Jump to content

முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

By RAJEEBAN

22 SEP, 2022 | 03:07 PM
image

அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ad1bf5c2b188bbdf5f0cfa49482aeb38.jpg

இரண்டாவது எலிசபெத் மகாராணியை நினைவுகூறும் தேசிய நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரிஸ்பேர்ன், சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கான்பெரா ஆகிய நகரங்களில் முடியாட்சிக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

a346d69691b571b953449eb777d7cbf2.jpg

சிலர் அவுஸ்திரேலிய கொடியை எரித்துள்ளனர்.

b9e8823d364e6c501374bb83244e53fc.jpg

பிரிஸ்பேர்ன் சிபிடியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரைகளின் பின்னர் செய்திதாளொன்றை கொழுத்தி அதனை பயன்படுத்தி தேசியக்கொடிக்கு தீயிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய தினத்தை ஒழியுங்கள் எனதெரிவிக்கும் ஆடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்திருந்தனர்.

5bdff722cdb6bca64badecba8f38e25b.jpg

மன்னர் இல்லை பொலிஸ் இல்லை முதலாளித்துவாதிகள் இல்லை மாற்று சோசலிஸ்ட்கள் என்ற பதாகைகளையும் காணமுடிந்தது.

அவுஸ்திரேலியா எப்போதும் அபோர்ஜினிய மக்களின் பூமியாகவேயிருக்கும் என அவர்கள் கோசமிட்டுள்ளனர்.

இதேவேளை முடியாட்சியை ஒழிக்கவேண்டும் என்ற கோசத்துடன் சிட்னியின் நகரமண்டபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

d9fa7218cc4a06d9b4480968f69eec06.jpg

டவுன்ஹோலின் படியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உரையாற்றியவேளை பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இறையாண்மை ஒருபோதும் கைவிடப்படவில்லை, பிரிட்டனின் ஈவிரக்கமற்ற காலனித்துவம் தொடர்கின்றது எனது மன்னரும் மகாராணியும் கறுப்பானவர்கள் போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அபோர்ஜினிய மக்களின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில்காணமுடிந்தது.

கடும் வெயில் ஒருநாள் பொதுவிடுமுறைக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மெல்பேர்னின் சிபிடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

c7dd95e12e912415bc732f9eeee4f1a1.jpg

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தலைமை வகித்த செனெட்டர் லின்டா தனதுகையை சிவப்பு பெயின்டிற்குள் வைத்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னிலையில் உரையாற்றுகையில் முடிக்குரியவர்களின் கரங்களில் இரத்தக்கறை என தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் எங்கள் மக்கள் இறக்கின்றனர் முடியின் கால் எங்கள் கழுத்தில் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மண்ணின் முதல் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் இங்கு போராடவந்துள்ளோம்,நாங்கள் ஒருபோதும் எங்கள் இறைமையை விட்டுக்கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

48c2c4eaccf4629d1c3c2ba3b30b9ce3.jpg

எரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கொடியின் முன்னாள் அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடியை சேர்ந்த செனெட்டர் உரையாற்றியவேளை மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்துள்ளனர்.

உங்களிற்கு தெரியுமா உங்களிற்கு தெரியாது ஏனென்றால் ஊடகங்கள் அதனை தெரிவிப்பது இல்லை, நாங்கள் நாளாந்தம் பொலிஸாரின் பிடியில் எத்தனை உயிர்களை இழக்கின்றோம் தெரியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2022 இல் 20000 அபோர்ஜினிய குழந்தைகள் சிறுவர்கள் களவாடப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் எங்கள் மக்கள் துயரத்தையும் இனப்படுகொலையையும் அனுபவிக்க காரணமானவருக்கு நீங்கள் அஞ்சலி செலுத்துகின்றீர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/136195

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மன்னர் இல்லை பொலிஸ் இல்லை முதலாளித்துவாதிகள் இல்லை மாற்று சோசலிஸ்ட்கள் என்ற பதாகைகளையும் காணமுடிந்தது.

