Jump to content

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்துள்ளமை மக்களை ஏமாற்றும் செயற்பாடு – சாணக்கியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

24 Sep, 2022 | 09:27 PM
image

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ராஜித்த சேனாரத்ன மற்றும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 

https://www.virakesari.lk/article/136360

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சாணக்கியன் யாரை ஏமாற்றுகிறார் என வெகு விரைவில் வெளித் தெரியவரப் போகிறத..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதை நிர்ணயிப்பது எதிர்காலம், இவர் எதை வைத்து இப்படிச் சொல்கிறார்? இவர் என்ன தீர்க்கதரிசியா?  இதே ரணிலோட த. தே. கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை, அனுபவத்தை வைத்தா? சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இவர் முன்னாள் முதல்வர்  விக்கினேஸ்வரனைப்பற்றி இப்படி அறிக்கை விடுவது இது முதற்தடவையல்ல, தங்களது அரசியல் வியாபாரத்திற்கு அவர் ஒரு முட்டுக்கட்டை என பயப்படுகிறார்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

19 hours ago, ரஞ்சித் said:

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

இவரின் செயற்பாடு பற்றிய அவதானம் மக்களுக்கு  தேவை. அரசால் தெரியப்பட்ட  8 பேரில் இவர் அடங்கவில்லை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.

பின் கதவால் வந்தவர்கள் தான் இப்போ ஆட்சி அதிகாரம் பண்ணுகிறார்கள்.

எந்த ஒரு கட்சியிலும் நீண்டகால தொண்டனாக இருந்து வந்தவனுக்கே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறார்கள்.

சுமந்திரனும் சாணக்கியனும் மட்டும் கட்சிக்காக உழைக்காமல் எப்படி தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்கள்?

ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?

அப்படிப்பட்டவர்களை சம்பந்தன் ஐயா கேள்வி கேக்காமல் இணைத்துக்கொள்வார் அதிகாரமும் கொடுப்பார் முதன்மைப்படுத்துவார் கட்சியில்  இப்படி வந்து தம்மை நிலைநாட்டிக்கொண்டு வெளியேறியோர் பலர்.

18 hours ago, ரஞ்சித் said:

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

தமிழரை அழிக்கக்கூடிய கோடரிக்காம்புகளை சிங்களம் தேடிக்கண்டு பிடித்து களமிறக்கிவிடும் எங்கள்குள்ளேயே, அதன் கைக்கூலி சம்பந்தர்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பின் கதவால் வந்தவர்கள் தான் இப்போ ஆட்சி அதிகாரம் பண்ணுகிறார்கள்.

எந்த ஒரு கட்சியிலும் நீண்டகால தொண்டனாக இருந்து வந்தவனுக்கே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறார்கள்.

சுமந்திரனும் சாணக்கியனும் மட்டும் கட்சிக்காக உழைக்காமல் எப்படி தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்கள்?

ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?

மகிந்தவின் வாலுகள் இவர்கள் .

18 hours ago, ரஞ்சித் said:

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

நன்றி தகவல்களுக்கு ரஞ்சித் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2022 at 01:29, satan said:

அதை நிர்ணயிப்பது எதிர்காலம், இவர் எதை வைத்து இப்படிச் சொல்கிறார்? இவர் என்ன தீர்க்கதரிசியா?  இதே ரணிலோட த. தே. கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை, அனுபவத்தை வைத்தா? சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இவர் முன்னாள் முதல்வர்  விக்கினேஸ்வரனைப்பற்றி இப்படி அறிக்கை விடுவது இது முதற்தடவையல்ல, தங்களது அரசியல் வியாபாரத்திற்கு அவர் ஒரு முட்டுக்கட்டை என பயப்படுகிறார்!

1௦௦ வித உண்மை .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.