Jump to content

இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம்

By RAJEEBAN

23 SEP, 2022 | 01:08 PM
image

இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகியுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ் அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டனின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவேயும் ரிச்மன்ட் பார்க்கிற்கான சரா ஒன்லேயும் பிரிட்டனின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார செயலாளர் ஜேம்ஸ் கிலெவெர்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில்  இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொறுப்புக்கூறலிற்கான உள்நாட்டு பொறிமுறை கடந்த சில வருடங்களாக சிதைந்து தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வழமை போல தாமதப்படுத்தும்,மறுக்கும், தப்பிக்க முயலும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த  குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும், அவர்கள் செய்த விடயங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என புதிய வெளிவிவகார செயலாளர் இலங்கையின் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

தனிநபர் ஒருவர் அநீதிகளில் உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான   ஆதாரங்கள் காணப்பட்டால் மக்னிட்ஸ்கி தடைகளை பயன்படுத்துவது  உட்பட பிரிட்டன் அரசாங்கம் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முதலில் நாங்கள் புதிய வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட்டமைக்காக உங்களிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம், நீங்கள் பணிகளில் ஈடுபட ஆரம்பிக்கும் இவ்வேளை இலங்கைதமிழர்களின் உரிமைகள்  உங்களின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தற்போது அரசியல் பொருளாதார  மனித உரிமை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் உணவு மருந்து எரிபொருள் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு நாடாளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்கள் இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மக்கள் சீர்திருத்தங்களிற்காக வீதிகளில் போராடும்போது ஐக்கிய இராச்சியம் அவர்களிற்கு ஆதரவளிக்கவேண்டும்,நெருக்கடியின் மனிதாபிமான விளைவுகளிற்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்காக எங்களின் சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் செயற்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான நீண்ட கால தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த எங்கள் கரிசனைகளை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகின்றோம்,பல மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகள் உள்நாட்டு யுத்தத்தின் அநீதிகளின் பின்னர் இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்த கவலை தரும் நிலவரத்தை வெளியிட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறலிற்கான உள்நாட்டு பொறிமுறை கடந்த சில வருடங்களாக சிதைந்து தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வழமை போல தாமதப்படுத்தும்,மறுக்கும், தப்பிக்க முயலும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த  குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும், அவர்கள் செய்த விடயங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என புதிய வெளிவிவகார செயலாளர் இலங்கையின் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

தனிநபர் ஒருவர் அநீதிகளில் உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான   ஆதாரங்கள் காணப்பட்டால் மக்னிட்ஸ்கி தடைகளை பயன்படுத்துவது  உட்பட பிரிட்டன் அரசாங்கம் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழர்களிற்கு எதிராக இனப்படுகொலைநடவடிக்கைகள் இடம்பெற்றன என்பதை  அங்கீகரிக்கும் முக்கியமான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்,பிரி;த்தானிய அரசாங்கம் கடந்த கால அநீதிகளை அலட்சியம் செய்யக்கூடாது தற்போது இடம்பெறும் மனித உரிமைகளையும் நாங்கள் புறக்கணிக்க முடியாது எனவும்  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/136264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ..உங்கையொரு சிங்கள மினிஸ்டர் இருக்கிறார் என்று கேள்வி...அவரொன்றும் பேசமாட்டரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2022 at 11:10, ஏராளன் said:

பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும்

என்ன மாதிரியான செய்தித்தலைப்பு இது?  இந்த செய்தியாளர் தான் எழுதியதையே வாசிக்க தெரியாத மனிதரா?இனப்படுகொலையை எந்த நாட்டில் அங்கீகரிப்பார்கள்? சி*க்கக்கூட லாயக்கில்லாத மனிதர்கள் எல்லாம் இன்று பத்திரிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.