Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொடர்வதற்கு நன்றி @ரஞ்சித். இந்தத் தொடரை ஆங்கிலத்தில் சங்கம் இணையத்தில் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருந்தேன். தமிழில் கட்டாயம் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் வரலாறு.....
 

Remembering 1956 – Sri Lanka's first Anti-Tamil pogrom | Tamil Guardian

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்களை அவமானப்படுத்தவும் சிங்களக் காடையர்களை அரசு இறக்கியிருந்தது குறித்து பிரபாகரன் மிகுந்த விசனம் கொண்டிருந்தார். அதேவேளை இந்த திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது, வெறுமனே அகிம்சை ரீதியில் போராடலாம் என்று சொல்லிவந்த தமிழ்த் தலைமைகள் மீதும் அவருக்கு பாரிய அதிருப்தி ஏற்பட்டு வந்தது. ஆனால், அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வழி அவருக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அவர் அப்போது சிறுவனாக இருந்தது மட்டுமல்லாமல் அவரது தந்தையார் மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்தார். 

தனது சிறுவர்பராய வாழ்வு குறித்து இந்து ராமிடம் பிரபாகரன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்,

 

"சிறுபராயம் முதலே மிகவும் கண்டிப்பான முறையிலேயே நான் வளர்க்கப்பட்டேன். வெளியாருடன் அதிகம் நான் பழகுவதற்கு வீட்டில் அனுமதி இருக்கவில்லை. பெண்பிள்ளைகளைக் கண்டால் இயல்பாகவே நான் கூச்சப்படுவேன். நேர்மையினையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதென்பது வீட்டில் கட்டாயமாக இருந்தது. எனது தந்தையார் எமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தனது பிள்ளைகள் ஒழுக்கத்தில் சிறந்து வளரவேண்டும் என்பதற்காக வெற்றிலை போடுவது கூடத் தவறென்று அவர் கருதிவந்தார். அவரிடமிருந்தே நான் பல நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன். அவர் அரச உத்தியோகத்தில் இருந்தார். மாவட்ட காணி அதிகாரியாக பணிபுரிந்த அவர் நேர்மையாகத் தனது கடமையைச் செய்துவந்தார். அவர் வீதியால் நடந்துசெல்லும்போது வீதியில் முளைத்திருக்கும் சிறு புற்கூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார் என்று அயலவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவரது மகனான நான் இப்படி இருக்கிறேன்......எனது செயல்களை விமர்சிக்கும்போது கூட, இப்படியொரு தகப்பனுக்கு இப்படியொரு மகனா என்று வியந்து அவர் பேசியதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர் கண்டிப்பானவர்தான், இருந்தாலும் மிகவும் மென்மையான உள்ளத்தையும், மற்றையவர்களின் கருத்துக்களை செவிமடுத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருந்தார். என்னை ஒழுக்கத்தில் கண்டிப்புடன் வளர்த்தபோதும்கூட, ஒருகட்டத்தில் என்னைத் தனது நண்பனாகவே நடத்திவந்தார். எனக்கு அவ்வப்போது அறிவுரைகளைக் கூறிவந்தாலும், என்னுடன் பல விடயங்கள் குறித்து அலசுவது அவருக்குப் பிடித்திருந்தது" என்று கூறினார்.

 அவரது தாயாரும், மூத்த சகோதரிகளும் அவரைச் செல்லமாக "தம்பி" என்றே அழைத்து வந்தனர். 1994 இல் வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தனது சிறுபராய வாழ்வு குறித்து பசுமையான நினைவுகளை மீட்டிருந்தார் பிரபாகரன்.

 "வீட்டில் நான் அனைவரினதும் செல்லப்பிள்ளையாக, விரும்பப்பட்டவனாக இருந்தேன். எனக்காக பல கட்டுப்பாடுகள் வீட்டில் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. அயலில் உள்ளவர்களே எனக்கு விளையாட்டுத் துணையாகிப் போனார்கள். எனது வீட்டிற்குள்ளும், எனது அயலவர்களின் வீட்டிற்குள்ளும் எனது உலகம் சுருங்கிப் போனது. தனிமையான அந்தச் சிறிய வீட்டிற்குள்ளேயே எனது சிறுபராயம் கழிந்தது" என்று அவர் கூறினார்.

 

பிரபாகரனின் வீட்டு அயலவர்கள் அவரது சிறுபராயம் தொடர்பாக மிகவும் பாசத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அவர்களுக்காக அவர் ஓடியோடி வேலைகள் செய்து கொடுத்திருக்கிறார். தனது பேரனாரின் நினைவுதின அன்னதானச் சடங்குகளின்பொழுது பிரபாகரன் தானே முன்னின்று பல வேலைகளைச் செய்வது வழமை. அன்னதானத்திற்குச் சமூகமளிக்கமுடியாமற்போன அயலவர்களுக்கு பிரபாகரனே உணவுப் பொட்டலங்களிக் கொண்டுபோய் விநியோகித்துவருவார். அதேபோல வீட்டில் நடக்கும் விசேட நிகழ்வுகளின்போது தாயார் பார்வதியம்மாள் சமைக்கும் சுவையான தின்பண்டங்களை மகிழ்வுடன் அயலவர்களுக்குக் பகிர்ந்துகொடுப்பது பிரபாகரனுக்கு அலாதி பிரியம். கோயிலில் நடக்கும் பூஜைகளின்பின்னர் தனது உறவுகளுக்கும், அயலவர்களுக்கும் பிரசாதத்தினைக் கொண்டுவந்துகொடுப்பதும் அவருக்குப் பிடித்தமான இன்னொரு விடயம்.

பிரபாகரனின் வரலாறு.....

Nasteňka 🍃 no Twitter: "சிறுத்தையும் பம்மியதாம்... தமிழினத்தின் விடுதலை  புலியைக் கண்டு...!!!! பிரபாகரன்!! கரிகாலன் 💚 #Prabhakaran  #HBDPrabhakaran64 https://t.co/Sq1WwH9f7D" / Twitter

 

பிரபாகரனின் விருந்தோம்பல் வன்னிக் காட்டில் அவர் தனது தோழர்களுடன் ஒளிந்திருந்தபோதும் அவரை விட்டு விலகவில்லை. வன்னியில் அவரது வீட்டில் சமைக்கப்படும் விசேட உணவுவகைகள் அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். விடுதலை வேட்கை எனும் தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீட்டிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட விசேட உணவுவைகைகள் குறித்து அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் அதுகுறித்து எழுதும்போது, பிரபாகரனுக்குக் கோழிக்கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். தான் மரக்கறி வகைகளை மட்டுமே உண்டுவந்தபோதும், தனது கணவரான அன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் வீட்டுக் கோழிக்கறியை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார் என்று மேலும் அடேல் குறிப்பிட்டிருக்கிறார். மிகச்சிறந்த கெரில்லா ராணுவத்தின் தலைவராக பிரபாகரன் இருந்தபோதும், தனக்குப் பிடித்தமான மரக்கறி உணவுகளை அவர் விதம் விதமாக தயாரித்து அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்று அடேல் தொடர்ந்து எழுதுகிறார்.

 

tamil eelam « Velupillai Prabhakaran

 

பிரபாகரனின் உறவினர்களும், அயலவர்களும் அவரது தாயார் மிகச் சிறந்த ஒரு சமையல்க் காரர் என்று கூறுகின்றனர். அவரிடமிருந்தே விதம் விதமாகச் சமைக்கும் கலையினை பிரபாகரன் கற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பார்வதியம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003 இல் தமிழ்நாட்டில் தாம் தங்கியிருந்த திருச்சி வீட்டிலிருந்து சுமார் 19 வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பியிருந்தனர். 2002 இல் வேலுப்பிள்ளை மாரடைப்பால் அவஸ்த்தைப்பட்டிருந்தார். ஆகவே அவரைப் பராமரித்துக்கொள்வதற்கு கனடாவிலிருந்து பிரபாகரனின் சகோதரி வினோதினியும் கணவர் ராஜேந்திரனும் வந்து அவர்களுடன் தங்கியிருந்தனர். சமைப்பதில் பிரபாகரனுக்கும் அவரது சகோதரி வினோதினிக்கும் இடையில் எப்போதுமே ஒரு போட்டியிருக்கும். ஆனால் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியோ இப்போட்டியில் கலந்துகொள்வதில்லை. தனது தம்பி சமையலில் சிறந்தவன் என்று விட்டுக் கொடுத்து ஒதுங்குவதில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வார். என்னால் தம்பியுடன் ஒருபோதுமே போட்டி போட முடியாது, அவன் எப்போதுமே எனக்குச் செல்லத் தம்பிதான் என்று அவரது சகோதரன் மனோகரன் கூறுவார்.  

பிரபாகரன் ஒரு உணவுப் பிரியர். அசைவ உணவுகளென்றால் அவருக்குப் பிடித்துப் போகும். அதிலும் கோழிக்கறி அவருக்கு மிகவும் பிடித்தது. ஆனால், தற்போது அவருக்கு சீன உணவுவகைகளும் பிடிக்கிறதாம் என்று அடேல் கூறுகிறார். 

தனது போராளிகளுக்கு உணவைச் சிறந்த முறையில் தயாரிப்பதிலும், அதனை சுவைத்து உண்பதிலும் உள்ள நுணுக்கங்களை அவர் கற்றுத்தந்திருக்கிறார். அவரது போராளிகளில் ஒருவர் பிரபாகரனுடனான உணவுதொடர்பான சம்பாஷணை குறித்து விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.

 

"முல்லைத்தீவுக் காட்டிற்குள் நாம் முகாமிட்டிருந்த பகுதியை நெருங்கி இந்திய ராணுவம் முற்றுகை ஒன்றினைப் போட்டிருந்தது. உண்பதற்கு கெளப்பியைத் தவிர வேறு எதுவும் எம்மிடம் இருக்கவில்லை. நாம் கெளப்பியைத் திறந்த பானையில் வைத்து அவித்துக்கொண்டிருந்தோம். அடுப்பிலிருந்து பானையினை இறக்கும்போது, கை தவறி பானை சறுக்கிவிட,  சிறிது கெளப்பி நிலத்தில் சிந்திவிட்டது".

 "நான் பயந்துவிட்டேன். யாராவது கண்டால், தண்டனையாக ஒருவாரம் முழுதும்  சமைக்கும்படி ஆகிவிடும்.  ஆகவே நான் அவசர அவசரமாக மண்ணினால் சிந்தப்பட்ட கெளப்பியை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், தலைவர் அதனைப் பார்த்துவிட்டார். பிள்ளை என்று என்னை அழைத்த தலைவர், ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டார். அது எனது மதிய உணவுக்குப் போதுமானதே என்று கேட்டுக்கொண்டே நிலத்தில் சிந்தியதைப் பொறுக்கிக் கழுவத் தொடங்கினார். தனது கைகளிலிருந்த கெளப்பிய உண்டுகொண்டே, ஆறினாப் பிறகு மற்றவங்களுக்கும் கொடு என்று கூறிச் சென்றுவிட்டார். தலைவரைப் பொறுத்தவரை உணவு எப்போதுமே சுத்தமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும், அத்துடன் எதுவுமே வீணாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்" என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் வரலாறு.....

