Jump to content

ஆந்திரப்பிரதேசத்தில் கருவுறாத பெண்ணுக்கு கர்ப்பம் என்று சொல்லி 9 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவமனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரப்பிரதேசத்தில் கருவுறாத பெண்ணுக்கு கர்ப்பம் என்று சொல்லி 9 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவமனை

  • ஷங்கர் வடிசெட்டி
  • பிபிசி தெலுங்கு சேவைக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

வட்டி மகாலட்சுமி

பட மூலாதாரம்,UGC

 

படக்குறிப்பு,

வட்டி மகாலட்சுமி

ஆந்திரப்பிரதேசத்தில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கடந்த 9 மாதங்களாக ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்துவந்த நிலையில், அரசு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை எனத் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் ரம்யா மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. மகப்பேறு சேவையளிக்கும் இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் வந்துசெல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆந்திரப் பிரதேசத்தின் அரசாங்கத்திலும் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், மகாலட்சுமி என்ற பெண்ணும் அவரது உறவினர்களும் ரம்யா மருத்துவமனை தங்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

"ரம்யா மருத்துவமனை ஊழியர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, கடந்த 9 மாதங்களாக எனக்கு பேறுகால மருத்துவம் பார்த்துவந்தனர். ஆனால், அரசு மருத்துவர்கள் நான் கருத்தரிக்கவேயில்லை என்பதை உறுதிசெய்துள்ளனர்" எனக் குற்றம்சாட்டுகிறார் மகாலட்சுமி.

அவரும் அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு பெண்கள் அமைப்பும் ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக மகாலட்சுமியின் கணவர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

 

காக்கிநாடா சம்பவம்

பட மூலாதாரம்,UGC

என்ன நடந்தது?

கிழக்கு கோதாவரியில் உள்ள கோகாவரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, தனது கணவருடன் ஏனாம் கிராமத்தில் வசித்துவருகிறார். மகாலட்சுமி கர்ப்பம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், காக்கிநாடாவின் காந்தி நகரில் உள்ள ரம்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து, அவருக்கு கடந்த 9 மாதங்களாகப் பேறுகால சிகிச்சை அளித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய மகாலட்சுமியின் தாயார் கமலா ராணி, "நாங்கள் ஆரம்பத்திலிருந்தே மருந்துகளை உபயோகித்துவருகிறோம். மகாலட்சுமியைப் பரிசோதித்துவிட்டு அவர் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மாதாந்தோறும் பரிசோதனை செய்து குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். பிரசவத்திற்கான தேதியைக் கூட அவர்கள் வழங்கிவிட்டனர்.

அதனால் பிரசவத்திற்காக மகாலட்சுமி எங்கள் வீட்டிற்கு வந்தார். 9 மாதங்களைக் கடந்த பிறகும் எந்த மாற்றமும் இல்லாததல் சந்தேகத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவர்கள் பிரசவம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்தனர். அவருடைய வயிற்றில் குழந்தை இல்லை என்பதையும் அவர்கள் உறுதிசெய்தனர். மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று ரம்யா மருத்துவமனையில் தொடர்ந்து கூறியது மற்றும் மருந்துகள் பரிந்துரைத்ததன் நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை" எனக் கூறினார்.

"முதலில் தலைமை மருத்துவர் பரிசோதித்து கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு, அவர் வேறு வேலையில் இருப்பதாகக் கூறி மற்ற இரு மருத்துவர்கள்தான் என் மகளுக்கு மருத்துவம் பார்த்துவந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக மருத்துவமனைக்குச் சென்றோம். அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் பரிசோதனை செய்தார்கள். இதுவரை பரிசோதனைகளுக்காகவும் மருந்திற்காகவும் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளோம். ஆனால், முடிவில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என்றும் கமலா ராணி கூறினார்.

 

காக்கிநாடா சம்பவம்

 

காக்கிநாடா சம்பவம்

உண்மை தெரியவந்தது எப்படி?

கடைசியாக மகாலட்சுமி செப்டம்பர் 12ஆம் தேதி ரம்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாகத் தெரிவித்து, செப்டம்பர் 22ஆம் தேதியை பிரசவத் தேதியாக வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, பிரசவத்திற்காக மகாலட்சுமி கடந்த 20ஆம் தேதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இல்லை என்ற உண்மையைத் தெரிவித்துள்ளனர்.

 

Presentational grey line

 

Presentational grey line

"கடந்த 20ஆம் தேதி மகாலட்சுமி மருத்துவமனைக்கு வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை பிரசவத்திற்காக அனுமதிக்கும்படியும் கேட்டார். கடந்த 9 மாதங்களாக அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளின் பட்டியலும் அவரிடம் இருந்தது. ஆனால், அவரது வயிற்றை பார்த்தபோது எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. உடனே ஸ்கேனிங் பரிசோதனைக்கு அவரை அனுப்பினோம். அதன் அறிக்கையில் அவர் கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்ததும் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டோம்" என்கிறார் அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரவந்தி.

