Jump to content

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு


Recommended Posts

1 hour ago, satan said:

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

இளைஞர்களின்  வேலை இல்லா தன்மையை டக்ளஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

இளைஞர்களின்  வேலை இல்லா தன்மையை டக்ளஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

அதை எப்படி சிங்களம் பயன்படுத்துகிறதோ, அதையே அது நம் இனத்துக்கு செய்கிறது. அதைவிட மேலாக செய்வதற்க்கு அதனிடம் என்ன தகுதி, திறமை இருக்கிறது? இனத்தை விற்று பிழைப்பு, நமக்குள்ளேயே இருந்து நம்மை வேரோடு அழிக்கும் இந்த புல்லுருவியின் செயற்பாடுகளை சர்வதேசம் அறியச்செய்ய வேண்டும், அரசியற் தீர்வை சிங்களம் நமக்கு வைக்காமல் இழுத்தடிப்பதற்கும், ஆக்கிரமிப்பதற்கும்,  ஏமாற்றுவதற்க்கும் இந்த கோடரிக்காம்புகளை பயன்படுத்துவதையும், இவர்களை வைத்து அப்பாவிகளை அச்சுறுத்துவதையும் வெளிப்படுத்தவேண்டும். இப்படியானவர்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சந்திப்புகளை தவிர்க்கும்படி வலியுறுத்தவேண்டும். மக்களின் ஆணை பெற்றவர்கள் தூங்கினால், இப்படியான களைகள் தோன்றி வேரூன்றி அழிப்பது தவிர்க்கப்படமாட்டாது இது வெளிப்படையாக செய்யுது, மற்றவர்கள் தெரியாததுபோல் செய்து இப்படிப்பட்டதுகளுக்கு வழிசெய்து கொடுக்குதுகள். இதுகளை மனிதராக மதிக்கவே மனம் வரவில்லை. தாம் நோகாமல், மக்களை ஏமாற்றி, விற்று பிழைப்பதற்கு வெள்ளை வேட்டியும், படிப்பும் உதவுகிறது சிலதுகளுக்கு, அது இல்லாததுகள் வாயையும், கற்ற கலையையும் (கொலை கொள்ளை)  வைத்து ஏமாற்றுவதும் தற்போதைய தந்திரமான  வேலை.  கஷ்ரப்பட்டவனெல்லாம் சிறையில்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.facebook.com/100002537511716/posts/pfbid02vPTSog1v8uHY3hJuZEmGfPoyomacKryEkRnHYH3VGL7q3TLYPVbJDGMUg6XkHqzBl/?app=fbl

ஆர் ஆக்கள் என்டு பாருங்கோ

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்க்க திலீபன் அண்ணா இல்லை என்பது மட்டுமே மகிழ்வான விடயம்.

மக்கள் பிரச்சனைக்கு அகிம்சைவழி தீர்வுகாண எந்தவித முன்னேடுப்புகளும் செய்யாத அரசியல்கட்சிகள்/தலைவர்கள், தங்களை பிரபலப்படுத்த அடிபடுவது தமிழ் சமுதாயத்தின் தற்போதைய வெற்றிடத்தை அப்பட்டமாக காட்டிநிற்கிறது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் - லெப்.கேணல் திலீபன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2022 at 11:22, Kapithan said:

திலீபன் யாருக்கெதிராக உண்ணாவிரதமிருந்தார்?

அவர்கள்தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். 

எத்தனை யுகங்கள் சென்றாலும், திலீபனும் பூபதியும் இந்திய பயங்கரவாதிகளுக்குச் சிம்ம சொற்பனம்தான்.

🙏

உண்மை,

அதனால்தான் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்குமுன்பே தியாக தீபத்தின் நினைவிடத்தை இடிப்பித்தார்கள்.ஆனால் அதன்பின் ஆண்டுதோறும் நினைவுகூற அதிகரித்துவரும் மக்கள்தொகை இந்தியனுக்கு கடுப்பை ஏற்றக் கைக்கூலிகளை இறக்கிவிட்டுக் குழப்புகிறார்கள்.  

On 28/9/2022 at 11:52, nunavilan said:

இந்திய அரசு எப்பொழுதும் எமக்கு கழுத்து அறுத்துக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு மிண்டு கொடுப்பவர்களை தமிழ் மக்கள் இனம் கண்டு  ஒதுக்க வேண்டும்.


தமிழினம் செய்யுமா?

