Jump to content

தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன - தவராசா கலையரசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன -  தவராசா கலையரசன்

By T YUWARAJ

22 SEP, 2022 | 09:08 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

 

தமிழ் மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த கடும்போக்கான பேரனவாதத்தை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தொடர்வார்களா, ஒருபுறம் புலம்பெயர் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை எடுக்கப்படுவதுடன். மறுபுறம் தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

கடும் இனவாத போக்கினை கொண்ட கிழக்கு மாகாண ஆளுநரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டையும்,தமிழரின் வரலாற்று அம்சங்கள் மீது இலக்கு வைத்துள்ள தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற நிலையியல் கட்டளை விதப்புரை திருத்தம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகை

நிலையியல் கட்டளைகள் திருத்ததம் தொடர்பான விவாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எமது மக்கள் மீது திணிக்கப்படும் அடாவடித்தனம் தொடர்பில் பேசும் நிர்பந்தம் காணப்படுகிறது.குறிப்பாக வடக்கையும்,கிழக்கையும் மையமாக கொண்டு அரசாங்கம் மேற்கொள்ளும் குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள்; மற்றும் ஏனைய விடயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிக மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டம் தமிழ்கள் செறிந்து வாழ்ந்த தொண்மை வாய்ந்த மாவட்டமாக காணப்பட்டது.தற்போது சிங்கள அரச தலைவர்கள் தமிழ் விகிதாரத்தை குறைத்து தமிழ் மக்களை சிறுபான்மையினாக்கி திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்களை முடக்கியுள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கை நிரந்தராக துண்டாடும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்க தொல்லியல் திணைக்களமும்,இந்த அரசாங்கமும் அவதானம் செலுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கடும்போக்கான சிங்களவர்களின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களத்துக்கு 20 பேரை நியமித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு எமது மதம் மற்றும் கலாசார அம்சங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் பெருமளலான நிலப்பரப்பை கொண்டிருந்தது.1960ஆம் ஆண்டு அங்கு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழ்கள் சிறுபான்மையாக்கப்பட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணேச்சரம் ஆலயத்தை தொல்லியல் நடவடிக்கைக்கு உட்படுத்தி எமது கலாசாரத்தை கேள்விக்குள்ளாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறிப்பாக 2010ஆம் ஆண்டு அங்கு மீனக குடியேற்றம் உருவாக்கப்பட்டு தற்போது 60 இற்கும் அதிகமான குடும்பங்கள் அங்கு வாழ்கிறார்கள்.

மிகவும் இனவாத போக்கினை உடைய கிழக்கு மாகாண ஆளுநர் இந்த மீனவ குடியேற்றத்திற்கு சென்று அவர்களுக்கு 18ஆயிரம் ஹெக்கர் விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்.நீண்டகாலம் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்த எமது மக்களை நிம்மதியாக வாழ அரசாங்கம் இடமளிப்பதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம் பெயர் அமைப்புக்களுடன் பேசுகிறார்.மறுபுறம் பௌத்த பேரினவாதத்தினால் பழமைவாய்ந்த எமது கலாசாரங்கள் அழிக்கப்படுகின்றன.ஆகவே ஜனாதிபதி,மற்றும் பிரதமர் ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவின் கடும்போக்கான செயற்பாடுகள் எமது மக்கள் மத்தியில் தொடர அனுமதிப்பார்களா என கேள்வியெழுப்புகிறோம். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/136225

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடவே வழியில்லாமல் பிச்சைக்கார நாடுகளிலெல்லாம் தெண்டல் போடும் நரி அரசு...இந்த தொல்லியல் நடவடிக்கையை நிறுத்தினாலே மில்லியன் கணக்கா மிச்சம் பிடிக்கலாம்தானே..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.