Jump to content

எடை குறைப்பு புராணம் - 10 புரிதல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த நவம்பரில் தான் எடை என் கையை மீறி சென்று கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்தேன் எனச் சொல்ல மாட்டேன். மாறாக நன்கு தெரிந்திருக்கும் பாராமுகமாக இருந்தேன் என்பதே நிஜம். குறிப்பாக லாக் டவுன் நாட்களில் என் எடை 10 கிலோ அதிகமான போது நான் செய்வதறியாமல் இருந்தேன்.
லாக் டவுன் முடிந்த போது கூட நேரம் இருக்கவில்லை. எடையைக் குறைக்க நிறைய மெனெக்கெட, உறுதி பாராட்ட வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும். கடந்த ஆண்டு இரண்டு நாவல்களை மும்முரமாக எழுதி வந்தேன். தினமும் 4-7 மணிநேரங்களாவது எழுத்து வேலை. காலையில் எழுந்ததும் உடல் வலிக்கும். மனம் முழுக்க எழுத்து மட்டுமே என்பதே அன்றாட பிரச்சினைகள் ஒரு பொருட்டாகவே தெரியாது. ஆக நாவல்களில் ஒன்றை அனேகமாக எழுதி முடித்து, மற்றதை பாதியில் விட்ட பின்னரே டயட், உடற்பயிற்சி என கவனம் செலுத்த முடியும் எனத் தோன்றியதால் அதுவரை உடலைப் பற்றி கவலையில்லாமல் ஜாலியாக இருந்தேன். 98 கிலோவை எட்டியதை சற்று பீதியுடன் ஒருநாள் பார்த்தேன். ஒரு நாவலை முடித்ததும் டயட்டில் இறங்கினேன். உணவுமுறை வழிகாட்டிகள், உடற்பயிற்சியாளர்கள் என பலரும் உதவினார்கள். இன்று 71 கிலோவைத் தொட்டு விட்டேன். 11 மாதங்களில் 27 கிலோ எடை! இவ்வருட நிறைவுக்குள் இன்னும் 6-8 கிலோ குறைத்தாலே நிறைவு கொள்வேன்.
பெரும் எடையைத் தூக்கி வாழ்வதில் நிறைய சிரமங்கள். நிமிர்ந்து உட்கார்வதில், நிற்பதில், திரும்புவதில், நடப்பதில், குனிந்து நகம் வெட்டுவது, லேஸ் கட்டுவதில் என்ன எதாவது கீழே விழுந்து விட்டால் அதை எடுக்க யார் உதவியையாவது நாடுவதில் என ஏகப்பட்ட தலைவலிகள். ஒன்றரை ஆண்டுகளாக நான் வகுப்பில் உட்கார்ந்து தன் பாடமெடுத்தேன். அதில் ஒரு கொடுமை நாம் உளவியல் ரீதியாக ஒரு படி கீழாக உணர்வோம், எல்லா மாணவர்களின் முகங்களையும் அமர்ந்த நிலையில் காண முடியாது என்பது. இந்த வருடம் ஏப்ரலுக்கு மேல் தான் என்னால் மீண்டும் நின்றபடியும் நடந்தும் வகுப்பெடுக்க முடிந்தது. இது எனக்கு அளித்த மனநிறைவு ஒப்பற்றது.
உடல் எடை காரணமாக நான் எங்கு போனாலும் மடித்து திறக்கிற சக்கர நாற்காலி ஒன்றை எடுத்துப் போக வேண்டி வந்தது. அதைத் தள்ள ஒரு ஆளின் உதவி வேண்டும். சென்னைக்கு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வந்த போதெல்லாம் இது ஒரு பெரும் சிக்கலானது. லாக் டவுன் முடிந்து வேலைக்கு கிளம்பிய நாள் நினைவுக்கு வருகிறது - என்னால் நாலடி கூட எடுத்து வைக்க முடியாது. மெல்ல மெல்ல சுவரைப் பற்றியவாறு நடந்து என் ஸ்கூட்டரை அடைவேன். மூச்சு வாங்கும். வீட்டுக்குள்ளேயே நடக்க முடியவில்லையே என நொந்து போவேன்.
