Jump to content

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு


Recommended Posts

1 hour ago, satan said:

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

இளைஞர்களின்  வேலை இல்லா தன்மையை டக்ளஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

இளைஞர்களின்  வேலை இல்லா தன்மையை டக்ளஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

அதை எப்படி சிங்களம் பயன்படுத்துகிறதோ, அதையே அது நம் இனத்துக்கு செய்கிறது. அதைவிட மேலாக செய்வதற்க்கு அதனிடம் என்ன தகுதி, திறமை இருக்கிறது? இனத்தை விற்று பிழைப்பு, நமக்குள்ளேயே இருந்து நம்மை வேரோடு அழிக்கும் இந்த புல்லுருவியின் செயற்பாடுகளை சர்வதேசம் அறியச்செய்ய வேண்டும், அரசியற் தீர்வை சிங்களம் நமக்கு வைக்காமல் இழுத்தடிப்பதற்கும், ஆக்கிரமிப்பதற்கும்,  ஏமாற்றுவதற்க்கும் இந்த கோடரிக்காம்புகளை பயன்படுத்துவதையும், இவர்களை வைத்து அப்பாவிகளை அச்சுறுத்துவதையும் வெளிப்படுத்தவேண்டும். இப்படியானவர்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சந்திப்புகளை தவிர்க்கும்படி வலியுறுத்தவேண்டும். மக்களின் ஆணை பெற்றவர்கள் தூங்கினால், இப்படியான களைகள் தோன்றி வேரூன்றி அழிப்பது தவிர்க்கப்படமாட்டாது இது வெளிப்படையாக செய்யுது, மற்றவர்கள் தெரியாததுபோல் செய்து இப்படிப்பட்டதுகளுக்கு வழிசெய்து கொடுக்குதுகள். இதுகளை மனிதராக மதிக்கவே மனம் வரவில்லை. தாம் நோகாமல், மக்களை ஏமாற்றி, விற்று பிழைப்பதற்கு வெள்ளை வேட்டியும், படிப்பும் உதவுகிறது சிலதுகளுக்கு, அது இல்லாததுகள் வாயையும், கற்ற கலையையும் (கொலை கொள்ளை)  வைத்து ஏமாற்றுவதும் தற்போதைய தந்திரமான  வேலை.  கஷ்ரப்பட்டவனெல்லாம் சிறையில்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.facebook.com/100002537511716/posts/pfbid02vPTSog1v8uHY3hJuZEmGfPoyomacKryEkRnHYH3VGL7q3TLYPVbJDGMUg6XkHqzBl/?app=fbl

ஆர் ஆக்கள் என்டு பாருங்கோ

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்க்க திலீபன் அண்ணா இல்லை என்பது மட்டுமே மகிழ்வான விடயம்.

மக்கள் பிரச்சனைக்கு அகிம்சைவழி தீர்வுகாண எந்தவித முன்னேடுப்புகளும் செய்யாத அரசியல்கட்சிகள்/தலைவர்கள், தங்களை பிரபலப்படுத்த அடிபடுவது தமிழ் சமுதாயத்தின் தற்போதைய வெற்றிடத்தை அப்பட்டமாக காட்டிநிற்கிறது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் - லெப்.கேணல் திலீபன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2022 at 11:22, Kapithan said:

திலீபன் யாருக்கெதிராக உண்ணாவிரதமிருந்தார்?

அவர்கள்தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். 

எத்தனை யுகங்கள் சென்றாலும், திலீபனும் பூபதியும் இந்திய பயங்கரவாதிகளுக்குச் சிம்ம சொற்பனம்தான்.

🙏

உண்மை,

அதனால்தான் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்குமுன்பே தியாக தீபத்தின் நினைவிடத்தை இடிப்பித்தார்கள்.ஆனால் அதன்பின் ஆண்டுதோறும் நினைவுகூற அதிகரித்துவரும் மக்கள்தொகை இந்தியனுக்கு கடுப்பை ஏற்றக் கைக்கூலிகளை இறக்கிவிட்டுக் குழப்புகிறார்கள்.  

On 28/9/2022 at 11:52, nunavilan said:

இந்திய அரசு எப்பொழுதும் எமக்கு கழுத்து அறுத்துக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு மிண்டு கொடுப்பவர்களை தமிழ் மக்கள் இனம் கண்டு  ஒதுக்க வேண்டும்.


தமிழினம் செய்யுமா?