On 28/9/2022 at 12:02, புலவர் said:

ibc,dan,thinakural,veerakesarari,lankasri உடபட உனைத்து ஊடகங்களும் தமிழ்த்தேசி முன்னனி மீது கூசாமல் பழியைப் போட்டன. அனைத்தும் இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டங்கள். தமிழ்த்தேசிய மக்கள முன்னனி இந்தியாவுடன் அனுசரித்துப் டபோகாத காரணத்தாலேயே அதன் மீது சேறு பூசும் வேலைகளில் இந்தியாவின் அனுசரணையோடு இந்தத்தரகர்கள் வேலை செய்கிறார்கள்.

இவர்களைத் தமிழ் ஊடகமென்று அழைப்பதே தவறு. சிங்களத்துக்கும் இந்தியத்துக்கும் ஏவல் செய்யும் தமிழ்மொழி ஊடகம். கிட்டத்தட்ட பிபிசி தமிழ் மாதிரி

On 28/9/2022 at 12:57, satan said:

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையே இதுவாகும் என்பதே 100வீத உண்மை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, nochchi said:

தமிழினம் செய்யுமா?

இருப்பு கேள்விக்குறி ஆகிக்கொண்டு வரும் போது  தமிழ் மக்களுக்கு உள்ள அடுத்த தெரிவு சிறந்த தலையை  தெரிவு செய்ய வேண்டும்/ உருவாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஒரு சில இனங்களுக்கு கையில் பிரம்புடன் ஒரு தலைவன் தேவை. தமிழினத்திற்கும் அப்படியான ஒரு தலைவன் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் பங்கெடுக்காத ஓநாய்கள், காட்டிக்கொடுத்து கூத்தாடியதுகள் எல்லாம் பங்கு கேட்டு கொழுத்தாடுதுகள். இயக்கமே இல்லை, இருந்திருந்தால் இவர்கள் இருக்குமிடம் வேறு, இதில நானும் இயக்கம்! கேக்கவே சிரிப்பாய் இருக்கு. இதுகள் எல்லாம் தமது உலகத்தில் இருந்து இன்னும் விழிக்கவில்லை, கஷ்ரப்பட்டு உழைக்க கள்ளச் சரீரம் விடாது, அடுத்த உழைப்புக்கு திறமையில்லை, உள்ளதெல்லாம் வெருட்டி, உருட்டி, தட்டி, அடுத்தவர் பெயரை கெடுத்து அல்லது அடுத்தவர் உழைப்பில் வாழ்வது. இது சுகமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

 

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

 

இணைப்புக்கு நன்றி நுணா.

சுகாஸ் பதறாமல் சிதறாமல் தெளிவாக பதிலளிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 01:46, புலவர் said:

 

அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது?  அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2022 at 00:08, nunavilan said:

 

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

 

 

On 30/9/2022 at 17:46, புலவர் said:

 

 

2 hours ago, satan said:

அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது?  அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.

எனக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் மேல்...
கொஞ்ச நல்ல அபிப்பிராயம் இருந்தது.
இதோடை... எல்லாத்தையும் பாழாக்கி விட்டார்.
ஒருவன் சேருகின்ற  கூட்டத்தை வைத்து, அவனை காலம் காட்டிக் கொடுத்து விடும்.

நல்ல காலத்துக்கு... இந்தக் காணொளிகள், சில ஒளிப்பதிவுகள் கிடைத்தது.
இல்லா விட்டால்,  முழுப் பழியும் கஜேந்திரகுமார் கட்சி மேல் விழுந்திருக்கும். 

வேலன் சுவாமியின் முகத்திரையும்.. ஆரம்பத்திலேயே.. கிழிந்தது நல்லதாய் போச்சு.
இதற்காகத் தன்னும்... திலீபன் அண்ணாவுக்கு நன்றி.    🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் கூட நானா நீயான்னு சண்டை பிடிக்கிற ஒரு கீழ்த்தரமான இனம் தாம் நம் தமிழினம். இது காக்கா குருவியில் கூட இல்லாத மிகக் கீழ்த்தரம். அதிலும் ஒட்டுக்குழுக்களும் ஒற்றர்களும் எதிரிகளும் நிறைந்த மண்ணில் திலீபனை நினைவுகூற விடுவினமோ..

காந்திக்கு பூமாலை போடும் பொழுது ஒரு சண்டையும் இல்லை. ஆனால் திலீபன் நினைவிடத்தில் சண்டை. ஆக இந்தச் சண்டைகளின் பின்னால் யார் இருக்கினம்.. அவைட தேவை என்ன என்பதை இன்னும் புரியாவிட்டால்.. அவர்கள் சராசரி தமிழர்களே அல்ல.

இதையும் தாண்டி திலீபன் நினைவுகூறப்பட்டான் என்பதே இப்போதைக்குப் போதுமென்றாகிறது. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபத்தின் நினைவுகளின் தொகுப்பை இந்தத் திரிக்கப் பொருத்தமாக இருப்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.