Watch Kappallotiya Tamizhan | Prime Video

 

பிரபாகரன் சிறுபராயத்தில் மிகவும் விளையாட்டுத்தனமானவராக இருந்தார். தனது மூத்த சகோதரிகளுடன் விளையாட்டாகச் சீண்டுவது அவருக்குப் பிடித்திருந்தது. தான் பார்த்த நகைச்சுவையான படங்களிலிருந்து சில காட்சிகளை நடித்துக் காட்டி தாயாரையும் சகோதரிகளையும் மகிழ்விப்பது அவருக்குப் பிடிக்கும். தான் பார்த்த சிவாஜி கணேசனின் பராசக்தி படத்திலிருந்து சில வசனங்களை பேசிக் காட்டி அவர் ஒருமுறை வீட்டில் நடித்தார். அதேபோல வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜிக்கும் வெள்ளைக்காரத் துரைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையினையும் அவர் தனக்கே உரித்தான் பாணியில் பேசிக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இந்திய சுதந்திரப் போராட்டத்தினைத் தழுவி வெளிவந்த பல திரைப்படங்களும், தமிழரின் பாரம்பரியத்தை எடுத்தியம்பிய படங்களையும் அவர் விரும்பிப் பார்த்தார். இவற்றின்மூலமே தமிழர்களும் சுதந்திரம் அடையவேண்டும் என்கிற அவாவும், தமிழ்மீதான பற்றும் தனக்குக் கிடைத்தன என்று அவர் கூறியிருக்கிறார். கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய இருபடங்களும் அவரை வெகுவாகப் பாதித்திருந்தன. இவ்விரு படங்களும் அந்நியரின் அடக்குமுறைக்கெதிரான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினைக் கதையாகக் காண்பித்திருந்தன. இரண்டாவதாக, சிதம்பரனார் நடத்திய கப்பல் நிறுவனம் தொடர்பானது. இதில், அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிரான கருவியாக தமிழரின் கப்பலோட்டும் திறன் காட்டப்பட்டிருந்தது, இதுவே பிற்காலத்தில் பிரபாகரனும் கடல்ப்பலத்தில் அதிக ஈடுபாடு செலுத்தக் காரணமாகியிருக்கலாம். 

இன்று புலிகளுக்கு பல கப்பல்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன் படத்தின்மூலம் தமிழரின் கடற்பலம் குறித்த சரித்திரத்தை பிரபாகரன் அறிந்துகொண்டதனாலேயே தனது விடுதலை அமைப்பில் கடற்பிரிவு பலமானதாக இருக்கவேண்டும் என்று செயற்பட்டுவந்தார். தமிழரின் சரித்திரகாலப் பலம் மட்டுமல்லாமல், ஒளவையார் போன்ற படங்கள் மூலம் தமிழரின் இலக்கியத் தொன்மை பற்றியும் பிரபாகரன் அறிந்துவைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படங்களில் அவருக்கு கிளின்ட் ஈஸ்ட்வூட் நடித்து வெளியான கெளபாய் திரைப்படங்கள் பிடித்திருந்தன. 

The Battle Of Algiers, Cinematic Portrait Of The Algerian Revolution

அவர் போர் தொடர்பான திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்ப்பார். குறிப்பாக விடுதலைப் போராட்டம் ஒன்றுடன் தொடர்புடைய திரைப்படங்கள அவரை மிகவும் கவர்ந்திருந்தன. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் அலி எனும் பெண்போராளி உடலில் கட்டிய குண்டுடன் பிரஞ்சு ராணுவ முகாம் ஒன்றிற்குள் பாய்ந்து அதனை அழிப்பதுபோன்று படமாக்கப்பட்டிருந்தது. இக்காட்சி அவரை உற்சாகப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான பல திரைப்படத் தொகுப்புகள் அவரிடம் இருந்தன.

தமிழ் நாவல்களின் பொற்காலம் என்று கருதப்படும் 60 களிலும் 70 களிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய தமிழ்நாட்டின் வார சஞ்சிகைகள் தமிழ் சரித்திர நாவல்களைத் தொடராக பிரசுரித்து வந்திருந்தன. சிறுவயதிலிருந்தே நாவல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன் இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட தொடர்களை விரும்பிப் படித்து வந்தார். கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அகிலனின் கடல்ப்புறா, கெளசல்யனின் பாமினி பாவைகள், கலியப் பெருமாளின் கல்லுக்குள் ஈரம், ராஜாஜியின் மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நாவல்களை அவர் விரும்பிப் படித்தார்.

When Chola ships of war anchored on the east coast | Chennai News - Times  of India

சோழர்களின் கடல்ப் பலத்தையும், அதனைப் பாவித்து அவர்கள் கம்போடியா தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கைப்பற்றி அரசாண்டதையும் கடல்ப்புறா காவியமாகக் கூறுகிறது. தமிழர்களின் கடற்பலம் சோழர் காலத்திலேயே உச்சத்தினைத் தொட்டிருந்தது. சோழர்கள் தமது பிரதான கட்டளைக் கப்பலுக்கு கடல்ப்புறா என்றே பெயரிட்டிருந்தனர்.  கல்லுக்குள் ஈரம் எனும் நாவல், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் அகிம்சை வழிமுறையிலிருந்து விலகி ஆயுத முறையில் செயற்பட்ட ஒரு குழுவினர் சென்னை ஜோர்ஜ் கோட்டையினைத் தாக்கியதை நாவலாக வரைந்திருந்தது. இவையிரண்டுமே பிரபாகரனின் சிந்தனையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன.

வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழரின் சரித்திரகால பேரரசுகளையும் அவர்களது பெருமையினையும் இந்த நாவல்களூடாகவே தான் அறிந்துகொண்டதாகக் கூறியிருந்தார்.

"எனது மக்கள் இன்று தாம் அகப்பட்டிருக்கும் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலையாகி , தன்மானத்துடனும், கெளரவத்துடனும், விடுவிக்கப்பட்ட தமது பூர்வீகத் தாயகத்தில் வாழவேண்டும் என்கிற அடங்காத ஆசை இந்த நாவல்களைப் படித்த போதே ஏற்பட்டது. மேலும், எம்மை அடிமைப்படுத்தியவர்களுக்கு எதிராக நாம் ஏன் ஆயுதம் தூக்கக் கூடாது எனும் கேள்வியினையும் இந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தன" என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, மகாபாரதம் , இராமாயணம் போன்ற நாவல்கள் வாழ்வில் தான் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைக் கற்றுத்தந்ததாகக் கூறியிருந்தார்.

"பலனை எதிர்பாராது உனது கடமையினைச் செய் என்று பகவத் கீதை சொல்கிறது. இதனை மகாபாரதம் எனும் நாவலைப் படிக்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். இவ்வாறான மேன்மையான நாவல்களைப் படிக்கும்போது ஒரு மக்கள் கூட்டத்திற்காகத் தனது வாழ்வினை அர்ப்பணிக்கும் எவரும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தினை நான் உணர்ந்துகொண்டேன்" என்றும் அவர் கூறினார்.

மகாபாரத்தத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பலரும் பல கோணங்களின் தமது கருத்தினைக் கொண்டிருப்பார்கள். ஆனால், பிரபாகரனைப் பொறுத்தவரை கர்ணனின் பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. தியாகத்தின் வரைவிலக்கணமாகத் திகழ்ந்த கர்ண்னனின் பாத்திரம் அவருக்குப் பிடித்திருந்தது போலவே, பீமனின் அடக்கமும், சுயநலமற்ற குணமும் வருக்குப் பிடித்திருந்தன.

"தனது உயிரையே கொடுக்க முன்வந்த கர்ணனின் தியாகம் எனக்குப் பிடித்திருந்தது" என்று  அவர் கூறினார்.

ஒழுக்க சீலம் என்பது பிரபாகரனது தனிப்பட்ட வாழ்விலும், அவரால் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலும் மிக முக்கியமானதாக இருந்தது. தன்னை ஒரு ஒழுக்கமான பாடசாலையின் அதிபராகப் பார்ப்பதாக அவர் ராமிடம் கூறியிருந்தார்.

"ஒரு பாடசாலையின் அதிபர் கட்டுக்கோப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவாராக இருந்தால், அவரிடம் கல்விகற்கும் பிள்ளைகளும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதோடு, வாழ்விலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதை நீங்கள் எங்கும் காணலாம். பல பாடசாலைகளின் மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அப்பாடசாலையின் ஆசிரியர்களும், அதிபரும் சிறந்த ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பதால் தான். அவ்வாறான அதிபர் ஒருவரிடம் கல்விகற்ற பல தலைமுறை மாணவர்கள் வாழ்வில் சிறந்துவிளங்குவதை நீங்கள் பார்க்கலாம். அதே கொள்கையினைத்தான் நாம் எமது இயக்கத்திற்குள்ளும் வளர்த்து வருகிறோம். அதனாலேயே ஒழுக்கம் தொடர்பாக மிகுந்த சிரத்தையெடுத்து வருகிறோம்" என்று அவர் ராமிடம் கூறினார்.

அதே செவ்வியில் பேசிய பிரபாகரன், தாம் ஒழுக்கத்தினைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கு இரு பிரதான காரணங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். "முதலாவதாக, புலிகளின் உறுப்பினர் ஒருவர் மக்களுக்காகவே போராட வந்தவர். அவ்வாறான ஒருவர் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவாராக இருந்தால், அவர் மக்களின் எதிரியாக மாறிவிடுவார். இதனால் நமது போராட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு நாளடைவில் இல்லாமப் போய்விடும்இரண்டாவதாக, சமூகத்தில் ஆயுதங்களுடன் உலாவருபவர்களுக்கு அதீதமான பலமும் அதிகாரமும் கைகளுக்கு வந்துவிடுகிறது. ஆகவே, இவ்வாறான அதிகாரமும் பலமும் போராளிகளை தவிர்க்கமுடியாமல் சர்வாதிகாரிகளாக மாற்றிவிடக்கூடியன"  என்று அவர் கூறினார்

அவரது குடும்பம் ஆனந்த விகடன் , கல்கி ஆகிய சஞ்சிகைகளை வாங்கியபோது, அயலவர்கள் கலைமகள், குமுதம், கல்க்கண்டு ஆகியவற்றினை வாங்கியிருந்தனர். வீட்டில் செய்யும் வேலைகளுக்காக, சிறு உதவிகளுக்காக கைப்பணமாகத் தனக்குக் கிடைக்கும் சிறியதொகைப் பணத்தினைக் கொண்டு பிரபாகரன் காலைக்கதிர் எனும் மாதாந்த விஞ்ஞான வெளியீட்டையும், மஞ்சரி எனும் மாதாந்த செய்தித் தொகுப்பையும் வாங்கிப் படித்தார். ஊரின் ஓரத்தில் இருந்த சிறிய புத்தகசாலையில் இவற்றை அவர் வாங்கிவந்தார். இயல்பாக சிறுபராயத்திலிருந்து புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன், குறிப்பாக சரித்திர நாவல்களையும், சரித்திர நிகழ்வுகளையும், சரித்திர நாயகர்களின் சரிதைகளையும் பெரிதும் விரும்பிப் படித்தார்.

 "புத்தகங்கள் மூலமே நெப்போலியன், அலெக்ஸாண்டர் ஆகியோரின் மகத்தான திறமைகளையும், வெற்றிகளையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. புத்தகங்கள் வாயிலாகவே இந்தியச் சுதந்திர போராட்ட வீரர்களான சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங், பாலகெங்காதரா திலக் ஆகியோர் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறான புத்தகங்கள் ஊடாகவே ஒரு புரட்சியாளானாக எனது வாழ்வினை அமைத்துக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது மனதினுள் உழன்றுகொண்டிருந்த அந்நியருக்கெதிரான விடுதலைப் போராட்டத்தினை வெளியே கொண்டுவந்து அதனை நனவாக்குவதில் இந்தியச் சுதந்திர போராட்ட வரலாறும், நாயகர்களும் பாரிய தாக்கத்தினைச் செய்திருக்கின்றனர்" என்றும் அவர் கூறினார்.