தனது வயிறு கொஞ்சம் வீங்கி இருந்ததால் அதை கர்ப்பம் என்று மகாலட்சுமி நினைத்துக்கொண்டதாகவும், தான் கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்ததும் அவர் உடைந்துபோய்விட்டதாகவும் மருத்துவர் ஸ்ரவந்தி கூறினார்.

 

செய்தியாளர் சந்திப்பில் ரம்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரபாவதி

பட மூலாதாரம்,LAKSHMAN

 

படக்குறிப்பு,

செய்தியாளர் சந்திப்பில் ரம்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரபாவதி

என்ன சொல்கிறது ரம்யா மருத்துவமனை நிர்வாகம்?

ரம்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரபாவதி, ஆந்திரப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியின் தலைவராகவும் உள்ளார். அவரது கணவர் பிதானி அன்னவரம் ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மருத்துவர்கள் பிரிவின் மாநில அளவிலான தலைவராக உள்ளார்.

கர்ப்பம் தரிக்காதவரை கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய குற்றச்சாட்டு கடந்த காலங்களிலும் ரம்யா மருத்துவமனை நிர்வாகம் மீது உண்டு. இது தொடர்பாக பெத்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

"ஜனவரி 2022 முதல் மகாலட்சுமி எங்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு கருக் கலைவு ஏற்பட்டது. அவருக்கு நிறைய உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன. அவரது கணவர் குடும்பத்தினரின் அழுத்தம் இருந்ததால், தான் கர்ப்பமாக இருப்பதாக அவரே அனைவரிடம் கூறிக்கொண்டார். ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு வரும்போதும் அவரை ஸ்கேன் பரிசோதனை செய்யக்கூறினோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இப்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார். அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை" என ஊடகங்களிடம் தலைமை மருத்துவர் பிரபாவதி தெரிவித்தார்.

மகப்பேறு தொடர்பான பிரச்சனையோடு வருபவர்களுக்கு பரிந்துரைக்கும் வழக்கமான இரும்புச்சத்து மாத்திரைகளையே மகாலட்சுமிக்கு வழங்கியதாகவும், வேறு எந்த மருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் தலைமை மருத்துவர் கூறியதை மறுக்கும் மகாலட்சுமியின் குடும்பத்தினர் கர்ப்பம் தரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனை அறிக்கையை ஆதரமாகக் காட்டுகின்றனர். மருத்துவனை நிர்வாகம் தங்களது தவறை மறைக்கப் பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

Presentational grey line

 

Presentational grey line

இத்தகைய தவறுகள் ஏன் நடக்கின்றன?

இது தொடர்பாக அனுபவம் மிக்க மருத்துவரிடம் பிபிசி தெலுங்கு சேவை பேசியது. "சில சமயங்களில் ஒருவரது கர்ப்பத்தை உறுதிசெய்வதற்காக செய்யப்படும் பரிசோதனையில் அறிவியல்பூர்வமாக தவறு நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அந்தப் பெண் மருத்துவமனைக்குச் சென்ற எல்லா மாதங்களிலும் செய்த பரிசோதனையில் தவறு நடந்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது" என்கிறார் மூத்த மருத்துவர் எம்.நாயக்.

"மிகவும் அரிதான சந்தர்ப்பத்தில்தான் கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை தவறாகப் போகும். அது மாதிரியான சந்தர்ப்பத்தில் மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை பிரச்சனையை விளக்கிவிடும். குழந்தை வயிற்றில் இல்லாதபோது எப்படி குழந்தை வயிற்றில் இருப்பது மாதிரியான ஸ்கேன் அறிக்கைகளை உருவாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கர்ப்ப அறிகுறிகள் கிராமங்களில் எளிதில் அடையாளம் காணப்படும் நிலையில், ஒன்பதாவது மாதம்வரை கர்ப்பத்தை கண்டறிய முடியவில்லை என்பதும் சந்தேகமளிக்கிறது" என அவர் கூறுகிறார்.

முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கூற முடியும் எனக் கூறிய மருத்துவர் எம்.நாயக்., இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்.

 

மகாலட்சுமி கணவர் அளித்த போலீஸ் புகார்

பட மூலாதாரம்,UGC

 

படக்குறிப்பு,

மகாலட்சுமி கணவர் அளித்த போலீஸ் புகார்

காவல்துறையில் புகார்

இந்த விவகாரம் தொடர்பாக காக்கிநாடா காவல்துறையில் மகாலட்சுமியின் கணவர் வட்டி சத்தியநாராயணா புகாரளித்துள்ளார்.

"என் மனைவி கர்ப்பமாக இல்லை. ஆனால், ரம்யா மருத்துவமனை கொடுத்த மருந்துகளால் வயிறு பெரிதாகியுள்ளது. போலியான அறிக்கைகளை உருவாக்கி, போலி சிகிச்சை அளித்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ரம்யா மருத்துவமனையே பொறுப்பு" என்கிறார் வட்டி சத்தியநாராயணா.

காக்கிநாடா டூ டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிபிசியிடம் தெரிவித்த காவல்துறையினர், முதற்கட்ட தகவல்களைச் சேகரித்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.

https://www.bbc.com/tamil/india-63021838

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.