Jump to content

பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன

எம்.எஸ்.எம் ஐயூப்

இலங்கை மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது, இந்நாட்டு பொருளாதாரத்தை கையாண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இழைத்த பொருளாதாரக் குற்றங்களின் விளைவாகும் என்றே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கருதுகிறார். 

மனித உரிமைகளுக்கான ஐ.நா பதில் உயர்ஸ்தானிகர் நதா அல் நஷீப், செப்டெம்பர் 13ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான அறிக்கை மூலம் இது தெரியவந்தது. இலங்கை அரசாங்கம், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற அந்தச் சொற்பிரயோகத்தை ஏற்க மறுத்துள்ளது.

தற்போது, சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையில் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, அந்தச் சொற்பிரயோகம் தெளிவற்றது என்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டார். 

image_ff325b663b.jpg

பொருளாதார நெருக்கடிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் முறையற்ற செயற்பாடுகளாலும் ஊழல், மோசடி போன்றவற்றாலுமே ஏற்படுகின்றன. இந்தப் பொதுவான நிலைப்பாட்டில் இருந்து, ஆட்சியாளர்களின் அவ்வாறான நடவடிக்கைகளை, ‘பொருளாதார குற்றங்கள்’ என்று குறிப்பிடுவது பிழையெனக் கூற முடியாது. ஆனால், மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள், இதற்கு முன்னர் எந்தவொரு நாட்டின் தலைவர்களின் செயற்பாடுகளையும் இவ்வாறு குறிப்பிட்டதில்லை. 

1980ஆம் ஆண்டு வரை, ‘ரொடேசியா’ என்றழைக்கப்பட்ட தற்போதைய சிம்பாப்வே, கடந்த சில வருடங்களாக இலங்கையைப் பார்க்கிலும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. அதற்கும் காரணம் அந்நாட்டுத் தலைவர்களின் ஊழல்களேயாகும். ஆயினும், அந்த ஊழல் நடவடிக்கைகளை எவரும் ‘பொருளாதார குற்றங்கள்’ என்று குறிப்பிடவில்லை. ஏனெனில், அந்நாட்டு மனித உரிமைகள் மீறல்கள், உலகளவில் பெரிதாக பேசுபொருளாகவில்லை. 

இம்முறை மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில், ‘பொருளாதார குற்றங்கள்’ (Economic crimes) என்ற சொற்பிரயோகம் ஏழு இடங்களில் வந்துள்ளது. ‘மனித உரிமைகள் மீறல்களுக்கும் பொருளாதார குற்றங்களுக்கும் தண்டனை இன்மை உள்ளிட்ட, நெருக்கடியின் அடிப்படை காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கு, சர்வதேச சமூகம் இலங்கைக்கு உதவுவதை உயர்ஸ்தானிகர் ஊக்குவிக்கிறார்’ என்று ஓர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனையின்மையை விவரிக்கும்போது, ‘2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஊழல், ‘பொருளாதார குற்றங்கள்’ தொடர்பான பல வழக்குகள், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி, குற்றங்களையோ அல்லது குற்றப்பத்திரங்களையோ வாபஸ் பெறுவதன் மூலம் கைவிடப்பட்டுள்ளன’  என்று மற்றோர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில், ஊழல்களும் பொருளாதார குற்றங்களும் வெவ்வேறான விடயங்கள் என்ற கருத்து தரப்படுகிறது. ஆனால், அந்த அறிக்கையில் மற்றோர் இடத்தில், ‘ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோம் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைக்கு, புதிய நிர்வாகம் சாதகமான பதிலை வழங்கும் என உயர்ஸ்தானிகர் எதிர்ப்பார்க்கிறார்’ என்று கூறப்படுகிறது. இந்த வசனமானது, ஊழல் என்பது பொருளாதார குற்றங்களில் ஓர் அம்சம் என்ற கருத்தை தருகிறது. எனவே, உயர்ஸ்தானிகரின் ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகம் தெளிவற்றது என்ற அமைச்சர் சப்ரியின் வாதத்தை நிராகரிக்க முடியாது. 

எனினும், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகம், உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற அமைச்சர் சப்ரியின் வாதம் சரியானதாகத் தெரியவில்லை. ‘மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் திருடப்பட்ட சொத்துகளை கண்டுபிடிக்கவும் இலங்கைக்கு உதவுமாறு’ உயர்ஸ்தானிகரின் அறிக்கை, மனித உரிமைகள் பேரவைக்கு பரிந்துரை செய்கிறது. 

மனித உரிமைகள் மீது, பொருளாதார குறறங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பின், நிச்சயமாக அந்தக் குற்றங்கள், மனித உரிமைகள் பேரவையினதும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரினதும் அதிகார எல்லைக்குள் வருவதை நிராகரிக்க முடியாது. 

மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், திருடப்பட்ட சொத்துகளை கண்டுபிடிக்கவும், இலங்கைக்கு உதவுமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்த போதிலும், இலங்கை அரசாங்கம் பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றதாகவோ பொதுச் சொத்து திருடப்பட்டதாகவோ இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை; ஏற்றுக் கொள்ளும் என்று கருதவும் முடியாது. 

இவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கம், பொருளாதார குற்றங்கள் தொர்பாக விசாரணை செய்யும் என்றோ திருடப்பட்ட பொதுச் சொத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும் என்றோ கருத, எந்தவோர் அடிப்படையும் இல்லை. எனவே, நடைபெறாத நடவடிக்கைகளுக்கு எப்படி உதவ முடியும்?

மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள், உண்மையிலேயே இலங்கையில் இடம்பெற்று இருக்கின்றனவா? இலங்கை இன்று பாரியதொரு பொருளாதார அழிவையே சந்தித்துள்ளது. 50 பில்லியன் டொலருக்கு மேல், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் உள்ளது. அதற்கு வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் இல்லை. அதன் காரணமாகவே வெளிநாட்டு செலாவணியைத் தரும் கைத்தொழில்கள், சேவைகளை நடத்திச் செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. 

நாட்டில் பெரும்பான்மையாக வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மத்தியில் வறுமை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. உலக உணவுத் திட்டத்தால், மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம், அந்த ஆய்வில் கலந்து கொண்ட குடும்பங்களில் 73 சதவீத குடும்பங்கள், அன்றாட உணவு உட்கொள்ளலை குறைத்துக் கொண்டுள்ளன. போஷாக்கின்மையால், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ‘யுனிசெப்’ நிறுவனம் கூறியது. 

2016ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே, ‘யுனிசெப்’ அந்த முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இலங்கையில், ஏழைகளை போஷாக்கின்மை அவ்வளவு பாதிக்கவில்லை என்று கூறுவதற்காகவே அமைச்சர் அவ்வாறு கூறுகிறார். 

ஆனால், 2016ஆம் ஆண்டைப் பார்க்கிலும், மிக மோசமான பொருளாதார நிலைமையையே கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏழைகள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். 

மருத்துவமனைகளில் பல உயிர்காப்பு மருந்துகளுக்கும் கருவிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்துக் கடைகளில் அவற்றை வாங்குமாறு மருத்துவர்கள், நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையால், மருந்துக் கடைகளிலும் பெரும்பாலான மருந்துகள் இல்லை. இருக்கும் மருந்துகளின் விலையும் கடந்த வருடத்தைப் பார்க்கிலும் குறைந்தது மும்மடங்காக அதிகரித்துள்ளன. 

பல மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 500 மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்தும் அறிவிக்காமலும் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். 

வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையால், பல கைத்தொழில்கள் முடங்கிவிட்டன; அல்லது, மந்த நிலையில் இயங்குகின்றன. அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் வருமானமின்றி அவதியுறுகின்றனர். பல நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம், கடந்த இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு மக்களின் வருமானம் வேகமாகக் குறையும் நிலையில், விலைவாசி வானளாவ உயர்கிறது. இதனால், நாட்டில் பட்டினி பரவுகிறது. மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உரிமை இழப்பாகும். 

இவை எதுவும் இயற்கை அனர்த்தங்களாலோ, உலக சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களாலோ வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றாலோ ஏற்பட்டவையல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, தவறான முகாமைத்துவத்தின் விளைவாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கடந்த மே மாதத்தில் கூறியிருந்தார். 

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதாயின், நாட்டில் இடம்பெறும் ஊழல்களைத் தடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறுகிறது.

இலங்கையில் தற்போதைய நிலைமையைப் பற்றி, அமெரிக்க செனட் சபையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையொன்றில், நேரடியாகவே ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஊழல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இலங்கை, 2022 ஏப்ரல் மாதம், தனது வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து, இலங்கையின் பிணைமுறி கொள்வனவு செய்த ‘சென் கீட்’ தீவைச் சேர்ந்த ஒரு வங்கி, “இலங்கை தம்மிடம் பெற்ற கடனை திருப்பித் தரவில்லை” என்று நியூயோர்க் நகர நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவிலும் ‘ராஜபக்‌ஷர்களின் ஊழல்’களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, பல தசாப்தங்களாக ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளினதும் ஊழல்களினதும் விளைவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும், கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளன. அவை மக்களின் உரிமை மீறலாகும். 

எனவே, ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகத்தில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், அவற்றைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரணை செய்ய வேண்டும் என்று, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிடுவது விந்தையான விடயமாகும். 

போர்க் கால உரிமைகள் மீறல் சம்பவங்களைப் பற்றி, 13 ஆண்டுகளாக வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்பதையும் இங்கு நினைவுபடுத்துவது உகந்தது.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொருளாதார-குற்றங்களும்-ஜெனீவா-செல்கின்றன/91-304911

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.