Jump to content

சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும்

By DIGITAL DESK 5

29 SEP, 2022 | 11:55 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வானதொரு நிலையில்  கடலை அண்மித்த 36000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

பல்வேறு சீன நிறுவனங்களும்  இலங்கை கடல் வளங்களை நீண்டகாலமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக கடலட்டை பண்ணைகள் பெய்ஜிங் கவனிக்கும் ஒரு முக்கிய பகுதியாகும். சில ஊடக செய்திகளின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுமார் 336 டொன் கடலட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

எனவே, இவ்வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது இலாபகரமானது. இந்த துறையில் சீன வணிக நிறுவனங்கள் பல தற்போது இலங்கையில் செயற்படுகின்றன.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான வணிக கடலட்டை பண்ணை திட்டங்களுக்கு கடந்த ஜுன் மாதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அனுமதியை கொழும்பு காண்கின்றது.

தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட  சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் (Chunmanm Cultural Business Group) புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்பதால் இது கடல் வளத்தை கடுமையாக பாதிக்கும் என சூழலியளாளர்கள் கூறுகின்றனர்.

எனவே தான் வடக்கு மீனவர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஏற்கனவே வடக்கில் காணப்படுகின்ற சீன கடலட்டை பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்கள் ஏற்கனவே எதிர்த்து வருகின்றனர்.

இந்தப் பண்ணைகளால் கடல் வளம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சும் வடக்கு மீனவர்கள், கடலட்டை  பண்ணைககளால் சுற்றுச்சூழலுக்கும், மீனவ மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று அந்த திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட இலங்கையைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்கள், சீன வணிக மீன் வளர்ப்பு மீதான அரசாங்கத்தின் உந்துதலை தங்கள் வாழ்வாதாரத்திற்கும் நிலத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவே கருதுகின்றனர். முன்மொழியப்பட்ட கடலட்டை பண்ணைகள் நன்மையை விட தீமையையே ஏற்படுத்தும் என யாழ். மீனவ சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி அரசாங்கம் திட்டங்களை ஊக்குவிக்க முயற்சிக்கும் அதே வேளையில், இந்த பண்ணைகள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் உள்ளூர் கடல் சூழலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் நம்புகிறார்கள்.

2021 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதேபோன்ற சீனத் திட்டத்திற்காக் கடலை ஒட்டியுள்ள நிலத்தில் வேலி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மீனவர்களும் மக்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தத் துறையில் சீன முதலீட்டின் தீவிரத் தேவைக்கு எதிர்வினையாற்றிய உள்ளூர் மீனவர்கள், சமீபத்திய ஆண்டுகளில் வடக்கில் சுமார் 250 கடலட்டை பண்ணைகளின் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய சீன முதலீடுகள் குறைவாகவே உள்ளன. உள்ளூர் முதலீட்டாளர்கள் கூட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அரசியல் ரீதியிலான செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டினார்.

சீனத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இலங்கைக்கு புதிதல்ல. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் போது பொது விவாதங்களில் இடம் பெற்ற பல சூழல் மீறல்கள்; குறித்த சம்பவங்கள் வெளிவந்தன. இந்த விமான நிலையம் யானைகளின் வாழ்விடத்தில் கட்டப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த விலங்குகள் ஓடுபாதைக்கு அருகில் அடிக்கடி சுற்றித் திரிகின்றன. அதேபோன்று, தெற்கு நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் தீவிரமான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும் | Virakesari.lk

Link to comment
Share on other sites

மக்களின் பிரச்சனக்கு மக்கள் தான் போராட வேண்டியுள்ளது.  பல கட்சிகளில் இருந்து தெரியப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் சேர்ந்து போராட மாட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

மக்களின் பிரச்சனக்கு மக்கள் தான் போராட வேண்டியுள்ளது.  பல கட்சிகளில் இருந்து தெரியப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் சேர்ந்து போராட மாட்டார்களா?

இந்தக் கட்டுரையில் மீனவர்களின் உண்மையான பிரச்சனைகள் வெளிப்படுத்தப்படவில்லை. சீனாவைக் குற்றம்சொல்லும் தொனியே முன்னிற்கிறது. 

மீனவர்களின் உண்மையான பிரச்சனைகளோ வேறு. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.