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On Subash Chandra Bose's 121st birth anniversary; check out 10 patriotic  quotes by him

 

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பிரபாகரன் அதிக மதிப்பு வைத்திருந்தார். இவர்களுள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர் சுபாஸ் சந்திரபோஸ்தான் என்றால் அது மிகையில்லை. ஆயுத ரீதியிலான எதிர்ப்பு, ஜேர்மனுக்கு தப்பியோடியது, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பானை சென்றடைந்தது, அங்கிருந்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஜப்பானியர்களின் உதவியுடன் இந்தியா நோக்கி படை நகர்த்தியது என்று சுபாஸ் சந்திரபோசின் அனைத்து நடவடிக்கைகளும் பிரபாகரனுக்கு ஊக்கம் கொடுத்திருந்தன. தனது போராட்டத்திற்கு அவரையே பிரபாகரன் நாயகனாகவும் வரிந்துகொண்டார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுபாஸ் சந்திரபோஸின் கூற்று அவரைக் கட்டிப்போட்டிருந்தது, "எனது உடலின் இறுதிச் சொட்டு இரத்தம் இந்த மண்ணில் சிந்தும்வரை இந்த மண்ணின் விடுதலைக்காக நான் போராடிக்கொண்டிருப்பேன்" என்பதுதான் அது.

வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறும்போது,

"எல்லாவற்றிற்கும் மேலாக சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது, நான் செல்லவேண்டிய பாதையினை அது எனக்கு வகுத்துக் கொடுத்தது. அவரது ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையும், இலட்சியத்தை அடைவதில் அவருக்கிருந்த அசைக்கமுடியாத உறுதியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்ததுடன் எனக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும் மாறிவிட்டன" என்று கூறுகிறார்.

பிரபாகரன் மேலெழுந்தவாரியாக ஒரு புத்தகத்தைப் படிப்பவர் அல்லர். முன்னட்டையிலிருந்து பின்னட்டைவரை ஒரு புத்தகத்தை முழுவதுமாகப் படித்து அதனுள் தன்னை முற்றிலுமாக தொலைத்துவிடுவதில் அவர் வல்லவர். ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் ஏன், எதற்காக, இது எப்படி நடந்தது எனும் கேள்விகள் அவருக்கு எப்போதுமே எழுந்துகொண்டிருக்கும். 

ShankarRajee - Twitter Search / Twitter

புலிகளுடன் முரண்பட்டிருந்த இன்னொரு தமிழ் போராளிக்குழுவான ஈழப் புரட்சிகர் மாணவர் அமைப்பு (ஈரோஸ்) எனும் இயக்கத்தின் தலைவரான சங்கர் ராஜி பிரபாகரன் குறித்துப் பேசும்போது, பிரபாகரனை தனக்கு 70 களின் ஆரம்பத்திலிருந்தே நன்றாகத் தெரிந்திருந்தது என்றும், தான் படிக்கும் புத்தகத்தினுள் முற்றாக தன்னை அமிழ்த்தி எடுப்பதென்பது என்பது பிரபாகரனின் இயல்பு என்றும் கூறுகிறார். பிரபாகரனின் அறையில் தான் கண்ணுற்ற புத்தகங்களை அவர் நினைவுகூரும்போது சேகுவேரா, பிடெல் காஸ்ட்ரோ, ஹோ சி மின், மாவோ சேதுங் ஆகியோர் பற்றிய புத்தகங்களைத் தான் பார்த்ததாகக் கூறுகிறார். வியட்நாமிய, சீன விடுதலைப் போராட்டங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த அபிமானம் கொண்டிருந்ததாகக் கூறும் சங்கர் ராஜி பிரபாகரனின் அறையில், "நீயாகவே பழகிக்கொள்" எனும் தலைப்பில் சில புத்தகங்கள் இருந்ததையும் தான் கண்டதாகக் கூறினார். அவற்றில் குறிப்பிடத் தக்கது, "குறிபார்த்துச் சுடுவது எப்படி" எனும் புத்தகம் என்பதையும் அவர் கூறத் தவறவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது கல்வி

Prabhakaran – Eelamaravar

தானாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை.

பாடசாலையில் மிகவும் கலகலப்பாக இருந்த பிரபாகரன் பாணந்துறையில் சைவப் பூசகர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக மிகுந்த வருத்தம் அடைந்திருந்ததாக அவரது பாடசாலை நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். தற்போது கொழும்பில் செல்வந்த வர்த்தகராக இருக்கும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், "அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறுகிறார். வீட்டில் தனது தகப்பனாரோடு தான் பேசும் அரசியல் சார்ந்த விடயங்களை தனது பள்ளி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பிரபாகரன் தவறுவதில்லை.

பாடசாலையிலிருந்து வீடு வரும்வழியில் அவருக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருந்தது. அதுதான் கவணில் கல்லுவைத்து இலக்கு நோக்கி எறிவது. மாம்பழங்களையும், விளாம்பழங்களையும் அவர் கவனால் சுட்டு வீழ்த்துவதில்  கைதேர்ந்தவராக இருந்தார். தனது நண்பர்களிடம் கல்லொன்றை மேலே எறியச் சொல்லிவிட்டு அதனை கவனால் இலக்குவைத்து எறிந்து பழகுவார். அவ்வப்போது சில அணில்களும் அவரது கவனுக்கு இரையாகியிருக்கின்றன.

வல்வை சிதம்பராக் கல்லூரியில் அவருக்குக் கல்விகற்பித்த பல ஆசிரியர்கள் அவர் பற்றிக் கூறும்போது அவர் வகுப்பில் சராசரி மாணவனாகவே கல்வியில் விளங்கியதாகக் கூறினார்கள். தான் கற்கும் புத்தகக் கல்வியினை விட அரசியலிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதை தாம் அவதானித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தனது மகனை கட்டிட பொறியியலாளனாக உருவாக்க நினைத்த வேலுப்பிள்ளைக்கு பிரபாகரனின் பாடசாலைக் கல்வியின் தரம் கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அதனால், அவரின் கல்வியறிவினை மேம்படுத்த  வல்வை கல்வியியல் நிறுவனம் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 8 ஆம் வகுப்பில் கல்விகற்ற வந்த அவருக்கு அப்போது 14 வயது. அங்கேதான் பிரபாகரனுக்கு வேணுகோபால் எனும் ஆசிரியரின் சிநேகம் கிடைத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவின் அங்கத்தவராக இருந்த வேணுகோபால், பிரபாகரனுக்குத் தமிழ் சொல்லித் தந்தார். அடிக்கடி அரசியல் பேசும் வேணுகோபாலுக்கு ஒரு கவலை இருந்தது. அதுதான் சமஷ்ட்டிக் கட்சியினரின் அரச எதிர்ப்பு என்பது உயிர்ப்புடன் இல்லையென்பது. அக்காலத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து வேணுகோபால் சுயாட்சிக் கழகம் எனும் தீவிர சுயாட்சிக் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார். இவர்களது தீவிர அரசியல் கண்ணோட்டத்தினால் சம்ஷ்ட்டிக் கட்சியிலிருந்து வேணுகோபாலும் அவரது நண்பரும் விலக்கப்பட்டிருந்தார்கள்.

தனது தமிழ் ஆசானான வேணுகோபால் தனது அரசியல் வாழ்வில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாக பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.

"ஆயுதப் போராட்டமே தமிழருக்கான ஒரே தீர்வு எனும் நம்பிக்கையினை என்னில் முதன்முதலில் ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் வேணுகோபால் தான். எனது கிராமம் ஒவ்வொருநாளும் ராணுவ அழுத்தத்தினைச் சந்தித்து வந்தது. உலகின் பல நாடுகளிலும் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் மக்கள் கூட்டங்கள் பற்றி என்னுடன் பேசும் அவர், பாராளுமன்ற அரசியலினால் எதனையும் சாதிக்க முடியாது எனும் கருத்தினை தீவிரமாக முன்வைத்து வந்தார். 14 வயது நிரம்பிய எனக்கும் நாமும் எம்மை தயார்ப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அத்துடன், தமிழர்களுக்கென்று தனியான நாடு நிச்சயம் எமக்கு வேண்டும் என்கிற உணர்வும் அப்போதிருந்து எனக்கு ஏற்பட்டிருந்தது".

 

தனது தீர்மானத்தில் உறுதியான பிரபாகரன்

தமிழர்கள் திருப்பித் தாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று பிரபாகரன் கொண்டிருந்த கருத்தினை வேணுகோபால் ஆசிரியரின் பாராளுமன்ற அரசியலால் தமிழருக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்கிற கருத்து மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. 14 வயதே நிரம்பியிருந்த பிரபாகரன் எனும் அந்தச் சிறுவன் ஆயுதப் போராட்டத்திலும், தனிநாட்டிற்கான தேவையிலும் மேலும் மேலும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்.

திரு வேணுகோபால் இருவகையான கருத்தாடல்களை முன்வைத்தார். முதலாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தனியான தேசம் ஒன்றிற்கு சொந்தக்காரர்கள். ஒரு தனியான தேசம் ஒன்றிற்கான சகல இலக்கணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான அடையாளம், தனித்துவமான மொழி, மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு, தனியான பூர்வீகத் தாயகம் மற்றும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தமது அடையாளத்தை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத அவா ஆகியன தமிழர்கள் தமக்கான தேசம் ஒன்றிற்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் வாதிட்டார். தமது அடையாளத்தை எவ்விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சரித்திர காலத்திலிருந்து அவர்களின் தாயகம் மீது நடத்தப்பட்ட பல சிங்களப் படையெடுப்புக்களை அவர்கள் தோற்கடித்து வந்ததுடன், அவற்றிற்கான முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்தும் வந்திருந்தனர். சில சமயங்களில் தெற்கிலிருந்து தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட பல சிங்கள படையெடுப்புக்களை தோற்கடித்து தெற்குநோக்கியும் தமது தாயகத்தை சற்றே விரிவுபடுத்தியும் இருந்தனர்.

வேணுகோபால் முன்வைத்த இரண்டாவது கருதுகோள், பாராளுமன்ற அரசியலினை நம்பி அன்றைய தமிழ்த் தலைமை முன்னெடுத்துவரும் எந்த நடவடிக்கையும் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனால், தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு ஆயுதப் போராட்டமே என்பதுதான்.

தனது மாணவர்களிடையே பேசும்போது வேணுகோபால் ஒரு விடயத்தினை அடிக்கடி முன்வைத்து வந்தார். அதாவது, பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைப் பாவிப்பதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மயான இனம் தனது நிலையினை ஸ்த்திரப்படுத்தி ஏனைய சிறுபான்மையினங்களை அடக்கியாண்டு அடிமைப்படுத்தி விடும் என்றும், இதற்கு இலங்கையே சிறந்த உதாரணம் என்றும் கூறிவந்தார்.

தமிழரின் நிலங்களை பலாத்காரமாக வல்வளைத்து அவற்றில் தனது இனமக்களை குடியேற்றிய சிங்கள அரசுகள், அப்பகுதியின் தேர்தல் வாக்கு பலத்தைத் தமக்குச் சார்பானதாகவும் மாற்றிக்கொண்டனர். பாராளுமன்றத்தில் உள்வாங்கப்படும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையினைத் திட்டமிட்டுக் குறைப்பதன்மூலம், அரசாட்சியில் தமிழரின் பங்களிப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. அத்துடன், சுமார் 10 லட்சம் மலையகத் தமிழரின் வாக்குரிமையினைப் பறித்ததன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியதோடு, அரசியல் அநாதைகளாகவும் மாற்றிவிட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக, சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று சட்டம் கொண்டுவந்ததோடு, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைச் சிதைத்து, அரச உத்தியோகஸ்த்தர்களாக வர விரும்பின் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்கவேண்டும் எனும் சட்டத்தையும் கொண்டுவந்தனர்.