மெல்ல மெல்ல எடை குறைந்த பின்னர் என்னால் சக்கர நாற்காலி இல்லாமலே நடக்க, படிக்கட்டுகளில் சிரமமின்றி ஏற முடிந்தது. வகுப்பில் இரண்டு மூன்று மணிநேரங்கள் சேர்ந்தாற் போல நின்றும் சற்று நடந்தும் பேச முடிந்தது. தினமும் நடைப்பயிற்சி செய்ய முடிந்தது. நீதிமன்றத்திற்கு செல்லும் போது சக்கர நாற்காலியைத் தூக்கிப் போக வேண்டியிருக்கவில்லை. இது என் தன்னம்பிக்கையை மீட்டது. நிமிர்ந்து நிற்பதற்கு, நடப்பதற்கு அமர்ந்தே இருப்பதற்கு இடையில் உளவியல் ரீதியான மாற்றங்கள் நமக்குள் ஏற்படுவதை கவனிக்கலாம். அதை நான் காத்திரமாக உணர்ந்தேன். மற்றவர்களுக்கு எப்படி எனத் தெரியாது, ஆனால் இந்த சின்னச்சின்ன விசயங்களே எனக்கு வாழ்க்கையை புரட்டிப் போடுகிற சாதனைகள்!
இறுதியாக, எழுத்தைப் போன்றே உடற்தகுதியும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மிகச்சில விசயங்களுள் ஒன்று. கடந்த ஐந்தாண்டுகளாக என் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது. சோதனை மேல் சோதனை. முழுக்க கைவிடப்பட்ட நிலையில் நிர்கதியாக இருந்தேன். அப்போது எடை குறைப்பு, எழுத்து ஆகிய இரண்டுமே என் வாழ்க்கை என் கையில் எனும் நம்பிக்கையை, திருப்தியைக் கொடுத்தன. வேறென்ன இல்லாவிடினும் நம் எழுத்தும், உடலும் நம் வசம் இருக்கும் எனும் உத்தரவாதம் என்னை தன்னிறைவு பெற்றவாக்கியது. இந்த தத்தளிபான வாழ்வில் எனக்கு ஒரு பிடிமானமாகியது.
இந்த எடை குறைப்பு சவாலின் போது சில விசயங்களைப் புரிந்து கொண்டேன்:
1) எடையை நாமளே குறைக்கிறோம் என களத்தில் குதிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற நிபுணர்களின் அறிவுறுத்தலின் படியே உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
2) 70% உணவுப்பழக்கம் என்றால் 30% உடற்பயிற்சி. உணவுமுறையினால் மட்டுமே கூட எடையைக் குறைக்கலாம். ஆனால் அது ஆரோக்கியத்தைத் தராது. சரியான எடை குறைப்பென்பது கொழுப்பைக் குறைத்து தசைகளைப் பெருக்குவதே. அதற்குத் தான் உடற்பயிற்சி அவசியம்.
3) குறைவாக சாப்பிடுவதை விட சரியாக சாப்பிடுவதே முக்கியம். ஒரு உதாரானத்திற்கு, சராசரி உயரமும் 80 கிலோவுக்கு மேல் எடையும் கொண்ட ஒருவர் எனில் அவர் தினமும் 1600-1800 கலோரிகள் சாப்பிட்டால் எடை குறையும் என வையுங்கள். அவர் தினமும் 80-100 கிராம் புரோட்டீன், 60 கிராம் நல்ல கொழுப்பு, 80 கிராமுக்குள் மாவுச்சத்து என பார்த்துப் பார்த்து எடுத்துக் கொள்ளுதல் அவசியம். காய்கறிகள், குறைந்த அளவில் பழம், நட்ஸ், விதைகள் சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் அவசியம். சத்துக்கள் சரியான விகிதத்தில் உள்ளே போகாவிடில் எடையிழப்பு இருக்கும், ஆனால் உடல் பலவீனமாகி விடும்.
4) கீட்டோ, 18 மணிநேர உண்ணாநோன்பு, அளந்துண்பது, 800 கலோரிகள் மட்டுமே ஒருநாள் உண்பது என எந்த முறையும் எடையைக் குறைக்க உதவும். நான் அநேகமாக அத்தனையையும் முயன்று பார்த்தேன். இவற்றில் அளந்து உண்பதே - portion control diet - பின்பற்ற வசதியானது எனத் தோன்றுகிறது. எனென்றால் இதில் மட்டுமே அனைத்து ஆரோக்கியம் தரும் உணவுகளையும் குறைந்த அளவில் சாப்பிடலாம் என்பதால் உணவுப்போதாமை உணர்வு, ஏக்கம் இருக்காது. ஆனால் இதில் மெல்ல மெல்லவே எடை குறையும்.
