Jump to content

தமிழகத்தில்... தேச பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தல் – உள்துறை அமைச்சருக்கு... அண்ணாமலை கடிதம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – உள்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

தமிழகத்தில்... தேச பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தல் – உள்துறை அமைச்சருக்கு... அண்ணாமலை கடிதம்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, கோவை, பொள்ளாட்சி உள்ளிட்ட பல இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் மீது தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் தவறான நிலைப்பாடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1301103

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.