எதிர்பார்த்ததைப்போலவே உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஆகிய இனவாத நடவடிக்கைகளை தமிழர்கள் முழுமூச்சாக எதிர்த்தனர். தமிழரின் அகிம்சை ரீதியிலான போராட்டங்களை அரசு ஒருங்கமைக்கப்பட்ட சிங்களக் காடையர் கூட்டங்களைக் கொண்டும், அரச ராணுவத்தினரைப் பாவித்தும் ஆயுதமுனையில் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வந்தது. தமிழர்களால் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட காலிமுகத்திடல் சத்தியாக் கிரக நடவடிக்கையினை அரச ஆதரவுபெற்ற சிங்களக் காடையர்களை அனுப்பி கலைத்தததுடன், தமிழர்கள் இனிமேல் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை, குறிப்பாக தலைநகர் கொழும்பில் செய்வதற்கான எண்ணங்களையும் முற்றாகவே அடித்து நொறுக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் எந்தவொரு பிற்கால ஜனநாயக ஆர்ப்பாட்டமும் மிகவும் மூர்க்கத்தனமாக சிங்கள அரசுகளால் அடக்கப்படும் எனும் எச்சரிக்கையினையும் இந்த அராஜகம் மூலம் சிங்கள அரசு விடுத்திருந்தது.

சமாதான முறையில் பொதுமக்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது எனும் பிரகடனத்தை 1961 ஆம் ஆண்டிலிருந்து மேலும் 5 வருடங்களுக்கு அப்போதைய அரசு நீடித்தது. இந்தச் சட்டம் தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் கொண்டுவரப்பட்டதுடன், இந்தச் சட்டத்தை நிலைநாட்டவென பெருமளவு சிங்கள ராணுவமும் தமிழரின் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படது. இதே வருடத்தில் சமஷ்ட்டிக் கட்சியின்  தலைவர் செல்வநாயகம் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக அமைதிவழிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தமிழர் தாயகத்தில் ஐந்து அரச கச்சேரிகளுக்கு தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியில் தமது அலுவல்களைச் செய்வதற்குச் செல்வதனைத் தடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களுக்கு முன்னால் தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திய சிங்கள அரசு, ஊரடங்கு உத்தரவினையும் பிரயோகித்தது. அவசர காலச் சட்டத்தின் அதிகாரங்களைப் பாவித்து இந்த அமைதிவழி ஆர்ப்பாட்டங்களை ராணுவத்தைக் கொண்டு மிகவும் கொடூரமாக அடக்கிய அரசு, பல தமிழ் அரசியல்த் தலைவர்களையும் சிறையில் அடைத்தது.

S.J.V.Chelvanayagam Q.C. – Thanthai Chelva | EelamView

1961 ஆம் ஆண்டு திருகோண்மலையில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா, தம்பையா ஏகாம்பரம், ராஜவரோதியம் ஆகியோர்.

 

பாராளுமன்றத்திற்கு வெளியேயான அமைதிவழி ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் உரிமை தமிழ் மக்களிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றம் ஊடாக தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கனவும் சிங்களவர்களால் மிகவும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்களால் இருவேறு சிங்கள அரச தலைவர்களின் சம்மதத்துடன்  செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. 1957 இல் செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்துகொண்ட ஒப்பந்தம், தனது வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெளத்த துறவிகளுக்குப் பயந்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதன் அடையாளமாக பெளத்த துறவிகளின் முன்னிலையில் தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலத்தை  பண்டா சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தெறிந்து, பெளத்த துறவிகளுக்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அவ்வாறே, 1965 இல் செல்வாவுடன் டட்லி சேனநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. 3 வருடங்கள் ஆகியும் ஏன் ஒப்பந்தத்தில் நீங்கள் ஒத்துக்கொண்ட விடயங்களை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தந்தை செல்வா டட்லியிடம் கேட்டபோது, "பெளத்த துறவிகளின் எதிர்ப்பினை மீறி இந்த ஒப்பந்தத்தினை என்னால் நடைமுறைப்படுத்த முடியாது" என்று மிகச் சாதாரணமாக டட்லி கூறினார்.

பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு சிங்கள அரசுகளை பதவியில் அமர்த்தியும், தேவைப்படின் பதவியிலிருந்து அகற்றியும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று தந்தை செல்வா முன்னெடுத்த எந்தச் சதுரங்க ஆட்டமும் வெற்றியளிக்கவில்லை. 1960 இல் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்ட செல்வா அவர்கள், டட்லியின் அரசை வீட்டிற்கு அனுப்புவதன் மூலம் சுதந்திரக் கட்சியின் தலைமையில் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம், அவர்களின் அவலங்களைத் தீர்த்துவிடலாம்  என்று நம்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியின் புதிய பிரதமர் சிறிமா, ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். அத்துடன் நின்றுவிடாமல், தனிச்சிங்களச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போவதாக சூளுரைத்தார். 1965 இல் கட்சி மாறிய தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க மீண்டும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், மீண்டுமொருமுறை அவர் சிங்களத் தலைவர்களால் எம்மாற்றப்ப்ட்டுப் போனார்.

 இந்த அரசியல் ரீதியான தமிழரின் நடவடிக்கைகளின் படு தோல்வியினை அடிக்கடி விமர்சித்து வந்த வேணுகோபால், பாராளுமன்ற அரசியலோ, அமைதிவழி ஆர்ப்பாட்டங்களோ தமிழரின் அவலங்களுக்கு ஒருபோதுமே தீர்வாக அமையப் போவதில்லை என்று தனது மாணவர்களிடம் கூறிவந்தார்.

 

"பாராளுமன்ற ஜனநாயகத்தின்மூலம் உலகின் எந்தவொரு இனச் சிக்கலும் இதுவரை கெளரவமாகத் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆயுதப் போராட்டங்களின் மூலமே இனப்பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, பாராளுமன்றம் மூலமான அரசியல்ச் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை" என்று கூறிவந்திருந்தார் வேணுகோபால்.

Edited by ரஞ்சித்
தானாகவே
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

தனாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை.

ஏன் போராட்டம் தொடங்கியது? பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு வெட்டுப்புள்ளி முறையை அமுல்படுத்தியது தான் என்று பலர் சொல்வார்களாம்.

ஆனால் தலைவர் பலதடவை இந்த பல்கலைக்கழக பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிரித்து சிரித்துக் கொண்டே கூறுவாராம்.

இதை ஒருவரிடமல்ல பலதடவைகள் பலரிடமும் இப்படி கதைத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் போராட்டம் தொடங்கியது? பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு வெட்டுப்புள்ளி முறையை அமுல்படுத்தியது தான் என்று பலர் சொல்வார்களாம்.

ஆனால் தலைவர் பலதடவை இந்த பல்கலைக்கழக பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிரித்து சிரித்துக் கொண்டே கூறுவாராம்.

இதை ஒருவரிடமல்ல பலதடவைகள் பலரிடமும் இப்படி கதைத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்கு முன்னரே தமிழர் மீதான ஆக்கிரமிப்பை சிங்கள அரசுகள் ஆரம்பித்துவிட்டன அண்ணா. சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், தனிச்சிங்களச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் என்று பல முனைகளில் ஆக்கிரமிப்பை அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆகவே, வெறும் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி பிரச்சினைக்காகத்தான் தலைவர் போராடத் தொடங்கினார் என்று கருதுவது சரியான கருத்தாக இருக்க முடியாது.

Edited by ரஞ்சித்
ல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர வெடிகுண்டு

Bottle bomb hi-res stock photography and images - Alamy

 

தனது சிறுபராயத்திலிருந்தே ராணுவத்தினரின் பிரசன்னத்தையும், அத்துமீறலையும் பிரபாகரன நன்கு அனுபவித்து உணர்ந்திருக்கிறார். அவரது கிராமமான வல்வெட்டித்துறை ராணுவத்தின் அக்கிரமங்களைத் தொடர்ச்சியாக சந்தித்தே வந்திருந்தது. சுற்றிவளைப்புக்கள், தேடுதல் வேட்டைகள், பணப்பறிப்புகள், கைதுசெய்தல்கள், சித்திரவதைகள் என்று அக்கிராம மக்கள் ராணுவத்தினரின் கொடூரத்தை தினசரி சந்தித்தே வந்தனர். அதனால், அம்மக்களால் ராணுவம் வெறுக்கப்பட்டது. சிறுவர்கள் ராணுவத்தை அச்சத்துடனும், வெறுப்புடனும் பார்த்தனர். ராணுவம் மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு காலத்திலேயே தான் வளர்ந்ததாகக் கூறும் பிரபாகரன், தமிழ் மக்களை தொடர்ச்சியாக துன்புறுத்திவரும் ராணுவம் மீது தனக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டு இருந்தது என்று கூறுகிறார்.

பிரபாகரனுக்கு 6 வயது நிரம்பியிருந்த நிலையில் அவரது ஊரான வல்வெட்டித்துறையில் அப்பாவி இளைஞர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைக் காயப்படுத்தியிருந்தது. அதே நாளான சித்திரை 14 இல் பருத்தித்துறைப் பகுதியில் ஒரு இளைஞரைக் கொன்றும் இன்னும் இருவரைக் காயப்படுத்தியும் இருந்தது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை ராணுவம் கைதுசெய்து இழுத்துச் சென்றதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமிழ் இளைஞர்கள் ராணுவ வண்டி ஒன்றின்மீது கல்லெறிந்ததே ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாகியதென்று கூறப்பட்டது. ராணுவத்தின் தாக்குதல்களில் காயப்பட்டுக் கிடந்த இளைஞர்களின் வீட்டிற்குப் பிரபாகரனும் சென்றிருந்தார்.

காலம் காலமாக சிறுவர்கள விளையாடிவரும் திருடன் - பொலீஸ் விளையாட்டிற்குப் பதிலாக வல்வெட்டித்துறையில் தமிழ்ச் சிறார்கள் புதிய விளையாட்டொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். விளையாட்டுக் கைத்துப்பாகிகளை தமது இடுப்பிற்குக் கீழ் மறைத்தபடி மறைந்திருந்து கெரில்லாக்கள் ராணுவத்தினரைத் தாக்குவது போன்று அவர்கள் விளையாடினார்கள். தனது நண்பர்களுடன் இவ்விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பிரபாகரன், கெரில்லா குழுவின் தலைவனாக தன்னை எப்போதுமே நினைத்துக்கொண்டு விளையாடுவார். தனது குழுவிற்கான மறவிடம், அவர்களுக்கான பயிற்சிகள், தாக்குதலுக்கு தயார்ப்படுத்தல் என்று தனது சிறுவயதிலேயே இந்தச் செயற்பாடுகளை விளையாட்டிலேனும் அவர் செய்துவந்தார்.

ராணுவத்தின் மீதான பிரபாகரனின் வெறுப்பென்பது ஆசிரியர் வேணுகோபாலின் அறிமுகத்தின் பின்னரே இரட்டிப்பாகியது. அரசியல் ரீதியில் மும்முரமாக பிரபாகரன் செயற்படத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களில் அவர் தவறாது கலந்துகொண்டதோடு, சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர்களையும் இடையிடையே சந்தித்து வந்தார். தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் ஒற்றைக்கேள்வியுடன் அவரது சம்பாஷணை முற்றுப்பெறும், "நாம் திருப்பியடிக்க முடியாதா?" என்பதுதான் பிரபாகரனுக்கிருந்த ஒரே கேள்வி.

சிங்களவர்கள் தமிழர்களை எவ்வாறெல்லாம் வதைத்தார்கள் என்று தான் கேள்விப்பட்ட விடயங்களை தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்ச்சியாக பிரபாகரன் பேசிவந்தார். மேலும், அமிர்தலிங்கத்தின் அரசியல்க் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்த பிரபாகரன், ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே தமிழருக்கு இருக்கும் ஒரே வழியென்று அமிர் பேசிவந்ததுகுறித்தும் பிரபாகரன் நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

"சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை பிரபாகரன் வாசித்து வந்தார். அப்புத்தகம் பற்றி எம்மிடம் பேசிய பிரபாகரன் சைவ இளைஞர்கள் மதத்தினைக் காக்க ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். நாம் அவரைப் பார்த்து நீ சுவாமி விவேகானந்தரைப் பிந்தொடரப்போகிறாயா என்று கிண்டலடித்தபோது, இல்லை,  தமிழ் மக்களின் அவலங்களை அகற்றுவதே எனது தலையாய கடமை. அதற்கு முன் இந்த ராணுவ அடக்குமுறையினை நாம் அழிக்கவேண்டும் " என்று தம்மிடம் கூறியதாக இன்று அவுஸ்த்திரேலியாவில் வசித்துவரும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் ராணுவ அட்டூழியங்கள் பற்றியும், அவற்றைத் தடுக்க தாம் போராட வேண்டிய தேவைபற்றியும் பேசினார்கள். "நீங்கள் சுலோகங்களை உச்சரித்துக்கொண்டு அவர்கள் முன்னால் சென்று நிற்கமுடியாது. அவர்கள உங்களை தாக்குவார்கள். ஆகவே நீங்களும் திருப்பித் தாக்க வேண்டும், அப்போதுதான் எம்மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் நிறுத்துவார்கள்" என்று பிரபாகரன் கூறவும், அவரைச் சுற்றியிருந்த நண்பர்களும் அதனை ஆமோதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவதற்கு தமக்கு ஆயுதங்கள் தேவையென்பதையும் அவர்கள் அப்போது உணரத் தொடங்கியிருந்தனர்.

