Jump to content

கோழிகளின்.... இறக்குமதி,  குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

கோழிகளின்.... இறக்குமதி,  குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு.

கோழிப் பண்ணைக்கு தேவையான, கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1301021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேய்களா........கோழி வளர்க்கவும் பஞ்சியா????? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அடேய்களா........கோழி வளர்க்கவும் பஞ்சியா????? 🤣

கோழியை... இறக்குமதி செய்து, முட்டை போட வைக்கிறார்கள்.
உள்நாட்டில்.. நவீன முறையில் முட்டை  பொரிக்க வைக்கவும், முடியாமல் இருக்கு.
இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அடேய்களா........கோழி வளர்க்கவும் பஞ்சியா????? 🤣

 

19 minutes ago, தமிழ் சிறி said:

கோழியை... இறக்குமதி செய்து, முட்டை போட வைக்கிறார்கள்.
உள்நாட்டில்.. நவீன முறையில் முட்டை  பொரிக்க வைக்கவும், முடியாமல் இருக்கு.
இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

இறக்குமதியாக செய்து தள்ளியதாலேயே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகளும் வந்துள்ளது.

இன்னுமா இவர்கள் திருந்தவில்லை?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

கோழியை... இறக்குமதி செய்து, முட்டை போட வைக்கிறார்கள்.
உள்நாட்டில்.. நவீன முறையில் முட்டை  பொரிக்க வைக்கவும், முடியாமல் இருக்கு.
இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இறக்குமதியாக செய்து தள்ளியதாலேயே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகளும் வந்துள்ளது.

இன்னுமா இவர்கள் திருந்தவில்லை?

அங்கையிருந்து வாற செய்தி முழுக்க இறக்குமதி இல்லாட்டி கடன் வாங்குற செய்தியாத்தான் இருக்கு.....மற்றது புத்த விகாரை கட்டுறது தமிழ் சனத்தின்ர காணி பிடிக்கிறதும்.

உழைச்சு தின்னாத மடச்சாம்பிறாணியள் 😂

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உழைச்சு தின்னாத மடச்சாம்பிறாணியள் 😂

இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛

மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣

மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திலும் கமிசனை எதிர்பார்த்ததால்.. இறக்குமதியை தெரிவு செய்து இருந்த டொலரை கண்ணாபின்னாண்ணு தூக்கி வீசினதால்.. வந்த வினை.

எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தி இன்றி வெறுமனவே இறக்குமதியால் முன்னேறினது கிடையாது. சிங்கப்பூரில் கூட அந்த நிலை இல்லை. 

சிங்களம்.. இனவாதம் பேசிப் பேசி.. போர் செய்து நாட்டை நாசமாக்கினது தான் மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛

மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣

மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

எழுதத் தொடங்கினால் அழுதிடுவன் அண்ணை வேண்டாம் 😭

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

நான் ஒரு வரியில் புதுக்கதை சொல்கிறேன் கேளுங்கள்.😄

சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து ஒரு உறவு தொலைபேசி எடுத்தது. தான் ஒரு கோயிலுக்கு நேர்த்தி வைச்சு தூக்குகாவடி எடுத்து அன்னதானமும் குடுக்கப்போறனாம். ஒரு ஆயிரம் ஈரோ  அனுப்பட்டாம். 🙃

கவனிக்க⇉ கேட்டது ரூபாயிலை இல்லை ஈரோவில 😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நான் ஒரு வரியில் புதுக்கதை சொல்கிறேன் கேளுங்கள்.😄

சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து ஒரு உறவு தொலைபேசி எடுத்தது. தான் ஒரு கோயிலுக்கு நேர்த்தி வைச்சு தூக்குகாவடி எடுத்து அன்னதானமும் குடுக்கப்போறனாம். ஒரு ஆயிரம் ஈரோ  அனுப்பட்டாம். 🙃

கவனிக்க⇉ கேட்டது ரூபாயிலை இல்லை ஈரோவில 😎

அண்ணை அனுப்பி விட்டீங்களா ?. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

எழுதத் தொடங்கினால் அழுதிடுவன் அண்ணை வேண்டாம் 😭

நாங்கள் இருந்த இடத்திலேயே நிற்கின்றோம். அவர்கள் முன்னேறிவிட்டார்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

அண்ணை அனுப்பி விட்டீங்களா ?. 🤣

ஊரில் ஒரு வசனம்  சொல்வார்கள். கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுப்பகை குத்துப்பகை வருமென.......:(

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று  

கந்தையா பச்சைத் தண்ணி என்று  யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

கந்தையா பச்சைத் தண்ணி என்று  யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!