On 28/9/2022 at 12:02, புலவர் said:

ibc,dan,thinakural,veerakesarari,lankasri உடபட உனைத்து ஊடகங்களும் தமிழ்த்தேசி முன்னனி மீது கூசாமல் பழியைப் போட்டன. அனைத்தும் இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டங்கள். தமிழ்த்தேசிய மக்கள முன்னனி இந்தியாவுடன் அனுசரித்துப் டபோகாத காரணத்தாலேயே அதன் மீது சேறு பூசும் வேலைகளில் இந்தியாவின் அனுசரணையோடு இந்தத்தரகர்கள் வேலை செய்கிறார்கள்.

இவர்களைத் தமிழ் ஊடகமென்று அழைப்பதே தவறு. சிங்களத்துக்கும் இந்தியத்துக்கும் ஏவல் செய்யும் தமிழ்மொழி ஊடகம். கிட்டத்தட்ட பிபிசி தமிழ் மாதிரி

On 28/9/2022 at 12:57, satan said:

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையே இதுவாகும் என்பதே 100வீத உண்மை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, nochchi said:

தமிழினம் செய்யுமா?

இருப்பு கேள்விக்குறி ஆகிக்கொண்டு வரும் போது  தமிழ் மக்களுக்கு உள்ள அடுத்த தெரிவு சிறந்த தலையை  தெரிவு செய்ய வேண்டும்/ உருவாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஒரு சில இனங்களுக்கு கையில் பிரம்புடன் ஒரு தலைவன் தேவை. தமிழினத்திற்கும் அப்படியான ஒரு தலைவன் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் பங்கெடுக்காத ஓநாய்கள், காட்டிக்கொடுத்து கூத்தாடியதுகள் எல்லாம் பங்கு கேட்டு கொழுத்தாடுதுகள். இயக்கமே இல்லை, இருந்திருந்தால் இவர்கள் இருக்குமிடம் வேறு, இதில நானும் இயக்கம்! கேக்கவே சிரிப்பாய் இருக்கு. இதுகள் எல்லாம் தமது உலகத்தில் இருந்து இன்னும் விழிக்கவில்லை, கஷ்ரப்பட்டு உழைக்க கள்ளச் சரீரம் விடாது, அடுத்த உழைப்புக்கு திறமையில்லை, உள்ளதெல்லாம் வெருட்டி, உருட்டி, தட்டி, அடுத்தவர் பெயரை கெடுத்து அல்லது அடுத்தவர் உழைப்பில் வாழ்வது. இது சுகமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

 

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

 

இணைப்புக்கு நன்றி நுணா.

சுகாஸ் பதறாமல் சிதறாமல் தெளிவாக பதிலளிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 01:46, புலவர் said:

 

அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது?  அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2022 at 00:08, nunavilan said:

 

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

 

 

On 30/9/2022 at 17:46, புலவர் said:

 

 

2 hours ago, satan said:

அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது?  அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.

எனக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் மேல்...
கொஞ்ச நல்ல அபிப்பிராயம் இருந்தது.
இதோடை... எல்லாத்தையும் பாழாக்கி விட்டார்.
ஒருவன் சேருகின்ற  கூட்டத்தை வைத்து, அவனை காலம் காட்டிக் கொடுத்து விடும்.

நல்ல காலத்துக்கு... இந்தக் காணொளிகள், சில ஒளிப்பதிவுகள் கிடைத்தது.
இல்லா விட்டால்,  முழுப் பழியும் கஜேந்திரகுமார் கட்சி மேல் விழுந்திருக்கும். 

வேலன் சுவாமியின் முகத்திரையும்.. ஆரம்பத்திலேயே.. கிழிந்தது நல்லதாய் போச்சு.
இதற்காகத் தன்னும்... திலீபன் அண்ணாவுக்கு நன்றி.    🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் கூட நானா நீயான்னு சண்டை பிடிக்கிற ஒரு கீழ்த்தரமான இனம் தாம் நம் தமிழினம். இது காக்கா குருவியில் கூட இல்லாத மிகக் கீழ்த்தரம். அதிலும் ஒட்டுக்குழுக்களும் ஒற்றர்களும் எதிரிகளும் நிறைந்த மண்ணில் திலீபனை நினைவுகூற விடுவினமோ..

காந்திக்கு பூமாலை போடும் பொழுது ஒரு சண்டையும் இல்லை. ஆனால் திலீபன் நினைவிடத்தில் சண்டை. ஆக இந்தச் சண்டைகளின் பின்னால் யார் இருக்கினம்.. அவைட தேவை என்ன என்பதை இன்னும் புரியாவிட்டால்.. அவர்கள் சராசரி தமிழர்களே அல்ல.

இதையும் தாண்டி திலீபன் நினைவுகூறப்பட்டான் என்பதே இப்போதைக்குப் போதுமென்றாகிறது. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபத்தின் நினைவுகளின் தொகுப்பை இந்தத் திரிக்கப் பொருத்தமாக இருப்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.