வெடிகுண்டுகளை எப்படித் தயாரிக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் பிரபாகரனும் அவரது தோழர்களும் இறங்கினர். தமக்கு அதிக இழப்பின்றி தாக்குதலை நடத்துவதற்கு சரியான ஆயுதம் நேரம் குறித்து வெடிக்கும் குண்டுதான் என்று பிரபாகரன் கருதினார். பட்டாசுகளில் வேறு இரசாயணத் திரவியங்களைக் கலப்பதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரிக்கமுடியுமா என்று அவர்கள் முயன்றனர். பின்னர் பாடசாலை இரசாயண ஆய்வுகூடத்திலிருந்து தாம் எடுத்துவந்த இரசாயணங்களை வெற்றுப் போத்தல்களில் அடைத்து அவற்றை சக்கைகள் கொண்டு மூடினர். சக்கைகளினூடு திரியொன்றைச் செலுத்தி அப்போத்தல் வெடிப்பதற்கான வழியையும் அவர்கள் ஏற்படுத்தினர்.

இன்று அவுஸ்த்திரேலியாவில் வாழும் அவரது பள்ளி நண்பன் மேலும் கூறும்போது,

"எமது மதிய உணவு இடைவேளையின்போது நாம் தயாரித்த போத்தல் வெடிகுண்டை பரீட்சித்துப் பார்க்கத் தீர்மானித்தோம். மாணவர்கள் பாடசாலைக் கழிவறைகளைப் பாவித்து வகுப்பறைகளுக்கு மீளும்வரை காத்திருந்தோம். நாம் வெளியே காத்திருக்க, பிரபாகரனும் இன்னொரு தோழரும் வெடிகுண்டை கழிவறையினுள் கொண்டு சென்று திரியைப் பற்றவைத்தனர். நாம் மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளியே காத்திருந்தோம். சில நிமிடங்களாகியும் எதுவுமே நடக்கவில்லை. பொறுமையிழந்த பிரபாகரன் என்னதான் போத்தலுக்கு நடந்தது என்பதைக் கண்டறிய போத்தலின் அருகே சென்றார். கூடவிருந்தவர்கள் அவரைத் தடுத்தபோதும் அவர் கேட்கவில்லை, அவர் அருகில் செல்லவும் குண்டு வெடித்தது. நாம் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம். அந்த குண்டுவெடிப்பு முயற்சி எமக்கு வினோதமாக இருந்தது. எமது கூட்டத்தில் ஒருவர் அதிபர் வருகிறார் என்று கூவவும், அனைவரும் வகுப்பறைக்குச் சென்று பதுங்கிக்கொண்டோம்.  கழிவறைக்குச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்த அதிபர் நேராக பிரபாகரனின் வகுப்பிற்கே சென்றார். வல்வை கல்வியியல் கல்லூரிக்குச் சமூகமளிக்கும் மாணவர்களே இதனைச் செய்திருக்கவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார். ஏனென்றால், வல்வை கல்வியியல் கல்லூரியில் கற்பிக்கும் வேணுகோபால் மாஸ்ட்டரே மாணவர்களை ஆயுதப் போராட்டத்திற்கு ஊக்குவித்து வருகிறார் என்று வல்வையில் மக்கள் பொதுவாகப் பேசிவந்தனர்அதிபர் மிகக்கடுமையான தொனியில் இதை யார் செய்தது, சொல்லுங்கள், யார் செய்தது? என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்வகுப்பறை முழுதும் நிசப்த்தமாக இருந்தது. எவரும் வாய்திறக்கவில்லை. ஆனால் அதிபருக்கோ சமூகத்தில் நடந்துவரும் விடயங்கள் குறித்த சரியான புரிதல் இருந்தது. இளைஞர்கள் மனதில் தாங்கொணாச் சினம் உருவாகிவருவதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவே, மாணவர்களை மேலும் வருத்தாமல், "சரி, பரவாயில்லை. உங்கள் முயற்சிகளைப் பாடசாலைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்".

 

ராணுவத்துடனான தனது மோதல்களுக்கான ஆயத்தப்படுத்தல்களை பிரபாகரன் அன்றிலிருந்து பாடசாலைக்கெ வெளியிலேயே வைத்துக்கொள்ள தீர்மானித்தார். அவரும் அவர்து தோழர்களும் கராத்தே மற்றும் ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளை ஓரளவிற்குத் தெரிந்துகொண்டனர். தமது உடல்களை தொடர்ச்சியான வலியினையும், பட்டினியையும் தாங்கக் கூடிய நிலைக்கு பயிற்றுவிக்கத் தொடங்கினர். தம்மை வெற்றுச் சாக்குகளின் கட்டிக்கொண்டு நாள்முழுதும் சூரிய வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள தம்மைத் தயார்ப்படுத்தினர். சிலவேளைகளில் மிளகாய்ச் சாக்குகளின்மேல் படுத்திருந்து உடல்வலியை சமாளிக்கும் மனோதிடத்தினை வளர்க்க முயன்றனர். தமது நகங்களை தாமே ஊசிகள் மூலம் துளைத்து பொலீஸ் சித்திரவதைகளை தாங்கும் பக்குவத்தை அடைய பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சித்திரவதைகளையே அந்த நேரம் ராணுவமும் பொலீஸாரும் கைக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

"நாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆகவே சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ள மனோரீதியில் நாம் எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பிரபாகரன் தன்னுடைய தோழர்களிடம் கூறிவந்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் கைத்துப்பாக்கியும்

Shootout in Madras: When LTTE Prabhakaran's gunshots rang in Pondy Bazaar |  The News Minute

பிரபாகரனின் தோழர்களில் எழுவர் இராணுவத்தினரை எதிர்த்துப் போராடவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர். அதற்காக தம்மைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி வந்தனர். குண்டுகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தனர். தமது நடவடிக்கைகளை ஒருங்கமைப்பதற்காக ஒரு குழுவை அவர்கள் உருவாக்கினர். தமது குழுவுக்கான பெயரைத் தேடுவதில் அவர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. அவர்களுக்கிருந்த இலக்கு ஒன்றுதான், அதுதான் தம்மை ஆக்கிரமித்து நிற்கும் காவல்த்துறை, ராணுவம் உட்பட்ட சிங்கள அரசின் ஆயுதக் கருவிகளை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது.

ஆனால் இலட்சியத்தை மட்டுமே கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை என்று பிரபாகரன் தனது தோழர்களிடம் கூறினார். எதிர்த்துச் சண்டையிடுவதற்கு ஆயுதங்கள் வேண்டும், குறைந்தது ஒரு கைத்துப்பாக்கியாவது எமக்கு வேண்டும் என்று அவர் கூறினார். துப்பாக்கிகளை பொலீஸார் காவித்திரிவதையும், சில பெரியோர்கள் அவற்றை வைத்திருந்ததையும் அவர்கள் முன்னர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பிரபாகரனோ தோழர்களோ ஒருபோதுமே அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. ஆகவே, ஒரு துப்பாக்கியை வாங்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், துப்பாக்கி வேண்டுவதற்குப் பணம் தேவை. ஆகவே துப்பாகியொன்று தேவையான பணத்தினை தமக்கு வீட்டில் தரப்படும் வாராந்தப் பணமான 25 சதத்தினை சேமிப்பதன் மூலம் சேர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

பிரபாகரனே அந்தச் சிறிய குழுவின் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் இருந்தார். ஏனென்றால், தமக்குள் பிரபாகரனே மிகவும் நம்பிக்கையானவர் என்று அவரது தோழர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். ஆகவே, சேர்க்கப்படும் பணத்தை பிரபாகரனே பாதுகாத்து வந்தார். சுமார் 20 வாரங்களில் அவர்களிடம் 40 ரூபாய்கள் சேர்ந்துவிட்டன.

தாம் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு கைத்துப்பாக்கியொன்றை அவர்கள் வாங்கத் தீர்மானித்தனர் . பருத்தித்துறையில் பெருஞ்சண்டியர் என்று பேசப்பட்ட சம்பந்தன் என்பவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்க விரும்புவதாக அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழர்களும் முடிவெடுத்தனர். தாம் சேர்த்த பணமான 40 ரூபாய்களுக்கு மேலதிகமாக தனது சகோதரி ஜெகதீஸ்வரியின் திருமணத்தில் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை பிரபாகரன் விற்று மேலும் 70 ரூபாய்களைச் சேர்த்துக்கொண்டார். ஆனால் துப்பாக்கியை வாங்குவதற்கும் இன்னமும் 40 ரூபாய்கள் தேவையாக இருந்தது. ஆகவே, சண்டியரைச் சந்தித்து, தமது நோக்கத்தினையும், அதற்கான தேவையினையும் விளக்கி, மீதிப் பணத்தை ஆறுதலாகத் தரமுடியுமா என்று கேட்கலாம் என்று பிரபாகரன் முடிவெடுத்தார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் ஊர்ச்சண்டியர் சம்பந்தனும்

ஒருநாள் காலை பிரபாகரனும் அவரது தோழர்களில் ஒருவரும் பஸ்ஸில் ஏறி பருத்தித்துறை நோக்கிப் பயணமானார்கள். பாடசாலைக் காற்சட்டை அணிந்த இரு சிறுவர்கள் தனது கைத்துப்பாக்கியை வாங்க வந்திருப்பதைக்கண்ட சண்டியர் சம்பந்தன் திகைத்துப்போனார். ஆகவே,  அவர்களை அங்கிருந்து சென்றுவிடும்படி அவர் மிரட்டினார். ஆனாலும், அந்தக் கைத்துப்பாக்கியை பார்த்துவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழரும் விரும்பியதால், அதனை அவர்களிடம் காண்பித்தார் சண்டியன். காண்பித்ததோடு நின்றுவிட்ட சண்டியன், அவர்கள் அதனைத் தொட்டுப்பார்க்க அவர் இடம் கொடுக்கவில்லை.

"இதுவொன்றும் விளையாட்டுத் துவக்கல்ல. சிறுவர்களான நீங்கள் இதனைத் தொடக்கூடாது" என்று அவர்களிடம் கண்டிப்பாகக் கூறினார் சண்டியன் சம்பந்தன்.

கைத்துப்பாக்கியொன்றை முதன்முதலாகத் தனது கண்முண்னே கண்டபோதும்கூட  அதனைத் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்படாததால் அவரது கண்கள் கலங்கிவிட்டன. ஆகவே அந்தக் கைத்துப்பாக்கியை எப்படி இயக்குவதென்று தனக்குக் காண்பிக்குமாறு அந்தச் சண்டியரிடம் அவர் மன்றாடத் தொடங்கினார். ஆனால், சம்பந்தனோ, இது விளையாட்டுத் துப்பாக்கியல்ல, சிறுவர்கள் இதனைத் தொடக்கூடாது என்று கூறி, பிடிவாதமாக மறுத்துக்கொண்டே, "உங்களுக்கு எதற்குக் கைத்துப்பாக்கி?" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

இதைக் கேட்ட பிரபாகரன், "ராணுவத்தையும் பொலீஸாரையும் எதிர்த்துப் போராடப் போகிறோம்" என்று பெருமையாகக் கூறினார்.  "நாம் அவர்களை இங்கிருந்து துறத்தியடிக்க வேண்டும். அவர்களே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக இங்கே இருக்கிறார்கள்" என்று ஆத்திரத்துடன் முழங்கினார்.