5) சோற்றையும் சர்க்கரையையும் நொறுக்குத் தீனியையும் குறைப்பது மட்டுமே டயட் அல்ல. அறிவியல்பூர்வமாக உண்ண வேண்டும். அதுவே வெற்றியைத் தரும்.
6) மனதைக் கட்டுப்படுத்துவதே சூத்திரம் என்று என் நண்பர் ஒருவர் சொல்லுவார். மறுநாள் சாப்பிடப் போவதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டால் எடை குறைப்பு சுலபம். என்ன பிரச்சினை என்றால் நாம் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்து கிடைத்ததை சாப்பிடுகிறோம். அதிகமாக வெளியே சாப்பிடுகிறோம். முன்னறிந்து உண்டால் எடை நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
7) ஒல்லியாக இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என நான் முன்பு நினைத்திருந்தேன். ஆனால் உடற்பயிற்சி நிலையத்திற்கு ஒல்லியானவர்கள் வரும் போது இவர்கள் ஏன் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என வியப்பேன். பின்னர் இவர்கள் 2 கிலோ டம்பல்ஸைக் கூட தூக்க முடியாது, சில பெண்களால் தம் எடையையே சுமக்க முடியாது எனத் தெரியவந்த போது அது என் அறுவுக்கண்னைத் திறந்தது. எடை குறைப்பல்ல சரியான எடையைத் தக்க வைப்பதும், தசைகளை வளர்ப்பதுமே முக்கியம்! குண்டாக இருந்தால் என்ன ஒல்லியாக இருந்தால் என்ன வலுவாக இருப்பவரே உடற்தகுதியானவர்!
😎 சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி எல்லாம் ஒரு தவம் போல பயிலப்பட வேண்டியவை. கடும் நெருக்கடிக்குள், அலைச்சல், பதற்றம் என வாழ்பவர்களால் இது முடியாது. அவர்கள் தமக்கு அவகாசம் வாய்க்கும் வரை எடைகுறைப்புக்குள் குதிக்கக் கூடாது. அரைகிணற்றைத் தாண்டுவதால் பலனில்லை. ஒரு சில மாதங்கள் வாயைக் கட்டி 8 கிலோ குறைத்து மீண்டும் தடாலடியாக ஒழுங்கற்ற வாழ்க்கைமுறைக்குள் போனால் 12 கிலோவாக திரும்ப ஏறும். இப்படி எடை ஏறி ஏறி இறங்கினால் அது நம் உடலில் சக்தியை எரிக்கும் ஆற்றலைக் (metabolism) குறைத்து விடும். பின்னர் டயட் இருந்தாலும் சுலபத்தில் எடை இறங்காது. அதாவது எதை செய்தாலும் நேரம் எடுத்து ஒழுங்காக செய்ய வேண்டும். அல்லாவிடில் செய்யவே கூடாது. தற்காலிக எடை குறைப்பு, எடை ஏற்றம் எனும் மாறுபட்ட நிலை உடல் ஆரோக்கியத்துக்கு கேடானது. அதற்கு குண்டாகவே இருந்து தொலைக்கலாம். 1-2 ஆண்டுகளாவது மெனெக்கெட சாவகாசமில்லை எனில் முயற்சி பண்ணவே கூடாது.
9) உங்கள் எடை 70 கிலோவை எட்டும்போதே சுதாரித்து முயன்றால் மூன்று மாதங்களில் 5-6 கிலோக்களை இழந்து விடலாம். அது 80-90 கிலோ அளவுக்கு வளர விட்டால் பிறகு எடை இயல்பாக ஒரு வருடம் போராட வேண்டி இருக்கும்.
10) பெரும்பாலும் நமக்கு நம் உடம்பை கவனிக்க நேரமிருப்பதில்லை. அது நம்மைத் தனியாக கவனிக்கிறது. ஒரு கட்டத்தில் உடல் வெறுத்துப் போய் உன்னை விட்டுப் போகிறேன் என கடிதம் கொடுக்கிறது. அது தான் எடை அதிகரிப்பும் அதை ஒட்டிய பிரச்சனைகளும். உடற்தகுதியைப் பெறுதல் என்பது உடலுடன் நாம் இணக்கமாவதன் முதல் அறிகுறி. பிரிந்து போனவள் திரும்ப வீட்டுக்கு வருவதைப் போல. சரியாக கவனிக்காவிடில் அவள் மீண்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக 6 மாதங்கள் போதும். ஆக உடலைக் காதலிப்பதே முழுமுற்றான தீர்வு!
1 நபர், நிற்கும் நிலை மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.