Jump to content

கொழும்பின் பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு

By Digital Desk 5

24 Sep, 2022 | 09:28 PM
image

(நா.தனுஜா)

கொழும்பின் பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவு பரந்தளவிலான பொது இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி 'ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரிவுகள் தொடர்பில் நாம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்' என்றும் சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பிலுள்ள சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான அறிவிப்பில் கொழும்பில் மக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இடங்கள் உள்ளடங்கலாக கொழும்பு மாவட்டத்திலுள்ள பல இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹல்ஃ;ப் ஸ்டொப் பகுதியிலுள்ள நீதிமன்ற வளாகப்பகுதியும் அவ்வறிவிப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வீதிகளிலோ, மைதானங்களிலோ அல்லது திறந்தவெளிகளிலோ மக்கள் ஒன்றுகூடுவது தடுக்கப்பட்டிருப்பதுடன் மாறாக ஒன்றுகூடுவதெனின் அதற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் அனுமதி பெறப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அவ்வலயங்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்படாத வாகனங்களை நிறுத்திவைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவானது எந்தவொரு காணியையோ, கட்டடத்தையோ, கப்பலையோ அல்லது விமானத்தையோ தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கான அதிகாரத்தையே பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்குகின்றதே தவிர, விரிவான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கவில்லை.

மேற்படி சட்டத்தின் 2 ஆம் பிரிவின்கீழ் உத்தரவொன்றைப் பிறப்பிப்பதன் பிரதான நோக்கம் யாதெனில் இலங்கையின் பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்களையும் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய நிறுவனங்கள், கட்டமைப்புக்களின் தகவல்களையும் பாதுகாப்பதேயாகும். எனவே 2 ஆம் பிரிவின்கீழ் பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவையும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தமுடியாது.

ஆனால் தற்போது ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், அவ்வுத்தரவின்கீழ் இழைக்கப்படும் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்படும் எந்தவொரு நபருக்கும் மேல்நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே பிணை வழங்கப்படமுடியும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது. உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவில் அத்தகைய சரத்துக்கள் எவையும் உள்ளடங்கவில்லை என்பதுடன் மாறாக அச்சட்டத்தின் 22 ஆம் பிரிவு சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிவானுக்கு அதிகாரமளித்துள்ளது. எனவே ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரிவுகள் தொடர்பில் நாம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

https://www.virakesari.lk/article/136359

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

‘உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானது!’

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கான ரகசியத் தகவலைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் எல்லைக்குள் விதிமுறைகள் இல்லை என்பதை 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இந்த உத்தரவுகள், ஒழுங்குமுறைகளின் பொருள் மற்றும் அவற்றின் நோக்கம் தெளிவாக சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அடிப்படை உரிமைகளை அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1301110

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு உயர் பாதுகாப்பு வலய திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானம்

By RAJEEBAN

27 SEP, 2022 | 04:54 PM
image

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

301918390_1226981494823627_3783806573691

உயர்பாதுகாப்பு வலயங்கள் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொருளாதார ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

High-security-zones-declared-in-Colombo-

இதேவேளை கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாற்று பாதுகாப்பு திட்டமொன்று முன்வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய திட்டம் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

https://www.virakesari.lk/article/136546

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.