"ஏன்?" என்று திருப்பிக் கேட்டார் சம்பந்தன்.

"சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்களின் தேசத்தை விடுவிக்க வேண்டும்" என்று பிரபாகரன் மீண்டும் பெருமையாகக் கூறினார்.

பிரபாகரன் கூறியதை கேட்டு அதிர்ந்துபோன சம்பந்தன், "உங்களின் வயதிற்கு மீறிய கதைகளைப் பேசுவதை விட்டு விட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார்.

"இந்த விடயங்களைப் பார்ப்பதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் படிப்பதை மட்டுமே இப்போதைக்குச் செய்யுங்கள். என்னைப்போல வளர்ந்து பெரியவர்களாகிய பின்னர் வேறு விடயங்கள் பற்றிச் சிந்திக்கலாம், இப்போது போய்வாருங்கள்" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார் சம்பந்தன்.

பிரபாகரனுக்கோ கைத்துப்பாக்கியை விட்டுவிட்டுச் செல்ல மனம் இருக்கவில்லை. "மீதிப்பணத்தைக் கொண்டுவந்தால் துப்பாக்கியைத் தருவீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் அவர்.

ஆனால், துப்பாக்கியை அவர்களுக்கு விற்பதில்லை என்று சம்பந்தன் பிடிவாதமாக இருந்துவிடவே, பிரபாகரன் மனமுடைந்துபோனார்.

வெளிச்சம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பின்வருமாறு இந்த நிகழ்வினைப் பகிர்ந்திருந்தார்.

"எனக்கு அப்போது 14 வயதுமட்டுமே ஆகியிருந்தது. எனது கருத்துக்களோடு ஒத்துப்போன இன்னும் ஏழு தோழர்களும் சேர்ந்து ஒரு பெயரில்லாத அமைப்பை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். எமது நோக்கம் விடுதலைக்காத் தொடர்ந்து போராடுவதும், ராணுவத்தினர் மீது தாக்குவதுமாகவே இருந்தது. நானே அந்தச் சிறிய அமைப்பின் தலைவராக இருந்தேன். அந்த நேரத்தில் எமது மனங்களில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது ஒரு துப்பாக்கியை வாங்கிவிட வேண்டும் என்பதும், சில குண்டுகளையாவது தயாரித்துவிடவேண்டும் என்பதும் தான். தாம் வாரம் வாரம் சேர்த்து வந்த 25 சதங்களை எனது தோழர்கள் என்னிடம் கொண்டுவந்து தருவார்கள்".

 

"சுமார் 40 ரூபாய்கள் சேரும்வரை அந்தப் பணத்தினை நானே பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நேரத்தில்தான் பக்கத்துக் கிராமத்தில் வாழ்ந்துவந்த சண்டியரான ஒருவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்கவிரும்புவதாக நாம் கேள்விப்பட்டோம். அதனை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எனது சகோதரியின் திருமணத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட மோதிரத்தை விற்றும் இன்னும் 70 ரூபாய்களை நாம் சேர்த்துக்கொண்டோம். மேலும் 40 ரூபாய்கள் போதாமையினால், அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கும் எமது எண்ணத்தை நாம் கைவிடவேண்டியதாயிற்று".

சண்டியன் சம்பந்தன் மட்டுமே அன்றைய காலத்தில் பிரபாகரனைப் புறக்கணித்திருக்கவில்லை. பிரபாகரன் கல்விபயின்ற சிதம்பராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "எமது பாடசாலையில் பிரபாகரன் இருந்த வகுப்பு பல ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும், பல ஆசிரியர்கள் அந்த வகுப்பு மாணவர்களை எச்சரித்து வந்ததாகவும் கூறிய அவர், பிரபாகரன் என்று ஒரு மாணவன் அவ்வகுப்பில் இருந்தார் என்று நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.

பிரபாகரனும் சமஷ்ட்டிக் கட்சியும்

Pirapaharan: Vol.1, Chap. 1, Why Did He Not Hit Back? – Ilankai Tamil Sangam

சாதாரணதர வகுப்பினை அடைந்தபோது பிரபாகரனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மும்முரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் தொடர்ந்தும் போய்வந்தார்.

1969 ஆம் ஆண்டு, சித்திரை 7 முதல் 9 வரை உடுவில் பகுதியில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்திலேயே சிங்கள அரசுகளுடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று தான் முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன என்று வெளிப்படையாக மக்களிடம் கூறினார் தந்தை செல்வா. 

"1960 களிலிருந்து பிரதான சிங்கள அரசியல்க் கட்சிகளுடன் செயற்பட்டு வருகிறோம். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை பதவியிலிருந்து நீக்க 1960 பங்குனியில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை அவர்கள் உதாசீனம் செய்தார்கள். ஆகவே 1965 இல் சுதந்திரக் கட்சியை பதவியிலிருந்து அகற்றி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் தமிழருக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு ஆதவளித்தோம். ஆனால், அவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை ஆட்சிக்கு வந்ததும் தூக்கியெறிந்துவிட்டார்கள். நாம் இன்று அனைவராலும் கைவிடப்பட்டு நிற்கிறோம்" என்று செல்வா மிகுந்த வருத்தத்துடன் மக்களுக்குக் கூறினார்.

தமிழருக்கான தனிநாடே எமது தீர்வு என்று பிரகடனம் செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் பிரபாகரனும் கட்டைக் காற்சட்டை அணிந்து நின்றிருந்தார். இரு பிரதான சிங்களக் கட்சிகளும் தமிழர்களை ஏமாற்றிவிட்டதால், தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்குவதைத்தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை என்று அங்கிருந்த இளைஞர்கள் வாதிட்டனர். ஆனால், இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானத்தை அந்த வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு விரும்பாத சமஷ்ட்டிக் கட்சி, அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டது.

ஆனால், கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானம் குறித்த சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிக்கையாளர்கள் செல்வாவிடம் கேட்டனர். சிங்களவர்கள் உங்களை சமஷ்ட்டிவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கேலிசெய்கிறார்கள். ஆனால், நீங்களோ தமிழ் இளைஞர்கள் கோரிய தனிநாட்டுப் பிரகடனத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டீர்கள். ஏன்  அவர்களது தனிநாட்டுக்கான தீர்மானத்தை நிராகரித்தீர்கள்" என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த தந்தை செல்வா,

" நாம் அதனை நிராகரிக்கவில்லை. எங்களுக்குச் சிறிது நேரம் தாருங்கள் என்று மட்டுமே அவர்களைக் கேட்டோம். எம்மை பிரிவினைவாதிகள் என்று கூறும் சிங்களவர்களே எம்மை சமஷ்ட்டிவாதிகள் என்று அழைக்கும் நிலையினை நாம் உருவாக்குவோம். சமஷ்ட்டி என்பது ஒருநாட்டில் ஒற்றுமையாக வாழும் ஒரு பொறிமுறையே அன்றி, தனியான நாட்டுக்கான கருவியல்ல என்பதனை அவர்கள் ஏற்கச் செய்வோம். நமது இளைஞர்கள் சமாதானமான முறையில் எமது பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

"நீங்கள் கூறுவதுபோல சிங்களத் தலைவர்களை உங்களின் கோரிக்கைக்கு உடன்படவைக்க முடியாமல்ப் போனால் என்ன செய்வீர்கள்?" என்று ஒரு பத்திரிக்கையாளர் செல்வாவிடம் வினவியபோது, "வயோதிபர்கள் தோல்வியடையும்போது இளைஞர்கள் வெற்றிபெறுவார்கள்" என்று அவர் அமைதியாகப் பதிலளித்தார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற குட்டிமணியும் தங்கத்துரையும்

அன்று கல்வியமைச்சராக இருந்த . எம். ஆர். . ஈரியகொள்ள, ஹரிஜன்களாக இருந்த  தமிழ் மாணவர்கள் சிலர் பெளத்த மதத்தினைத் தழுவிக் கொண்டதால், ஹரிஜன்களால் உருவாக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை  சிங்களப் பாடசாலைகளாக அரசால் பொறுப்பெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிவித்தலை விடுத்துடன், இந்த பொறுப்பேற்றல் நிகழ்வில் தான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்து  தமிழ் மாணவர்களின் மனநிலையினை மேலும் கொதிநிலைக்குக் கொண்டு சென்றார்.

I. M. R. A. Iriyagolle - Wikipedia

. எம். ஆர். . ஈரியகொள்ள

இவ்வறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்ட சவால் என்றுணர்ந்த  தமிழ் மாணவர்கள்  இந்த நிகழ்வுக்கெதிரான பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் அறைகூவல் விடுத்தனர்.  ஆனால், பிரதமர் டட்லியுடன் இதுகுறித்து பேசிய சமஷ்ட்டிக் கட்சியினர், பாடசாலைகளை சிங்கள மயமாக்கும் அரசின் முடிவினை மீளப்பெறுவதில் வெற்றிகண்டனர்.

ஆனாலும், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவு அரசின் எகத்தாளமான முயற்சிக்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சத்தியாக்கிரக நிகழ்வினை நடத்த முயன்றபோது, அரசு பொலீஸாரைப் பாவித்து அதனைத் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால், பொலீஸாரின் தடையினை தான் உதாசீனம் செய்யப்போவதாக சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணி அறிவிக்கவே, அரசு சம்பந்தப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கும் கடற்படையின் பாதுகாப்பைப் போட்டது. ஆனால், தமது இளைஞர் அணியுடன் பேசிய சமஷ்ட்டிக் கட்சியின் தலைமை, போராட்டத்தைக் கவிடும்படி வேண்டிக்கொண்டதுடன், இளைஞர்கள் கடற்படையுடன் மோதும் சந்தர்ப்பத்தினையும் தவிர்த்துக்கொண்டது.

எந்த முடிவையோ அல்லது நடவடிக்கையையோ காலம் தாழ்த்தி, தாமதமாகவே எடுக்க நினைக்கும் சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு தமிழ் இளைஞர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதனால் இளைஞர் அணியிலிருந்து பல உறுப்பினர்கள் வெளியேறிச் சென்று தமக்கான அமைப்புக்களை உருவாக்கினார்கள். அவர்களுள் ஒன்று குட்டிமணி - தங்கத்துரை அமைப்பு. குட்டிமணியும், தங்கத்துரையும் பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். குட்டிமணியின் இயற்பெயர் செல்வராஜா யோகச்சந்திரன் என்பதுடன் தங்கத்துரையின் இயற்பெயர் நடராஜா தங்கவேலு ஆகும். 1969 இல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தினை கடுமையாக விமர்சித்த அவர்கள், தமிழ் மக்களின் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். பாலஸ்த்தீனத்து மக்களின் விடுதலைக்காகப் போரிட்டுக் கொண்டிருந்த யாசீர் அரபாத்தை முன்னுதாரணமாகக் கொண்டிருந்த தங்கத்துரை தமது குழுவிற்கு தமிழ் விடுதலை இயக்கம் என்று பெயரிட விரும்பினார். ஆனால், அக்கூட்டத்தில் பெயர் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படமலேயே முற்றுப்பெற்றது. ஆனாலும், ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதென்று அங்கிருந்த அனைவருமே ஒருமித்து முடிவெடுத்திருந்தனர்.

