாய்லாந்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த தமிழர்கள் தொடர்பான தகவலை 'பிபிசி தமிழ்' தமிழ்நாடு அரசிடம் பகிர்ந்திருக்கிறது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலி முகவர்களை கைது செய்ய நடவடிக்கை

இது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய வெளியுறவுத்துறையில் விசாரித்தபோது, 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்கள் தொடர்பான மீட்புப் பணி குறித்த தகவல் மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும் மேலும் நான்கு தமிழர்கள் அல்லது எத்தனை பேர் அங்கு உள்ளனர் என்ற விவரம் தங்களிடம் எழுத்துபூர்வமாக இல்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோத வெளிநாட்டு வேலைகளுக்கு இந்திய இளைஞர்களை தேர்வு செய்து அனுப்பி வைத்த முகவர்களை கண்டறிய மாநில உளவுப்பிரிவு தீவிரம் காட்டி வருகிறது.

தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்பு கொண்ட உளப்பிரிவு அதிகாரிகள், அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் இந்த மோசடி வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு துணையாக செயல்பட்ட முகவர்கள் யார் என்ற தகவல்களை பெற்றுள்ளனர். அந்த முகவர்களை கைது செய்ய மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

https://www.bbc.com/tamil/global-63046763

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் இருந்து மீட்ட 13 பேர் சென்னை பயணம் - கடைசி நேர பரபரப்பு

4 அக்டோபர் 2022
 

தமிழ்நாடு அரசு

தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு டெல்லி விமான நிலையத்துக்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேரை இன்று (அக்டோபர் 4) இரவு 11 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இன்று பகல் 12.20 மணிக்கு இண்டிகோ விமானத்தில் புறப்பட்ட 13 பேரும் பிற்பகல் 3 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தனர். 13 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக இந்திய குடிவரவுத்துறை அலுவலகத்துக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து மாலை 5.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை.

பிற்பகல் 3.30 மணிக்கு குடிவரவுத்துறை அலுவலகத்துக்கு சென்ற அவர்களிடம் இரவு 8 மணிவரை அதிகாரிகள் யாரும் விசாரணைக்கு வரவில்லை. நாடு கடத்தப்பட்டு தாயகம் வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 13 பேரையும் தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேரும் குடிவரவுத்துறை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் சென்னை விமானத்தை தவற விட்ட தகவல் தொடர்பாக மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரை தமிழ்நாடு அழைத்து வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் அலுவலக உத்தரவின்பேரில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் குழு விமான நிலையத்துக்கு சென்று குடிவரவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு பிறகு டெல்லி விமான நிலைய குடிவரவுத்துறை விசாரணை அதிகாரிகளால் 13 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் பிறகு அவர்கள் சென்னைக்கு புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உதவியுடன் இரவு 11 மணிக்கு புறப்படும் விமானத்தில் 13 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

என்ன நடந்தது?

 

தாய்லாந்து தடுப்பு முகாமில் இருந்த தமிழர்கள்

 

படக்குறிப்பு,

தாய்லாந்து தடுப்பு முகாமில் இருந்த தமிழர்கள்

வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற 13 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர், துபாயிலிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மியான்மரில் இருந்து தப்பித்து தாய்லாந்து திரும்பியபோது அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என ஆன்லைனில் வெளிவந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து பலர் அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். பிறகு அவர்கள் ஓர் உள்ளூர் முகவரின் தொடர்பில் இணைக்கப்பட்டனர். அந்த முகவர் மூலமாக இவர்கள் துபாய்க்கு சென்றபோது பல இந்தியர்கள் அங்கு வேலைக்காக வந்திருந்தனர். துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் என்ற இடத்தில் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்காக ஆட்களைத் தேர்வுசெய்து கொண்டிருந்தன. அங்கு சில நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் சிலரைத் தேர்வுசெய்தன.

அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் தாய்லாந்தில்தான் அவர்களுக்கு வேலை எனச் சொல்லப்பட்டது. ஏற்கெனவே சொந்த ஊரில் மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்து, வெளிநாடுவரை வந்து விட்டதால் கிடைத்த வேலையில் சேருவதென்று தீர்மானித்த அவர்கள், தாய்லாந்து வேலைக்கு ஒப்புக்கொண்டனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

மியான்மருக்கு சட்டவிரோத ஆள் கடத்தல்

இவர்கள் தாய்லாந்து சென்ற பிறகு, அங்குள்ள உள்ளூர் முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த முகவர்கள் குழுவுக்கு ஒரு பெண் தலைவர் இருந்தார். அவர் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 கி.மீ தூரமுள்ள எல்லை பகுதிக்கு இவர்களை அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து இவர்களுடைய கடவுச் சீட்டு, விசா ஆவணங்கள் அனைத்தையும் அந்த முகவர்கள் வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் அவர்களுடைய செல்போனும் வாங்கிக்கொள்ளப்பட்டது.

 

டெல்லி விமான நிலையத்தில் தமிழக இளைஞர்கள்

மறுநாள் காலையில் அவர்களிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்களில் சிலர் தங்கள் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் ஆராய்ந்தபோது, தாங்கள் தாய்லாந்தில் இல்லை என்பதும் மாறாக மியான்மரில் இருப்பதும் தெரிந்தது.

அடுத்த நாள் காலையில் கட்டுமான நிலையில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்துக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். லேட்டஸ்ட் ஐபோன்கள், கணிப்பொறிகள் போன்ற அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன.

அங்கிருந்தவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள், சிலர் பி.காம், பிபிஏ, டிப்ளோமா போன்ற படிப்பை முடித்தவர்களாக இருந்தனர். ஆனால், 'எல்லோருக்குமே ஒரே மாதிரியான வேலைதான்' என்று அந்த தனியார் நிறுவனத்தார் கூறினர். பிறகு, சில வாடிக்கையாளர்களின் தகவல்கள் வழங்கப்பட்டன.

அந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதுதான் இவர்களுடைய பணி என்று சொல்லப்பட்டது. சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

மோசடி வேலைக்கு கட்டாயப்படுத்திய குழுக்கள்

மியான்மர் நிறுவனம், ஒவ்வொரு ஊழியரும் எத்தனை டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்ததாக சிக்கிக்கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

முதல் ஒரு வாரத்துக்கு மூன்று வேலை உணவும், நல்ல வசதியும் கொடுத்து உபசரித்ததாகவும் ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உரிய இலக்கை எட்டாதவர்களுக்கு உணவு அளவை குறைத்தும் தரக்குறைவாக நடத்தியும் அடித்தும் துன்புறுத்தினர் என்றும் அந்த இளைஞர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பல நேரங்களில் துப்பாக்கி முனையில் இலக்குகளை எட்ட தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த இளைஞர்களுள் சிலர், பணி நேரத்துக்கு பிறகு வெளியே சென்று வந்த வேளையில், உள்ளூர் ராணுவ அதிகாரியின் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் தங்களுடைய நிலை குறித்து கூறியுள்ளனர். இந்த தகவல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தெரியவரவே அதன் நிர்வாகிகள் 16 பேரின் ஆவணங்களை பறித்துக் கொண்டு வேலையைத் தொடரும்படி துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

 

வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதுதான் இவர்களுடைய பணி என்று அவர்களிடம் சொல்லப்பட்டது

 

படக்குறிப்பு,

வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதுதான் இவர்களுடைய பணி என்று அவர்களிடம் சொல்லப்பட்டது

சுமார் ஒரு மாதமாக பணியாற்றிய இவர்கள், சம்பளம் வாங்க வேண்டிய நேரத்தில், இந்த இளைஞர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ராணுவமும், எல்லைப் படையினரும் சோதனை நடத்தி 16 பேரை மீட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காமல் மீட்கப்பட்ட அனைவரையும் தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப் பகுதிக்கே கொண்டு வந்து மியான்மர் ராணுவத்தினர் விட்டுச் சென்றுள்ளனர்.

இதற்குப் பிறகு எல்லை கடந்து சென்றவர்களை தாய்லாந்து அரசு பிடித்து, ஒரு தடுப்பு முகாமில் வைத்தது. அங்கிருந்து தங்களை மீட்க தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்துத் தெரியவந்ததும், இவர்களை மீட்க உதவும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் மியான்மரில் சிக்கியவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் அவர்களுடன் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் தங்களை விரைவாக மீட்க அரசின் உதவியை நாடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை தலையிட்ட நிலையில், தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 13 தமிழர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இண்டிகோ விமானம் மூலமாக இன்று இரவு டெல்லி வழியாக சென்னை திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-63127920

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.