அவுஸ்திரேலியா எப்போதும் அபோர்ஜினிய மக்களின் பூமியாகவேயிருக்கும் என அவர்கள் கோசமிட்டுள்ளனர்.

இதேவேளை முடியாட்சியை ஒழிக்கவேண்டும் என்ற கோசத்துடன் சிட்னியின் நகரமண்டபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

b9e8823d364e6c501374bb83244e53fc.jpg

இனி இது எல்லா முடியரசு நாடுகளுக்கும் பரவும். முடியரசு பெரிய பிரித்தானியாவுக்குள் மட்டும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்....🤪

சூரியன் அஸ்தமிக்காத இராச்சியத்திற்கு சூரியனே இல்லாமல் போகப்போகின்றது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இராச விசுவாசிகளின் நிலைதான் கவலைக்கிடமானது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கூட 32% எதிர்ப்பு தான். முதலாவது சார்ல்ஸ் மன்னர் சேட்டை தாங்காமல் தல வெட்டின பிறகு ஒழுங்கா இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய தினம் என கொண்டாடப்படும் தினம் பூர்வீக குடிமக்களை கொன்று ஆக்கிரமிப்பின் அடையாளமாக கொண்ட்டாடப்படும் தினம்.

மேற்குலகில் இவ்வாறான ஒரு தினம் கொண்ட்டாடபடுவது ஏன் என்பது புரியவில்லை, இலங்கையில் முள்ளிவாய்கால் படுகொலையினை மேற்கொண்ட தினத்தினை சிங்களம் தமது வெற்றி தினமாக கொண்டாடுவது ஒரு பெரிய விடயமில்லை.

ஆனால் அவுஸ்ரேலியாவில் இந்த அவுஸ்ரேலிய தினம் கொண்ட்டாடப்படுவது என்பது அவுஸ்ரேலியா இலங்கைக்கு அதிக தொலைவில் இல்லை என்பதையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரித்தானியாவில் கூட 32% எதிர்ப்பு தான். முதலாவது சார்ல்ஸ் மன்னர் சேட்டை தாங்காமல் தல வெட்டின பிறகு ஒழுங்கா இருக்கினம்.

இருக்கிற பழசுகள்(பழமைவாதிகள்) போய்ச்சேர றோயல் பமிலியும் கத்தரிக்காயும் எண்ட நிலை வரலாம்.....

அது சரி உவன் ஹரியன் இப்பவும் உங்கை தான் நிக்கிறானே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அது சரி உவன் ஹரியன் இப்பவும் உங்கை தான் நிக்கிறானே? 😁

உங்கை தான் நிக்குதாள்....

தேப்பன் ராசா எல்லோ.... இனி.... ஒரு வீட்டையும், பதவியையும் கொடுத்து கையோட வச்சிருப்பார்....

உங்கட ஊரிலை மகிந்த எண்டொருத்தர், தன்ற இரண்டாவது மோனை, தனது ஆலோசகர் எண்டு வைச்சிருந்து, அரசாங்கத்திடம் காசு பறிச்சுக் கொண்டிருந்த விசயம் மறக்கேல்ல தானே. 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இருக்கிற பழசுகள்(பழமைவாதிகள்) போய்ச்சேர றோயல் பமிலியும் கத்தரிக்காயும் எண்ட நிலை வரலாம்.....

அது சரி உவன் ஹரியன் இப்பவும் உங்கை தான் நிக்கிறானே? 😁

 

இதுக்குத்தான் பிரெஞ்சுக்காறர்கள்  அப்பவே தலையை  வெட்டி  எடுத்து விட்டார்கள்

(இனி  தம்பி  வரப்போறார். என்ன தலையை  எடுக்கிறதிலேயே கண்ணா  இருக்கிறீர்கள்  என்று?🤣)

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.