தொண்டைமனாறு குண்டுவெடிப்பில் காலில் காயம்பட்ட பிரபாகரன்

பருத்தித்துறையில் இருந்த விசாலமான வீடொன்றில் குட்டிமணி - தங்கத்துரை ஆகியோர் தலைமையிலான அமைப்பு தமது கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தது. பிரபாகரனும் இந்த கூட்டங்களில் தவறாது பங்கெடுத்து வந்தார். அந்தக் குழுவில் இருந்தவர்களில் பிரபாகரனே வயதில் இளையவராக இருந்தார். அவருக்கு அப்போது 14 வயது. குட்டிமணி, தங்கத்துரைக்கு மேலதிகமாக இக்கூட்டங்களில் பெரிய சோதி, சின்னச் சோதி, செல்லையா தனபாலசிங்கம் (செட்டி), செல்லையா பத்மனாதன் (கண்ணாடி), சிறீ சபாரட்னம், பொன்னுத்துரை சிவகுமாரன் மற்றும் வைத்திலிங்கம் நடேசுதாசன் ஆகியோரும் கலந்துகொண்டுவந்தனர்.

"நாங்கள் புரட்சி பற்றிப் பேசினோம். புரட்சியாளர்கள் பற்றிப் பேசினோம். ஆனாலும், இவையெல்லாவற்றையும் விட குண்டுகளைத் தயாரிப்பது பற்றியும், ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைப் பற்றியுமே அதிகமாகப் பேசினோம். நாங்கள் வெறும் 15 பேர் மட்டுமே கொண்ட சிறிய அமைப்புத்தான்" என்று நடேசுதாசன் தமிழ் இதழொன்றிற்குப் பேட்டியளிக்கும்போது தமது ஆரம்பகால அமைப்புப்ப்பற்றிக் கூறியிருந்தார்.

1971 முதல் 1972 வரையான காலப்பகுதியில் இந்த அமைப்பினர் குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தொண்டைமனாறு பனத்தோப்பு ஒன்றினுள் இடம்பெற்ற தற்செயலான குண்டுவெடிப்பில் இவ்வமைப்பின் பல உறுப்பினர்கள் காயப்பட நேர்ந்தது. அவர்களில் ஒருவர் பிரபாகரன். அவரது காலில் கடுமையான தீக்காயம் ஒன்று ஏற்பட்டதுடன், அது கருமையான அடையாளம் ஒன்றினை நிரந்தரமாகவே ஏற்படுத்தியிருந்தது.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிகாலன்

Thangadurai.jpg

தங்கத்துரை எனப்படும் ந. தங்கவேலு

அவர்களின் ரகசியக் குழுவிற்கு தங்கத்துரையே தலைவராக இருந்தார். அவரை அவர்கள் மாமா என்று பாசத்துடன் அழைத்து வந்தார்கள். அந்த அமைப்பில் சுமார் 25 இளைஞர்கள் இருந்தார்கள். அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் உறவினர்கள். 1970 இல் தங்கத்துரை இரு சுழல்த் துப்பாக்கிகளை வாங்கியிருந்தார். ஒன்று 0.22 எம்.எம் வகையும் மற்றையது 0.38 எம்.எம் வகையையும் சேர்ந்தது. இவை உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், இவற்றினை பயிற்சிக்காக அவர்கள் பாவித்து வந்தார்கள்.அமைப்பிலிருந்தவர்களை இவ்வகையான சுழல்த் துப்பாக்கிகளைத் தயாரிக்குமாறு தங்கத்துரை கேட்டிருந்தார். வானொலி திருத்துனரான கண்ணாடி என்று அழைக்கப்பட்டவர் இந்த தயாரிப்பு முயற்சிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவரது உதவியாளராக "தம்பி" பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர்கள் அவ்விரு துப்பாக்கிகளையும் பாகம் பாகமாய்ப் பிரித்தெடுத்து மீண்டும் அவற்றைச் சேர்த்து துப்பாக்கிகளாக பொருத்தினார்கள். சில நாட்களிலேயே துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

 

1982 ஆம் ஆண்டு கொழும்பு குயீன்ஸ் கிளப்பில் தங்கத்துரை மற்றும் குட்டிமணிக்கெதிராக நடத்தப்பட்ட வழக்கின்போது நான் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவர்களின் துப்பாக்கித் தயாரிப்பு முயற்சி பற்றி நான் வினவியபோது தங்கத்துரை பின்வருமாறு கூறினார்,

"துப்பாக்கிகளைத் தயாரிப்பதுபற்றிய அறிவு எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், எமது தோழர்களில் பலர் இப்போதுதான் துப்பாக்கியை முதல்முறையாகக் கண்டிருக்கிறார்கள். நான் கண்ணாடியிடமும் பிரபாகரனிடமும் அவற்றை கழற்றிப் பார்க்குமாறு கூறியிருந்தேன். ஒரு வீட்டின் விறாந்தையில் அமர்ந்தபடி சுத்தியலினாலும் திருகாணிக் கழற்றியினாலும் அவற்றைக் கழற்ற முயன்றார்கள். மிகச் சிறிய நேரத்திலேயே அவர்களால் அவற்றினை முற்றாகக் கழற்றியெடுக்க முடிந்தது. தம்மால் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களைக் கவனமாக ஒரு பத்திரிகைத் தாள் மீது பரவிவிட்டு பின்னர் அப்படியே துப்பாக்கியாகப் பொருத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் மிகவும் சிறப்பான அவதானிப்பும், ஞாபகசக்தியும் இருந்ததை நான் கவனித்தேன்".

 

சிறிது காலத்திலேயே கைத்துப்பாக்கிகளைத் தாமாகவே தயாரிக்கும் நிலையினை அவர்கள் அடைந்தார்கள். சிலவற்றை அவர்களே தயாரித்தார்கள். அதேபோல ரவைகளைத் தயாரிக்கும் புதிய முறைகளையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். முதலில் தீப்பெட்டிகளில் இருக்கும் இரசாயணத்தைக் கொண்டு ரவைகளை அவர்கள் செய்துபார்த்தார்கள். பின்னர் சரவெடிகளில் இருக்கும் இரசாயணத்தை ரவைகளில் நிரப்பி முயன்று பார்த்தார்கள். அவற்றுள் மூலை வெடி என்றழைக்கப்பட்ட முக்கோண வடிவ வெடிகளை அதன் வெடிச் சக்திக்காக ரவைகளில் பாவிக்க விரும்பினார்கள்.

AThiyagarajah-MPforVaddukkodaiKilledon25May1981.jpg

வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா

அக்காலத்தில் சிவகுமாரன் பயன்படுத்திய துப்பாக்கி, உலகநாதனைக் கொல்ல குட்டிமணி பயன்படுத்திய துப்பாக்கி, வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜாவைக் கொல்ல திஸ்ஸவீரசிங்கம் பாவித்த துப்பாக்கி மற்றும் அல்பிரட் துரையப்பாவைக் கொல்ல பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி ஆகிய எல்லாமே அவர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்.

அதேபோல குண்டுகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குண்டுகளைத் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். துப்பாக்கிகளைத் தயாரிப்பதைக் காட்டிலும் குண்டுகளைத் தயாரிப்பது ஆபத்தானது. இவ்வாறான குண்டுத் தயாரிப்புக்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது 1970 ஆம் ஆண்டு தொண்டைமானாறு பனங்காட்டில் இரசாயணங்களை அவர்கள் கையாளும்போது ஏற்பட்டிருந்தது. குண்டுக்கான வெடிபொருட்களை அவர்கள் இணைத்துக்கொண்டிருக்கும்போது வெடிப்பு ஏற்பட்டது. அதில் சின்னச் சோதி காயப்பட்டிருந்தார். இரண்டாவது வெடிப்பு சற்றுத் தீவிரமானது. தங்கத்துரை, சின்னச் சோதி, பிரபாகரன் மற்றும் நடேசுதாசன் ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். பிரபாகரனுக்கு வலதுகாலில் எரிகாயம் ஏற்பட்டிருந்தது. அக்காயம் ஆறுவதற்கு சிலகாலம் சென்றதுடன், அது நிரந்தரமான கருத்த வடுவையும் அவரது காலில் ஏற்படுத்திவிட்டிருந்தது.

பிரபாகரனுக்கு தனது காலில் ஏற்பட்ட காயம் பெருமையாக இருந்தது. தனது நண்பர்களுக்கு அக்காயத்தைக் காட்டி அவர் மகிழ்ந்தார். காலில் கருமையான காயம் ஏற்பட்டுள்ளதால் தான் இனிமேல் கரிகாலன் என்று அழைக்கப்படலாம் என்று நகைச்சுவையாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. சோழர்களின் புகழ்மிக்க இளவரசனான கரிகாலச் சோழன் மீது பிரபாகரன் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். கரிகாலச் சோழன் கூட தனது காலில் ஏற்பட்ட கருமை நிறத் தழும்பிற்காகவே "கரிகாலச் சோழன்" என்று அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கரிகாலச் சோழன் தனது போர்த்திறமை மூலம் சோழ நாட்டினை விஸ்த்தரித்து சோழப் பேரரசாக மாற்றியிருந்தார். பிரபாகரனும் தனது பெயரை கரிகாலன் என்று வரிந்துகொண்டார். 1982 இல் தமிழ்நாட்டின் பாண்டி பஸார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதிவுசெய்யப்பட்ட பொலீஸ் அறிக்கையில் பிரபாகரனின் பெயர் "கரிகாலன்" என்றே பதியப்பட்டிருந்தது. பிரபாகரனின் வலது காலில் இருக்கும் எரிகாயத் தழும்பை முன்வைத்தே பொலீஸார் தமது தேடுதல்களை நடத்தியிருந்தார்கள்.

ஆயுதங்களையும் குண்டுகளையும் தயாரிக்கும் பிரபாகரனின் அவா இன்றுவரை தொடர்கிறது. இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பிரபாகரன் அவற்றை மெருகூட்டுவதன் மூலம் எவ்வாறு தாக்குதல்களில் அவற்றை திறமையாகவும், குறைந்த ரவைகளுடன் பயன்படுத்தலாம் என்று எப்போதுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கனரக மோட்டார்கள், நீண்ட தூர ஆட்டிலெறிகளைக் கூட உருமாற்றி, இலங்கையரசு பாவித்த மேற்கு நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட எறிகணைச் செலுத்திகளின் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பாதுகாப்பாக உபயோகிக்கும் வழிமுறைகளைப் பிரபாகரன் கையாண்டு வந்தார்.

பிரபாகரன் 14 வயது நிரம்பியிருந்த வேளையிலேயே அவரது மைத்துனரான சாதாரண தரத்தில் கல்விபயின்று வந்த பெரிய சோதி என்பவரால் அமைப்பினுள் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து பாடசாலைக்குச் சமூகமளிப்பதைத் தவிர்த்து வந்த பிரபாகரன் அரசியல் கூட்டங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். 1968 இல் டட்லியின் அரசிலிருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்ததன் பிற்பாடு, யாழ்க்குடாநாட்டில் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களும், விவாதங்களும் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வந்தன. சமஷ்ட்டிக் கட்சியின் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவினை இளைஞர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் போராடி பெறுவதை விடுத்து, மீண்டும் இன்னொரு சிங்களக் கட்சிக்கே ஆதரவளிப்பதென்பது கட்சியின் நோக்கத்திற்கு முரணானது என்று வாதிட்டனர். சமஷ்ட்டிக் கட்சியின் முடிவு பற்றி தந்தை செல்வா என்னதான் சமாதான சொல்ல முனைந்தாலும், இளைஞர்கள் அதனைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. குறிப்பாக வி நவரட்ணத்தின் சுயாட்சிக் கழக உறுப்பினர்கள் இதனால் பெரிதும் அதிருப்தியடைந்து காணப்பட்டார்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு 

தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனிநாடே என்று உறுதியாகத் தீர்மானித்த பிரபாகரன் இளைஞர்களை தனிநாட்டுக்கான போராட்டம் நோக்கி உந்திவந்த அரசியல்ச் செயற்ப்பாட்டாளர்களான ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். அவர்களுடனான ஆலோசனைகளின்போது சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தையும், சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொள்கையினையும் கடுமையாக விமர்சித்த பிரபாகரன், சுந்தரலிங்கம் மற்றும் நவரட்ணம் போன்றோரின் நிலைப்பாடான தனிநாடு நோக்கி சமஷ்ட்டிக் கட்சி போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவந்தார். 