அந்தச் சம்பவம் நடந்த பிறகுதான்…
கந்தையர் பச்சைத் தண்ணியாய் மாறினவர். 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசில பச்சைத்தண்ணியாய் இருந்த மனிதரை இப்படி காசில பச்சைத்தண்ணியாய் மாத்திப்போட்டாங்களே படுபாவியள் யாரோ?  நல்லா வீட்டில வாங்கிக்கட்டியிருப்பார் கந்தையர்!

6 hours ago, Kandiah57 said:

அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்

 

6 hours ago, Kandiah57 said:

அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்

இதுவும் ஒருவகைல ஏமாற்றி பணம் பறிப்பு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பலர் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். நான் அறிந்த விடயம் தட்டுப்பாடு காரணமாக தவிடு/கோழி தீவனம் வாங்கி போடுவது அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் கோழிகள் முட்டை இடுவது இல்லை/குறைவு என சொன்னார்கள். மற்றைய பிரச்சனை இவற்றை பீடிக்கும் நோய்கள் காரணமாக இறப்பு/இழப்பு ஏற்படுவது. 

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்கள் முன்பு வரை ஒரு நாள் கோழிக் குஞ்சுகளும் அடை வைக்ககூடிய முடடைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது.இறச்சிக் கோழிகளின் தாய் தகப்பன் கோழிகள் டமட்டும் தான் இறக்குமதி செய்யப்பட்டது.மற்றது கோழித்தீவனம் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடும் ஒரு காரனம் கோழி சம்பந்தமான பொருட்களின் விலை எற்றத்துக்கு காரனம்.கால் நடைத் தீவனத்தின் முக்கிய முலப்பொருள் சோழம்.அதை உற்ப்பத்தி செய்ய வேண்டும்.இப்பதான் அரசு நித்திரையால் எழும்பியிருக்கு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:


இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

அது போன மாசம் 
இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் 
(வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்) 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

அது போன மாசம் 
இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் 
(வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்) 

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனக்கு என்னமோ நாம் தான் பாவம் பாவம் என்று எண்ணி 
அவர்களை சோம்பேறி ஆக்குகிறோமோ என்று உறுத்துதலாக இருக்கு 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

அது போன மாசம் 
இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் 
(வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்) 

ஆரோ சொல்லி வைச்சு எழும்பேலாத அளவுக்கு மரண அடி அடிச்சிருக்கிறாங்கள். :cool:

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஆரோ சொல்லி வைச்சு எழும்பேலாத அளவுக்கு மரண அடி அடிச்சிருக்கிறாங்கள். :cool:

அவர் சொல்லும் அளவுக்குக்காவது தப்பி இருக்கிறார் 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும்  தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை...  மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...

  • Like 2
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும்  தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை...  மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...

அண்மையில் ஒருவர் (அவரது கணவர் புலத்தில் சொந்த தொழில் வைத்திருப்பவர்)  தாயகத்தில் உள்ள ஒருவருடன் தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது உங்கள் கணவர் எங்கே என்று தாயகத்தில் உள்ளவர் கேட்டதற்கு அவர் கடைக்கு போயிருக்கிறார் என்று இவர் சொல்ல தாயகத்தில் உள்ளவர் உடனே கூட்டி கழுவத்தானே போனவர் என்றாராம்.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

அண்மையில் ஒருவர் (அவரது கணவர் புலத்தில் சொந்த தொழில் வைத்திருப்பவர்)  தாயகத்தில் உள்ள ஒருவருடன் தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது உங்கள் கணவர் எங்கே என்று தாயகத்தில் உள்ளவர் கேட்டதற்கு அவர் கடைக்கு போயிருக்கிறார் என்று இவர் சொல்ல தாயகத்தில் உள்ளவர் உடனே கூட்டி கழுவத்தானே போனவர் என்றாராம்.😭

கற்காலத்தில் வாழுகினம்...அடிமையாய் வாழ்ந்தாலும்...கல்வியில் கருத்துடையோர் எமது இனம்...இதை எமது புலம்பெயர் சமூகம் .நிறுவிக்காட்டியிருக்கிறது..இதை உணராத கிணத்துத் தளைகள்தான் ..இப்பவும் சத்தமிடுகின்றன...

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.