C. Suntharalingam - Wikipedia

சுந்தரலிங்கம்

தனியான நாடு எனும் கொள்கையினை முதன்முதலில் எதிர்த்தவர் சுந்தரலிங்கம்தான். ஆனால், 1958 இல் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதலின் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனியான நாடுதான் என்று கூறியதோடு, அதனை தாம் ஈழம் என்று அழைப்பதாகவும் கூறினார். மேலும், தனிநாட்டிற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். சிங்கள அரசியல்வாதிகளுடனும், புத்திஜீவிகளுடனும் தனக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கையினை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்றவே முயன்று வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவந்தார். சிங்களவர்கள் அரசியல் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளும் எந்த முடிவினையும் அவர்கள் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென்றும் வாதிட்ட அவர் தமிழர்களுக்கான உரிமைகளையோ மொழிக்கான அந்தஸ்த்தையோ சிங்களவர்கள் ஒருபோதுமே தரப்போவதில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவந்தார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்த நிலையான வடக்குக் கிழக்கின் பூர்வீக இனமக்கள் தமிழர்களே எனும் நிலையினை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும் அத்தாயகம் ஈழம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் சுந்தரலிங்கம் வாதாடிவந்தார்.

ஆனால், அவரது கோரிக்கையான தனிநாடு தமிழரிடையே முக்கியத்துவத்தினைப் பெறத் தவறிவிட்டது. 1960 இலும் 1965 இலும் பாராளுமன்றத் தேர்தல்களில் வவுனியாவில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி எனும் பெயரில்  போட்டியிட்ட அவரது கட்சியைத் தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள். 1960 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய சிவசிதம்பரத்தின் 5370 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 4231 வாக்குகளே கிடைத்தன. மேலும் 1965 தேர்தலில் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்ட சிவசிதம்பரத்தின் 7265 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 3952 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் பிற்பாடு காங்கேசந்துறையில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சுந்தரலிங்கம் 5788 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள செல்வாவோ 13,520 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.

 

 V. Navaratnam - Wikipedia

நவரட்ணம்

1970 தேர்தல்களில் போட்டியிட்ட நவரட்ணத்தின் சுயாற்சிக் கழகமும் தேர்தலில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. அதுவும் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டது. 1963 இல் இருந்து ஊர்காவற்துறை தொகுதியில் வெற்றிபெற்ற வந்த நவரட்ணம், புதிய கட்சிக்கு மாறியதன் பின்னர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளை இழந்தார். 1963 இல் 14,963 வாக்குகளையும் 1965 இல் 13,558 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டிய நவரட்ணம், 1970 தேர்தலில் வெறும் 4758 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். பெரும்பாலான வாக்காளர்கள் நவரட்ணத்தின் முன்னைய கட்சியான சமஷ்ட்டிக் கட்சிக்கே வாக்களித்ததுடன் புதிதாக போட்டியிட்ட ரட்ணம் என்பவரைத் தெரிவுசெய்தார்கள். முழு யாழ்ப்பாணக் குடாநாடுமே நவரட்ணத்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையினை அன்று நிராகரித்திருந்தது.  

1956 ஆம் ஆண்டிலிருந்து தனிநாட்டுக் கொள்கையினை முற்றாக நிராகரித்திருந்த சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழருக்கான தீர்வாக சமஷ்ட்டி முறையிலான அரசியல் தீர்வையே தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறுகிறது, 

"...இந்த நாட்டினை கூறுபோடும் எந்த நடவடிக்கையும் இந்த நாட்டிற்குப் பாதகமாக அமையும் என்பதையும் , தமிழ் மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனையும் நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்க் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்க வேண்டாம் என்று நாம் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்"

 தனது தேர்தல் தோல்வி குறித்து டெயிலி நியூஸிற்கு செவ்வி கொடுத்த நவரட்ணம், தனிநாட்டிற்கான தனது கோரிக்கைக்குக் கிடைத்த  இத்தோல்வி தற்காலிகமானதுதான் என்று கூறியதுடன், தான் மாவட்ட சபைத் தேர்தல்களில் கூறிய நிலைப்பாடு மாறாது என்றும் கூறினார். 

"இந்தத் தேர்தலினை நான் அரசுக்கும், பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பும் நடவடிக்கையாகப் பாவித்தேன். அதாவது, சிங்கள அரசுகளும், தலைவர்களும் தமிழர்களின் அவலங்களைத் தீர்த்துவைத்து கெளரவமான தீர்வொன்றைத் தருவார்கள் என்கிற நம்பிக்கையினைத் தமிழர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இவர்களின் செயற்பாடுகளினால் தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனங்களும் இனிமேல் ஒன்றாக வாழமுடியாது என்கிற நிலையினை அடைந்துவிட்டோம். இனிமேல் தமிழர்கள் பிரிந்துசென்று தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார்.

 

தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து சுந்தரலிங்கமும், நவரட்ணமும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும்கூட, இளைஞர்களின் மனதில்  தனிநாட்டிற்கான தேவையினை உணரவைப்பதில் பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தார்கள். பல இளைஞர்கள் தனிநாட்டை அடைவதற்கான வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆராய முற்பட்டிருந்தார்கள். வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் போராடுவது பலத்த தோல்வியினையே சந்தித்திருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். ஆயுதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும், அதன்மூலமே தமிழர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதனை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எமது பதிலடி கடுமையாக இருக்கும்போதுதான் திருப்பி எம்மீது தாக்குதல் நடத்து முன் அவர்கள் சிந்திப்பார்கள் என்று இளைஞர்கள் நியாயப்படுத்தத் தொடங்கினர். 

 

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தல்

 1970 ஆம் ஆண்டு, வைகாசி 27 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சமஷ்ட்டிக் கட்சி 13 ஆசனங்களையும், காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதே தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி, சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து 106 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவான மேலும் 6 ஆசனங்களையும் சேர்த்து இந்த முன்னணி 112 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தது. இது வெறும் 151 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் காட்டிலும் அதிகமானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களை மட்டுமே இத்தேர்தலில் பெற்றிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மந்திரிசபையினை அமைத்திருந்தார். தனது கல்வியமைச்சராக கம்பொல சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பாடி உட் டின் மகமூட்டீனை நியமித்தார்.

 Badi-ud-din Mahmud - Wikipedia

பாடி உட் டின் மகமூட்

கல்வியமைச்சராக வந்தவுடன் அவர் செய்த முதலாவது வேலை ஊடகங்கள் மூலமாக மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்ட தரப்படுத்தலினை அறிவித்ததுதான். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் மனதில் முளைத்திருந்த பிரிந்துபோதல் எனும் எண்ணக்கருவிற்கு இந்த அறிவிப்பு மேலும் உரம் ஊட்டியது. பாராளுமன்றத்தில் பேசிய கல்வியமைச்சர் பாடி உட் டின், சிங்களவர்கள் பல்கலைக்கழகமூடான கல்வியினை நிராகரித்து வருகிறார்கள் என்றும், அதன்மீதான நம்பிக்கையினை இழந்துவருகிறார்கள் என்றும் கூறியதோடு, இதற்கெல்லாம் காரணம் பெரும்பாலான தமிழர்கள் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதும், பல தமிழர்கள் பொறியியலாளர் மற்றும் மருத்துவர்களாக உருவாக்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறினார். 

தற்போதிருக்கும் பல்கலைக் கழக அனுமதி மூன்று வழிகளில் தமிழ் மாணவர்களுக்கு அனூகூலமாக இருக்கின்றது என்று வாதிட்ட அவர், அவற்றைனைப் பின்வருமாறு விளக்கினார். 

முதலாவதக வரலாற்று ரீதியான காரணங்கள். அதாவது வடபகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான, தரமான பாடசாலைகள்.  இரண்டாவது தமிழ் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருகிறார்கள் என்பது. மூன்றாவதாக, பல்கலைக்கழகங்களில் செய்முறைத் தேர்வுகளின்பொழுது, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு உதவிவருகிறார்கள் என்பது. ஆகவேதான், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியினைத் தடுப்பதற்கு மந்திரிசபை கடுமையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கே விபரித்தார். ஆகவேதான், விஞ்ஞானப் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தான் இரத்துச் செய்வதாகவும், தரப்படுத்தலினை அமுல்ப்படுத்தப்போவதாகவும் கூறினார்.

 

தமிழ் மாணவர்கள் பெருவாரியாக தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாவதாகவும், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான செய்முறைத் தேர்வுகளில் உதவிவருவதால் சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சிங்கள பெளத்த அமைப்புக்களும் மாணவர் சங்கங்களும் முறையிட்டு, இந்தத்ப் பல்கலைக் கழக தேர்வுமுறை முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் சிறிமாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இந்தக் கோரிக்கைகளை தான் நடைமுறைப்படுத்துவேன் என்று தான் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக தான் ஆட்சியில் ஏறியதும் அதனைச் செய்யத் தலைப்பட்டார் சிறிமா. ஆனால், வடமாகாணப் பாடசாலைகள் பலவற்றில் செய்முறை விஞ்ஞான பாடங்களுக்கான திறமையான உபகரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனாலேயே பல்கலைக்கழக விஞ்ஞான பாடங்களுக்கு பெருமளவில் வடபகுதித் தமிழ் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞான மற்றும் பொறியியல் பாடநெறிக்கு தேர்வானவர்களில் 37.2 வீதமானவர்களும், வைத்தியத்துறை மற்றும் பல்வைத்திய பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 40.5 வீதமானவர்களும், விவசாயம் மற்றும் கால்நடை வைத்தியத்துறைக்குத் தெரிவானவர்களில் 41.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணிசமான இடங்களைத் தக்கவைத்துவந்த இந்த நிலை 1971 வரையில் தொடர்ந்து வந்தது. இவ்வருடத்தில் விஞ்ஞான பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில்  35.2 வீதமான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களா இருந்ததுடன், பொறியியல்ப் பீடங்களுக்குத் தெரிவானவர்களில் 40.8 வீதமானவர்களும் மருத்துவத்துறைக்குத் தெரிவானவர்களில் 40.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள்.

பாடி உட் டின் மகமூட்டீன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களின் மீதான கடுமையான விமர்சனம் தமிழ் மாணவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. கல்வித்திட்டத்தை ஏமாற்றியும், தமிழ் ஆசிரியர்களின் உதவியினையும் கொண்டே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினைக் கடுமையாக மறுத்த தமிழ் மாணவர்கள், தமது அயராத உழைப்பினாலும் கடுமையான பயிற்சியினாலுமே தாம் பலகலைக் கழகங்களுக்குத் தெரிவாகி வருவதாக  வாதிட்டார்கள்.

http://www.cmb.ac.lk/wp-content/uploads/science-old.jpg 

இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1957 வரையான காலப்பகுதிவரை பாடநெறிகள் ஆங்கிலமொழியிலேயே நடைபெற்றுவந்தன சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே பரீட்சையினை ஆங்கில மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், 1957 முதல் பரீட்சைகளுக்கான விளக்கப்படுத்தல்கள் சிங்களத்திலோ தமிழிலோ வழங்கப்பட முடியும் என்கிற முறை கொண்டுவரப்பட்டதோடு, அதுவரை இருந்த செயன்முறைகளும் மாற்றம் பெறத் தொடங்கின. இரு மொழிகளைப் பேசும் மாணவர்கள் ஒரே பரீட்சைத் தாளினை எழுதினாலும் கூட, அவற்றை தமது தாய் மொழிகளில் பதிலளிக்கும் வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பரீட்சைகளில் தமிழ்